இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்துகள் - எழுத்தாளர்கள்

படம்
அபிலாஷின் பத்தி எழுத்துகள் உயிர்மை.காம் இணைய இதழில் அபிலாஷ் இன்னொரு பத்தித் தொடரை எழுதப் போகிறார் என்றொரு விளம்பரத்தை மனுஷ்யபுத்திரன் பகிர்ந்துள்ளார். உயிர்மை கண்டுபிடித்து வளர்த்தெடுத்த எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன். அவரது புனைவுகளில் -சிறுகதைகளிலும் நாவலிலும் - அதிகப்படியான விவரணைப் பகுதிகளும், தர்க்கம் சார்ந்த விவரிப்புகளும் இடம்பெற்று புனைவெழுத்தின் அடையாளங்களைக் குறைத்துவிடும் விபத்துகளைச் சந்தித்திருப்பதாகக் கருதியிருக்கிறேன்; ஆனால் அவரது கட்டுரைகள் - அவை தனிக்கட்டுரைகள் ஆனாலும் சரி, பத்தித்தொடர்களாக எழுதப்படும் கட்டுரைகளும் முன்மாதிரி இல்லாத வகைமை கொண்டவை.

தேய்புரிப் பழங்கயிறென நெளியும் நவீனக் கவிதைகள்- லறீனாவின் ஷேக்ஸ்பியரின் காதலி

எழுதவிரும்பும் ஒருவர் முதலில் தொடங்குவது கவிதையாக இருக்கிறது. ஒன்றைப் பார்த்தவுடன் - ஒன்றில் பங்கேற்றவுடன் -ஒன்றால் பாதிக்கப்பட்டவுடன் அதைக் குறித்துச் சொல்வதற்கேற்ற இலக்கியவடிவம் கவிதை. அக்கவிதை வடிவத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறவர்கள் உணர்வை எழுதுவதிலிருந்து மெல்லமெல்ல நகர்ந்து அறிவையும் கருத்தியலையும் சிந்திப்பு முறைமைகளையும் கவிதையாக்கும் முயற்சிக்கு நகர்கிறார்கள். அப்படி நகரும்போது அந்தக் கவிஞர்கள் அந்த மொழியில் இயங்கும் காலத்தின் கவியாக அடையாளப் படுகிறார்கள். நவீனத்துவத்தை உள்வாங்கிய பாரதியின் தொடக்கக் காலக் கவிதைக்கும் பிந்தியக் காலக்  கவிதைகளுக்குமான வேறுபாட்டைக் கவனிப்பவர்களுக்கு இது புரியும் . 

கவிமனம் உருவாக்குதல்

தனது மனத்திற்குள் உருவாகும் சொற்களும், சொற்களின் வழி உருவாகும் உருவகங்களும் படிமங்களும் எல்லோரும் பேசுவதுபோல இல்லை. வித்தியாசங்கள் இருக்கின்றன என உணரும்போது ஒரு மனித உயிரி இலக்கிய உருவாக்க மனநிலைக்குள் நுழைகிறது. வெளிப்படும் வித்தியாசநிலை நிலையானதாகவும் நீண்டகாலத்திற்கு அந்த மனித உயிரியைத் தக்க வைக்கும் வாய்ப்பிருப்பதாக உணரும் நிலையில் கதைகளையோ, நாடகங்களையோ எழுதும் முயற்சியில் இறங்குகிறது. ஆனால் சொல்லி முடித்தவுடன் உருவாகும் உணர்ச்சிநிலையை ரசிக்கும் மனித உயிரி கவிதையில் செயல்படும் வாய்ப்பையே விரும்புகிறது.

பார்வையாளர்களாகிய நாமும் நமது பாவனை எதிர்ப்புகளும்

படம்
தகவல்கள்……. மேலும் மேலும் தகவல்கள்….. அா்த்தங்கள் ……. காணாமல் போகும் அா்த்தங்கள்……. நமது காலம் ஊடகங்களின் காலம்; நிலமானிய சமூகம், முதலாளிய சமூகம் எனப் பொருளாதார அடித்தளத்தின் பேரால் சமூகக் கட்டமைப்பை வரையறை செய்பவா்கள் கூட இன்றைய சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information Society) என்றே வரையறை செய்கின்றனா். நகரம் மற்றும் பெருநகரவாசிகள் ஊடக வலைப்பின்னலுக்குள் வந்து சோ்ந்தாகிவிட்டனா். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்பட்டு வருகின்றனா். ஊடகங்கள் தரும் அனுகூலங்கள் அனைத்தையும் மனித உயிர்கள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த வலைப்பின்னல் விரிக்கப்பட்டுள்ளதா….? ஆட்சியதிகார நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்காக நடந்ததா…..? மனிதச் செயல்பாடுகள் அனைத்தையும் நுகா்வியச் செயல்பாட்டின் பகுதிகளாக மாற்றிவிடத் தயாராகி விட்ட உலக ஓழுங்கின் இலக்குகள் ஈடேற வசதி செய்யப்படுகிறதா….? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் ஒற்றைப் பதில் கிடைப்பதற்கு மாறாகப் பலவிதப் பதில்களே கிடைக்கும்.

தமிழியல் ஆய்வு:தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ள ஆய்வுகளில் - குறிப்பாகச் சமூக அறிவியல் மற்றும் மொழிப்புல ஆய்வுகளின் வளர்ச்சியில் தமிழ்த் துறைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. ஒப்பீட்டளவில் இந்த வளர்ச்சி, சமூகவியல் துறைகள் சாதிக்காத சாதனைகள் கொண்ட வளர்ச்சி. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சமூக அறிவியல் துறைகள், காலனிய காலத்துச் சட்டகங்களை விட்டு விலகாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழியல் துறைகள் அவற்றிற்கு மாறாகப் பலதளங்களில் விரிவடைந்திருக்கின்றன.

குற்றமே தண்டனை : நம்பிக்கை தரும் சினிமா

படம்
  வெகுமக்கள் ரசனைக்கான ஒரு சினிமாவில் இருக்கவேண்டியன · பலவிதத்தொனியில் பேச வாய்ப்பளிக்கும் உச்சநிலை (Climax) · பாடல்களும் ஆட்டங்களும் (Songs and dances) · சண்டைக்காட்சிகள் (Fights) · நகைச்சுவைக் கோர்வைகள் (Comedy Sequences) · அறிமுகமான நடிக முகங்கள் (Popular Artists)

சமயங்கள் -நிகழ்வுகள் -பின்னணிகள்

உலக அளவில் திரள் மக்களைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பொதுப்புத்தி என்றொரு சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர். தனக்கெனத் தனி அடையாளம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும் வாழும் இடம், சீதோஷ்ணம், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்து பொதுக்குணங்கள் உருவாகி விடுவதைத் தவிர்க்க முடியாது என்பதுவும் அவர்கள் வாதம். இப்பொதுப் புத்தி வெளிப்படையாகப் புலப்படாதவை என்றாலும் அதுவே ரசனை, முடிவெடுத்தல், தெரிவு செய்தல், பின்பற்றுதல் போன்ற அகவாழ்க்கை முடிவுகளையும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக நடைமுறை போன்ற புறவாழ்க்கை அமைவுகளையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்பதாகவும் ஆய்வுமுடிவுகள் சொல்கின்றன. பொதுப்புத்தி உருவாக்கத்தில் சமய நம்பிக்கைகள் செயல்படும் அடிப்படைகளை வைத்து எழுதப்பெற்ற இச்சிறுகட்டுரைகளை வாசித்துப்பாருங்கள்

இரங்கல் பாக்களில் ஒரு மாயநடப்பியல் கதை-வெய்யிலின் அக்காளின் எலும்புகள் தொகுப்பை முன்வைத்து

படம்
அக்காவைக்  காக்கா தூக்கிச் சென்றுவிட்டது அவ்வளவுதான் *****  கையிலிருக்கும் மண்ணாலான செப்பு கண்ணாடிக்குடுவை பீங்கான் பொம்மை எலக்ட்ரானிக் சாதனம் எனக் கையாள்வதில் கவனமாக இருக்கும் பொருளைக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தையை எப்படிச் சமாளிப்பது. போனால் போகட்டும் என்று நினைத்தால் குழந்தையின் கையில் கொடுக்கலாம். கொடுத்த அடுத்த கணம் அந்தப் பொருளைப் போட்டு உடைத்துவிடக்கூடும். அதனால் கொடுக்கக் கூடாது.

பண்டிகைகள் - விளையாட்டுகள் - பொழுதுபோக்குகள்

ஐபிஎல் என்னும் மெலோ-டிராமா காதல், அன்பு, பாசம், தியாகம், இனிமை, பசுமை... இப்படியான சொற்களால் வருணிக்கக்கூடிய காட்சிகளைக் கொண்ட நாடகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டால் தான் பார்வையாளர்கள் நாற்காலியின் நுனியில் வந்து அமர்வார்கள். நாயகன் சரியாக மாட்டிக்கொண்டுவிட்டானே? இப்படியொரு சதியில் சிக்கியவன் தப்பிப்பானா? அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நாயகியைக் கைகழுவித்தான் ஆகவேண்டும் எனப் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்து ஆர்வத்தை உண்டாக்கவேண்டும். இதனை இவ்வகையான நாடகம் எனச் சொல்லத் தமிழில் சரியான சொல்லொன்று இல்லை. ஆங்கிலத்தில் அதனை மெலோடிராமா (Melo-drama ) என்று வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இவ்வகை உணர்வை உண்டாக்கக் காட்சி அமைப்புகளுக்கும் அதில் பங்கேற்று நடிப்பவர்களுக்கும் உதவும் விதமாகப் பாடல்களும் இசைக்கோர்வைகளும் ஒளியமைப்புத் திட்டமும் இணந்து கூடுதல் லயத்தை உண்டாக்கும் என்ன நடக்குமோ? ஏது நிகழுமோ? என்பதுதான் மெலோடிராமாவின் அடிப்படை உணர்வுத்தூண்டல். இதுவரையிலான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டங்கள் ஒரு மெலோடிராமாவின் கச்சிதத்தோடு நகர்ந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு வாரங்களில் கணித்துச் சொன்

எஸ்.விஸ்வநாதனின் குளிர்ந்த கரம் பற்றுதல் இனி இல்லை

சென்னை நகரம் பிடிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஒவ்வொரு முறை போகும்போதும் சிலரைப் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு போவேன். அதன் போக்குவரத்து நெருக்கடியும் போகவேண்டிய தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரமும் சேர்ந்து கிளம்புவதையே தடுத்துவிடும். பார்க்க நினைத்தவர்களைப் பார்க்காமலேயே வருத்தத்துடன் - தொலைபேசியில் பேசிவிட்டுத் திரும்பிவிடுவேன். இரண்டு வாரங்களுக்கு முன்னால் தொலைபேசியில் வருத்தத்துடன் பேசிவிட்டு வந்த நண்பர் எஸ்.விஸ்வநாதன். இனி அவரோடு தொலைபேசியிலும் பேசமுடியாது. இனி அவரது குரலும் அன்பாய்ப்பிடித்துக்கொள்ளும் கைகளின் குளிர்மையும் இனி இல்லை.

ஓரங்க நாடகமும் ஓராள் நாடகமும்

படம்
ஓரங்க நாடகம் (One - Act Play) என்பதையும் ஓராள் நாடகம் (Mono -Acting) என்பதையும் பல நேரங்களில் குழப்பிக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாகக் கல்வி நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில் இக்குழப்பம் உச்சநிலையை எட்டியிருக்கிறது. இவ்விரு சொற்களும் நாடகவியல் (Dramatics), அரங்கவியல் (Theatre) என்ற இரண்டின் வேறுபாட்டோடு தொடர்புடைய சொற்கள். உரையாடல்களே நாடக இலக்கியத்தின் அடிப்படைக்கூறு. அவ்வடிப்படைக்கூறு ஒரு குறிப்பிட்ட வெளியில் நடக்கும்போது காட்சி என்னும் சிற்றலகு உருவாகிறது. காட்சிகளில் இருக்கும் தொடர்புகளால் அங்கம் என்னும் பேரலகு வடிவம் கொள்கிறது.  அங்கங்கள் நாடக இலக்கியத்திற்குத் தேவையான முரண்களால் வளர்ந்து உச்சநிலையை அடைந்து முடிவை நோக்கிச் சென்று நாடகமாக மாறுகிறது. இவ்வளர்ச்சியையும் முடிவையும் ஒரே அங்கத்தில் தருவதாக எழுதப்படும் நாடகம் ஓரங்க நாடகம். இதற்கு மாறாக ஓரங்க நாடகத்தையோ, பல அங்கங்கள் கொண்ட நாடகத்தையோ, அதற்குள் இடம்பெற்றிருக்கக் கூடிய பல்வேறு கதாபாத்திரங்களையும் ஒரே நடிகர் தனது குரல், உடல் அசைவுகள், ஒப்பனைகள் வழியாக வேறுபடுத்திக் காட்டி நடிக்கும் நிகழ்வு ஓராள் நாடகம். இவ்வேறுபாட்டை

அத்திவரதர்: பண்பாட்டுச் சுற்றுலாவியல்

படம்
  சென்ற ஆண்டு தாமிரபரணியில் மகாபுஷ்கரணி. இந்த ஆண்டு அத்திவரதர். 12 ஆண்டுகள் இடைவெளியில் கும்பமேளாக்கள். அதே 12 ஆண்டுகள் கணக்கு வைத்து பெருங்கோயில்களில் கும்பாபிஷேகங்களும் நடக்கின்றன. வட இந்தியாவில் அலகாபாத், உஜ்ஜையினி, ஹரித்துவார், நாசிக் என நான்கு நகரங்களில் நடக்கும் கும்பமேளாக்கள் முக்கியம் எனச் சொல்லிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டிற்குக் கும்பகோணத்தில் கும்பமேளா நடத்துகிறார்கள்.

நவீனத் தமிழ் எழுத்து என்னும் வரையறை

படம்
எல்லாவகையான ஆய்வுகளிலும் கருதுகோள் ஒன்று வேண்டும் என வலியுறுத்தப்படும். ஒற்றைக் கருதுகோளோடு தொடங்கும் ஆய்வுகள் துணைக் கருதுகோள்களையும் உருவாக்கிக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளையும் முன் வைக்கலாம். ஆய்வேடுகளில் குறிப்பான கருதுகோள் இல்லாமல் பரந்துபட்ட நோக்கம் ஒன்றை முன்வைத்துக் கொண்டு தொகுத்தும் பகுத்தும் வைக்கப்படும் ஆய்வுகளும்கூட அதற்கான பயன்மதிப்பைப் பெறக் கூடியனதான்.

கீசக வதம் என்னும் அஞ்ஞாத வாசம்

படம்
வாசமென்னும் சொல்லாடல்கள்  வாசம் என்பது மூக்கினால் உணரப்படும் ஒருவித உணர்ச்சி. நறுமணங்கள் நல்ல வாசம்; விரும்பக் கூடியது. துர்மணங்கள் மூக்கைப் பொத்திக் கொள்ளச் செய்பவை. விரும்பாதவை; விரும்பத்தாகவை. இது ஒருவிதப் பொருண்மை. வாசத்திற்கு இன்னொரு பொருள் உண்டு. வாசம் என்பது வாழ்தல்; வாழ்க்கை.  வாழ்க்கை என்பது மனைவி மக்களோடு உண்டும் களித்தும் உறங்கியும் வாழ்தல். காதலித்தும் காதலிக்கப்பட்டும் காமம் துய்த்தும் பிணங்கிக் குடும்பமாக வாழ்வதல். அதன் வெளி வீடு. வீட்டிற்குள் உற்றார் உறவினர்களை அனுமதித்துச் சடங்குகள், விழாக்கள், கொண்டாட்டமென வீட்டிலிருந்து வாழ்தலின் பரிமாணங்களைக் குடும்ப வெளியிலிருந்து புறவெளிக்குள் நீட்டித்து வாழ்தல்.

உடலரசியலே நாட்டு அரசியலாக… ஈழவாணியின் வெண்ணிறத்துணி

படம்
ஒரு மொழியில் எழுதப்பெற்ற பனுவல்களின் மீது பெண்ணியத் திறனாய்வு என்ன வகையான வாசிப்புகளையும் திறனாய்வுகளையும் செய்கிறது? என்ற கேள்விக்குப் பல்வேறு பதில்களைச் சொல்கிறது கோட்பாடாகத் தொடங்குதல் Beginning theory(1995) என்னும் நூல். அந்நூலின் ஆசிரியரான பேரி பீட்டர் Barry Peter ஒரு கல்விப்புலத் திறனாய்வாளர். திறனாய்வுக்கான கோட்பாடுகளின் தோற்றத்தையும் இயங்குதளங்களையும் முன்வைத்து வரைவுகளை உருவாக்கிய அவர் ஒவ்வொரு திறனாய்வுக் கோட்பாட்டையும் இலக்கியப் பனுவல்களின்மீது செய்முறைத் திறனாய்வாக ( Practical Criticism) நிகழ்த்திக் காட்டியுள்ளார். பெண்கள் எழுதிய பனுவல்களைத் திறனாய்வுக்குட்படுத்தும்போது என்ன செய்யவேண்டும் என்பதற்குப் பின்வரும் இரண்டு பதில்களை முதன்மையாகச் சொல்கிறது.

மணிரத்னத்தின் அரசியல்: விமரிசனமும் மாற்று அரசியலும்

படம்
(இருவா், ஆய்த எழுத்து படங்களை முன்வைத்து)  தமிழ் சினிமா முற்றமுழுதுமாக வியாபார சினிமாவாக மாறிவிட்டது மட்டுமல்ல, சினிமா பார்ப்பவா்களையும் வியாபார சினிமாவின் இன்பதுன்பங்களில் – லாப நஷ்டங்களில்ள பங்கேற்க வேண்டியவா்களாகவும் மாற்ற முயல்கின்றன. சினிமா செய்திகளைத் தரும் பத்திரிகைகளின் பங்கும் அவற்றில் உண்டு. பெரும் முதலீட்டில் எடுக்கப்படும் சினிமா வியாபார ரீதியாக வெற்றியடைந்தே தீர வேண்டும் என்ற மனோபாவம் உண்டாக்கப்படுகிறது. மணிரத்தினத்தின் “இருவர்“ வியாபார ரீதியாகத் தோல்வியடைந்தபோது வெளிப்படுத்தப்பட்ட வருத்தக்குரல்களின் உளவியல், சமூகவியல், பொருளியல் காரணிகள் ஆராயப்பட வேண்டியவை. 

பிகில்: குறையொன்றும் இல்லை

படம்
தனது பார்வையாளர்கள் கூட்டம் எது எனத் தீர்மானித்துக் கொண்டபின் அதற்கான படம் எடுப்பதும், அந்தப் பார்வையாளர் களுக்குக் குறையில்லாமல் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவதும் நேர்மையான செயல் என்பதை நாம் ஒத்துக் கொள்வோம் என்றால் பிகில் நேர்மையான படம். அதனைக் குறைசொல்லும் விதமாக- புறமொதுக்கும் விதமாக - ஒரு காட்சியும் இல்லை.திகட்டத் திகட்டக் காட்சிகளை அமைத்துள்ளார். நயன்தாரா,கதிர், ஜாக்கி ஷெராப், யோகிசேது, ஆனந்தராஜ், திவ்யதர்சினி, விவேக், கு.ஞானசம்பந்தன் எனப் பார்த்த முகங்களும் விளையாட்டு வீராங்கணைகளாகப் பத்துப்பன்னிரண்டு பெண்களும், அடியாட்களாகப் பல ஆண்களும் நடித்துள்ளார்கள். இரண்டு பெண் விளையாட்டு வீராங்கணைகளுக்காகத் தனித்தனிக் கதைகள், தந்தை - மகன் என இரண்டு விஜயுக்குமே பின்னோக்கு உத்தியில் முன் கதைகள், குத்துப்பாட்டு, உத்வேகமூட்டும் சிங்கப்பெண்ணே என்னும் பாட்டோடு, இரண்டு ஜோடிப்பாடல்கள் எனக் கச்சிதமாகப் படம் உருவாக்கப்பட்டுப் பார்வையாளர்கள் இருக்கையிலிருந்து கவனம் திரும்பாமல் படம் பார்க்கிறார்கள் மொத்தத்தில் குறையொன்றும் இல்லை.

கலையியல் நோக்கம் கொண்ட சினிமா: ஜல்லிக்கட்டு என்னும் இந்திய அபத்தம்

படம்
ஜல்லிக்கட்டு: இந்திய அபத்தம் ஒரு சினிமாவைத் திரை யரங்கில் வெளியிட்ட பின் குறிப்பிட்ட காலம் காத்திருந்தால் இணையம் வழியாகப் பார்க்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் தொழில் நுட்பம் உருவாக்கி விட்டது. தொலைக்காட்சிப் பெட்டியின் குறுந்திரையில் புதிய படம் ஒன்றைப் பார்ப்பதை விரும்பாத என்னைப் போன்றவர்களுக்குச் சென்னை போன்ற பெருநகரம் ஒருவிதத்தில் வரம். உடனடியாக இல்லையென்றாலும் ஒருவார இடைவெளிக்குள்ளாவது ஜல்லிக்கட்டு போன்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. ஜல்லிக்கட்டு படத்தை இயக்கியுள்ள லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் முந்திய படம் அங்கமாலி டைரீஸ். படமாக்கப்பட்ட விதம், விவாதிக்கும் பொருண்மை காரணமாகக் கவனித்துப் பேசப்பட்ட படம். அந்தப் படத்தை விடவும் கூடுதல் கவனத்துடன் விவாதிக்கப்படக்கூடிய படமாக வந்துள்ளது. ஜல்லிக்கட்டு. ஒருவிதத்தில் இந்திய சினிமாவை உலக சினிமாவிற்குள் நகர்த்தும் முயற்சி என்றுகூடச் சொல்லலாம்.

தேர்வுகள் -வேலைகள்- தரம்

தினக்கூலிகளுக்குப் பதில் மணிக்கூலிகள்  கல்லூரிக் கல்வியில் இணையவழி வருகைப் பதிவைப் பல்கலைக்கழக மானியக்குழு இப்போது வலியுறுத்துகிறது. அதனை ஏற்றுப் பல்கலைக்கழக கல்விக்குழுக்கள் விதிகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு உள்மதிப்பீட்டுத் தேர்வின் போதும் அதற்கு முன்னர் மாணாக்கர்களின் வருகைப்பதிவு கணக்கிடப்பட வேண்டும் எனக் கடுமையாகச் சொன்னபோது ஒரு கல்லூரியின் முதல்வர் அதனை மறுத்துப் பேசினார். மாணாக்கர்களின் வருகைப்பதிவில் இவ்வளவு கறாராக இருக்க வேண்டியது அவசியமா? எனக் கேள்வி எழுப்பியதோடு, இப்படியான கறாரான வருகைப்பதிவு கல்லூரியில் சேரும் மாணாக்கர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும் என்றார். இந்த ஆண்டுமுதல் வருகைப்பதிவை கறாராகப் பின்பற்றினால் இப்போது இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு படிக்கும் மாணாக்கர்களில் பலரும் இடையில் படிப்பைத் தொடராமல் நின்றுபோகும் (drop out ) வாய்ப்பும் உண்டு என்று வருத்தப்பட்டார். 

கலப்புத் திருமணங்களின் பரிமாணங்கள் : அழகுநிலாவின் பெயர்த்தி

மொழியை விரும்பும் ஒவ்வொருவரும் அம்மொழியில் இருக்கும் எல்லாச் சொற்களையும் எல்லா நேரத்திலும் விரும்பிவிடுவதில்லை என்பது ஒரு நகைமுரண்நிலை. சொற்கள் – எதிர்ச்சொற்கள் அறிவது ஐரோப்பிய மொழிக்கல்வியில் -குறிப்பாக ஆங்கிலக் கல்வியில் தொடக்கநிலை. வேற்றுமொழிச் சொற்கள் என்றில்லாமல் தாய்மொழியில் இருக்கும் சொற்களைக்கூட விரும்பப்படும் சொற்கள், வெறுக்கப்படும் சொற்கள் எனப் பட்டியலிட்டே பயன்படுத்தி வருகிறார்கள் மனிதர்கள். சொற்களில் விரும்பும் சொற்களை உடன்பாட்டுச் சொற்கள் என்றும் நேர்மறைப்பார்வையைத் தரும் சொற்கள் என்றும் சொல்லி அதிகம் பயன்படுத்துகின்றோம். எதிர்மறைப்பார்வையைத் தரும் சொற்களை விருப்பத்திற்குரியன அல்ல என்று கருதிப் பயன்பாட்டையே தவிர்க்க நினைப்பதும் மனித இயல்புதான்.

போர்க்காலமும் புலம்பெயர் வாழ்வும் -சந்திரா, மாலினி, தீபச்செல்வன், ப.தெய்வீகன்,தமிழ்க்கவி

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் கதைகளில் போரின் நினைவுகள் குறைந்து, புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை எழுதும் போக்கு அவ்வப்போது வெளிப்பட்டதுண்டு. இந்நகர்வுகள் வழியாக 2009 க்கு முந்திய போர்க்காலம் பற்றிய பார்வைகளும் விமரிசனங்களும் வாசிக்கக் கிடைக்கின்றன. இப்போதும் தொடரும் விடுதலைப்புலிகள் மற்றும் போர் ஆதரவுக்கருத்துகளும், போருக்கெதிரான மனநிலைகளும் அவற்றில் பதிவாகின்றன. அந்தவகையில் இப்போது எழுதப்பெறும் கதைகள் கவனத்துக்குரியன.

காப்பான்: வணிக சினிமாவின் இயங்குமுறைகள்

படம்
கள்ளன் பெருசா? காப்பான் பெருசா? ஒரு சினிமாவை எடுப்பதற்குப் போடப்படும் முதலீட்டின் மீது லாபம் வேண்டும் என்பதை நியாயமற்றது எனச் சொல்லமுடியாது. போடப்படும் முதலீட்டின்மீது பன்மடங்கு லாபத்தை அடைவதைக் கூட வணிகத்தின் விதிகளைக் கொண்டு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் பன்மடங்கு லாபத்திற்காகப் பார்வையாளர்களின் சிந்தனையையும் எண்ணங்களையும் சிதறடிக்கும் நோக்கத்தைக் கொண்ட சினிமாக்களை, எந்தவித விமரிசனங்களும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அத்தகைய ஏற்றுக்கொள்ளல்கள் சினிமாவைக் குறித்த எதிர்வினையின்மை என்பதாக கருதக்கூடியன அல்ல. நமது காலகட்டத்தைக் குறித்த அக்கறையின்மையின் வெளிப்பாடு அது. தனது வயலைத் தாக்கி அழிக்கும் புழுக்களையும் பூச்சிகளையும் தடுக்கும் வகையறியா விவசாயிகளைப்போலவே, நம் காலத்துச் சமூகப் போக்கைத் தாக்கிவரும் கருத்தியல்களின் ஆபத்துகளைக் குறித்து முணுமுணுக்காமல் இருக்கும் செயல் அது. திரள்மக்களின் கோபதாபங்களைத் திசைதிருப்பும் நோக்கங்கள் கொண்ட பண்டமாக திரைப்படங்களைக் கருதுபவர்களைக் குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டியது காலத்தில் செய்யவேண்டிய கடமை.

கீழடிச் சான்றுகள்: தமிழ்ப் பழைமையின் அறிவியல் ஆதாரங்கள்

படம்
நவீன மனிதனாக வாழ்ந்து கொண்டே பழைமையின் மீதான பற்றை வெளிப்படுத்துவது மனித இயல்பு. இது ஒருவித பாவனையாகக்கூட இருக்கலாம். தனிமனிதர்களுக்குள்ள இந்த இயல்பு குழுவாகவும் கூட்டமாகவும் அடையாளப்படுத்தப்படும் போதும் வெளிப்படுகிறது. என் தாத்தா 100 வயதைத் தாண்டியவர் என்பதைச் சொல்லும்போது இருக்கும் பெருமிதத்தின் தொடர்ச்சிகளே ஊரின் பழைமை; மொழியின் பழைமை இனத்தின் பழைமை என நீள்கிறது. அண்மையில் வெளியிடப்பெற்ற கீழடித் தொல்லியல் ஆதாரங்கள் தமிழர்கள் கொண்டிருக்கும் பழைமை குறித்த பெருமிதங்களில் உண்மை இருக்கிறது என்பதை அறிவியல் முறைப்படி அறிவிக்க உதவியிருக்கிறது. 

ஆறு கதைகள் ஆறு விதங்கள்

படம்
‘தமிழக சிறப்பிதழ்’ சிறுகதைகள் – நடு இணைய சிற்றிதழ் கடந்த இதழைத் (21- ஆவணி, 2019) ‘தமிழக சிறப்பிதழாக’ வெளியிட்டது. புலம்பெயர் தேசம் ஒன்றிலிருந்து வரும் இணைய சிற்றிதழில் தங்கள் பனுவல்கள் இடம்பெற வேண்டுமெனத் தமிழ்நாட்டின் முதன்மையான படைப்பாளிகள் விரும்புவார்கள் என்ற நோக்கில் நடுவின் ஆசிரியர் பலருக்கும் வேண்டுகோள் விடுத்தார். இயலாதவர்களும் விரும்பாதவர்களும் பங்கேற்கவில்லை. இயன்றவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல், மொழிபெயர்ப்பு என அந்த இதழில் வாசிக்கக் கிடைத்தனவற்றை முழுமையாக இங்கு பேசப்போவதில்லை.

தனித்திருக்க விரும்பும் மனம்: சுஜா செல்லப்பனின் ஒளிவிலகல்

படம்
குடும்ப அமைப்பின் பெருமைகளையும் சிறப்புகளையும் ஆராதிப்பவர்கள், அதற்குள் ஒவ்வொருவரும் இன்னொருவரைச் சார்ந்து வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதாகப் பேசாமல் ஒவ்வொருவருக்கும் அது பாதுகாப்பைத் தருகிறது என்பதாகவே பேசுகின்றனர். அதிலும் பலவீனமானவர்களாக இருக்கும் பெண்களுக்கு ஆண்களின் பாதுகாப்பும் அரவணைப்பும் குடும்பத்திற்குள் தான் கிடைக்கும் என வலியுறுத்துகின்றனர். அதன் காரணமாகப் பெண்கள் தங்களின் தனித்த அடையாளங்களைப் பேணுவதையும் அதற்கான முயற்சிகளையும் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர்.

பூமணியின் வெக்கை: வெற்றி மாறனின் அசுரன்.

படம்
புதுச்சேரி நிகழ்கலைப்பள்ளி மாணவர்களுக்காக நவீனக் கவிதைகள் மற்றும் புனைகதைகளிலிருந்து நாடகப்பிரதிகளை உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டம். புதுச்சேரிக்குப் போவதற்கு முன்பே எழுதிப்பார்த்தது சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள். போன பின்பு புதுமைப்பித்தன், பிரபஞ்சன், திலீப்குமார், கோணங்கி ஆகியோரின் சிறுகதைகளிலிருந்து ஆக்கிய நாடகப் பிரதிகள் சிலவற்றை மாணவர்கள் மேடையேற்றம் செய்தார்கள். நானும் செய்தேன்.

தப்பும் குறிகள்

  மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் சென்ற ஆண்டே தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதத்தால் சிதைக்கப் பட்டது சென்ற ஆண்டுக் கதை. பள்ளிப்படிப்புக்காகவும் தனிப் பயிற்சிக்காகவும் செலவழித்த மொத்தப் பணமும் வீணானது பற்றிக் கவலைப் பட்டவர்கள் அந்த நுழைவுத்தேர்வு - தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று போராடினார்கள். தடுக்க முடியாத நிலையில் கடுமையான சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் தாண்டி தேர்வுகளை எழுதினார்கள். 12 ஆண்டுப் படிப்பும் வீணானது. பள்ளி இறுதித் தேர்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களும்கூட தகுதி பெறாமல் தோல்வியடைந்தார்கள். அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாத அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்

  எனது கற்பித்தல் முறையை என் மாணவர்கள் அறிவார்கள். எந்தவொரு வகுப்பிலும் நான் தயாரித்துப் போகும் குறிப்புகளை முன்வைப்பதில் தொடங்குவதே இல்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு, அதை நோக்கி வகுப்பைத் திருப்பும் வகையில் அன்றைய ஒரு நேரடி நிகழ்வை - அல்லது செய்தித்தாள் குறிப்பை முன்வைத்து, ஒரு படத்தை அல்லது பொருளைக் காட்டி -கேள்விகள் கேட்டு, அவர்களைப் பேசவைத்து அந்தப் பேச்சின் வழியாகவே பாடப்பகுதிக்குள் வருவேன். சிவகாசி ஜெயலெட்சுமியின் பரபரப்புச் செய்திகள், நேர்காணல்கள், படங்கள் வழியாக பெண்ணியக் கவிதைகளைப் பாடம் சொன்ன ஞாபகங்கள் - நினைவுகள் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. இதில் அவர்களுக்கும் பலன் உண்டு; எனக்கும் பலன் உண்டு.

பிள்ளை சுமத்தல் என்னும் பேரனுபவம்: ச.விசயலட்சுமியின் உயிர்ப்பு

படம்
  இலக்கியம் என்றால் இலக்கியம்தான்; அதற்குள் எதற்கு தலித் இலக்கியம்? பெண் இலக்கியம்? என்ற குரல்களை எழுப்புவதின் நோக்கம் திரும்பத் திரும்பக் கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்று.

நம்பிக்கை ஊற்று தேவைப்படும் பெண்கள்: லக்ஷ்மியின் ஏன் இந்த வேகம்

படம்
தமிழ்ப் புனைகதையின் தொடக்கக் கவனம் பெண்களை எழுதுவதிலேயே குவிந்திருந்தது. பாரதியின் சந்திரிகையும் வேதநாயகம் பிள்ளையின் ஞானாம்பாளும் ராஜம் அய்யரின் கமலாம்பாளும் மாதவைய்யாவின் பத்மாவதியும் சரித்திரங்களாக்கப்பட்டனர். விரிவான நாவல் வடிவம் மட்டுமல்ல. சிறுகதையின் தொடக்கநிலைகூட மங்கையர்க் கரசியின் காதலையும் குளத்தங்கரையில் சந்தித்துக்கொண்ட பெண்ணின் கதையையும்தான் சொல்லமுயன்றன. ஆனால் இந்தப் பெண்கள் எல்லாம் லட்சியவாதமும் நல்லொழுக்கமும் தியாகத்தின் வடிவமும் கொண்டவர்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்கான காரணங்களை அறியாதவர்கள். அறிய விரும்பாதவர்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லது அனுப்பப்பட்டவர்கள் என்பதாகக் கதையெழுதிய ஆண்கள் எழுதிக் காட்டினார்கள். ஆண்கள் எழுதியதைப் போலவே தொடக்ககாலப் பெண்களும் எழுதிக்காட்டினார்கள். 

வேலியிடப்பட்ட குடும்பங்கள்:பாமாவின் முள்வேலி

படம்
வேலி என்னும் சொல்லுக்குச் சொத்து, எல்லை, வரையறை, பாதுகாப்பு எனப் பருண்மையான பொருள்கள் உண்டு. நாலுவேலி நிலம், பயிரை மேயும் வேலிகள், வேலிதாண்டிய வெள்ளாடு எனச் சொற்கோவைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். அப்படிப் பயன்படுத்தும் சொற்கோவைகள் பால் வேறுபாடின்றி இருபாலாருக்கும் பொதுவாகவே இருக்கின்றன. ஆனால் தாலியே வேலி எனச் சொல்லும்போது பாலடையாளம் பெற்று பெண்ணுக்குரியதாகச் சொற்கோவை மாறி நிற்கிறது. வேலியாக மாறும் தாலிதான் பெண்ணுக்குப் பெரிய பாதுகாப்பு என்பதை உறுதிப்படுத்தும் கருத்தியல் தோற்றத்தின் – பரப்பின் – இருப்பின் கருவியாக மாறிப் பெண்களைச் சுற்றி வலம் வருகிறது.

கலைஞர் சந்ரு

படம்
முகநூலின் வருகைக்குப் பின்னர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் திருப்பும் பக்கங்களெல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துகளும் கேட்கின்றன. ஓவியர் சந்ரு அவர்களுக்கு நேற்றுப் பிறந்தநாள் என்பதை அவரது ரசிகர்கள் முகநூலில் நிரப்பி வைத்து விட்டனர். ரசிகர்களில் பலபேர் அவரது மாணாக்கர்களாகவும் இருந்துள்ளனர் என்பதையும் காணமுடிகின்றது. கலைஞராகவும் ஆசிரியராகவும் இருப்பதின் மகிழ்ச்சியை நேற்று முழுவதும் அனுபவித்திருக்கக் கூடும். வாழிய கலைஞர் சந்ரு. வாழ்த்துகள் 

மழலையர் பள்ளிகளும் குறைகூலித் தொழிலாளிகளும்

புதிய கல்விக்கொள்கை விருப்பத்தேர்வாக இருந்த மழலையர் வகுப்புகளைக் கட்டாயக் கல்வியின் பகுதியாகப் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையின் பின்னால் உள்நோக்கங்கள் இல்லை என வாதிடுபவர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது. குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் வழியாக மூன்று வயதிலேயே வேதங்களைப் பாராயணம் செய்யவும், சுலோகங்களை மனனம் செய்யவும் பழக்கப்படுத்தும் குடும்பச்சூழலை மட்டுமே அறிந்தவர்களின் முன்வைப்பு இது. இதே முறையைப் பின்பற்றித் தேவாரப் பதிகங்களையும் ஆழ்வார் பாசுரங்களையும் மனனம் செய்யும் குடும்பங்களும் உண்டு. இவ்விரண்டு போக்கிலிருந்து விலகித் தினம் 10 குறள் என மனனம் செய்யும் திணிப்பைத் திறன் வளர்க்கும் கல்வியாகச் செய்துகொண்டிருக்கும் வீட்டுக் கல்வி இந்தியாவில்/தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது. சிறப்பான வாழ்க்கைமுறை வாய்ப்புகளைக் கொண்ட குடும்பங்களின் நடைமுறை. இந்த நடைமுறையைப் பொதுக்கல்வியின் பரப்புக்குள் கொண்டுவருவதின் நோக்கம் என்னவாக இருக்கும்? குழந்தமைப் பருவத்திலேயே தனது இயலாமையை உணர்ந்து பின்வாங்கும் கூட்டத்தை உற்பத்தி செய்யும் தந்திரம் இது எனச் சொலவது குற்றச்சாட்டல்ல. நிகழப்போகும் நடைமுற

தனித்தலையும் பெண்கள் : கலைச்செல்வியின் இரவு

படம்
பெண்ணின் எதிர்நிலை ஆண்.பெண்ணும் ஆணும் இரண்டும் பால்சுட்டும் பொதுப் பெயர்கள். பால் சுட்டும் பொதுப்பெயர்கள் பாத்திரத்தின் பெயராக மாறும்போது எதிர்ப்பாலுக்கான பாத்திரம் ஒன்றை மொழி உருவாக்கிக் கொள்கிறது. சில பாத்திரங்களுக்குப் பொதுச்சொற்களே போதும் என்றும் மொழி கருதுகிறது. குழந்தை என்ற சொல் பாலடையாளம் இல்லாத பொதுச்சொல். ஆனால் சிறுமியும் சிறுவனும் பாலடையாளங்கள் கொண்ட சொற்கள். தமிழ் மொழியில் பெண்பால் விகுதிகள் எனவும் ஆண்பால் விகுதிகள் எனவும் சொல்லின் இறுதி நிலைகள் இருக்கின்றன. அவ்விறுதிநிலைகளைக் கொண்டு தமிழின் பெயர்ச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன.

உள்ளே மட்டுமில்லை அர்த்தங்கள்- இமையமும் புதியமாதவியும்

இமையத்தின் பணியாரக்காரம்மா கடந்த உயிர்மையில் இமையம் எழுதியுள்ள பணியாரக்காரம்மா கதையை வாசித்து முடித்தவுடன் இந்தக் கதையின் விவாதம் பிரதிக்கு வெளியே இருப்பதாகத் தோன்றியது. எனக்குத் தோன்றியது போலவே அக்கதையை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் என்று சொல்வதற்கில்லை. அப்படித் தோன்றாத வகையிலே தனது எழுத்துத் திறனை முழுமையாக இமையம் காட்டியுள்ளார். ஆனாலும் இந்திய மனிதர்களை அவர் எழுதுவதால், அவர்களின் இயங்குதளம் – இந்தியச்சாதி அமைப்பின் இயங்குமுறையின் வீரியத்தால் கதையின் விவாதம் கதைக்கு வெளியே இருப்பதாகத் தோன்றும்படி சில வரிகள் வந்து விழுந்துவிட்டன. 

நெறியாளரும் ஆய்வாளரும்

எனது நெறியாளர்  2003-இல் நான் பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் எம்ஃபில் படித்துக் கொண்டிருந்தபோது, ஆய்வுக்காக நாடகம் தொடர்பான குறிப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்த ராமசாமி சாரைப் பற்றிக் கேள்விப்பட்டு, கே.டி.சி. நகரிலுள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன். நாடகம் தொடர்பான பரந்த அறிவைப் பெற வேண்டுமென்று ‘வெளி’ பிரதிகளைத் தந்தார். நாடகத்திற்காக வந்த இதழ் ‘வெளி’. 

ஆசிரியரும் மாணவர்களும்

என் குருவும் நானும்- நீண்ட நாள் மாணவி சாராள் தக்கர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் படித்த நான், 2001 ஜூன் மாதம் நான் முதுநிலை தமிழ் சேருவதற்காக என் தந்தையுடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சென்றேன்.. சான்றிதழ்களை நகல் எடுக்க அந்த செராக்ஸ் கடைக்கு முன்னால் காத்திருந்தேன். அதன் பக்கத்தில் தான் தமிழ்த்துறை அலுவலகம்.

ஒற்றை இலக்குகளின் சிக்கல்

படம்
குதிரைக்குக் கடிவாளம் போட்ட மாதிரி என்றொரு மரபுத்தொடர் உண்டு. கடிவாளம் குதிரைக்கு முக்கியமல்ல. கடிவாளம் போட்ட குதிரை மனிதர்களுக்கு முக்கியம். கடிவாளம் போட்டால்தான் ஓட்டப் பந்தயக்குதிரையாக பயன்படுத்த முடியும். அதன் மீதேறி அமர்ந்து. காற்றினும் கடிதான வேகத்தில் செல்லமுடியும். காட்டு விலங்கான குதிரையை வயக்கித்தான் நாட்டுவிலங்காக்கியிருப்பார்கள்.

தொலையும் கடவுளும் தூரமாகப் போகும் காதலும்

புதிதாக வரும் சமூகக் கட்டமைப்பு தரும் பலன்களை அனுபவித்துக்கொண்டே அதற்கெதிராகச் செயல்படுவதில் வல்லவர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாகச் சமூகக் கட்டமைப்பில் மேல்தளங்களில் இருக்கும் ஆதிக்கசாதிகள்/ உயர்வர்க்கத்தினர் இந்தத் தள்ளாட்டத்தில் சிக்கியவர்களாகவே இருக்கிறார்கள். பிரித்தானியர்களின் ஆங்கிலக் கல்வியைப் பயன்படுத்திக் கொண்டே - ஆங்கில மொழியைத் தனதாக்கிக் கொண்டே அதற்கெதிராகப் போராட்டங்களை நடத்திய மேல்மட்ட இந்தியர்களின் மனநிலை காலனியாதிக்கத்திற்குப் பின்னரும் மாறவில்லை.

திறனாய்வுக்கலையையும் வளர்க்கலாம்

படம்
ஆத்மநாம் அறக்கட்டளை தனது ஐந்தாம் ஆண்டுக் கவிதை விருதுக்கான முக்கியமான கட்டத்தை முடித்திருக்கிறது. முதல் கட்டம் விருதுத் தேர்வுக்குழுவை அறிவித்துப் போட்டியில் பங்கேற்கக் கவிதைத் தொகுப்புகளைப் பெற்றதாக இருந்திருக்கும். அப்படி வந்த 31 கவிதைத் தொகுப்புகளிலிருந்து ஒன்பது பேரைக் குறும்பட்டியலாக அறிவித்திருக்கிறது. கவிதைத் தொகுப்புகளுக்குப் பதிலாகக் கவிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

நினைக்கப்பட வேண்டிய இருவேறு நாடக எழுத்தாளர்கள்: கிரிஷ் கர்நாட். கிரேஸி மோகன்

படம்
  கிரிஷ் கர்னாட் ஒருநாள் விடுமுறையும் மூன்று நாள் துக்கமும் எனத் தனது மாநிலத்தின் இலக்கிய அடையாளமாகத் திகழ்ந்த கிரிஷ் கர்நாடின் மரணச் செய்தியைச் சொல்லியிருக்கிறது கர்நாடக மாநிலம். தனது 81 – வயதில் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகரில் மரணம் அடைந்துள்ள கிரிஷ் கர்னாடின் தாய்மொழி கன்னடம் என்றாலும் அவர் பிறந்த ஊர் (1938) மந்தெரன் இப்போதுள்ள மகாராட்டிர மாநிலத்திற்குள் இருக்கிறது.

கவிதைக்குள் கதைகள்

கதைசொல்லும் கவிதைகள் கதைத் தன்மைகொண்ட கவிதைகளுக்குத் தமிழில் தொடர்ச்சி எதுவும் இல்லை, ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு காரணங்களுக்காகக் கவிதை, தமிழில் எட்டுத்தொகையாகத் தொகுக்கப்பட்ட கவிதைகளைத் தாண்டி பத்துப்பாட்டாகத் தொகுக்கப்பட்டவைகளில் ஒருவிதக் கதைத் தன்மை இருப்பதாக உணரலாம். ஆனால் அவை கதைகள் அல்ல. அந்த மரபு நீட்சியைச் சிற்றிலக்கியங்களின் சில வடிவங்களில் பார்க்க முடியும். ஏங்கும் பெண்களின் கதையை, காத்திருக்கும் தலைவிகளின் கதைகள் அவற்றில் இருக்கின்றன. நவீனத்துவத்தின் வரவிற்குப் பிந்திய கவிதைவடிவம், கதைசொல்வதில் பல காரணங்களைப் பின்பற்றியுள்ளது.

கருத்தியல் அரசியலும் அரசியல் கருத்துகளும்

இரட்டை எதிர்வு எல்லாவற்றையும் இரட்டையாகப் பார்ப்பது சிக்கலானது என்றாலும் அப்படிப் பார்க்கும்படி உண்டாகும் நெருக்கடியிலிருந்து தமிழகம் விலகி விடாமல் தவிக்கிறது. அந்தத் தவிப்பு சரியா? தவறா? என்பதை நிகழ்வுகளின் முடிவுகள் தான் சொல்கின்றன. முன்கூட்டிய கணிப்புகள் எப்போதும் தவறாகி விடுகின்றன. இதனைத் தமிழ்நாட்டின் தனித்துவம் என்று தான் சொல்லவேண்டும். இங்கே இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என வாதம் செய்பவர்கள் தங்களின் கண்களுக்குப் பக்கப்பட்டை போட்டுக்கொண்டு பயணிப்பவர்களாக இருக்கலாம். இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என்பதைவிட இரட்டை எதிர்வாகவே தமிழ்மனம் இயங்குகிறது

எண் விளையாட்டு

இந்தியாவில் எப்போதும் பேசுபொருளாக இருப்பது இட ஒதுக்கீடு என்னும் எண் விளையாட்டு. மைய அரசுப் பங்கீடு 1 +1 . ஒதுக்கப்படும் பங்கீடு 50 சதவீதம். ஒதுக்கப்படாத பங்கு 50. ஒதுக்கப்படாத 50 சதவீத இடங்களில் அனைவரும் போட்டியிட்டுத் தங்களின் திறமையின் அடிப்படையில் இடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒதுக்கப்பட்ட 50 சதவீத இடங்களில் பழங்குடியினருக்கு 7.5% , சமூக ஒதுக்குதல் அடிப்படையிலான பட்டியல் இனத்தவருக்கு 15%, பிற பிற்பட்டோருக்கு 27.5 %.

குடும்பப் பெண்கள் பாடசாலைகள் : கு.ப. சேது அம்மாளின் குலவதி

படம்
பெண்ணெழுத்து பல தளங்களில் விரிந்துள்ளது. தமிழ்ப் புனைகதையில் பலகட்டங்களைக் கடந்துள்ளது. பெண்களை எழுத வேண்டும் என்பதற்காகவே பெண்கள் எழுதத் தொடங்கினார்கள் எனச் சொல்ல முடியாது. ஆண்கள் செய்யும் வினைகளைப் போலவே பெண்களும் ஆற்றமுடியும் என்று காட்டுவதற்காகப் பெண்களும் எழுதத் தொடங்கினார்கள். இருபாலாரின் எழுத்திலும் வரும் ஆண்களும் பெண்களும் ஒன்றுபோல் எழுதப்படவில்லை என்ற உணர்வு தலைதூக்கிய நிலையில் பெண்ணெழுத்து – பெண்கள் எழுதிய பெண்ணெழுத்து உருவாகியிருக்கிறது.

இரு சினிமா ஆளுமைகளின் மரணங்கள்

படம்
  அருண்மொழி இனி இல்லையா? ஆர் யூ இன் சென்னை - R U N Chennai - என்று கேள்வியாகக் குறுந்தகவல் வரும்போதெல்லாம் தொலைபேசி எடுத்துப் பேசும் நேரம் நீண்டுகொண்டே போகும். தொடக்கத்தில் என்னை நீ கலாய்ப்பதும்; உன்னை நான் கலாய்ப்பதுமாக நீளும் அந்த உரையாடல்கள் அண்மையில் பார்த்த நாடகம், சினிமா, புத்தகம் என்று நீண்டு எப்போது சென்னை வருகிறீர்கள்?

நாட்டரசியல் : மூன்று குறிப்புகள்

24 மணிநேரத்திறப்பு என்னும் அடுத்த கட்ட நகர்வு 24 மணி நேரமும் கடைகள்/வணிக நிறுவனங்கள்  திறந்திருக்கும். தமிழ்ச் சமூகம் நுகர்வுச் சமூகமாக மாறுகிறது என்பதைச் சட்டப்படி முன்வைத்துள்ளது. இந்த அறிவிக்கை. இந்த அறிவிக்கையில் கட்டுப்பாடுகள் இல்லை. பொதுவாக வரையறைகளில் மட்டுமே விதிவிலக்குகளும் கட்டுப்பாடுகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். வரையறுப்பதற்கு மாறாகத் திறப்புகளில் இவை இருப்பதில்லை.

உலகக் கோப்பைக் கிரிக்கெட்

பார்வையாள நினைவுகள்  ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் சேர்ந்து நடத்திய 1992 உலகக் கோப்பைத் தொடக்கவிழாக் காட்சிகளைச் சொந்த தொலைக் காட்சியின் முன்னால் உட்கார்ந்து பார்த்துவிடும் ஆர்வத்தோடு காலையிலிருந்தே தயாராக இருந்தோம்.புதுச்சேரி, அங்காளம்மன் நகர், பிள்ளையார்கோவில் தெரு 52 ஆம் எண், முதல் மாடி வீட்டின் முன்னறையில் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி படங்காட்டத் தொடங்கியபோது தொடக்க நிகழ்ச்சிகள் முடிந்துவிட்டன. நான் மட்டுமே கிரிக்கெட் பார்ப்பேன் என்பதால் வாங்கவில்லை. மனைவியும் பார்ப்பார். மகளும் மகனும் பார்ப்பார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரின் பிள்ளைகளும் கிரிக்கெட் பிரியர்கள் என்பதால் அவ்வப்போது அங்கே போய்ப் பார்ப்போம்.உலகக் கோப்பைப் போட்டிகள் தொடர்ச்சியாக நடக்கும் என்பதால் தினசரி அங்கே போய் உட்காருவதில் இருக்கும் சிரமம் உணர்த்தப்பெற்றது. 

சில மாயைகளும் சந்தேகங்களும்

படம்
கருத்தியல் விவாதங்களைத் தீர்மானிப்பதிலும் இலக்கியப்போக்கைத் தீர்மானிப்பதிலும் சில நூல்கள், சில ஆளுமைகள், சில நிகழ்வுகள், சில பத்திரிகைகள் முக்கியப்பங்காற்றுவதின் மூலமாக வரலாற்றின் பங்குதாரராக மாறுவிடக்கூடும். அப்படியான இரண்டை இங்கே பார்க்கலாம். இவை 2000 -க்கு முன் நடந்தவை. இப்போது இப்படியானவற்றைக் கண்டுபிடித்து முன்வைக்க முடியவில்லை.

வரலாறுகள் எழுதப்பட்ட கதை

படம்
இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வே கிடையாது- என்றொரு வாக்கியத்தைக் கல்வித்துறையில் செயல்படும் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. இக்கூற்றை முழுமையான உண்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது; கொஞ்சமும் உண்மையில்லை என்று தள்ளி விடவும் முடியாது. ஒரு தேசத்திற்கு வரலாற்றுணர்வு இல்லை எனச் சொல்கிறவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் , அந்தத் தேசத்தின் வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான சான்றுகளைத் தொகுத்து வைக்காத நிலையிலிருந்தே இத்தகைய கருத்து உருவாகிறது என்பது புரிய வரலாம்.

சாருவின்மயானக் கொள்ளை :கலவையான நிகழ்த்துதலைக் கோரும் நாடகப்பிரதி

படம்
     தன்னை உள்ளிருத்திக் கதைகள்(Auto -Fictional) எழுதும் சாருநிவேதிதா அதே பாணியை நாடகப் பிரதி ஆக்கத்திலும் கையாண்டுள்ளார். புதுவைப் பகுதியில் அங்காளம்மன் திருவிழாவில் நடக்கும் ”மயானக் கொள்ளை” என்னும் சடங்கியல் நிகழ்வின் காட்சிகள் அவற்றின் பின்னிருக்கும் நம்பிக்கைகளோடும் மாயத் தன்மையோடும் உள்ளோட்டமாக இடம்பெற்று நிகழ்த்துப் பிரதியாகியுள்ளது. முதல் அங்கம் வசனக் கதைசொல்லலாகவும் இரண்டாவது அங்கம் குரூர அரங்கியலாகவும் மூன்றாவது அங்கம் பழக்கங்களின் மீதான அங்கதமாகவும் கடைசி அங்கம் சடங்கியல் அரங்காகவும் எழுதப்பட்டுள்ளது. 

இரண்டு நாடக ஆளுமைகள்: எஸ்பிஎஸ். ந.முத்துசாமி

படம்
கலைஞர் எஸ்.பி.சீனிவாசன்  வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இயங்கும் மாற்று நாடகக்குழுவின் முழுமையான இயக்கம் பேரா. கி.பார்த்திபராஜாவின் முயற்சிகள் சார்ந்தது. அம்முயற்சிகளுக்குத் துணையாக இருப்பது அவர் பணியாற்றும் கல்லூரி. முயற்சியுடைய ஒருவருக்குத் தடைசொல்லாத நிறுவனம் கிடைத்துவிட்டால் வானம் வசப்படும் என்பதற்கு மாற்றுநாடக இயக்கத்தின் செயல்பாடுகள் எடுத்துக்காட்டு. மாற்று நாடகக் குழுவின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியான நாடக இயக்கத்தின் கண்ணிகளில் ஒன்று. 

கட்டுரைகள் பத்திகள் நேர்காணல்கள் தன்னம்பிக்கை எழுத்துகள்

இலக்கியப்பனுவல்களின் அடிப்படையான வடிவங்கள் மூன்று எனக் கருதியே இலக்கியவியல் அடிப்படைகளைப் பேசும் நூல்களை எழுதியவர்கள் நினைத்திருக்கிறார்கள். அரிஸ்டாடில், தொல்காப்பியர், பரதர் போன்றவர்கள் அவர்களின் விருப்பமான இலக்கிய வடிவத்தை மையப்படுத்திக்கொண்டு மற்ற வடிவங்களின் அடிப்படைகளையும் பேசுகின்றனர். அரிஸ்டாடிலுக்கும் பரதருக்கும் முதன்மை வடிவங்கள் நாடகம். அதன் உட்பிரிவாகவோ, துணைவிளைவுகளாகவோ கருதித்தான் கவிதை, கதை போன்றவற்றைச் சொல்கின்றனர். செய்யுளை இலக்கியம் என்ற சொல்லின் இடத்தில் வைத்து அடிப்படைகளைப் பேசும் தொல்காப்பியருக்கோ முதன்மை வடிவம் கவிதைதான். பாட்டு, பா, பாடல் எனச் சிறிய வேறுபாடுகளையும் பேசுபவர் மற்ற வடிவங்களாக மற்றவற்றைப் பேசுகிறார்.

சாருவின்மயானக் கொள்ளை :கலவையான நிகழ்த்துதலைக் கோரும் நாடகப்பிரதி

தன்னை உள்ளிருத்திக் கதைகள்(Auto -Fictional) எழுதும் சாருநிவேதிதா அதே பாணியை நாடகப் பிரதி ஆக்கத்திலும் கையாண்டுள்ளார். புதுவைப்பகுதியில் அங்காளம்மன் திருவிழாவில் நடக்கும் ”மயானக் கொள்ளை” என்னும் சடங்கியல் நிகழ்வின் காட்சிகள் அவற்றின் பின்னிருக்கும் நம்பிக்கைகளோடும் மாயத் தன்மையோடும் உள்ளோட்டமாக இடம்பெற்று நிகழ்த்துப் பிரதியாகியுள்ளது. முதல் அங்கம் வசனக் கதைசொல்லலாகவும் இரண்டாவது அங்கம் குரூர அரங்கியலாகவும் மூன்றாவது அங்கம் பழக்கங்களின் மீதான அங்கதமாகவும் கடைசி அங்கம் சடங்கியல் அரங்காகவும் எழுதப்பட்டுள்ளது. 

தேசியம் - தேர்தல்

சாதாரண நாட்களில் தனிநபர் கொலைகளைப் பிரிவினைவாதத்தோடு இணைத்து, அமைப்பின் குற்றங்களாக முன்வைப்பதை வலதுசாரி தேசியவாதம் ஒரு உத்தியாகச் செய்கிறது. அதில் முன்னோடியாக இருப்பது வலதுசாரிகளின் கனவு நாடான அமெரிக்காதான். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் -2016 இல் கோடை விடுமுறையின்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்தேன்.மே முதல் வாரத்தில் போய், ஜூலை 21 இல் நாடு திரும்பினேன். அந்த மூன்று மாத காலத்தில் வலதுசாரி தேசிய வாதத்தின் உளவியல் செயல்படும் விதத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தேர்தல் 2019 - IV

 18-04-19/ இது வித்தியாசமான வாக்களிப்பு இந்தியா/ தமிழகம் மக்களாட்சித் திருவிழாவில் பங்கேற்கப் பழகிவிட்டது என்று சொல்கிறது இந்தப் பக்குவம். வாழ்க மக்களாட்சி முறை.

கவிதை வாசிப்புக்கணங்கள்

எழுதவிரும்பும் ஒருவர் முதலில் தொடங்குவது கவிதையாக இருக்கிறது. ஒன்றைப் பார்த்தவுடன் - ஒன்றில் பங்கேற்றவுடன் -ஒன்றால் பாதிக்கப்பட்டவுடன் அதைக் குறித்துச் சொல்வதற்கேற்ற இலக்கியவடிவம் கவிதை. அக்கவிதை வடிவத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறவர்கள் உணர்வை எழுதுவதிலிருந்து மெல்லமெல்ல நகர்ந்து அறிவையும் கருத்தியலையும் சிந்திப்பு முறைமைகளையும் கவிதையாக்கும் முயற்சிக்கு நகர்கிறார்கள். அப்படி நகரும்போது அந்தக் கவிஞர்கள் அந்த மொழியில் இயங்கும் காலத்தின் கவியாக அடையாளப் படுகிறார்கள். நவீனத்துவத்தை உள்வாங்கிய பாரதியின் தொடக்கக் காலக் கவிதைக்கும் பிந்தியக் காலக் கவிதைகளுக்குமான வேறுபாட்டைக் கவனிப்பவர்களுக்கு இது புரியும். 

அரசியல் சார்பும் வர்க்க நலனும்

படம்
தமிழ்நாட்டின் சன் தொலைக்காட்சிக் குழுமமும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக் குழுமமும் இப்போதைய தேர்தலில் காட்டும் நடுநிலைப் போக்கு பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. அந்த அதிருப்தியாளர்கள் பெரும்பாலும் தி.மு.க. ஆதரவு வாக்காளர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்களை அரசியல் அறிவுகொண்ட பார்வையாளர்களாக நினைத்துக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. அதனால் தான் அவர்களால் ஏற்க முடியாமல் இருக்கிறது.

உலகமயம் : திராவிட அரசியலும் தேசிய அரசியலும்

படம்
உலகமயமும் இந்தியாவும்  உலகமயம் இந்தியாவில் ஒத்துக் கொள்ளப்பட்ட பொருளியல் உறவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 30 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதற்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதார உறவுகள் கலப்புப் பொருளாதாரம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. அரசு தன்னைப் பெருந்தொழில்களில் முதலீடு செய்யும் முதலாளியாக நினைத்துகொண்டு முதலீடு செய்தது. அவை பெரும்பாலும் கனரகத் தொழில்களாக இருந்தன. சிறு மற்றும் குறுந்தொழில்களில் தனியார் துறைக்கு அனுமதிகளை வழங்கியது. அனுமதிகள் வழங்குவதில் கட்டுப்பாடுகளும் தேக்கநிலையும் இருந்தன.ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு ஒரே அனுமதி என்பதைத் தாண்டிப் பல்வேறு கட்டங்களில் அனுமதிக்காக அரசு நிர்வாகத்திடம் தனியார் செல்லவேண்டியதிருந்தது. 

தேர்தல் -2019 -III

படம்
தமிழ் அடையாளங்களென நமது உறுப்பினர்கள்  மக்களாட்சி என்னும் அரசமைப்பு அடிப்படையில் புறநிலை யதார்த்தத்திற்கேற்பத் தன்னிலையை மாற்றிக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் பொது மனிதனாக ஆவது என்ற உயரிய சிந்தனையை முன்வைக்கும் ஒரு கோட்பாடு. நான், எனது, என்ற அகம் சார்ந்த தன்னிலை உருவாக்கக் கூறுகளை ஒரு மனிதனிடமிருந்தால் அதைக் குறைத்துப் பொதுநிலைப்பட்ட மனிதனாக ஆக்கும் நோக்கம் கொண்டது. அதன் மூலம் அம்மனித ஆன்மாவை விடுதலை அடையச் செய்யும் பாதையே மக்களாட்சியின் பாதை.

அதிகாரங்களின் முரணியக்கம்

பழைய பஞ்சாங்கங்கள் பயன்பாட்டில் இருக்கும் கலைச்சொற்களுக்கு எதிர்நிலைப்பாட்டைக் குறிக்கும் கலைச் சொல்லாக்கம் எளிமையானது. இருக்கும் கலைச்சொல்லின் முன்னால் - எதிர்/ Anti - என்பதைச் சேர்த்துப் பயன்படுத்திவிடலாம். ஆனால் அப்படியே பயன்படுத்தாமல் சிலவகையான வேறுபாடுகளோடு பயன்படுத்தும்போது எப்படிப் பயன்படுத்துவது என்பதில் சிக்கலும் குழப்பமும் ஏற்படுவதுண்டு. சிலவேளைகளில் - நவ(Neo)- என்ற முன்னொட்டும் சில வேளைகளில், - புது( New)- என்ற முன்னொட்டும் சேர்க்கப்படுகிறது

தடயம்:தமிழ் மாற்றுச் சினிமாவில் ஒரு மைல்கல்.

படம்
நிறைவேறாத காதல் - தமயந்தியின் தடயம் சினிமாவின் விவாதப் பொருள் என்பதைப் படம் பார்ப்பதற்கு முன்பே அறிவேன். தடயத்தை எழுத்தில் வாசித்திருக்கிறேன். அப்போது இப்படி எழுதியிருக்கிறேன்

தேர்தல் 2019 -II

05-04-19/எதிரிகளாகவும் சீர்திருத்தம் வேண்டுபவர்களாகவும் இன்றைய இந்தியாவில் தேசிய கட்சிகள் என்னும் அடையாளம் தாங்கிய அணிகளாக மூன்றைக் காட்டலாம். மைய அரசின் அதிகாரத்திலிருக்கும் பாரதிய ஜனதாகட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்ட அணி இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் செல்வாக்குடன் இருக்கிறது. அதற்கடுத்த நிலையில் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைமையில் இயங்கும் அணி இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் சமமாக இல்லையென்றாலும் பெரும்பாலான மாநிலங்களில் அரசியல் சொல்லாடல்களை உருவாக்கும் இடத்தில் இடதுசாரிகளாக அறியப்படும் இந்தியக் கம்யூனிஸ்டும் அதிலிருந்து உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் நட்புமுரணோடு ஒரே அணியாக இருக்கின்றன. இந்தப்பின்னணியில் இந்தப் பொதுத்தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்கால நெருக்கடிகள் இரட்டை எதிர்வை - இருமுனைப் போட்டியை உருவாக்கியிருக்கிறது

பாண்டிச்சி: முதல் எழுத்து என்னும் நிலையோடு...

படம்
தமிழ் இலக்கிய மரபில் கவிதைதான் பெண்களின் வெளிப்பாட்டு வடிவமாக இருந்துவருகிறது. கவிதையில் கதைசொல்லும் நெடுங்கவிதை களைக் கூட முயற்சி செய்யவில்லை. நெடும்பாடல்களையும் குறுங் காவியங்களையும் ஆண்களே முயற்சி செய்திருக்கிறார்கள். நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிலும் கூடப் புனைகதைகள் எழுதும் பெண்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது.

உயர் கல்வி நிறுவனங்கள்

படம்
தரம் உயர்த்திக்கொள்ளல் ----------------------------------------- நான் பணியாற்றும் திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துள்ளது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.

ஒரு அரங்கப்பட்டறை நினைவுகள் - பிரபாகர் வேதமாணிக்கம்

படம்
  1993ஆம் ஆண்டு அமெரிக்கன் கல்லூரியில் முதன் முறையாக ஒரு நாடகப் பயிலரங்கைத் திட்டமிட்டோம். நண்பர்கள் அ.ராமசாமியும் சுந்தர்காளியும் அந்த பயிலரங்கை வடிவமைத்தார்கள். நான் உடனிருந்தேன். நான் அப்போதுதான் ஒரு பயிலரங்கை அருகிருந்து பார்க்கிறேன்.

திலகா அழகு: ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலுமான பெண்ணுடல்கள்

படம்
நான் எழுதும்  ஒரு நூலுக்கான முன்னுரையில் அவர்  புதியவராக இருக்கும் நிலையில்  அவர்கள் இயங்க நினைக்கும் இலக்கியப்பரப்புக்குள் அறிமுகப்படுத்த நினைக்கின்றேன். ஏற்கெனவே இயங்குபவர்களாயின் அவர்களின் தனித்துவம் எதுவென அறிந்து வாசகர்களிடத்தில் விவாதிக்கத் தூண்டுகின்றேன். மௌனம் தின்னும் என்னும் தொகுப்போடு வந்திருக்கும் திலகா அழகு புதியவர். அவரது வருகையைக் கவிதைப்பரப்பிற்குள் அறிமுகம் செய்வதே இங்கு நோக்கம்

நவீனத்துவமும் பாரதியும்

ஆங்கிலத்தில் மாடர்ன் (Modern), மாடர்னிட்டி (Modernity), மார்டனிசம்(Modernism) என மூன்று சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இம்மூன்று சொற்களின் வேர்ச்சொல் மார்டன் (Modern) என்பதே என்றாலும் பயன்பாட்டு நிலையில் வேறுபாடுகள் உள்ளன. இம்மூன்று சொற்களையும் தமிழில் நவீனம், நவீனத்துவநிலை, நவீனத்துவம் என மொழிபெயர்ப்புச் செய்து பயன்படுத்தலாம். தமிழில் ஒவ்வொன்றும் தனித்தனியாகச் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா? என்பது விவாதிக்கப்பட வேண்டியது.  நவீனம் என்பது அன்றாட வாழ்க்கையில் பெரிதும் பயன்பாட்டில் உள்ள சொல். நவீன நிலை என்பது எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் முடிவுகளின் மீது மனிதர்கள் காட்டும் நிலைபாட்டின் பக்கச் சார்பைக் குறிக்கும் சொல்லாக நடைமுறையில் இருக்கிறது. இம்மூன்றிலிருந்தும் விலகிக் குறிப்பிட்ட காலகட்டத்துக் கலை இலக்கிய விவாதங்களைக் குறிக்கும் சொல்லாக நவீனத்துவம் இருக்கிறது. அச்சொல்லின் வருகையும் செல்வாக்கும் மேற்குநாடுகளில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலும் கலை இலக்கியப்பரப்புகள் பலவற்றிலும் இருந்தது.

அழிபடும் அடையாளங்கள்

படம்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒருவித வெறியுடன் கேட்கிறது அந்தச் சத்தம். தொலைக்காட்சியின் எந்தத் தமிழ்சேனலைத் திருப்பினாலும் அரைமணி நேரத்திற்குள் அந்தச் சத்தம் செவிப்பறையைத் தாக்குகிறது. கட்சிக் கூட்டங்கள், கல்யாண மண்டபங்கள் என எங்கும் இந்தச் சத்தம்தான். சட்டசபையின் இரைச்சல்களுக்கு ஊடே இந்த சத்தமும் கேட்டது. ஏன் போடுகிறோம் என்று தெரியாமலேயே தமிழா்கள் “ஒ” போடுகிறார்கள்.

பெண்மொழியின் மீறல்கள்: தமிழ்க்கவியின் பாடுபட்ட சிலுவையள்

படம்
  உலகில் மொழியின் தோற்றம் பற்றிய ஆய்வு, நீண்டகாலமாக நடக்கும் ஒன்று. மனிதத் தோற்றம் பற்றிய தேடலோடு மொழியின் தோற்றம் பற்றிய தேடலும் இரட்டை மாட்டு வண்டியின் சக்கரப்பதிவுகள். உலகப்பரப்பில் மனிதர்களின் தோற்றம் எங்கு நிகழ்ந்ததோ அங்குதான் மொழியின் தோற்றமும் நிகழ்ந்திருக்கும் என்பது மொழியியலாளரின் கருத்து. 

கடந்த காலத்தின் பெண்கள்:எம்.ஏ.சுசிலாவின் ஊர்மிளை

படம்
மனித வாழ்க்கை என்பது ஒற்றை நிலை கொண்டதல்ல. அதற்குள் முதன்மையாக இரட்டைநிலை உருவாக்கப்படுகிறது. இரட்டைநிலை உருவாக்கம் என்பது மனித உயிரியின் பெருக்கமும் விரிவாக்கமும் மட்டுமல்ல. அனைத்துவகை உயிரினங்களும் பெண் -ஆண் என்னும் பாலியல் இரட்டை வழியாகவே நிகழ்கின்றன. உயிரியல் அறிவாக நாம் விளங்கியிருக்கும் இவ்விரட்டையின் ஒவ்வொரு பக்கமும் இன்னும் இன்னுமாய் இரட்டைகளை உருவாக்கிப் பலநிலைகளை உருவாக்குவதன் மூலம் எண்ணிக்கையில் விரிகிறது.  

தொடர்ச்சியான பேச்சுகள்....

காலம் இதழின் வாசகர்களுக்கு உங்களை அறிமுகம் செய்யவேண்டியதில்லை இருந்தபோதிலும் காலம் படிக்கப்படும் -விவாதிக்கப்படும் தமிழ்ச்சிந்தனை வெளிக்கு உங்களை எப்படிக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள். முன்பெல்லாம் என்னையொரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதில் ஆர்வத்தோடு இருந்தேன். அதற்காக வாதாடியிருக்கிறேன். இப்போது அப்படி நினைக்கவில்லை. என்னையொரு கல்வியாளனாக - பொறுப்பான பேராசிரியராக முன்னிறுத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறேன். பொறுப்புள்ள பேராசிரியராக இருப்பதில் எழுத்தாளராக இருப்பதும் அடங்கும் என்றும் நம்புகிறேன். இருந்தபோதிலும் கலை இலக்கியவெளிக்குள் எனது நகர்வுகளைக் குறித்துச் சொல்வது தற்புகழ்ச்சியாகாது என்பதால் இதைச் சொல்லவிரும்புகிறேன்.எப்போதும் நான் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்பவனாக இருந்து வந்துள்ளேன். ஒரு தன்னிலையை அல்லது அடையாளத்தை உருவாக்கியபின் அதை நானே அழித்தும் இருக்கிறேன். தன்னுணர்வோடு விலகுவதாகக் கருதித் திரும்பவும் அதற்குள் பயணித்திருக்கிறேன். எப்போதும் உள்ளேயும் வெளியேயுமான பயணங்கள் சாத்தியமாகிக் கொண்டே இருந்தன. தொடர்ந்து ஏனிப்படி நடக்கிறது என்றுகூடப்பல நேரங்களில் நினைத்துக் க