இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவில் வந்து போகும் வீடுகள்

படம்
திருநெல்வேலி கட்டபொம்மன் நகர் ஏழாவது தெரு செந்தில் நகர் இந்த முகவரியிலிருந்து  இப்போது திருமங்கலத்திற்கு வந்து விட்டேன். அந்த வீட்டில் இருந்த காலம் 18 ஆண்டுகள்; நீண்ட காலம். 2002 பிப்ரவரி 2 இல் பாய்ச்சினோம். 

பிக்பாஸ்: உள்ளிருப்பின் காரணங்கள்

படம்
  விஜய்தொலைக்காட்சியின் “பெருந்தல” – பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம்  அனிதா சம்பத் வெளியேறியுள்ளார். அவரது வெளியேற்றத்தைச் சமூக ஊடகங்களில் இயங்குபவர்கள் வெளியேற்றப்பட்டார் என்றே நம்புகின்றனர். அனிதா வெளியேற்றம் மட்டுமல்ல; இதற்கு முன்பு அர்ச்சனா, சனம்ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி   ஆகியோரின் வெளியேற்றங்களின் போதும்கூட இதுபோலவே கருத்துகள் வெளிவந்தன. ரேகா, வேல்முருகன், சுஜித்ரா, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோரின் வெளியேற்றங்களின்போது அப்படியான கருத்துகளால் நிரம்பவில்லை.

இன்னுமொரு குடிப்பெயர்வு

படம்
இதுவரையிலான வாழ்நாளில் மூன்று பங்குக் காலத்தைக் கழித்த நெல்லை நகரவாழ்க்கை இன்றோடு நிறைவடைகிறது. இன்று மதுரை – திருமங்கலத்தில் குடியேறுவதற்கான பயணத்தைத் தொடங்குகிறேன்.

கருணா:நிகழக்கூடாத மரணம்

படம்
  நேரடித் தொடர்புகள் இல்லாத நிலையிலும் நண்பர்கள் என்ற அடையாளத்தோடு வாசிக்கவும் முரண்படவும் உரையாடவும் உதவி கேட்கவுமான வாய்ப்புகள் கொண்ட சமூக ஊடகத்தின் காலத்தில் வாழும் நமக்கு சில மரணங்க ள் நிகழக்கூடிய மரணங்களாகத் தோன்றிக் கடந்துபோகின்றன. சில மரணங்கள் நிகழ்ந்திருக்கக் கூடாது என்று தோன்றுகின்றன.

அடம்பிடித்து அழும் காந்தியும் புத்தனும்

படம்
ஒரு நாள் இடைவெளியில் இணையப் பக்கங்களில் பதிவேற்றம் பெற்ற இந்த இரண்டு கவிதைகளையும் வாசித்தபோது இரண்டுக்கும் இடையே கவிதையின் சொல்முறையிலும் அமைப்பாக்கத்திலும் முன்வைப்பிலும் உருவாக்கும் உணர்வலைகளிலும் பெருத்த ஒற்றுமைகள் இருப்பதை உணரமுடிந்தது. இப்படியான ஒற்றுமைகளை உருவாக்குவது அவர்கள் இருவரும் கவிதையாக்க நினைத்த நேர்நிலை நிகழ்வுகள் என்றே சொல்லத்தோன்றுகிறது. முகநூலில் யவனிகாஸ்ரீராமின் கவிதையை வாசித்தது முதல் நாள் (டிசம்பர்.17) அடுத்தநாள் ரியாஸ் குரானாவின் கவிதை நடு இதழில் வாசிக்கக் கிடைத்தது.

வேதசகாயகுமார்: நினைவலைகள்

படம்
அவரது இறப்பு முதல் தகவலாக என்னிடம் வந்து சேர்ந்தபோது நேரம் முன்னிரவு 7.50. எழுதியவர் அனந்தபுரி நயினார். வருத்தமான செய்தி என பின்னூட்டக் குறிப்பெழுதிய பின் அவரோடான சந்திப்புகளும் உரையாடல்களும் விவாதங்களும் தொடர்ச்சியாக நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன.

நம் சமையலறையில்... : கட்டுப்படுத்தப்பட்ட எழுத்தும் வாசிப்பும்

படம்
கொன்றை அறக்கட்டளை, குமுதம் இதழுடன் இணைந்து நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் குறிப்பான ஒற்றைக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. என்றாலும் சிலவகைக் கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொள்ளும் நெருக்கடி கொண்டது அப்போட்டி.

சமகாலத்தமிழ் நாடகங்கள்

படம்
இருபத்தியோராம் நூற்றாண்டின் 20 ஆண்டுகளைக் கடந்துவிட்ட   இந்தியர்கள் அல்லது தமிழர்களின் ‘நிகழ்காலம்‘ என்பதை 1990 - க்குப் பிந்திய முப்பதாண்டுகளாகக் கொள்ளவேண்டும். ஆனால் அவர்களது ‘சமகாலம்‘ இன்னும் கொஞ்சம் பின்னுக்குப் போய் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட பத்தாண்டுகளாக -1950-களாகக் கொள்ளப்பட வேண்டும். ஆனால்  அவர்களது ‘நேற்று‘ என்பது ஒரு நூற்றாண்டுப் பழைமையாகவும் இருக்கலாம். ஓராயிரம் ஆண்டுப் பழைமையாகவும் கொள்ளப்படலாம்.

வேளாண்சட்டங்கள் : வாக்காளர் எவ்வழி அரசும் அவ்வழி

படம்
  உலகமயத்தை இந்தியா ஏற்றுக்கொண்டு 30 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஏற்றுக் கொண்டது தொடங்கி, காங்கிரஸ் தலைமையில் - முனைவர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த ஆட்சிக் காலத்தில் தொழில் மண்டலங்களே வளர்த்தெடுக்கப்பட்டன.

சிதைவுகளின் முழுமை - பின் நவீனத்துவச் சொல்லாடல்கள்

படம்
நடிக அரசியல் தேசிய இன அடையாளம், வட்டாரவாதம், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகள், நாடோடிகள், மூன்றாம் பாலினர், மதங்களின் உட்பிரிவு நம்பிக்கைகள், சடங்குகள், வெளிப்பாடுகள், சாதியின் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகள் போன்றனவற்றை அடையாள அரசியல் சொல்லாடல்கள் என்ற அளவில் விவாதிக்கலாம்; விவாதிக்க வேண்டும்; அவையெல்லாம் சரிசெய்யப்படவேண்டும். அதை வலியுறுத்தும் அரசியல் விவாதங்கள், இவையெல்லாம் ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு முதன்மையான தடைக்கற்கள் என்பதையும் மறுப்பதில்லை.

முல்லையென அறியப்பட்ட சித்ரா

படம்
2014 முதலாகவே தொலைக்காட்சி அலை வரிசைகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், விளம்பரப் படங்களின் நடிகை, தொடர்களின் நடிகை என வந்து கொண்டிருந்தார் என்றாலும், அவரது உருவமும் பேச்சும் சிரிப்புமான முகமும் பதிந்துபோன தொடராக இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் தொலைக் காட்சியின் முதன்மை நேரத்தொடர்தான். அந்தப் பெண்ணின் பெயர் சித்ரா என்பதுகூட நேற்றுத் தற்கொலை செய்துகொண்டதாகப் பரவிய செய்திக்குப் பின்புதான் தெரியும். செய்திகளில் கூட முல்லையாக நடித்த சித்ரா என்றுதான் சொன்னார்கள்.

இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு: கதைப் படம் அல்ல; முன்னெடுப்பு சினிமா

படம்
  படத்திற்குள் கதை இருக்கிறது. அதுவும் ஒரு காதல் கதை இருக்கிறது. ஒரு தடையை உருவாக்கிக் காட்டி,  இந்தத்தடையை மீறிக் காதல் நிறைவேறுமா ? என்ற கேள்வியை எழுப்பிச் சிக்கல்களை முன்வைத்துத் திருப்பங்களைத் தாண்டிக் காதல் நிறைவேறியது எனக்காட்டி இன்பியல் முடிவைத் தரும் காதல் கதைகள் இங்கே செய்யப்படுகின்றன. இந்தப் படத்திலும் அப்படிச் செய்யப்பட்ட காதல் கதை இருக்கிறது.

இதுவொரு புலப்பாட்டுக்கலை

படம்
60 நாட்களைத் தாண்டிய பெருந்தலை- பிக்பாஸ் - பங்கேற்பாளர்களின் இன்றைய பொறுப்புச் செயல் தங்களை முன்மொழிதல். இதுவரை தன்னை ஒரு பங்கேற்பாளராக எப்படி முன் வைத்தார்கள்; அதன் மூலம் பார்வையாளர்களை எப்படி மகிழ்ச்சிப் படுத்தினார்கள் எனச் சொல்லும்படி வலியுறுத்தப்பட்டது. பொதுவான செயல்பாடுகளான காலைவிழிப்பு, வீட்டின் வேலைகள், ஆடை அணிதல், மற்றவர்களோடு பழகுதல் என்பதில் அவரவர்களின் தனித்தன்மையான வெளிப்பாடு இருந்தால் கூடச் சொல்லியிருக்கலாம்.

வட்டாரத்திலிருந்து தேசியத்திற்கு

கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியல், மாநிலம் தழுவிய அரசியலிலிருந்து வட்டார அரசியலுக்கு நகர்ந்துவிட்டது. வட்டார அரசியல் என்பது முன்பு மண்டலங்களின் அரசியலாக இருந்தது. அதன் வெளிப்படையான அடையாளம் திராவிட முன்னேற்றக் கழகம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராக திரு மு.க. அழகிரியை நியமித்ததைச் சொல்லலாம். மண்டல அளவு அரசியல், மாவட்ட அளவு அரசியலாக மாறி, தாலுகா அளவு அரசியலாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இதன் வெளிப்பாடுகளே கட்சி அமைப்புகளுக்காக ஒரே மாவட்டம் இரண்டு மூன்று பிரிவுகளாக ஆக்கப்பட்டுத் தனித்தனி மாவட்டச் செயலாளர்கள் நியமனங்கள் நடப்பது. இந்த நகர்வைத் தொடங்கி வைத்தது திராவிட முன்னேற்றக்கழகம்.

சம்ஸ்க்ருதம் என்னும் ஆதிக்கமொழி

இரண்டு ஆண்டுகள் போலந்து மாணாக்கர்களுக்குத் தமிழ்மொழி கற்பிக்கச் சென்ற போலந்து நாட்டில் கஷுபியன் மொழி என்றொரு மொழி வட்டார மொழியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அம்மொழி பேசும் மக்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் அளவில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட வட்டாரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காகத் தனியாகத் தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகவாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன.

இந்தியச்சாலைகளில் இருவேறு வாகனங்கள்

படம்
”மிதிவண்டியைப் பயன்படுத்தும் கலாசாரத்தை முன்னெடுக்கப் பெரியதொரு விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்” என நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய வெங்கய்யா நாயுடு அவர்கள் பேசியதாக வானொலியின் காலைச் செய்தியில் முதல் செய்தியாக வாசிக்கப்படுகிறது.

க.கலாமோகனின் விலகல் மனம் :

படம்
நீண்ட இடைவெளிக்குப் பின் கலாமோகனின் சிறுகதை ஒன்றை வாசிக்கும் வாய்ப்பைக் கனலி இணைய இதழ் தந்துள்ளது. 1999 இல் எக்ஸில் வெளியீடாக வந்த நிஷ்டை தொகுதிக்குப் பிறகு சிவகாமியின் ஆசிரியத்துவத்தில் வரும் புதிய கோடாங்கியில் சில அபுனைவுகளையும் புனைவுகளையும் எழுதினார். அதன் பிறகு நீண்ட இடைவெளி. இப்போது மிருகம் என்ற தலைப்பில் இந்தக் கதையை எழுதியுள்ளார். இருபதாண்டுகளுக்கு முன்பு வந்த நிஷ்டை தொகுப்பில் இருந்த கதைகளை வாசித்த பின்பு அதன் ஆசிரியரான க.கலாமோகனைப் பற்றிய அப்போதைய மனப்பதிவாக இருந்தது இதுதான்:

கரைகடக்கும் புயல்: ஒரு நினைவு

படம்
  இன்றிரவு நிவர் புயல் கரையைக் கடக்கும் எனத் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் வானிலை அறிக்கைகள் சொல்கின்றன. புயலின் இருப்பையும் சுழற்சியையும் பற்றிய குறிப்புகளைப் பற்றிய விவரணைகளில் நேற்றிலிருந்து புதுச்சேரியென்னும் பாண்டிச்சேரி உச்சரிக்கப்படுகிறது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கும்போது கடலோர நகரங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகலாம். அப்படியான பெருநகரங்களில் ஒன்றாக இருக்கிறது புதுச்சேரி. அதனை அடுத்த பெருநகரம் கடலூர்.

பக்தியின் புதிய முரண்நிலை : மூக்குத்தி அம்மன்

படம்
  பொருட்படுத்திப் பேச வேண்டிய திரைப்படங்கள் என்பதற்கான காரணங்கள் சில உள்ளன. முதலாவது காரணம், சினிமா என்னும் தொழில்நுட்பம் சார்ந்த கலையின்   உள் நுட்பங்களைத் தனதாக்கிக்கொண்டு வெளிப்படும் நேர்த்தியான வடிவம்.

நகைச்சுவைப்படத்தின் ஒரு சட்டகம்: நாங்க ரொம்ப பிஸி

படம்
பொருட்படுத்தப்படும் கூறுகள் பொருட்படுத்திப் பேசவேண்டிய திரைப்படங்கள் என்பதற்கான காரணங்கள் சில உள்ளன. முதலாவது காரணம், சினிமா என்னும் தொழில்நுட்பம் சார்ந்த கலையின் உள் நுட்பங்களைத் தனதாக்கிக்கொண்டு வெளிப்படும் நேர்த்தியான வடிவம்.

அருந்ததிராயின் தோழர்களோடு கொஞ்சதூரம்

படம்
மூன்று ஆண்டுகள் கற்பிக்கப்பட்ட நூலொன்றைப் பல்கலைக்கழகம் தனது  பாடத் திட்டத்திலிருந்து  நீக்கியிருக்கிறது.   நீக்கச் செய்ததின் பின்னணியில் ஒரு மாணவர் அமைப்பு இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களும் அதனை உறுதிசெய்கிறார்கள். அந்த அமைப்பு இப்போதைய அரசினை நடத்தும் கட்சியின் துணை அமைப்பு. இந்தத் தொடர்புச் சங்கிலிகள் மூலம் பாடத்திட்டக்குழுக்களுக்குப் பேரச்சத்தின் நிழல் காட்டப்பட்டுள்ளது. நீக்கம் மட்டுமே முதன்மை நோக்கம் அல்ல. இதுபோன்ற புத்தகங்களைப் பற்றிய சிந்தனையே வரக்கூடாது என்பதும் நோக்கமாக இருக்கக் கூடும் 

உணர்வுகளை எழுதும் நுட்பம்: உமா மகேஸ்வரியின் வெனில்லா

படம்
ஒரு சிறுகதைக்கு ஒற்றை நிகழ்வும் அதன் வழியாகத் தாவிச் செல்லும் மனவுணர்வுகளும் போதும் என்பதைத் தொடர்ச்சியாகத் தனது கதைகள் வழியாக நிரூபித்துக்கொண்டே இருக்கும் எழுத்தாளர் உமாமகேஸ்வரி . ஒற்றை நிகழ்வும் மிகக்குறைவான பாத்திரங்களின் தேர்வும் என்பதால், அவரது கதைகள் வாசிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதில்லை. அதேநேரம் வாசித்தபின் அக்கதையைப் பற்றிய நினைவுகளைத் தொடர்ச்சியாக கிளப்பிக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் வாசித்தவரின் மனதிற்குள்  நீண்ட நேரம் தங்கியிருப்பதாகவும், அக்கதைகளில் இடம்பெற்ற பாத்திரங்களை ஒத்த மனிதர்களின் சந்திப்பை நினைவூட்டுக் கொண்டே இருப்பதாகவும் ஆகிக் கொள்கிறது.  

மறந்துபோன ஊர் அடையாளங்கள்

படம்
  என்னுடைய பேரனை இடுப்பில் வைத்திருக்கும் இந்தப் பெண்ணின் பெயர் எமிலி மாதவி. படம் எடுக்கப்பட்ட இடம் போலந்தின் பண்பாட்டு நகரமான க்ராக்கோ நகரின் புகழ்பெற்ற பூங்கா.

உள்நோக்கிய சுழற்சிகள்

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அசத்துதீன் ஒவைசியும் ராம்விலாஸ் பஸ்வானின் மகனும் லோக்ஜனசக்தி கட்சியும் தலைவருமான சிராக் பஸ்வானும் விமரிசிக்கப்படுகிறார்கள்.

புலப்படா அரசியலும் அரங்கியலும்

படம்
வரப்போகும் தமிழகச் சட்டமன்றத்தேர்தலில் முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் இன்மையைப் பெரிய வெற்றிடமாக ஊடகங்களும், ஊடகங்களில் விவாதிப்பவர்களும் சொல்கின்றனர். இன்னொருவரின் இன்மையைப் பற்றிப் பேசுவதில்லை. அவரது இன்மையும் இந்தத் தேர்தலில் பெரும் வெற்றிடம் என நான் நினைப்பதுண்டு. அவர் தமிழகத்தின் புலப்படா அரசியலின் மையமாக இருந்த திரு ம.நடராசன் . புலப்படா அரசியலை விளக்குவதற்கு முன்னால் புலப்படா அரங்கியலை விளக்க நினைக்கிறேன் 

கமல்ஹாசன்: நடிகரிலிருந்து அரசியல்வாதியாக

படம்
ராஜபார்வை- கமலின் சினிமாவாக அறியப்பெற்ற முதல் படம். அவர் தன்னை நடிக்கத் தெரிந்த நடிகராக உணர்ந்து வெளிப்படுத்திக் கொண்ட படம். அந்தப் படம் பற்றி நினைத்துக் கொள்ளவும் சொல்லவும் பல சங்கதிகள் உண்டு. அது அவரது 100- வது படம். 100- வது படம் தனது பேர்சொல்லும் படமாக -கலைத்துவம் கூடிய வித்தியாசமான படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகக் கவனமாக எடுத்த படம்.

கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி:சொல்கதைகளின் தொகுதி

படம்
  ‘ஒரு ஊரில’ என்று தொடங்கிச் சொன்ன கதைகளைக் கேட்டு – சொல்கதைகளைக் கேட்டு வளரும் சமூகங்கள் இப்போதும் இருக்கின்றன.   அவை சொல்லப்படும் கதைகள். சொல்லப்படும் கதைகளின் முதல் முதலாகச் சொல்லப்படுகின்றன என்பதாக இல்லாமல் ஏற்கெனவே அவை வேறுவிதமாகவும் சொல்லப்பட்டிருக்கும். நடந்த நிகழ்வுகளாகவோ, கேள்விப்பட்ட செய்தியாகவோ, வரலாற்றுக்குறிப்பாகவோ, அறிவியல் உண்மைகளாகவோ- கண்டுபிடிப்பாக – ஆச்சரியமாகவோ சொல்லப்பட்டிருக்கும். அப்படிச் சொல்லப்பட்ட ஒன்றை எழுத்தில் வாசிக்கும்போது எங்கேயோ கேள்விப்பட்டதின் சாயலாக இருக்கிறதே என்று தோன்றும்.

மேலைக்காற்றுக்குப் பதில் கீழைக்காற்று

  பிறமொழி எழுத்துகளைத் தமிழில் அறிமுகம் செய்யும் நோக்கம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறுவிதமாக நடந்துள்ளன. தழுவல்கள், சுருக்க அறிமுகங்கள், மொழிபெயர்ப்புகள் என வரவு வைக்கப்பட்டதுபோலவே குறிப்பிட்ட மொழி இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருந்துள்ளன.

கரோனா என்னும் உரிப்பொருள்

படம்
நம் காலத்தின் பெரும்பரப்பியல் ஊடகங்களான தொலைக்காட்சிகளும் வானொலிகளும் கரோனாவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் பாதிப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. செய்திகளாக மட்டுமல்லாமல் விளம்பரங்களாக, காட்சித்துணுக்குகளாக, தொடர் கதைகளின் உரையாடல்களாக, அறிவிப்புகளாக என அதன் ஒவ்வொரு சலனங்களிலும் அலைத் துணுக்குகளிலும் கரரோனாவே முன் நிற்கின்றது. ஊடகங்கள் நிகழ்வாழ்க்கையின் பிரதிபலிப்புகள். நின்றுபோன நிகழ்வாழ்க்கையின் காரணியாக இருக்கும் கரோனா அல்லது கோவிட் 19 என்னும் சொல் இந்தக் காலத்தின் உரிப்பொருள் என்பதை உலகம் மறுக்கப்போவதில்லை; மறக்கப்போவதில்லை.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்

படம்
  ஆன்மீகஅரசியல் என்பது இலக்கணப்படி உம்மைத்தொகை. ஆன்மீகமும் அரசியலும் என விரியும். ஆன்மீகத்தின் இருப்பிடம் கோயில். அதன் மூலம் இறை. அந்த மூலத்தைத் தேடிச் செல்ல வேண்டியவர்கள் தனிமனிதர்கள். அமைதியும் ஓர்மைப்பட்ட மனமுமாகச் செய்யும் பயணமே ஆன்மீகப் பயணம்.

அரசியல் தெரிவுகளின் அவலங்கள்

நல்லன நடக்கவேண்டும் என நினைக்கும் நினைப்புக்குள்ளேயே தீயனவற்றுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மநுவின் இருப்பு: பிக்பாஸில் நேரடி நிகழ்வு

படம்
  மநு ஸ்மிருதியின் கருத்துகளும் போதனைகளும் இப்போது நடைமுறையில் இல்லை; இப்போது யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை என்று வாதிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நிகழ்கால நேரடி ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெருந்தல - பிக்பாஸ் -நிகழ்ச்சியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி. மாலை 6.30 முதல் 10.30 வரை நான்கு மணி நேரமும் விஜய் தசமியை நிகழ்த்திக் காட்டினார்கள்.

இலக்கியவரலாற்றை எழுதும் முயற்சிகள்

பதிற்றாண்டுத்தடங்கள் (2010 -2020) என்றொரு சிறப்புப்பகுதிக்காக நான்கு கட்டுரைகளை வெளியிட்டுள்ளது காலச்சுவடு. அதன் 250 வது இதழ் என்பதும் சிறப்புப்பகுதிக்கு ஒரு காரணம்.

மனு : சில சொல்லாடல்கள்

வாய்மொழிப்பனுவல் உலகம் முழுவதும் வலதுசாரிகளின் முதன்மையான அடையாளம் இருப்பதில் மாற்றம் தேவையில்லை என்பது. முதலாளிகளும் உழைப்பவர்களும் என்ற வேறுபாடுகள் இருந்தால்தான் தொழில் வளர்ச்சியும் உற்பத்தியும் நடக்கும். எனவே ஏழை-பணக்காரர், முதலாளி -தொழிலாளி, ஆளும் வர்க்கம் - உழைக்கும் வர்க்கம் என்ற சொல்லாடல்களே தேவையற்றவை என வலதுசாரிகள் நினைப்பதுண்டு. வேறுபாடுகளைப் பேசி, வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சிகளாகப் போராட்டங்களைக் கையிலெடுப்பவர்கள் ஆபத்தானவர்கள்; அதனைப் பேசாமல் தவிர்த்துவிடுவதே சரியானது என்பதே வலதுசாரிக்கொள்கையாளர்களின் அடிப்படைக் கருத்தியல்.

புதிய உரையாசிரியர்கள்

படம்
  அரசியல் விமரிசகர் துரைசாமி ரவீந்திரனின் முந்தையை விவாதங்களுக்கும் இப்போதைய விவாதங்களுக்கும் நேர்காணல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. முன்பெல்லாம் பூடகமாகச் சொன்ன கருத்துகளை இப்போது வெளிப்படையாகப் பேசுகிறார். மாநில அரசியலில் நடக்கும் நகர்வுகளைக் குறிப்பாகத் தமிழக பா.ஜ;க.வின் அரசியல் நகர்வுகள் பலவற்றை வெளிப்படையாகப் பேசுகிறது அண்மைய பேச்சுகள்.

எட்டு நூறுகள் - விளையாட்டும் சினிமாவும்

படம்
  நையாண்டியாக முடிந்த தன்வரலாற்றுப்புனைவு ========================================= எந்தவொரு தன்வரலாற்றுப் புனைவும் அதன் எல்லைக்குள் மட்டும் நின்றுவிடுவதில்லை. அரசியல் தலைவர்களின் தன்வரலாறுகள் - காந்தி, மண்டேலா, சே, அம்பேத்கர் - அரசியல் பேசுவதற்காகவே எடுக்கப்பட்ட படங்கள். இவர்கள் அல்லாமல் வேறு துறையின் ஆளுமைகளைப் பற்றிய தன்வரலாற்றுப் புனைவுச் சினிமாக்களும் அரசியல் நோக்கத்தோடுதான் எடுக்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களைப் பற்றிய தன்வரலாற்றுப் புனைவுகளும் விதிவிலக்கில்லை. 800 பற்றிய பேச்சுகளும் ஆவேசங்களும் நடந்து கொண்டிருந்தபோது இதற்கு முன்னால் பார்த்த அமீர்கானின் தங்கல்/ யுத்தம், எம்.எஸ்.தோனி , மேரிகோம் போன்ற தன்வரலாற்றுப் புனைவுகளும் இறுதிச்சுற்று, கனா போன்ற விளையாட்டுப் புனைவுகளும் நினைவில் ஓடிக்கொண்டே இருந்தன.

மனுஷ்யபுத்திரனின் புதிய அடையாளம்

படம்
  நீ ண்டகாலமாகவே தேர்தல் அரசியலில் வாக்காளர்களை நேரடியாகச் சந்திக்கும் தொண்டர்களின்- முன்களப்பணியாளர்களின் - செயல்பாடுகளே வெற்றி -தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குகளைப் பெற்றுத்தரும் நகர்வுகளாக இருக்கின்றன. அதே நேரத்தில் நிகழ்காலத் தேர்தல் நடைமுறைகளில் பல மாற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. பலவற்றை ரகசியமாகச் செய்துவந்த அரசியல் கட்சிகள் இப்போது வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கின்றன. ரகசியம் பேணுவதும் உரிய நேரத்தில் ரகசியத்தை வெளிப்படச் செய்வதும் நவீனத்துவ நோக்கின் அடையாளம். ஆனால் பின் நவீனத்துவச் சூழல் ரகசியங்களைத் துறக்கத் தூண்டும் விளைவுகளைக் கொண்டது.

ஸ்ரீஎன்ஸ்ரீவத்ஸா என்னும் மொழிபெயர்ப்பாளரும் கருணாகரனின் மத்தியூ கவிதைகளும்

அவரது மொழிபெயர்ப்பில் தினசரி ஒன்றிரண்டு கவிதைகள் ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. எழுதிய கவிகளின் அனுமதியுடனும் மொழிபெயர்ப்புக்கான ஒப்புதலுடனும் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறார். அவரது மொழிபெயர்ப்பு வழியாகவே பல கவிகளை முதன்முதலாக வாசித்துள்ளேன். நானும் எப்போதாவது கவிதை வடிவத்தில் எனது நினைவுகளையும் நிலைப்பாடுகளையும் எழுதுவதுண்டு. அவற்றில் இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்துக் கவி அடையாளம் தந்து கூச்சப்பட வைத்துள்ளார்.

தரம் உயர்த்துதலும் திறன்மிகு கல்விநிறுவனமாதலும்

படம்
தரம் உயர்த்துதல் நான் பணியாற்றிய திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.

பெண்ணெழுத்தின் புதிய வெளிகள்

படம்
  இணைய இதழ்களின் வருகைக்குப் பின்பு பெண்களின் உலகத்தைப் பெண்களே எழுதும் போக்கு அதிகமாகியுள்ளது. பலநேரங்களில் ஆண்களின் எழுத்துகளைவிடப் பெண்களின் பனுவல்களை அதிகம் தாங்கியதாக இணைய இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று காலை பதாகை இணைய இதழில் வந்த சுஜா செல்லப்பனின் காத்திருப்பு வாசிக்க முடிந்தது.

உள்ளூர் விருதும் உலகவிருதும்

படம்
நோபல் விருதுக்குப் பரிந்துரைகளும் எதிர்பார்ப்புகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அமெரிக்கப்பெண்கவியும் பேராசிரியருமான லூயி க்ளுக்கிற்கு வழங்கப்பட்டதை ஏற்க மனமின்றி நேற்றிரவு பலர் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள் என்பதை முகநூல் காட்டுகிறது. ஏற்பவர்களுக்கும் நிராகரிப்பவர்களுக்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம். ஆனால் நோபல் விருதுக்குழுவினர் விருதுக்குரியவரைத் தேர்வு செய்ததற்கான காரணத்தைச் சொல்லி விடுகின்றார்கள். அந்தக் காரணம் இலக்கிய ஆக்கத்தின் - ஒரு போக்கின் அடையாளமாக இருக்கிறது என்ற வகையில் தெரிவுசெய்யப்பட்டவர் பொருத்தப்பாடு கொண்டவராக மாறுகிறார். கலை, இலக்கியத்தில் பல்வேறு போக்குகள் இருக்கின்றன; அதில் ஒரு போக்கு இந்த ஆண்டு கவனம் பெற்றிருக்கிறது என்ற அளவில் ஏற்பு நிகழ்கிறது. அந்தக் காரணத்தோடு ஒத்துப் போகின்றவர்கள் விருதாளரைக் கொண்டாடுவார்கள். மறுப்பவர்கள் தங்களின் இலக்கியப்பார்வையை முன்வைத்துக் கட்டுரைகள் எழுதலாம்.

பஸ்வான்: பங்கேற்பு அரசியலின் வகைமாதிரி

படம்
  பங்கேற்பு அரசியலின் அதிகப்படியான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக இந்தியாவின் ஒன்றிய அரசில் பங்கேற்றுக் கொண்டிருந்தவர் திரு. ராம்விலாஸ் பஸ்வான். ஜனதா அரசு, வி.பி.சிங்கின் கூட்டணி அரசு, வாஜ்பாயியின் அரசு, தேவ கௌடாவின் அரசு, மன்மோகன் சிங்கின் அரசு, நரேந்திரமோடியின் அரசு என எல்லா அரசுகளிலும் அதிகாரத்துவம் கொண்ட அமைச்சராகவே இருந்தார்.

சல்காவின் கதையைச் சொல்லும் ரைனா

படம்
  பெயரையே தலைப்பாக வைத்து எழுதப்படும் இலக்கியப்பனுவல்கள், அந்தப் பெயருக்குரியவரின் பெருமைகளை அல்லது துயரங்களை விவரித்து நிலைப்படுத்தும் நோக்கம் கொண்டனவாக விரியும். தமிழின் இராமவதாரம் என்னும் இராமாயணம் நல்ல உதாரணம். உலகப்புகழ்பெற்ற நாடகாசிரியர் சேக்ஸ்பியரின் லியர் அரசன், மேக்பத்,ஹாம்லட் போன்றனவும் பெயர்களைத் தலைப்பாக்கிய நாடகங்களே . அவையும் அந்தப் பெயர்களுக்குரியவரைக் குறித்த சொல்லாடல்களையே முதன்மைப்படுத்துவன . இதற்கு மாறானவைப் பெயரைத் தலைப்பாக்காது பெயருக்குரியவர்களின் குணத்தையோ இருப்பையோ தலைப்பாக்குபவை. இப்சனின் பொம்மைவீடு, மக்கள் பகைவன் போன்ற நாடகத்தலைப்புகள் இதற்கு உதாரணங்கள். தமிழின் ஆகக்கூடிய சிறப்புகளைக் கொண்ட சிலப்பதிகாரமும் அதற்கான உதாரணம்தான். இவை தனிமனிதர்களின் பாடுகளைப் பொதுநிலையில் விவாதிக்க விரும்புவன.

திரும்பத்திரும்ப சந்திரமுகி

படம்
    ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி – ஒரு சித்திரை முதல் நாளில் அரங்கிற்கு வந்தது.அதற்கிணையான விளம்பரங் களோடும் நடிக முக்கியத்துவத்தோடும்   கமல்ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸும் விஜய் நடித்த சச்சினும் அதே நாளில் திரையரங்குகளுக்கு வந்தன. நடிகர்களை மையமிட்டுத் தெரிவுசெய்யும் எனது மனம் கமல், ரஜினி, விஜய் என்றே வரிசைப்படுத்தி முதலில் மும்பை எக்ஸ்பிரஸையும் இரண்டாவதாகச் சந்திரமுகியையும் கடைசியாகச் சச்சினையும் பார்த்தேன்.   மொழி , இனம் , சமயம் என ஏதாவது ஒன்றால் தம்மையொரு தனித்த குழுவாகக் கருதும் கூட்டம் , பண்பாட்டு அடையாளங்களை விழா நாட்களிலும் அந்நாட்களின் சிறப்பு  நிகழ்வுகளிலும்தான் தேடுகிறது. தமிழா்களின் முக்கிய விழா நிகழ்வுகளாகப் பொங்கல் , தீபாவளி , புத்தாண்டு போன்றன விளங்குகின்றன என்றாலும்   பொங்கல் திருநாளை மட்டுமே தமிழா்களின் விழா நாளாகக் கருதுகின்றனர். தமிழ் சினிமாக்காரா்களுக்கு இந்த வேறுபாடுகளெல்லாம் முக்கியமல்ல. அவா்களுக்குப் புதுப்படங்கள் வெளியிட விழா நாட்கள் வேண்டும் அவ்வளவுதான். அ ந்த ஆண்டு சித்திரை முதல் நாள் இந்த மூன்று படங்கள் வெளிவந்தன.   மூன்று படங்களில் திரும்பத்திரும்பப் பார்க

சாதி அடையாளம் நோக்கி

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘ ஆதிதிராவிடர்களாக ஒன்றிணைவோம்’ என்ற அடையாள அரசியலை முன்வைத்துப் புதிய நகர்வைச் செய்யவேண்டும் என்று அதன் பொதுச்செயலாளர் திரு. ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்) பேசியதை மேற்கோளாகக் காட்டிச் சில நாட்களுக்கு முன்பு இந்து தமிழ் திசை ஒரு செய்திக்கட்டுரை வெளியிட்டிருந்தது. அதனை விரித்து ஆங்கில இந்துவும் செய்திக்கட்டுரையை இன்று வெளியிட்டுள்ளது. ‘ஆதிதிராவிடர்களாக ஒன்றிணைவோம்’ என்பது காலத்தின் தேவையாக இருக்கலாம். உள்சாதி அடையாளங்களை முன்னெடுக்காமல் பெருஞ்சாதிகளாகக் காட்டுவதின் மூலம் தேர்தல் அரசியலில் கூடுதல் பங்கைப் பெறமுடியும் என்பது நடைமுறையில் ஏற்கத்தக்கதும்கூட.

ஒற்றை ரீல் இயக்கம்: மாற்று ரசனைக்கான முயற்சி

படம்
  மாற்றுகளை முன்வைத்தல் வெகுமக்கள் பண்பாடு வெறும் நுகர்வுப் பண்பாடாக மாறிவருகிறது; அதற்கு வெகுமக்களைத் தேடிச் செல்லும் ஊடகங்களும் நாடகங்களும் துணையாக இருப்பதோடு முக்கிய காரணிகளாகவும் இருக்கின்றன. அதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அறுபதுகளிலும் எழுபதுகளிலும் சில முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.வெகுமக்கள் இதழியலுக்கு மாற்றாகச் சிறுபத்திரிகைகள் என்ற கருத்தோட்டத்தின் தொடர்ச்சியாக, பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இலக்கியங்களுக்கு மாற்றாக தீவிர இலக்கியம் என்ற கருத்துக்களும் செயல்பாடுகள் முன் வைக்கப்பட்டன.

அடையாள அரசியலும் பெரும்பான்மை வாதமும்

படம்
தேர்தல் அரசியல் என்பது எண்களின் அரசியல். ஆனால் அதற்குள் செயல்படுவது கருத்தியல். கருத்தியல்கள் சார்புநிலைகொண்டவை. உலகம் முழுவதும் அதுதான். எந்தவொரு நாடும் விலக்கானவை அல்ல. இந்தியா உள்பட. பால், பாலினம், அதுசார்ந்து உருவாகும் உரிமை, சமத்துவம், விடுதலை என்ற சொல்லாடல்களும் பாலியல் அரசியலின் கருத்தியல்கள். அதைப்போலவே சமய நம்பிக்கைகள், சடங்குகள், சமயஞானம் என்பது தனிமனிதத்தன்னிலைகளை உருவாக்கும் அடையாளங்கள். சமயவியல் அரசியலின் கருத்தியல்கள். அடையாள அரசியல் உலக அளவில் - பின் நவத்துவம் சிந்தனையாகவும் வாழ்முறையாகவும் மாறியபின் கிளர்ந்தெழுந்த அரசியல் சொல்லாடல்கள். இவ்விரண்டையும் இந்தியச் சூழலில் பெரும்பான்மை அரசியல் முற்றாக நிராகரிக்கப் பார்க்கிறது. குறிப்பான இரண்டு எடுத்துக்காட்டுகளின் வழி விவாதிக்கலாம்.

மிதுனாவின் நுரைப்பூக்கள்: கரோனாக் காலத்துப் பொன்னகரம்

கனலியில் பதிவேற்றம் கண்டுள்ள ‘நுரைப்பூக்க ள் ’ கதையை எழுதியிருக்கும்  ‘ மிதுனா ’ உண்மையான பெயரா? புனைபெயரா? என்பது தெரியவில்லை. பெண்ணின் பெயர்போலத் தோன்றினாலும் ஆணாக இருக்கவும் வாய்ப்புண்டு என்ற சந்தேகமும் தோன்றுகிறது. அதே நேரத்தில் அவர் புதுமைப்பித்தனின் பொன்னகர ம் கதையை வாசித்தவர் என் பது உறுதியாகத் தெரிகிறது.  மிதுனாவின் நுரைப்பூக்களும் புதுமைப்பித்தனும் பொன்னகரமும் எல்லா விதத்திலும் ஒன்றுபோல -நகலாக - இருக்கின்றன என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் கதை அமைப்பும் பின்னணியும் எழுப்பும் கேள்வியும் அதன் வழியாக எழுப்பப்படும் விசாரணையும் ஒன்று என்ற வகையில் பொன்னகரத்தை வாசித்த மனத்தின் ஒரு வெளிப்பாடே நுரைப்பூக்கள் என்று உறுதியாகச் சொல்லமுடிகிறது.

நான் தீவிரவாதி; நீ பயங்கரவாதி

படம்
ஆட்சியில் இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களின் அரசை விமரிசிப்பவர்களைச் சுட்டும் சொல்லாகத் தீவிரவாதி என்பதைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதி என்ற சுட்டுச் சொல் வெறுக்கத்தக்க சொல்லாக ஆக்கப்படுவதின் மூலம் அச்சொல்லால் சுட்டப்படுபவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள் என்பதோடு இல்லாமல் ஆக்கப்பட வேண்டியவர்கள் என்பது உணர்த்தப் படுகிறது. ஆனால் தீவிரவாதம் என்பது வெறும் செயல் மட்டுமல்ல. அது ஒரு கருத்தியல். தான் நம்பும் ஒரு கருத்தின் மீது வாழ்க்கை முறை மீது - சமூக அமைப்பின் மீது கொண்ட ஈடுபாட்டின் அளவைக்குறிக்கும் ஓர் அளவைச்  சொல். 

யதார்த்தா ராஜன் : மதுரைக்கு நல்ல சினிமாவைக் கொண்டுவந்தவர்

படம்
  நேற்று (15/92020) முழுவதும் மதுரை நண்பர்களின் அஞ்சலிக்குறிப்புகள் வாசித்து வாசித்து மனம் தவித்துக்கிடந்தது. முதல் தகவலாகப் பேராசிரியர் முரளி (மதுரைக்கல்லூரி)யின் நிலைத்தகவல் தான் சொன்னது. அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியபிறகு ராஜனோடு பழகிய நாட்களையும் நட்பையும் அவரது வேலைகளையும் எழுத நினைத்து உட்கார்ந்த ஒவ்வொருமுறையும் எழுத முடியவில்லை. எதை எழுதுவது ? எதை விடுவது ?  

சி என் அண்ணாதுரை: நவீனத் தமிழ்நாடகவியலின் முன்னோடி

படம்
  இறப்புக்குப் பின்னும் எவ்வளவு காலம் நினைக்கப்படுகின்றனர் என்பதில் தான் மாமனிதர்களின் செயல்பாடுகள் அளக்கப்படுகின்றன. 1908, செப்டம்பர்,15 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி தனது 61 ஆம் வயதில் மறைந்தார். மறைந்து 50 ஆண்டுகள் ஆன பின்பும் அவரது பிறந்த நாளைத் தமிழகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அவரை நினைப்பது என்பதன் மூலம் அவரது செயல்பாடுகளும் வழிகாட்டல்களும் நினைக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

இன்று களப்பலி நாள்:தேசிய தரமதிப்பீட்டு நுழைவுத் தேர்வு

மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் 2017 இல் சிதைக்கப்பட்டது. சிதைத்தது தேசிய தரமதிப்பீட்டு நுழைவுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதம்.

பாரதியென்னும் சி. சுப்ரமணிய பாரதி

படம்
31.08.2000 இல் திரையரங்கிற்கு வந்து விட்ட பாரதியை 12.09.2000 இல் பார்த்ததற்கு ஒரு காரணம் இருந்தது. 11.09.2000 அன்று அம்ஷன்குமார் இயக்கத்தில் வந்திருந்த சி. சுப்ரமணிய பாரதியைப் பார்த்து விடும் வாய்ப்பொன்றிருந்தது. நான் பணி செய்யும் பல்கலைக்கழகம் எட்டையபுரம் பாரதி மணி மண்டபத்தைத தத்தெடுக்கவும், எட்டையபுரத்தில் “பாரதி ஆவணக்காப்பகம்“ ஒன்றை நிறுவவும் திட்டமிட்டு, பாரதி நினைவு நாளில் (11, செப்டம்பா்) விழாவொன்றை நடத்தியது. அந்த விழாவின் ஒரு பகுதியாக அம்ஷன் குமாரின் சி. சுப்ரமணிய பாரதி காட்டப்பட்டது. அன்றும் அதற்கடுத்த நாளும் எனது மாணவிகள் மாணவா்களுடன் சி. சுப்ரமணிய பாரதியையும், ஞான. ராஜசேகரன் இயக்கிய “பாரதி“ யையம் பார்த்துவிடுவதாகத் திட்டம்.

ஊடகப்பேச்சுகளும் ஊடகத்தைப் பற்றிய பேச்சுகளும்

படம்
ஒவ்வொரு தேர்தலும் அதற்கு முந்திய தேர்தலைவிட - அதுவரை இல்லாத மாதிரி- விசித்திரமாக மாற்றப்பட்டு வருகின்றன . முறைப்படி தேர்தலை அறிவிக்கும் தேர்தல் ஆணையம் 90 நாட்களுக்கு முன்பே அறிவிக்கிறது. அப்போது முதல் பணப் பரிவர்த்தனையையும் விளம்பர முன்னிறுத்தலையும் கட்டுப்படுத்த காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் களத்தில் இறங்கி விடுகின்றன. படம்பிடிக்கும் காமிராக்களோடு ஆங்காங்கே நிற்கும் காவல் துறை வாகனங்கள், தேர்தல் வந்து விட்டது என்பதைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தேர்தலைக் காட்சிப்பொருளாக்கும் தேர்தல் ஆணையம் இன்னும் பல நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லோரையும் வாக்களிக்கச் செய்வோம்; வாக்காளர் அடையாள அட்டை வாங்குவதை எளிமையாக்கிவிட்டோம்; வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துகிறோம்; ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் வரும்; ஒவ்வொரு வாக்காளரையும் தேர்தல் ஆணையம் சந்தித்துப் பேசிவிடும்; நேர்மையான தேர்தலை நடத்திக் காட்டுவோம்; நெருக்கடியில்லாமல் நீங்கள் வாக்களிக்கலாம் என உத்தரவாதங்களைத் தந்துகொண்டிருக்கிறது. சரியாகச் சொன்னால், அரசியல் கட்சிகள்  தேர்தலுக்குத்

கண்ணப்பத்தம்பிரான் என்னும் கலை ஆளுமை

படம்
  இந்த ப் படத்தில் முக்கியமான மனிதர்களின் முகங்களை மறைத்து எனது முகம் பெரிதாக இருக்கிறது. கறுப்புவெள்ளைப் படங்களின் காலம்.

அந்தக் கடலோரக் கிராமங்கள் எப்படி இருக்கின்றன

படம்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு. பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கூடுதல் பொறுப்பாக கவனித்த காலகட்டம்.கல்லூரிகளில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் போவதில்லை என்றாலும் வருட த்தில் ஒரு தடவை நடக்கும் பத்துநாள் பயிற்சி முகாமிற்குச் செல்வதுண்டு. கல்லூரியில் செயல்படும் திட்டப்பணியாளர் தொடக்கவிழா அல்லது நிறைவுவிழாவிற்கு வரும்படி அழைப்பார். நான் அப்படியெல்லாம் செல்வதில்லை. ஏதாவதொரு எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது வருகிறேன் என்று சொல்லிவிடுவேன்.

ஊர்கள் - பயணங்கள் -நினைவுகள் -அனுபவங்கள்

படம்
ஒருவாரமாக வீட்டில் அடைந்து கிடக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு பாதையில் நடக்கும் காலை மாலை நடை வீட்டு மாடியின் செவ்வகத்திற்குள் வட்டமடிக்கின்றன. அரியகுளம் கண்மாயில் குளிக்கச் சென்ற வெள்ளைக் கொக்குகள் திரும்பிப் போகின்றன.. கூந்தங்குளத்திற்கும் வேய்ந்தான்குளத்திற்கும் நயினார்குளத்திற்கும் கோடைக்ளியலுக்கு வரும் ஆப்பிரிக்கக் கருங்கழுத்துக் கழுகுகளும் ருஷ்யாவின் செம்பழுப்பு நாரைகளும் மாலைச் சூரியனை நோக்கிப் பறக்கின்றன. மார்த்தாண்டம் வரை போய்வர நினைத்த அந்தச் சின்னப்பயணமும் தட்டிப் போய்விட்டது. 

தொலையும் நம்பிக்கைகள்

படம்
நீண்ட காலமாக ஆட்சியிலிருந்த காங்கிரஸின் ஆட்சி முடிந்து திரு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாகட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 இல் பலருக்குப் பலவிதமான நம்பிக்கைகள் இருந்தன. மேற்குலகின் பிடியிலிருந்து நகர்ந்து இந்தியத்தன்மை கொண்ட தற்சார்புப் பொருளாதாரம், பல்சமய, பல்மொழிச் சமூகங்களின் வளர்ச்சி, நவீன வாழ்க்கை கற்றுத்தந்துள்ள உள்வாங்கும் அரசியல் போன்றவற்றை நோக்கி நாடு நகரும் என்று நம்பினார்கள். தொழில் தொடங்கவும், நிறுவனங்களைக் கட்டியெழுப்பவும் அரசின் கட்டுப்பாடுகள் குறையும் என்று எதிர்பார்த்தார்கள். அதேபோல இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் சமத்துவமான பங்களிப்பைக் கொண்ட தேசியப்பார்வை உருவாகும்; அவை வளரும்; இலக்கியங்கள் உருவாகும் என்பதும் இன்னொரு எதிர்பார்ப்பு. இவையெல்லாவற்றையும் ஒரு ஐந்தாண்டுக்குள் நிறைவேற்ற இயலாது என்பதாலேயே திரும்பவும் அந்த ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதிக எண்ணிக்கையுடன் அதிக சக்தியுடன். ஆனால் இப்போது நடக்கின்ற ஒவ்வொன்றும் எதிர்த்திசையில் பயணிக்கின்றன. 

அரசியல் தலைமையும் பொருளியல் தலைமையும்

படம்
அரசியல் தலைமையைத் தாண்டி பொருளாதார வல்லுநர்களின் தலைமையே நாட்டைச் சரியாக வழிநடத்தும் என்ற கருத்து உலகமயத்தோடு உருவான கருத்து. உலகமயம் வெளியிலிருந்து அறிமுகமானது போலவே மன்மோகன் சிங் போன்ற பொருளாதார வல்லுநர்களின் அறிமுகமும் தொடர்ந்தது. அவரையொத்த இன்னொரு பொருளாதார முதன்மையை வலியுறுத்தியவரே ப.சிதம்பரம். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர். இதுவரை அவரே அதிக ஆண்டுகள் அப்பதவியிலிருந்து நிதித்திட்டங்களை முன்மொழிந்திருக்கிறார். அவரைக் கடந்த ஆண்டு இப்போதுள்ள அரசு நிதிக்காரணங்களுக்காகவே கைது செய்து சிறையில் அடைத்தது. 

காலம் இப்போ பெரண்டு போச்சு

படம்
போன வருடத்தை விட இந்த வருட வெயில் கூடுதல் - ஒவ்வொரு வருடக் கத்திரி வெயிலின் போதும் இந்த வாக்கியத்தை யாராவது சொல்லக் கேட்டிருப்போம்.. இந்த வருடம் அந்தப் பேச்சையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு, நேற்று பாதிக்கப்பட்டவர்கள் இவ்வளவு. இறந்தவர்கள் இவ்வளவு என்ற புள்ளிவிவரக் கணக்காக மாற்றி விட்டது கரோனோ.  கோடையும் போய் விட்டது. ஆடிக்காத்து பறபறவென்று அடித்து முடியப்போகுது. இளவேனிலில் வந்த கரோனா முதுவேனில் தாண்டி கார்காலத்தையும் கடந்துவிட்டது. அடுத்த கோடை வரை நீளும் என்றே சொல்கிறார்கள்.

சாதி -சமயம் - சட்டமன்றத்தேர்தல்

  இதுவரையிலான தமிழகத் தேர்தல்களில் பணமும் சாதியும் மட்டுமே மேலோங்கிய அலகுகளாக இருந்தன. இந்தமுறை சமயமென்னும் இன்னொரு அலகு தமிழ்நாட்டுத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றப்பட இருக்கிறது.அதற்கான அறிகுறிகள் வேகமாக நடக்கின்றன. சாதிகளின் திரட்சியும் சமயப்பூசல்களும் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்தலாக மாறப்போகிறது தமிழகத்தேர்தல். அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என இப்போது உறுதியாகச் சொ ல்லமுடியாது. வரப்போகும் சட்டமன்றத்தேர்தல் சித்தாந்த எதிரிகளுக்கிடையே நடக்கப்போகும் போட்டி எனச் சொல்லப்படுவது ஒரு பாவனை மட்டுமே.

மையத்திற்கு வெளியே இருந்தவர் தோனி

படம்
இரவுமுழுவதும் நடக்கும் தெருக் கூத்திலும் ஸ்பெஷல் நாடகத்திலும் முக்கியமான கட்டங்களில் தூங்கிய பார்வையாளர்கள் எழுந்து உட்கார்ந்து விடுவார்கள். குறிப்பாக வாதம்- எதிர் வாதம் என்ற பகுதிகளில் நடிகர்களின் குரலும் வாதத்திறமையும் அந்த நேரத்தில் உருவாக்கிப் பேசும் வசனங்களும் இட்டுக்கட்டும் பாடல்களும் கையொலியை எழுப்பும். அது அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிக ஆளுமைக்குக் கிடைக்கும் பாராட்டு. அப்படித்தான் தோனியின் மட்டையடியை இந்தியத் திரள் காத்திருந்து ரசித்தது. நான் அப்படி ரசித்திருக்கிறேன். அப்படிக் காத்திருந்து ரசிக்க இன்னொரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும்.