உயிர்மை: இலக்கிய இதழாக நீடித்தல்
2024, பிப்ரவரி இதழில் அழகிய பெரியவனின் தொடர்கதை - ஊறல் - தொடங்கப்பட்டிருப்பதைக் கண்டவுடன் கவி.மனுஷ்யபுத்திரனை அழைத்துப் பேசவேண்டும் என்று நினைத்தேன். அவர் பலவிதமான வேளைகளில் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கிறார் என்பதை முகநூல் பதிவுகள் காட்டியதால் அழைத்துப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு நேரடிச் சந்திப்பில் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அண்மையில் சென்னைப் பயணத்தில் நூலக ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சந்தித்தபோது பேசிய பலவற்றில் உயிர்மையை இலக்கிய இதழாக நீட்டிப்பதின் தேவையையும் சொன்னேன்.