இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்த்துகள் அம்பைக்கு.....

படம்
இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. பெண்மையச் சொல்லாடல்களை வெளிப்படுத்தும் வடிவமாகத் தனது சிறுகதைகளைத் தொடர்ந்து தந்துகொண்டிருந்தவர். இதுவரை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களின் பங்களிப்புகளோடு ஒப்புநோக்க, இந்த விருது அவருக்குத் தாமதமாகவே தரப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். கட்டுரைகள், சிறுகதைகள் என்ற இரு வடிவங்களில் அவரது வெளிப்பாடுகள் இருந்தபோதிலும் சிறுகதையே அம்பையின் அடையாளம்.

தீர்க்கவாசகன் கவிதைகள்

கட்டுரை மனம் என்னுடையது. ஆனால் விரிவாக அமர்ந்து எழுதமுடியாத கட்டுரைகளைக் கவிதை வடிவத்திற்குள் அடைத்துவிடவும் முயற்சிசெய்வேன். அந்த வகையில் எனது கவிதைகள் எப்போதும் புறம் சார்ந்த நிகழ்வுகளை விவரிப்பனவாகவும் விமரிசனம் செய்வனவாகவும் இருக்கின்றன. 

ராவணனை நினைவில் வைத்திருக்கும் திரிகோணமலை

படம்
ராமாயணம் கற்பனை; அதில் வரும் பாத்திரங்களும் இடங்களும் புனையப் பட்டவை. ராவணனின் தலைநகரான லங்காபுரியும் அங்கிருந்த மனிதர்களும் இப்போதிருக்கும் இலங்கையோடு தொடர்புடையன அல்ல என்று முடிவுகளை முன்வைத்த ஆய்வுகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். வட இந்தியாவில் இருக்கும் அயோத்தியிலிருந்த ராம லக்குவனர்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் இருக்கும் இலங்கைத்தீவுக்கு வந்திருக்க முடியுமா?

அலையடிக்கும் திரிகோணமலை

படம்
திரிகோணமலை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது காலை 6.30.கண்ட காட்சி இந்த மான். காட்டுக்குள்ளும் காட்சிச் சாலையிலும் மான் இணைகள்/கூட்டங்கள் தான் இதுவரையான அனுபவம். கடைகளும் மனிதர்களும் நிரம்பிய இடத்தில் தனியொரு மானாகப் பார்த்தில்லை. மானும் மிரளவில்லை. மக்களும் கண்டுகொள்ளவில்லை.

ஜயரத்ன என்னும் மனிதம்

படம்
இரண்டாவது இலங்கைச் செலவில் மறக்க முடியாத பயண அனுபவத்தைத் தந்தவர்கள் சிங்களமொழி பேசும் மனிதர்களாக இருந்தது தற்செயல் நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். கொழும்பு – பேராதனை புகையிரதப் பயணத்தில் சந்தித்தவரும் புத்த குருமார்களும் தந்த அனுபவத்திற்கு மாறான அனுவத்தைச் சபரகமுவ பல்கலைக்கழக வாகன ஓட்டி தந்தார். மலையகத்திலிருந்து சபரகமுவ பல்கலைக்கழகம் போய்த் திரும்பிய பயணம் மறக்கமுடியாத பயணமாக ஆனதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் பல்கலைக்கழக வாகனத்தின் ஓட்டுநரென்றால், இரண்டாவது காரணம் அந்த மலைப்பயணத்தின் வளைவு நெளிவுகளும் அடர்வனப் பகுதிகளும் எனலாம்.

சிங்களப் பகுதிக்குள் ஒரு தமிழ்த்துறை

படம்
இலங்கையின் மற்ற பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் பலரும் வந்து போவார்கள்; நான் பணியாற்றும் சப்ரகமுவ பல்கலைக் கழகத்திற்கு இலங்கையின் தமிழறிஞர்களும் எழுத்தாளர்களும் கூட அதிகம் வருவதில்லை. நீங்கள் திரும்பவும் இலங்கை வரும்போது கட்டாயம் சப்ரகமுவ பல்கலைக் கழகத்திற்கு வரவேண்டும். கற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு இருக்கும் எங்கள் மாணவ மாணவிகளோடு உரையாட வேண்டும் எனத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் அப்துல் ஹக் லறீனா.

வந்த வழி தெரிகிறது; போகும்பாதை... ? மலையகமென்னும் பச்சைய பூமி…

படம்

பெருமைமிக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில்….

படம்
  ஐந்தாவது நாள் இரண்டு பயணங்களிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரண்டிரண்டு சொற்பொழிவுகள் வழங்குவதற்காக அழைக்கப்பட்டேன். தமிழ்நாட்டிலும் இந்தியாவிலிருக்கும் பல்வேறு மாநிலத் தமிழ்த் துறைகளிலும் எனது விருப்பத்துறைகளாக இலக்கியவியல், அரங்கியல், ஊடகவியல், பண்பாட்டியல் சார்ந்து பல உரைகளை வழங்கியிருந்தாலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரைகள் சிறப்பான உரைகளென நினைத்துக் கொள்கிறேன்.  அந்த வாய்ப்புக் கிடைத்ததற்காக எப்போதும் மகிழ்ச்சி அடைகிறவன் நான். 

புகையிரத (ரயில்) பயணத்தில்

படம்
இலங்கை போன்ற குட்டி நாட்டில் நீண்ட தூரப் பயணங்களை இருப்பூர்தி வழியாகத் திட்டமிடலாம். தூரப் பயணங்களுக்குப் பேருந்துகளே போதுமானது; ஏற்றது. 2016 இல் சென்ற முதல் இலங்கைப் பயணத்தில் ரயிலைப் பார்க்கவே இல்லை. போர்க்காலம் முடிந்து 7 ஆண்டுகள் ஆன நிலையிலும் தமிழர் பகுதிக்குள் செல்லும் பாதைகள் இன்னும் செப்பனிடப்படவில்லை என்றும், ஓடும் ரயில்களும் பழைய ரயில்கள் என்றும் சொன்னதால் அந்தத்தடவை ரயில் பயணம் பற்றி யோசிக்கவே இல்லை.

நகர்வலம் : அடுக்குமாடிகளும் ராஜபாட்டைகளும்

படம்
உலகமயப் பொருளாதாரத்தையும் அதுசார்ந்த வர்த்தகத்தையும் உள்வாங்கிக் கொண்ட நிலையில் எல்லா நாட்டின் தலைநகரங்களும் மாற்றத்தைப் பெருமளவு சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சில நாடுகளில் அலுவல் ரீதியான தலைநகர் ஒன்றாகவும் வணிகத் தலைநகர் இன்னொன்றாகவும் பண்பாட்டுத்தலைநகர் மற்றொன்றாகவும் இருக்கும். பன்னெடுங்கால வரலாறு கொண்ட நாடுகளில் ஒவ்வொரு நகரங்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கவே செய்யும்.

புதிய படிப்புகளை நோக்கி ஒரு நிறுவனம்

படம்
கொழும்புவில் இரண்டாவது நாள் இலங்கைக்கு வந்த முதல் பயணத்திற்கும் இரண்டாவது பயணத்திற்கும் பெரிய அளவு வேறுபாடு உண்டு. முதல் பயணம் முழுவதும் கல்விப்புல ஏற்பாட்டுப் பயணம். ஆனால் இரண்டாவது பயணத்தில் எல்லா ஏற்பாடுகளும் சொந்த ஏற்பாடு போல. அதனைச் செய்து தந்தவர்கள் நண்பர்களே. கொழும்புக்கான பொறுப்பை எடுத்துக் கொண்டவர் ஷாமிலா முஸ்டீன்.

நுழைவும் அலைவும் : சில கவனக் குறிப்புகள்

படம்
  கொழும்புவில் முதல் நாள் இலங்கை இந்தியாவின் நெருங்கிய    நட்பு நாடு. அதனால் இந்தியர்களுக்கு நுழைவு அனுமதி வழங்குவதில் கெடுபிடிகளைக் குறைத்துக் கொண்டுவிட்டது.  இலங்கைக்கான விமானத்தில் ஏறும் விமான நிலையத்தில் இந்திய இருப்பிடச் சான்றுகளைக் காட்டி நுழைவு அனுமதிபெற்றுக் கொள்ளலாம் ( On arrival Visa) என்ற நிலை உருவான பின்பு இலங்கைச் சுற்றுலா எளிதாக மாறிவிட்டது என்று பலரும் சொன்னார்கள். அத்தோடு, கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளில் கொழும்பில் வெடித்த தொடர் வெடிகுண்டுகளுக்குப் பின் வெளிநாட்டார் வருகை குறைந்ததைச் சரிசெய்ய , இலங்கை அரசாங்கம் உள் நுழைவு அனுமதிகளை எளிதாக்கியிருப்பதாக வும் சொல்லப்பட்டது. சுற்றுலாப் பொருளாதாரத்தை நம்பும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கைக்குள் அயல்நாட்டார் வருவதைத் தடுக்கும் விதிகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ; நம்பிக்கையைத் தகர்த்துவிடும் என்பதால் உள்ளே அனுமதிப்பதில் கெடுபிடிகளைக் காட்டுவதில்லை

எனக்குள்ளிருந்த இலங்கைத் தீவு

படம்
லங்காபுரியைக் கடல்சூழ்ந்த தீவாகவே எனது முதல் வாசிப்பு சொன்னது. ஆகாய மார்க்கமாகத் தூக்கிச் செல்லப்பட்ட சீதா தேவியைத் தேடிச்செல்லும் அனுமன் தனது தாவுதிறனால் கடல் தாண்டிப் போய் இறங்கிய மலையும், அரண்மனையும் பற்றிய வர்ணனையை எனது தாத்தாவுக்கு வாசித்த போது எனக்குள் இலங்கைப் பரப்பு ஓர் அரக்கனின் ஆட்சி நடக்கும் பூமியாக அறிமுகமானது. சீதாதேவையைத் தூக்கிச் சென்ற ராவணனின் இலங்காபுரியாக எனக்குள் நுழைந்த பிரதேசப்பரப்பு ராஜ கோபாலாச்சாரியாரின் சக்கரவர்த்தித் திருமகன் வழியாக அறிமுகமான பிரதேசம். 

நின்று பார்த்த மாலையும் கடந்து வந்த காலையும்

படம்
  எத்தனை கோயில்கள்.. எத்தனை கடவுள்கள்   இன்றைய மாலை /13-12-21 இந்தியப் பரப்பெங்கும் பல்வேறு கோயில்களில் இருக்கும் எல்லாத் தெய்வங்களையும் ஓரிடத்திற்குக் கொண்டு வந்து குவித்து வைத்திருக்கிறார்கள் அந்த வெளியில். ஏழெட்டு ஏக்கர் நிலப்பரப்பில் உயர்ந்த சுற்றுச் சுவர்களுக்குள் 108 கோயில்களும் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

புதுமுகங்கள்; புதிய பாதைகள் - புல்புல் இஸபெல்லா, ஈழவாணி

படம்
  திறக்கும் வெளிகளுக்குள் நுழைவது மட்டுமல்ல; புதியபுதிய வெளிகளையே திறக்கிறார்கள் பெண்கள். பெண்களின் நுழைவுகள் ஆச்சரியப்பட வேண்டியனவல்ல. அடையாளப்படுத்தப்பட வேண்டியன

கவியின் அடையாளத்தைத் தேடுதல்: அ.ரோஸ்லினின் வாலைக்குழைக்கும் பிரபஞ்சம் தொகுப்பை முன்வைத்து

படம்
தமிழில் கவிதை வடிவத்திற்கு நீண்ட தொடர்ச்சி உண்டு. அத்தோடு தொடக்க நிலையிலேயே எளிய வடிவமாகவும் சிக்கலான வடிவமாகவும் உணரப்படும் தன்மைகளோடு தமிழ்ச் செவ்வியல் கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. செவ்வியல் கவிதைகளுக்குப் பிறகு செவ்வியல் கவிதைகளுக்கு இணையாகச் சிக்கலாகவும் எளிமையாகவும் வெளிப்பட்டுள்ளவை நவீனத்துவ கவிதைகள்.

கையறு: மரணத்தின் தாலாட்டு

படம்
தமிழர்களின் அலைந்துழல்வுச்சித்திரங்கள் சப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அமெரிக்காவின் அணுகுண்டுகள் வீசப்பட்ட நாட்கள்: ஆகஸ்டு- 6/ 9/ 1945. உலகத்தின் பார்வையில் பேரழிவு ஆயுதமாகப் பார்க்கப்பட்ட அணுகுண்டு, சப்பானின் அருகிலிருந்த பழைய பர்மா, மலேசியா, சீனா, தாய்லாந்து, முதலான நாட்டு மக்களால் வேறுவிதமாக உணரப்பட்டது. சிலர் தங்களின் விடுதலையின் கருவியாக அதை நினைத்தனர். இதுதான் வரலாற்றின் சுவைகூடிய நகைமுரண்

கவிதாசரண்: நினைவுகள்

கவிதாசரண் என்னும் பெயருக்குரிய உடலின் இயக்கம் நின்றுவிட்டது எனச்சொல்லும் அஞ்சலிக்குறிப்புகளைப் பார்க்கிறேன். அந்தப் பெயர்கொண்ட மனிதரைச் சந்தித்த இடத்தையும் நாளையும் நினைத்துக் கொள்கிறது மனம்.

பெரிய கார்த்தியல் என்னும் திருக்கார்த்திகை

படம்
இந்தியப் பண்பாட்டின் பல்தள வெளிப்பாடு என்பது அதன் சடங்குகள், நம்பிக்கைகள்,  கொண்டாட்டங்கள் என ஒவ்வொன்றிலும் தங்கியிருக்கிறது என்பதைக் குறிப்பான ஆய்வுகள் வழியாக அறியமுடியும். நிகழ்காலத்தில் இந்துமதமாக அறியப்படும் பெருமதத்தின பண்டிகைகளான  தீபாவளி,  துர்கா பூஜை, யுகாதி, சங்கராந்தி, திருக்கார்த்திகை  போன்றன எல்லாக்காலத்திலும் இதற்குள்ளேயே இருந்த பண்டிகைகள் எனச் சொல்லவும் முடியாது. குறிப்பான பண்பாட்டு ஆய்வின் முறைமைகளைப் பயன்படுத்தி, இந்திய அளவில் கொண்டாடப்படும் ஏதாவது ஒரு பண்டிகையைப் பற்றிய ஆய்வைச் செய்யவேண்டும். ஒன்றின் சாயலில்  வெவ்வேறு நிலப்பரப்பில் கொண்டாடப்படும் விதங்களைத் தொகுத்துக் கொண்டு எது மூலம்; எந்தக்கூறுகள் இன்னொன்றிலிருந்து எடுக்கப்பட்டவை என   ஆய்வு செய்வதன் மூலம் ஒவ்வொன்றையும் தனித்தனியாக விளக்க முடியும்.

சர்தார் உத்தம்: எதிரியின்மனச்சாட்சியைத் தட்டியெழுப்புதல்

படம்
  எழுத்தும் காட்சியும் 16-ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் குழுமம் என்ற பெயரில் இந்தியாவிற்குள் நுழைந்து, சிற்றரசர்களின் அனுமதியோடு இந்தியாவுக்குள் வணிக அனுமதி பெற்றவர்கள் ஐரோப்பியர்கள். இந்தியாவில் அப்போதிருந்த வணிகர்களையும் சிற்றரசர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் பிரிட்டானிய அரச நிர்வாகத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சுரண்டல் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்.

தனித்திருத்தலின் உளச்சிக்கல்களை எழுதும் தீபு ஹரியின் இரண்டு கதைகள்

படம்
மகளிர் நிலை, பெண்கள் பங்களிப்பு எனப் பேசிக்கொண்டிருந்த காலகட்டம் தாண்டிப் பெண் இருப்பு, பெண் தன்னிலை உணர்தல், பெண் சமத்துவம் கோருதல், பெண்களின் தனித்துவமான உரிமைகள், பெண் தலைமை தாங்குதல் போன்ற கலைச்சொற்கள் விவாதச் சொல்லாடல்களாக நுழைந்ததுடன் பெண்ணியத்தின் வருகையின் அடையாளங்கள் உருவாகின. அந்தச் சொல்லாடல்கள் அதிகமும் வரலாற்றுக் காரணங்களையும் சமூகவியல் காரணங்களையும், பொருளியல் உறவுகளையுமே முதன்மைப்படுத்தி விவாதித்தன; விவாதிக்கின்றன. அவ்விவாதங்கள் ஒவ்வொன்றும் சமூக நகர்வின் காரணங்களைத் தர்க்கரீதியாக முன்வைக்கின்றன. அப்படி முன்வைக்கும்போது இயல்பாகவே பாலின எதிர்வுகளும் வந்துவிடும்.

ஜெய்பீம்: உண்மையை அறிதலும் எடுத்துரைத்தலும்

படம்
தகவல்கள் என்னும் உண்மை ஜெய்பீம் திரைப்படம், 1995 என ஒரு வருடத்தைக் குறிப்பிட்டுக் கதையை விரிக்கிறது. கடலூர் மாவட்டச் சிறைச்சாலை, சென்னை உச்சநீதி மன்றம், விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்கள், பாண்டிச்சேரி எல்லை ஆரம்பம் எனக் குறிப்பான இடங்களும் எழுத்தில் காட்டப்படுகின்றன. காவல் துறையினரின் சட்டமீறலை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணைய அதிகாரியின் பெயர் பெருமாள்சாமி (பிரகாஷ்ராஜ் ஏற்றுள்ள பாத்திரம்) என்பதும் சொல்லப்படுகிறது. படத்தின் கதை சொல்லியாகவும் நிகழ்த்துபவராகவும் வரும் மையக்கதாபாத்திரத்தின் பெயர் வழக்குரைஞர் சந்துரு (சூர்யா எற்று நடித்துள்ள புனைவுப்பாத்திரம்) எனச் சொல்லப்படுகிறது. இவ்விரு பெயர்களும் கூட உண்மைப்பெயர்கள் தான்.

நாடகப்பிரதியாக்கப்பட்டறை: நினைவுக்கு வந்த ஒரு வரலாறு

படம்
  நாடகப்பிரதியாக்கப்பட்டறையொன்று அண்மையில் (செப்.24 முதல் அக்.4 வரை) நடத்தப்பெற்றது. கரோனா காலச் செயல்பாடு என்ற வகையில் இணையவழியில் நடந்த பட்டறையில் 40 பேர்வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்தனர்.     அந்தப் பயிலரங்கு முடிந்தபோது எனது முகநூல் பக்கத்தில்  ‘நாடகங்கள் எழுதப்போகிறார்கள்’ என்றொரு குறிப்பினை எழுதினேன்.(பின் குறிப்புக்குப் பின்னர்   அந்தக்குறிப்பு உள்ளது) குறிப்பு எழுதி மறந்துவிட்ட நிலையில், கால்நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த பிரதியாக்கப் பயிலிரங்கு ஒன்று பற்றி எழுத நினைத்து தொடங்கி முடிக்காமல் விட்ட குறிப்புநிலைக் கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. தலைப்பெல்லாம் வைத்துச் சில பக்கங்களும் எழுதி வைத்திருந்தேன். அதனை முடித்து அச்சிதழ்கள் எதற்கும் அப்போது அனுப்பவில்லை. அனுப்பியிருந்தாலும் வந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது நான் எழுதியதைப் போடும் அளவுக்கு அறியப்பட்டவன் இல்லை.  இப்போது வரலாற்றைப் பதிவுசெய்துவைக்க வலைப்பூ இருக்கிறது. இணைப்புத்தர முகநூல் இருக்கிறது. மறந்துபோன வரலாற்றை நிறைவுசெய்து பதிவுசெய்து வைக்கலாம்:

ஒரு வாழ்க்கை: இரண்டு புனைவுகள்

படம்
தமிழக முதல்வர்களில் திரு.எம்.ஜி.ராமச்சந்திரனின் வாழ்க்கைக்கும் அவரது பாதையைத் தொடர்ந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கும் பல ஒற்றுகைகள் உண்டு. இருவரின் வாழ்நாட்கள் மட்டுமல்லாமல், மரணங்களுமே சந்தேகங்களும் மூடுண்ட ரகசியங்களும் நிறைந்தவை. அவர்கள் உயிருடன் இருக்கும்போது வெளிப்படாத வாழ்க்கை நிகழ்வுகள் மரணத்திற்குப் பின்னர் எழுதப்பட்டன; சொல்லப்படுகின்றன. திரைப்படங்களாக எடுக்கப்படுகின்றன. ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை ஒரு மாதத்திற்கு தலைவி என்ற பெயரில் இணையதளப்பரப்பில் (அமேசான் பிரைம்) வெளியிடப்பெற்றுப் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கும் முன்பு 2019 இல் இன்னொரு இணையதளப்பரப்பில் (எம்எக்ஸ் பிளேயர்) குயின் என்ற பெயரில் ஒரு தொடராக அவரது கதை வந்த து. 11 பகுதிகளைக் கொண்ட அத்தொடர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பார்க்கக்கிடைத்துத் தலைவியைவிடப் பலமடங்குப் பார்வையாளர்களை ஈர்த்தது. வாக்கு அரசியலில் வெளிப்படைத்தன்மை எதிர்பார்க்கப்படும் ஒன்று. சிறுவயது முதலே அரசியல் இயக்கத்தோடு இணைந்த சொந்த வாழ்க்கையைக் கொண்டிருந்த தலைவர்களைத் தமிழக முதல்வர்களாகத் தெரிவு செய்த தமிழ்நாட்டு வாக்காளர

வேதாகமத்தின் வாசனை வீசும் கவிச்சொற்கள்

தமிழ்க்கவிதை மரபில் செவ்வியல் அகக்கவிதைகளுக்கு நீண்ட தொடர்ச்சியும் நீட்சியும் உண்டு. அத்தொடர்ச்சியை உரிப்பொருள் சார்ந்த நீட்சி எனவும், வடிவம் சார்ந்த நீட்சி என்றும் அடையாளப்படுத்தலாம். அன்பின் ஐந்திணைகளான முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்பனவற்றின் உரிப்பொருட்களான இருத்தல், ஊடல், புணர்ச்சி, இரங்கல், பிரிவு என்பனவற்றிற்கு அதிகம் தொடர்ச்சி உண்டு. அதனை இங்கே விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் அந்த நீட்சியை மைக்கல் கொலினின், “இவனைச் சிலுவையில் அறையுங்கள்” எனத் தலைப்பிட்ட கவிதைத் தொகுதியில் காணமுடியவில்லை. அதற்கு மாறாக அகக்கவிதையின் வடிவத் தொடர்ச்சியின் நீட்சியாக அவரது கவிதைகள் அமைந்துள்ளன. அப்படியான ஒரு தொனி ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போது என்னை வந்து மோதுவதை உணர்ந்துகொண்டே இருக்க முடிந்தது.

பிரமிளா பிரதீபன் கதைகள் -ஒரு வாசிப்புக்குறிப்பு

  கடந்த கால் நூற்றாண்டுக்கால இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப் போரின் பின்னணியிலேயே வாசித்துப் புரிந்து கொண்டிருக்கிறது தமிழக வாசகப்பரப்பு. ஆனால் எனது வாசிப்பின் தொடக்கம் அப்படியானதல்ல. காத்திறமான இலக்கிய வரலாற்றுப்பார்வைக்காகவும் இலக்கியத் திறனாய்வுக்காகவும் இலங்கையின் ஆளுமைகளை வாசித்த தொடக்கம் என்னுடையது. அத்தோடு கே.டானியலின் புனைகதைகளும் ஜீவாவின் மல்லிகையும் எனது தொடக்கநிலை வாசிப்புக்குள் இருந்தன.

எழுத்தில் வரையப்பட்ட சித்திரங்கள்

கலை இலக்கியங்களின் முதன்மை வெளிப்பாடு ‘போலச்செய்தல்’ என்னும் பிரதியாக்கத்தை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அவற்றின் நோக்கத்திற்கும் அடிப்படைக்கூறுகளின் கலவைக்கும் ஏற்பக் கலை, இலக்கிய வடிவங்களும் வகைகளும் மாறுபடுகின்றன. எழுத்துக்கலைகளைத் தனது வெளிப்பாட்டுக்கருவியாகக் கைக்கொள்ளும் ஒருவர் அவரது எழுத்தில் மனிதர்களைப் பிரதியாக்கம் செய்வதை முதன்மை நோக்கமாக கொள்கிறார் என்றாலும், எல்லா வடிவத்திலும் அதுதான் முதன்மையாக இருப்பதில்லை. கவிதையில் மனித உணர்வுகளையும் நாடகத்தில் மனிதர்களின் முரண்நிலையையும் கதைகளில் நேரடியாக மனிதர்களின் மொத்த அடையாளங்களையும் காட்டிவிட முடிகிறது. கதைகளிலும் கூட, எந்த உணர்வுகளைத் தூக்கலாக நிறுத்திக்காட்டலாம் என்பதன் வழியாகவும், வாசிப்பவர்களிடம் எதனைக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்று தீர்மானிப்பதன் மூலமும் கதைகளின் வகைப்பாடுகளைச் சுட்ட முடியும்.

மதுரையை எழுதும் எழுத்து

  முப்பது ஆண்டுகளுக்கு முன் மதுரையைவிட்டு வெளியேறி புதுச்சேரி, நெல்லை, வார்சா, பாளையங்கோட்டையென்ச் சுற்றிவிட்டுத் திரும்பவும் மதுரைக்கருகில் இருக்கும் திருமங்கலத்திற்குக் குடிவந்துவிடலாம் முடிவுசெய்தேன். அதனால்   இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையின் இலக்கிய நிகழ்வுகள் பற்றிய தேடல்கள் தொடங்கின. அத்தேடலில் புதிதாக எழுத வந்திருக்கும் மதுரைக்காரர்களின் இலக்கியப்பனுவல்களைப் பத்திரிகைகளிலும் இணையப் பக்கங்களிலும் வாசிக்கத் தொடங்கினேன்.

மிதக்கும் வெளிகளை எழுதுதல்: நவீன கவிதையின் இரண்டு புதுமுகங்கள்

படம்
இலக்கிய உருவாக்கம் பற்றிப் பேசும் இலக்கியவியல் நூல்கள் முன்வைக்கும் அடிப்படை விதிகள் சில உள்ளன. காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் இலக்கியத்திற்குரிய பொதுக்கூறுகளாக முன்வைக்கின்றன. அம்மூன்றையும் ஓர்மைப்படுத்தி இணைப்பதின் வழியாக இலக்கிய வடிவங்கள் பொதுத்தன்மையோடு உருவாகின்றன. அவ்விலக்கிய வடிவங்களின் வெளிப்பாட்டுப் பாங்கும் அதன் வழி உருவாகும்/உருவாக்கும் மனநிலை சார்ந்து வடிவங்களின் சிறப்புநிலைகள் கவனம் பெறுகின்றன.

தலைவி : இரக்கங்களையும் ஏற்புகளையும் நோக்கி.....

படம்
நம்முன்னே நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்த்து விளங்கிக் கொள்ளவேண்டும். அதனதன் சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே நிகழ்வில் இடம்பெறும் பாத்திரங்களுக்கு / மனிதர்களுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலையை வழங்க வேண்டும் என்று சொல்வது நிதானமான பார்வை. வளர்ந்த சமூகத்து மனிதர்கள் அப்படியே நடந்துகொள்கிறார்கள். ஆனால் தமிழர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இப்படிக் குற்றம் சாட்டுபவர்கள் அப்படி இருக்கிறார்களா? என்பதைத் தனியாகக் கேட்டுக்கொள்ளலாம்.

துள்ளிவரும் மல்லல் பேரியாறு

  தொடர்ச்சியாக ஒரு புலத்தில் சோதனைகளையும் புத்தாக்கங்களையும் செய்துகொண்டே இருப்பதின் மூலம் ஒருவரது அடையாளம் உருவாகிறது. அந்தப் புலத்தில் மரபுத்தொடர்ச்சியை உருவாக்கி இற்றைப் படுத்திக்கொண்டே இருப்பதின் மூலம் அவரது இருப்பும் இயக்கமும் உறுதிப்படுத்தப்படும்.

நெடுமுடிவேணு : நினைவில் இருப்பார்

படம்
  இந்திய அளவில் தொடங்கிய நடப்பியல் அலை ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் ஒவ்வொரு விதமாகத் தாக்கத்தையும் பங்களிப்பையும் உருவாக்கியது. மலையாளத்தில் குறிப்பான சூழலில் நிகழும் நிகழ்ச்சிகளையும் அவற்றில் பங்கேற்ற வகைமாதிரிப் பாத்திரங்களையும் உருவாக்கிய பங்களிப்பாக வெளிப்பட்டது. மரபான மலையாள சமூகத்தில் உடைப்புகளை ஏற்படுத்தும்போது உண்டாகும் முரண்பாடுகள் அத்தகைய படங்களின் உரிப்பொருட்களாக வெளிப்பட்டன. அந்த வெளிப்பாட்டுக் காட்சிகளில் மாற மறுக்கும் முந்தைய சமூகத்துப் பிரதிநிதிகளின் வகைமாதிரிப் பாத்திரங்கள் பல உருவாக்கப்பட்டன.

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

படம்
ஹார்வர்டு பல்கலைக்கழகம் உலகத்தின் பெருமைமிகு பல்கலைக் கழகங்களில் ஒன்று. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள அப்பல்கலைக்கழகம் உலகின் தலைசிறந்த அறிவாளிகளையும் நோபல் விருதாளர்களையும் உருவாக்கித் தந்த பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக் கழகத்தில் செம்மொழியான தமிழ்மொழிக்கொரு இருக்கை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவது தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமையே. அது தந்த உற்சாகத்தில் அதே வகையான பெருமைகளை உருவாக்கும் முயற்சிகள் இப்போது பல இடங்களில் தொடங்கியுள்ளன.

ஜெயந்தி: மாமனிதர்களின் அடையாளங்கள்

படம்
ஜெயந்தி என்பது வேறொன்றும் இல்லை. பிறந்த நாள் தான். பிறந்த நாளை, பிறந்த நாள் என்று கொண்டாடுவதற்குப் பதிலாக ஜெயந்தி என்று கொண்டாடுவது வெறும் பெயரளவு மாற்றம் அல்ல. ஜெயந்தி என்ற சமஸ்கிருதச் சொல்லால் பிறந்த நாள் அழைக்கப்படும்போது சமஸ்கிருதமயமாக்கப் பட்டதாக மாறி மேல்நிலையாக்கமும் பெறுகிறது. அதனால் சமஸ்கிருதக் கருத்தியலும் சேர்ந்து கொள்கிறது . பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெறும் மனிதர்களுக்கானது. ஜெயந்தி மனிதர்களுக்கானதல்ல; மகான்களுக்கானது என்பது அதன் உள்கிடை. 

உலகத்தமிழ் இலக்கிய வரைபடம் என்னும் கருத்துரு

படம்
இலங்கைத்தீவிலும் இந்தியத்துணைக் கண்டத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்கள் வாழ்கிறார்கள். கலை, இலக்கியப் பனுவல்களை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்மொழியின் ஆரம்பகால நிலப்பகுதி இன்று இரண்டு நாடுகளுக்குள் இருக்கும் பகுதிகளாக இருக்கின்றன.

வீரத்திலிருந்து காமம் நோக்கி : புலம்பெயர்ப்புனைவுகளின் நகர்வுகள்

படம்
இலக்கியப்பரப்பில் புலப்பெயர்வு (daispora) இலக்கியங்கள் என்ற அடையாளம் பழையது. ஆனால் தமிழ் இலக்கியப் பரப்பில் அதன் வருகை – அடையாளப்படுத்துதல் தனி ஈழத்துக்கான போருக்குப் பின்னான புலப்பெயர்வின் வழியாகவே நிகழ்ந்தது. அதற்கும் முன்பே காலனிய காலத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் தமிழர்கள் ஐரோப்பியர்களின் காலனியாதிக்கக் கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் புலம் பெயர்க்கப்பட்டார்கள் என்பது வரலாறு.

சி. அண்ணாமலையின் வெங்காயம் : மதத்தில் மறையும் மாமத யானை

படம்
நாடகக்காரரும் நாடகம் பற்றிய பதிவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துசெய்து வருபவருமான சி.அண்ணாமலை எழுதி காவ்யா வெளியிட்டுள்ள நாடகம் வெங்காயம்.வெங்காயம் -பெரியார் பற்றிய நாடகம் என்ற குறிப்புடன் வந்துள்ள இந்த நாடகப்பிரதியைப் பற்றிப் பேசத் தொடங்கும் போது மிகுந்த எச்சரிக்கையோடு பேச வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் நாட்டில் நவீன நாடகத்தளத்தில் செயல்படுகிறவர்களாகக் கருதிக் கொள்ளும் பலரும் நாடகத்தைப் பற்றிய விமரிசனங்களையும், நாடகப் பிரதிகளைப் பற்றிய விமரிசனங்களையும், விமரிசனங்களாகக் கருதி விவாதிப்பதில்லை என்பது எனது சொந்த அனுபவம்.

அரங்கியல்: அடையாளங்களும் ஆளுமைகளும்

படம்
நாடகக் கலை இந்தியாவிலும் இலங்கையிலும் கல்வித்துறைசார் படிப்பு. நாடகக்கலை மட்டுமல்ல; நடனம், இசை போன்ற நிகழ்த்துக்கலைகளும், ஓவியம்,சிற்பம் போன்ற நுண்கலைகளும், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், காணொளித்தொகுப்புகளாகச் சமூக ஊடகங்களில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் இருநிலை ஊடகக்கலைகளும் கூடக் கல்வித்துறைப் பாடங்களாக மாற்றம் பெற்றுள்ளன.

கவனிக்கத்தக்க பொறுப்பளிப்பு

படம்
  கலைமாமணி விருதுகள் வழங்கப்படும்போது தினசரிகளில் இடம்பெறும் அமைப்பாக -   உச்சரிக்கப்படும் பெயராகத் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இருந்து வருகிறது. விருது வழங்கப்படுவதற்கான காரணங்களை முன்வைக்காமலும், குறிப்பிட்ட எண்ணிகையைப் பின்பற்றாமலும் வழங்கப்படும் ஒரு விருதுக்குப் பெரிய கவனிப்பும் மரியாதையும் பொதுச்சமூகத்தில் இருப்பதில்லை. தமிழக அரசின் இயல் இசைநாடக மன்றம் வழங்கும் கலைமாமணி விருதும் அப்படியானதொரு விருதாகவே இருந்து வருகிறது.

24 மணிநேரத்துக்குப் பதில் 12 மணிநேரம்

படம்
கோடைக்கானலுக்குப் போன பத்துப் பயணங்களில் இந்தப் பயணமே மிகக் குறுகிய நேரப்பயணம். இதற்கு முந்திய குறுகிய பயணமாக இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன் நள்ளிரவில் தொடங்கி நள்ளிரவில் முடித்த அந்தப் பயணம்தான்.

காண்மதி நீவிர் ; கண்டா வரச்சொல்லுங்க...

படம்
இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுத்தாளர் இமையம் (2020 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் சாகித்ய அகாடெமி விருது எழுத்தாளர்) எழுதிய கதையொன்றுடன், நீலம் மாத இதழ் (வெளியீடு: இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் அமைப்பு) கைக்கு கிடைத்தது. பொதுவாக, இமையத்தின் சிறுகதைகளைக் கிடைத்தவுடன் வாசித்து விடுவதுண்டு. அவரது முதல் நாவலான கோவேறு கழுதைகள் ஏற்படுத்திய தாக்கம் அது. கோவேறு கழுதைகளை வாசித்துவிட்டு, புதுவைக்கு வந்த இமையத்தைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த நாளில் தொடங்கிய நட்பு கால்நூற்றாண்டுக் காலமாகத் தொடர்கிறது.

மொழி: வல்லாண்கை ஆயுதம்

படம்
பேச்சு இயல்பான நிலையில் தகவல் பரிமாற்றமாக இருக்கிறது. தகவல் சொல்லும் மொழி, அடை, உரி, போன்ற முன்னொட்டுகளைக் குறைவாகவே பயன்படுத்தும். அடைமொழிகள் இல்லாத, உரிச்சொற்கள் பயன்படுத்தாத மொழியின் வழியாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மனிதர்கள், அதிலிருந்து தங்களுக்குப் பயன்படுவனவற்றை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். மற்றவைகளை விட்டுவிட்டு விலகிப்போவார்கள்.

பின்காலனிய மனநிலையும் பெரியாரின் பெண்கள் குறித்த சிந்தனைகளும்

படம்
  இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருககிறார்கள் என்றாலும், இன்றைய இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுபத்தைந்து வயதைத் தாண்டிய சிலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் நினைவில் இருக்கலாம். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறானதாக இருக்கிறது. ஐரோப்பிய மனநிலையை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ தனக்குள் உள்வாங்கியதாகவே இந்தியத் தன்னிலை அல்லது தமிழ்த் தன்னிலை என்பது உருவாகி இருக்கிறது. இது நிகழ்கால இருப்பு

தமிழர்களின் வாரக்கடைசிகள்

படம்
  உலகத் தமிழர்களின் பொழுது போக்குகளில் முதலிடத்தில் இருப்பவை தொலைக் காட்சிகள். அவற்றுள் வாரக் கடைசிக்கான நிகழ்ச்சிகளைக் கலவையாகத் தருவதின் மூலம் பார்வையாளத் திரளைத் தன்வசப்படுத்திய அலைவரிசை ஸ்டார் விஜய்.

திறந்தே கிடக்கும் பின்வாசல்கள்

படம்
சொந்த வீட்டுக் கனவு இல்லாத மனிதர்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் கனவுகளை நிறைவேற்றிப் பார்க்கும் வாய்ப்புள்ள நடுத்தரவர்க்க மனிதர்களுக்கு சொந்த வீட்டுக் கனவு நிறைவேறத்தக்க கனவு என்பதிலும் ஐயமில்லை. சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றும் போது முன்வாசல் வைத்துக் கட்டுவதோடு இன்னொரு வாசலையும் வைத்துக் கட்டுகிறார்கள்; அந்த வாசல் வீட்டின் முன்வாசலுக்கு நேரெதிராகப் பின்புறம் இருக்க வேண்டும் எனப் பார்த்துக் கொள்கிறார்கள். இதனை நம்பிக்கை சார்ந்தது என்று சொல்வதா?தேவை சார்ந்தது சொல்வதா? என்று விளக்குவதா எனத் தெரியவில்லை.

விலக்கப்படும் நந்திகள்

படம்
தேர்தல் வழியாகத் திரும்பவும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்தக் குறுகிய காலத்தில் அதன் செயல்பாடுகள் சில, தமிழகத்தின் பெரும்பான்மை மக்களால் ஏற்புடையனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. தனது தேர்தல் வாக்குறுதிகளாகத் தந்த இலவசங்கள், கரோனாப் பெருந்தொற்றைச் சமாளித்தல் போன்றனவற்றிற்காகக் கிடைக்கும் பாராட்டுகளும் ஏற்புகளும் பொதுப்புத்தி சார்ந்தவை. அவற்றைத் தாண்டித் திராவிட இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த முன்னெடுப்புகளும் கவனிக்கப்படுகின்றன; பாராட்டப்படுகின்றன என்பதே இப்போதைய விவாத மையம்.

ஒக்கூர் மாசாத்தியின் கவிதைகளில் நடத்தை உளவியல்

முன்னுரை: ஐரோப்பியர்கள் அனைத்துச் சொல்லாடல்களையும் அறிவியலின் பகுதியாக பேசத் தொடங்கிய காலகட்டம் 18 ஆம் நூற்றாண்டு. தொழிற்புரட்சிக்குப் பின்பு மதத்தின் இடத்தைப் பிடித்த அறிவுவாதம், தர்க்கம் என்னும் அளவையியல் வழியாக ஒவ்வொன்றையும் விளக்கிக் காட்டியது. மனிதனின் மனச் செயல்களை விளக்கமுடியாத ஒன்றாகவும், காரணகாரியங்களுக்கு உட்படாத ஒன்றாகவும் இருந்த போக்குக்கு மாறாக அதனைச் சமூக உளவியலின் ஒரு பகுதியாகப் பேசி விளக்கிக் காட்டியது.

பட்டினப்பாலையில் புழங்குபொருட் பண்பாடு

முன்னுரை ஒரு மனித உயிரி தனது வாழ்தலுக்காக அளிக்கப்பெற்றதாக நம்பும் காலத்தின் ஒரு பகுதியை தன்னை வந்தடையும் ஒரு பிரதியை வாசிப்பதற்காக ஒப்புக் கொடுத்து வாசிக்கும்போது வாசகராக ஆகிறார். பிரதி வாசிக்கப்படும் நோக்கத்திலிருந்து வாசிப்பவர்களின் அடையாளம் உருவாகிறது. நோக்கம் அற்ற வாசிப்பும் கூட வாசிப்பு தான்.

கையறு நிலையின் கணங்கள்

படம்
 இந்த ஆண்டு( 2021) இல் வெளிவந்த   கவிதைத் தொகுதிகள் இரண்டு அடுத்தடுத்து வாசிக்க க் கிடைத்தன. முதலில் வாசித்தது ரூபன் சிவராஜா வின் எழுதிக் கடக்கின்ற தூரம். இரண்டாவதாக வாசித்தது சுகன்யா ஞானசூரி யின் நாடிலி. எழுதியவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமலேயே கூட இந்தக் கவிதைத் தொகுதிகளின் தலைப்பை   வைத்துக் கொண்டு கவிதைகள் எழுப்பப் போகும் சாராம்சத்தைப் பேசிவிடலாம்.

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை : கிழக்கும் மேற்கும் சந்திக்கும் புள்ளி

படம்
ஐரோப்பாவில் நடந்த நடந்த அரசியல் மற்றும் தொழில் புரட்சிகளின் பின்னணியில் இருந்த சிந்தனைப் புரட்சிகளை உலகம் அறியும். தனிநபர்களின் சிந்தனை வெளிப்பாடுகளே சமூகத்தில் செயல் வடிவம் பெறுகின்றன. காலனிய காலத்து இந்தியாவில் தோன்றிய ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகளின் திரட்சியே இந்தியாவின் தேச விடுதலைப் போராட்டமாக மாறியது. தமிழ்நாட்டில் தோன்றிய தாய்மொழிப் பற்றின் வெளிப்பாடான தமிழிய இயக்கத்தின் தோற்றக்காரணிகளாக இருந்ததும் சில ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகளே. தமிழர்கள் தங்கள் தாய்மொழி மீது தீவிரமான பற்றையும் ஆன்மீகம் சார்ந்த தேசப்பற்றின் மீது ஈடுபாடும் பொருளியல் வாழ்க்கை சார்ந்து உலகப்பார்வையும் கொண்டவர்களாக இருப்பதின் பின்னணியில் சில குறிப்பிடத் தக்க ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகள் உள்ளன. அத்தகைய ஆளுமைகளில் முதன்மையானவர் எம் பல்கலைக்கழகத்தின் பெயராக இருக்கும் பேரா. சுந்தரம்பிள்ளை அவர்கள்.

தி.க.சண்முகத்தின் நாடகவாழ்க்கை

படம்
வரலாற்றை எழுதிவைக்கவும், வரலாற்றை எழுதுவதற்கான தரவுகளைத் தொகுத்து வைக்கவும் தவறிய சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்துவந்துள்ளது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நிலப்பரப்பான தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கான போதிய அடிப்படைச் சான்றுகளைத் தேடும் பணிகளே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டு வரலாற்றைத் தாண்டி கலை இலக்கிய வரலாறுகளை உருவாக்குவதற்கான தரவுகளைத் தேடுவதோடு ஓர்மையுடன் எழுதவேண்டும் என்ற அக்கறைகளும் குறைவாகவே உள்ளன. எழுத்துக்கலைகளான கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றின் வரலாற்றை உருவாக்குவதற்கு அந்தந்த வடிவங்களில் எழுதப்பெற்ற பனுவல்கள் நூலகங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்த வரலாற்றாய்வாளர்கள் முறையான இலக்கியவரலாறுகளை எழுதிவிடமுடியும்.

உலகின் தலைசிறந்த தேநீர்

படம்
தேநீர் குடிக்கத் தொடங்கிய காலத்திலேயே தேயிலைக் காடுகளைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது எங்களூரின் மலைக்காரர் குடும்பம். ஒரு பஞ்ச காலத்தில் பிழைப்புத் தேடி மூணாறு மலைத் தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குப் போனவரின் அடுத்த தலைமுறையினர் திரும்பவும் ஊரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். அப்போது நேரடித் தேயிலையை ஊருக்கு அறிமுகம் செய்தார்கள். அவர்கள் வீட்டுத் திருமணம் ஒன்றிற்கு மூணாறுக்கும் மேல் விரியும் தேயிலைக் காடுகளில் ஒருவாரம் தங்கியிருந்த நாட்கள் தேயிலைச் செடிகளைப் பார்க்கும் ஆர்வத்தை எப்போதும் தூண்டக்கூடியன. திருநெல்வேலியில் இருந்த காலத்தில் ஊத்துக்குச் செல்லும் அரசு பேருந்தில் ஏறி மாஞ்சோலைக்குச் சென்று திரும்பி விடலாம். அதைவிட்டால் செங்கோட்டை வழியாகக் கேரளத்திற்குள் நுழையும் பாதையில் தேயிலைக் காடுகளைப் பார்க்கலாம்.

போர்க்காலச் சுமைகள்

படம்
பிரான்சிலிருந்து பதிவேற்றப்படும் நடு இணைய இதழின் 40 வது இதழில்( பங்குனி 2021 ) கறுப்பு சுமதி எழுதிய அந்தக் கதையைப் படித்தவுடன் ஈழவாணி தொகுத்த காப்பு தொகுதியில் இடம்பெற்ற ஒரு கதை நினைவில் வந்தது. இலங்கைப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைகள் எனத் துணைத்தலைப்பிட்ட அந்தத் தொகை நூலில் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் தொடங்கி, ஜெயசுதா பாபியன் வரையிலான 41 தமிழ்ப் பெண் படைப்பாளிகளின் கதைகளும் ஐந்து சிங்களப் பெண் எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புக் கதைகளும் உண்டு.

தமிழ் ஆர்வலன் அல்ல.

படம்
 இந்த விவாதம் ஒரு முகநூல் பின்னூட்ட விவாதம் தான். ஆனால் அதனைப் பலரும் விரும்பியிருந்தார்கள். இதனைச் சமூக ஆர்வலர், சினிமா ஆர்வலர், கலை ஆர்வலர் என ஒருவருக்கான அடையாளமாகச் சொல்லும்போதும் கவனிக்கவேண்டிய எச்சரிக்கை என்றே நினைக்கிறேன். இனி விவாதத்திற்குள் செல்லலாம தமிழில் வழிபாடு (அர்ச்சனையோ, பூஜையோ அல்ல) ***** தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை நீங்கள் வரவேற்கிறீர்களா? ஒரு தமிழ் ஆர்வலராக உங்கள் பதில் என்ன? - தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றின் செய்தி சேகரிப்பாளர் தொலைபேசியில் கேட்டார்.

சங்கப் பெண்கவிகளின் கவிதையியல்

  கவிதையியல் என்னும் கலைக்கோட்பாடு : ஓரு படைப்பாளி அல்லது ஓர் இலக்கிய இயக்கம் பின்பற்றும் படைப்பியக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே கலைக் கோட்பாடு என்னும் பொதுவரையறை அர்த்தம் பெற்றுள்ளது . பொதுவரையறையின் அர்த்தம் கவிதையியல் என்னும் அதன் கூறுக்கும் பொருந்தும் . நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழில் கவிதையியல் என்பதற்கும்   இலக்கியக் கோட்பாடு என்பதற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை . ஐரோப்பியர்களின் வருகைக்கும் பின்னால் சில மாற்றங்கள் உள்ளன என்றாலும் கவிதையியலும் இலக்கியக் கோட்பாடும் நேரெதிரானவை அல்ல . இலக்கியக் கோட்பாடு முதன்மையாகக் கருதுவது படைப்பியக்கத்தை ; படைப்பியக்கம் முதன்மையாக முன் வைப்பது படைப்பு சார்ந்த நுட்பங்களை . படைப்புப் பொருள் , படைப்புமுறை , படைப்பு நோக்கம் என படைப்பு நுட்பங்கள் விரியக் கூடியன . படைப்பு சார்ந்த இவையெல்லாம் படைப்பில் வெளிப்படுகின்றன என்று காட்டுவது மட்டுமல்லாமல் , அதன் நுகர்வோராகிய வாசகர்களிடம்   சென்று சேர்வதில் தான் படைப்பியக்கம் முழுமை அடைவதாக அண்மைக்காலத் திறனாய்வுகள் பேசுகின்றன .

எழுதத்தூண்டும் கதைகள் –1

படம்
வாசித்து முடித்தவுடன், இதுபோன்றதொரு பனுவலை இதே வகைப்பாட்டில் வாசித்திருக்கிறோம் என்று தோன்றினால் அதைக் குறித்துக்கூட வைத்துக்கொள்ளத் தோன்றுவதில்லை. அதற்குப் பதிலாக அந்தப் பனுவலின் ஏதோவொரு புனைவாக்கக் கூறு புதியதாகத் தோன்றும்போது, அது என்ன? என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கான விடையைத் தேடித் திரும்பவும் பனுவலுக்குள் பயணம் செய்யும்போது, பனுவலுக்குள்ளிருக்கும் அந்தப் புத்தாக்கக் கூறும், அதன் வழியாகக் கிடைக்கும் அனுபவங்கள் அந்தப் பனுவலை விவாதிக்க வேண்டிய பனுவலாக மாற்றிவிடுகின்றன. அனுபவங்கள் என்பன விவரிக்கப்பட்ட நிகழ்வுகளோடு, புற வாழ்க்கையின் காட்சிகளும், தொடர்புகளும் ஒத்துப்போகும் தன்மையாக இருக்கலாம். முரண்படும் நிலைகளாகவும் இருக்கலாம். இவ்விரண்டிற்கும் அப்பால், பனுவலில் பயன்படுத்தும் மொழியும், மொழியைக்கொண்டு உருவாக்கப்படும் சொல்முறைகளாகக்கூட இருக்கலாம். இந்த மூன்று கதைகளில் வாசித்தவுடன் எழுதத்தூண்டிய கதை இளங்கோவன் முத்தையாவின்  முன்னை இட்ட தீ. ஹேமாவின் இறுதியாத்திரையும் தீபுஹரியின் தேன்கூடும் உடனடியாக எழுதத் தூண்டியன அல்ல.

பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை: தலித் சினிமாவிலிருந்து விளிம்புநிலை நோக்கி…

படம்
இயக்குநர் பா. இரஞ்சித்தின் ஐந்தாவது படமாக வந்துள்ள சார்பட்டா பரம்பரை உலகத்தமிழ் பார்வையாளர்களையும் தாண்டிப் பலராலும் கவனிக்கப்பட்ட சினிமாவாக மாறியிருக்கிறது. அப்படி மாற்றியதின் பின்னணியில் இயக்குநரின் முதன்மையான நகர்வொன்றிருக்கிறது. உலக அளவில் சினிமாப் பார்வையாளர்களுக்கு நன்கு அறிமுகமான குத்துச்சண்டை சினிமா என்ற வகைப்பாட்டை, உள்ளூர் வரலாற்றோடு இணைத்துப் பேசியதே அந்த நகர்வு. அதன் மூலம் தனது சினிமாவை, விளையாட்டு சினிமா என்ற வகைப்பாட்டிலிருந்து அரசியல் சினிமாவாகவும், விளிம்புநிலைச் சினிமாவாகவும் மாற்றியிருக்கிறார். அந்த மாற்றம், அவரைத் தலித் சினிமா இயக்குநர் என்ற முத்திரையிலிருந்து, பொதுத்தள சினிமா இயக்குநர் என்ற அடையாளத்திற்குள் நகர்த்தியிருக்கிறது.

புலம்பெயர் எழுத்துகள்: வரலாறாக்கப்படும் புனைவுகள்

இலங்கையின் தமிழ்ப் பகுதியில் நடந்த போர்க்காலம் தொடர்ந்து புனைகதைகளாக எழுதப்படுகின்றன. போர் நிகழ்ந்த காலத்தில் வந்த எழுத்துகளைவிட, போருக்குப் பின் அந்தக் காலங்களை நினைவில் கொண்டு எழுதப்படும் புனைவு எழுத்துகள் - நாவல்களும் சிறுகதைகளும் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன. அதனை எழுதுபவர்களில் பெரும்பாலோர் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களாக இருக்கின்றனர்.

தமிழ்க்குடிதாங்கி: ஆய்வுக்கட்டுரையான ஆவணப்படம்

படம்
  2011 - இல் மருத்துவர் ச .ராமதாஸ் அவர்களுக்கு , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கும் ஆண்டுவிருதுகளில் ஒன்றான அம்பேத்கர் சுடர் விருதை வழங்கியது. அதற்கும் முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அவரைத் தமிழ்க்குடிதாங்கி என்று பட்டம் வழங்கிப்பாராட்டினார்.

விரும்பித் தொலையும் இயக்குநர்கள்

படம்
  நாயக நடிகர் உருவாக்கம் சிவாஜி X எம்ஜிஆர் என்ற எதிரிணையின் காலம் முடிந்து அரையாண்டுக்கும் மேலாகிவிட்ட து. அந்தப் போட்டியில் எம்.ஜி.ஆரே வென்றவராக – நட்சத்திர நடிகராக வலம் வந்தார். அடுத்து உருவான ரஜினி X கமல் போட்டியில் வென்றவர் நடிகர் ரஜினிகாந்த்.    நீண்ட காலமாக ரஜினி, உச்ச நடிகராக (Super Star) வலம்வர அவருக்கு உதவியவர்களின் வரிசையில் பல இயக்குநர்கள் இருந்தார்கள்.

மாடத்தி: மாற்று சினிமாத்திசையிலொரு பயணம்

படம்
இந்தியாவின்/தமிழ்நாட்டின் தென் மாவட்டக்கிராமம் ஒன்றின் காவல் தெய்வமாக விளங்குவது மாடத்தி. புதிரை வண்ணார் சாதியைச் சேர்ந்த யோசனா என்னும் பதின் வயதுப் பெண், மாடத்தி என்னும் தெய்வமாக – காவு வாங்கிய துடியான தெய்வமாக ஆன கதை, வாய்மொழி மரபில் சொல்கதையாக இருக்கிறது. அக்கதைக்குப் பின்னால் இருந்த சாதி ஒதுக்கலையும், ஒதுக்கப்பட்ட சாதிப் பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் பாலியல் வன்முறையையும் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறது லீனா மணிமேகலையின் மாடத்தி.

விரித்தலின் அழகியல்: கருணாகரனின் கவிதை மையங்கள்

இலக்கியத்தின் இயக்கமும் வாசிப்பும் எழுத்தின் இயக்கம் எல்லாவகையான பனுவல்களிலும் ஒன்றுபோல் நிகழ்வதில்லை. நாடகம், புனைகதை, கவிதை என அதனதன் வடிவ வேறுபாடுகளுக்கேற்பவே நிகழ்கிறது. வடிவ வேறுபாட்டிற்குள்ளும் ஒவ்வொரு எழுத்தாளரும் கைக்கொள்ளும் முன்வைப்பு முறைகளுக்கேற்பவும் இயக்கம் நிகழும். பனுவல்களுக்குள் நிகழ்த்தப்படும் இயங்குமுறையை, அதன் வடிவப்புரிதலோடு வாசிக்கும் வாசிப்பே முழுமையான வாசிப்பாக அமையும்.

மேற்கின் திறப்புகள்: தேடிப்படித்த நூல்கள்

எனது மாணவப்பருவத்தில் ஐரோப்பிய இலக்கியப் பரப்பையும் கருத்தியல் போக்குகளையும் அறிமுகம் செய்த நூல்களில் இந்த மூன்று நூல்களுக்கும் முக்கியப்பங்குண்டு. இந்த அறிமுகங்களுக்குப் பின்னரே முழு நூல்களைத்தேடிப் படித்திருக்கிறேன். 2000 -க்குப்பின்னர் ஐரோப்பிய இலக்கியத்தில் நடந்த சோதனை முயற்சிகள், ஆக்க இலக்கியங்கள் போன்றவற்றை  அறிமுகம் செய்யும் நூல்கள் தமிழில் வரவில்லை

மேதகு: புனைவும் வரலாறும்

படம்
பார்வையாளத்திரளுக்குத் தேவையான நல்திறக்கட்டமைப்பு, அதில் இருக்க வேண்டிய திருப்பங்களைக் கொண்ட நாடகீயத் தன்மையுமான கதைப்பின்னல், உருவாக்கப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களின் உடல் மொழியின் நம்பகத்தன்மை ஆகியன படத்தைத் தொடர்ச்சியாகப் பார்க்கத் தூண்டுன்றன. பின்னணிக்காட்சிகளை உருவாக்கித்தரும் கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கூட அதிகமும் விலகலைச் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்து யாழ்நகரம் மற்றும் கிராமப்புறக் காட்சிகளைப் பார்வையாளர்களுக்குத் தர முயன்றிருக்கிறார்கள்.

பெண் மைய விவாதங்கள் கொண்ட இரு குறும்படங்கள்

படம்
பெண்ணின் மனசைச் சொல்லாடலாக விவாதிக்கும் இரண்டு குறும்படங்கள் - யூ ட்யூப் – அலைவரிசைகளில் ஒருவார இடைவெளியில் வெளியாகியிருந்தன. அடுத்தடுத்த நாளில் அவற்றைப் பார்த்தேன். முதலில் பார்த்த படம் பொட்டு. அதன் இயக்குநர் நவயுகா குகராஜா. (வெளியீடு:10/06/2021). இரண்டாவது படம் மனசு.( வெளியீடு: 18-06-2021) இயக்குநர் மு.ராஜ்கமல்.

நாடகப்பட்டறையும் சிறார் நாடகப்பயிற்சிகளும்

படம்
காட்டுமன்னார் குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமது பொறுப்பில் ஏற்பாடு செய்த அந்தப் பட்டறை தேர்தல் பிரசாரத்தின் போதும் வெற்றி பெற்ற பின்னும் அவரிடம் நான் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. வழக்கமான சட்டமன்ற உறுப்பினராக வலம் வராமல் கலை இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளிலும் உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். பட்டறைகள், கருத்தரங்கங்கள், கலைவிழாக்கள் என ஏற்பாடு செய்வது மூலம் தொகுதி மக்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய அனுபவங்களை நீங்கள் நினைத்தால் தர முடியும் என்று சொல்லி வைத்தேன். அந்த கோரிக்கையை அப்போது நான் காலச்சுவடில் எழுதிய கட்டுரையிலும் [காட்சிகள் : கனவுகள்-தேர்தல் 2006] கூடப் பதிவு செய்திருந்தேன்.

கலைச்சொல்லாக்கம் - சில குறிப்புகள்

முன்குறிப்பு: இலக்கணத்தைக் கற்றவனாக இருந்தாலும் அதனைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவனாக இல்லை. இலக்கணத்தைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவர்கள் அதனை நிகழ்காலப் பயன்பாட்டோடு கற்பிக்கத் தவறினார்கள் என்பதும் உண்மை. பயன்பாட்டு மொழியியல் பற்றிப்பேசிய மொழியியல்காரர்கள் பயன்பாட்டு இலக்கணம் பற்றிப் பேசாமல் ஒதுங்கினார்கள் என்பது தமிழ்க்கல்விக்குள் நடந்த சோகம்

இருபுனலும் வாய்த்த மலைகள்

படம்
மார்ச் 22 . உலக நன்னீர் நாள் கொண்டாட்டத்திற்காக முதல் நாள் சென்னையிலிருந்து வந்து விட்ட அந்த நண்பரை, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஆழ்வார்குறிச்சிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும். ஆழ்வார்குறிச்சிக்கும் முக்கூடலுக்கும் இடையில் இருக்கும் கோயில் வளாகத்தில் அவர் பேசும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட ஊர் என்பதாக இல்லாமல் தாமிரபரணி நதியையொட்டிய பகுதியில் நடக்கும் சிறப்பு நாட்டுநலப் பணித்திட்ட முகாம். நெல்லையின் மேற்குப்பகுதியில் செயல்படும் அம்பை, ஆழ்வார் திருநகரி, பாபநாசம் கல்லூரிகளின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் கூட்டுச் செயல்பாடாக அந்த முகாம் நடந்துகொண்டிருந்தது.

அகத்திணைக்காட்சிகள்

படம்
தமிழ்ச் செவ்வியல் கவிதைக்குள் இடம்பெறும் உரிப்பொருட்கள் புணர்ச்சி, பிரிவு,இருத்தல்,  இரங்கல், ஊடல் ஆகிய அன்புசார்ந்த அகநிலையோடு, ஒருபால் விருப்பமும், பொருந்தாக் காமமும் என்னும் அன்புசாரா அகநிலையாகவும் இருக்கின்றன. இவ்வுரிப்பொருட்கள் அகப்பாடல்களில்  திரும்பத்திரும்ப இடம்பெறுகின்றன. அதனால் கூறியது கூறல் என்னும்  நிலையைக் கொண்டிருக்கின்றன என்ற விமர்சனத்தை எதிர்கொள்கின்றன. ஆனால் அவற்றிற்குள் இடம்பெறும் கருப்பொருட்களும் முதல்பொருளும் உருவாக்கும் உருவகம், உவமை, இறைச்சி, உள்ளுறை  போன்றன  கவிதையியல் நுட்பங்களாக மாறி விடுவதைக் காணமுடிகிறது. ஒரு குறுந்தொகையில் நிலாவும்,  கலித்தொகைப்பாடலில் சொம்பும், அகநானூற்றில் வீடுறைச் சேவலும் பேடும் உருவாக்கும் அர்த்தத்தளங்கள் ரசிக்கத்தக்கனவாக மாறவிடுகின்றன.