சூழலில் அர்த்தமாகும் கவிதை:
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVTLKR7aCrxHxR56WNJIQvM-x-Lw98Reez9OLT-bMBRY_E6VVH2FSH8gZyHEfQRHBHqLKZJ-Fgp9aGDymVX5Ioqwhn8_ohZLRXh1n6-5VDYUW6PmxkBGNBnJkQSoKNhGg8kepMm4rz4Y6g/s1600/10387318_692355457468193_1627100695237812223_n.jpg)
இது கவி சமயவேலின் அடையாளம் அல்ல. அவருடைய பெரும்பாலான கவிதைகள் வெளிப்படையான அரசியல் கவிதைகள் அல்ல. சமூகப் போக்கைச் சந்திக்கும் கணத்தில் அதை விளங்கிக் கொள்ள முடியாமலும், விளங்கிக்கொள்ள முடிந்தாலும் அதைச் சந்திப்பது எப்படியெனப் புரியாமலும், கடந்து செல்லும் வழியறியாமலும் தவிக்கும் தனிமனிதர்களின் தன்னிலைகளை அவரது பலகவிதைகளில் வாசிக்க முடியும். அந்தத் தன்னிலைகளை முழுமையாகக் கவி சமயவேலின் தன்னிலை என்றும் புரிந்துகொள்ளலாம். அல்லது அவர் முன்வைக்கும் மனிதர்களின் தன்னிலையாகவும் விளங்கிக் கொள்ளலாம்.