பேரங்காடிப் பண்பாடு
” அரிசி குழஞ்சு போயிராதுல்ல” ” இல்லங்க ; இது பழைய அரிசி,குழையாது” “ ரொம்பப் பழசுன்னா வேணாம்; வாடை வரும்” “ அய்யோ அவ்வளவு பழசு இல்லீங்க; வடிச்சுப் பாருங்க. மணக்கும்” அரிசிக் கடைக்காரருக்கும் வீட்டுத் தலைவிகளுக்கும் இடையில் நடக்கும் இந்த உரையாடலில் இடையில் புகுந்து “ வடிச்சுப் பார்க்கவா ; குக்கரில் அரிசியைப் போட்ட பிறகு சோத்த வடிக்கிற வேலை எங்கே இருக்கு” கணவர்கள் கேட்டால் சிரித்து விட்டுச் சொல்வார்.