இடுகைகள்

பண்பாட்டுவெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பண்டிகைகள் - திருவிழாக்கள்- கொண்டாட்டங்கள்

படம்
நமது பண்டிகைகள் நமது வாழ்வின் சில மகிழ்ச்சியான தருணங்களாக இருந்தன; சில துன்பங்கள் தொலைந்ததின் நினைவுகளாக இருந்தன. சிலவற்றை வரவேற்கும் ஆரவாரமாக இருந்தன. ஆனால் இன்று ஒவ்வொரு அரைமணி நேரத்தையும் வணிக நிறுவனங்கள் பங்கு போட்டுக் கொண்டு பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கும் பார்வையாளர்களோ அவற்றின் விளம்பரத்தைப் பார்த்து பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் ஏக்கத்தின் நாட்களாக பண்டிகை நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் பண்டிகை நாட்களை வியாபாரப் பண்டங்களின் நினைவு நாட்களாக ஆக்கி ஆண்டுகள் சில பத்துகள் ஆகிவிட்டன. இப்போது கிராமத்துக் குடிமக்களிடம் இலவசத் தொலைக்காட்சி அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. காலத்தைக் கடைச்சரக்காக்கும் வித்தையைச் செய்யும் வியாபாரிகளிடமும் அவர்களை அண்டிப் பிழைக்கும் ஊடகங்களிடமும் மனிதர்கள் எச்சரிக்கையோடு இருப்பார்களாக; இல்லையென்றால் எல்லா அடையாளங்களும் இல்லாமல் போய்விடும்.

மூன்று குறிப்புகள் -ஒரு விளக்கம் -சில தகவல்கள்,

படம்
கி.ரா. நினைவரங்கம் திருநெல்வேலிக்குப் போய்த்திரும்பும் ஒவ்வொரு முறையும் கோவில்பட்டியில் அமைந்துள்ள அந்த நினைவரங்கத்திற்குச் சென்று பார்த்துவரவேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் கோவில்பட்டிக்குள் நுழையாமல் தாண்டிச்செல்லும் இடைநில்லாப் பேருந்துகளில் ஏறிவிடுவதே பெரும்பாலும் நிகழ்ந்துவிடும். அதனால் கி.ரா. நினைவரங்கத்தைப் பார்ப்பது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

பெங்களூரில் புக்பிரும்மா இலக்கியவிழா

படம்
உலக அளவில் நடக்கும் இலக்கியவிழாக்கள் சிலவற்றைக் கடந்து செல்லும் பார்வையாளனாகப் பார்த்துக் கடந்துவந்துள்ளேன். இந்திய அளவில் நடக்கும் இலக்கியவிழாக்களில் வெளியிலிருந்து பார்க்கும் இலக்கியமாணவனாகவும், அழைக்கப்பட்ட பார்வையாளராகவும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தவனாகவும் இருந்துள்ளேன். தமிழ்நாட்டில் நடக்கும் சில இலக்கிய விழாக்களில் பங்கேற்புச் செய்து கலந்துகொண்டிருக்கிறேன்.

விலகிச் செல்லும் அந்தரங்கம்

படம்
திருமணம் நடக்கும் அந்த மண்டபம்  புதிய ஒன்று அல்ல. ஆனால் அந்த மண்டபத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்துகொள்ள வருவது இதுதான் முதல் முறை. இப்போது மண்டபம் இருக்கும் இடத்தில் முன்பு ஒரு திரை அரங்கம் இருந்தது. அந்தத்திரை அரங்கிற்குப் பல முறை வந்திருக்கிறேன். நூறு நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படங்கள் சிலவற்றை அந்த திரை அரங்கில் பார்த்திருக்கிறேன். இப்போது எல்லா வசதிகளும் கொண்ட திருமண மண்டபமும் வணிக வளாகமும் என அந்த இடம் மாறி விட்டது.

சென்னைப்பயணத்தில் இரண்டு நிகழ்வுகள்

படம்
சென்னை எனக்கு விருப்பமான நகரமல்ல. அங்கேயே தங்கி வாழும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் அதனைத் தவிர்த்தே வந்துள்ளேன். அதே நேரம் அந்த நகரத்தை வெறுத்து ஒதுக்கியும் விடமுடியாது. தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பதால் எனது விருப்பப்புலம் சார்ந்த நிறுவனங்களும் நிகழ்வுகளும் அங்கேதான் இருக்கின்றன; நிகழ்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பிள்ளைகள் இருவரும் அங்கே இருந்தார்கள். அதனால் அதிகம் போய் நாட்கள் கணக்கில் தங்கியதுண்டு. அதிகமாக இரண்டு வாரங்கள் அளவு தங்கியுள்ளேன். அப்போது சென்னையில் இலக்கிய நிகழ்வுகளில் பார்வையாளனாகப் பங்கேற்றுவிட்டுத் திரும்புவேன். இப்போது ஓய்வுக்காலம் என்றாலும் அங்கே தங்கி நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியவில்லை. 

நம் காலத்து நாயகா்கள் : பொது உளவியலும் ஊடக உளவியலும்

படம்
 வகுப்பிற்குள் நுழைந்தபோது வழக்கத்தை விடக் கூடுதலான அமைதியுடன் இருந்தது வகுப்பறை. காலையில் தினசரியைப் பார்த்ததில் இருந்து தொற்றிக்கொண்ட அமைதி வகுப்பிலும் இருப்பதாக நான் நினைத்துக் கொண்டேன். 18.10.2004 இரவு வீரப்பன் கொல்லப்பட்ட தகவலைச் செய்தித்தாளைப் பாரத்துத் தான் நான் தெரிந்திருந்தேன். ஆனால் மாணவிகளில் பலரும் அத்தகவலைத் தொலைக்காட்சிகள் மூலமாக அறிந்திருந்தனா். அந்தச் செய்தி அவா்களிடம் ஒற்றைத் தன்மையான தாக்கத்திற்குப் பதிலாகப் பலவிதமான கேள்விகளை எழுப்பியிருந்தது என்பதை அன்றைய விவாதம் எனக்கு உணா்த்தியது. வகுப்பில் நடத்த வேண்டிய பாடங்களுக்குப் பின் நான் எழுப்பும் பொதுவான கேள்விகளுக்கு எந்தவிதப்பதிலும் தராத மாணவிகளும் மாணவா்களும் என்னையே முந்திக்கொண்டு வீரப்பனின் கொலை குறித்து விவாதிக்கத் தொடங்கியது எனக்கு இன்னொரு உண்மையையும் உணா்த்தியது. வீரப்பன் காவிய நாயகனாக ஆகித் தமிழ் உள்ளங்களுக்குள் வாசம் செய்திருந்திருக்கிறான் என்பதுதான் அந்த உண்மை.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்

படம்
ஈ.வெ.ராமசாமி என்னும் மனிதர், பெரியாராக மறைந்தார் என்பது மட்டுமல்ல; கலகக்காரராகவும், தோழராகவும் வாழ்ந்தார். எதிர்த்தரப்பை மதித்து அவர்களோடு வாதம் செய்வதில் விருப்பம் உடையவர் பெரியார். அவர் அடிப்படையில் அரசியல்வாதி. இந்த நாட்டில் அல்லது மாநிலைத்தில் உருவாக்கவேண்டிய நிலைமை இதுதான் என இலக்கு வைத்துக்க்கொண்டு அதை நோக்கிப் பயணம் செய்த அரசியல்வாதி அல்ல. இந்த மாநிலத்தில் இவ்வளவு மோசமான நம்பிக்கைகளும் செயல்களும் இருக்கின்றன; இவை களையப்பட வேண்டும். அவை களையப்பட்டால், அதன் பின் உருவாகும் அமைப்புகளும் வாழ்க்கை முறையும் மக்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டவர். ஒருவிதத்தில் ஆன்மீகவாதிகளின் செயல்பாட்டை ஒத்தது பெரியாரின் செயல்பாடுகள்.

பொங்கல் - சல்லிக்கட்டு - தமிழ்ப் புத்தாண்டு.

படம்
பண்பாட்டுத் தளத்தை முதன்மைப்படுத்தித் தமிழ் நாட்டின் ஆட்சியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பிடித்து 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 1967 -இல் ஆயிரத்தித் தொள்ளாயிரத்து அறுபத்தியேழில் சி.என். அண்ணாதுரை முதல்வராக ஆனவுடன் முதன்மை அளித்துச் செய்தவைகள் இரண்டு. ஒன்று சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட பெயரைத் தமிழ்நாடு என மாற்றும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இரண்டாவது படியரிசித் திட்டத்தை நிறைவேற்றியது. இந்த இரண்டில் ஒன்று லட்சியம் சார்ந்தது; இன்னொன்று வாக்குறுதிகள் சார்ந்தது.

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

படம்
வரலாறு என்னை விடுதலை செய்யும் என்றார் தோழர் காஸ்ட்ரோ. திரள் மக்களின் விடுதலைக்கும் வரலாற்றுக்கும் உள்ள உறவை யாராவது ஒருவர் எளிமையாக விளக்கிவிட முடியும் என்று முன்வந்தால் அவரை ஆச்சரியத்தோடு தான் பார்க்கத் தோன்றுகிறது. அதற்கு மாறாக விடுதலைக்கும் வரலாற்றுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை எனக் கூறி வரலாற்றை விலக்கிவைக்க முன் வந்தால் அவரையும் ஆச்சரியத்தோடு தான் பார்க்கத் தோன்றுகிறது. வரலாறு விளக்கவும் முடியாத - விலக்கவும் முடியாத -ஒன்றாக இருப்பது பேசுவதற்கான ஒன்றுதான்.

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

 ஒரு மொழியின் இருப்பு எல்லாக்காலத்திலும் ஒன்றுபோல இருப்பதில்லை.   மொழிகளின் தோற்றக்காரணிகளைப் பொருத்து அவற்றின் இயல்பும் இருப்பும் மாறிக்கொண்டே இருக்கும். உலகில் உள்ள எல்லா மொழிகளையும் இயற்கை மொழி என்று சொல்லிவிட முடியாது.மிகக்குறைவான மொழிகள் செயற்கைமொழிகளாகவும் இருக்கின்றன.

தொலையும் கடவுளும் தூரமாகும் காதலும்

படம்
புதிதாக வரும் சமூகக் கட்டமைப்பு தரும் பலன்களை அனுபவித்துக்கொண்டே அதற்கெதிராகச் செயல்படுவதில் வல்லவர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாகச் சமூகக் கட்டமைப்பில் மேல்தளங்களில் இருக்கும் ஆதிக்கசாதிகள்/ உயர்வர்க்கத்தினர் இந்தத் தள்ளாட்டத்தில் சிக்கியவர்களாகவே இருக்கிறார்கள். பிரித்தானியர்களின் ஆங்கிலக் கல்வியைப் பயன்படுத்திக் கொண்டே - ஆங்கில மொழியைத் தனதாக்கிக் கொண்டே அதற்கெதிராகப் போராட்டங்களை நடத்திய மேல்மட்ட இந்தியர்களின் மனநிலை காலனியாதிக்கத்திற்குப் பின்னரும் மாறவில்லை.

கலை அடையாளங்களும் காமத்தின் ஈர்ப்பும்

படம்
  கலைகளில் ஒன்றை உருமாற்றம் செய்து ஒரு மொழி சார்ந்த குழுமத்தின் அல்லது நிலம் சார்ந்த பண்பாட்டின் அடையாளமாக மாற்றமுடியும் என்பதை இந்திய மாநிலங்களின் கலை பண்பாட்டு அமைப்புகள் செய்து காட்டியுள்ளன. தமிழ்நாட்டின் பண்பாட்டு அமைப்புகளும் பல்கலைக்கழக அழகியல் சார்ந்த துறைகளும் அதனைச் செய்ய முயற்சிக்கவில்லை என்றே தோன்றுகிறது.    நாடகம், நடனம், இசை, இலக்கியம் எனப் பலவற்றில் நாம் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

பிக்பாஸ் - சில குறிப்புகள்

படம்
பிக்பாஸ்-7:தவறவிட்ட முதலிடம் வெகுமக்கள் ஊடகங்களைக் கவனித்து வெகுமக்கள் பண்பாடும் அரசியல் தீர்மானங்களும் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதைத் தொடர்ந்து விவாதித்து வருபவன் என்ற வகையில் இந்தியர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கான கிரிக்கெட் விளையாட்டையும், தமிழர்களின் ஆகக் கூடிய நேரத்தை எடுத்துக்கொள்ளும் முதன்மை நேர நிகழ்ச்சிகளை- குறிப்பாகப் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை பார்த்துவிடுவதைத் தவிர்ப்பதில்லை. நேரலையாகப் பார்க்கத் தவறினால் மறு ஒளிபரப்பிலாவது பார்த்துவிடுவேன். இப்போது அவற்றுக்கான செயலிகள் வந்தபின் நேரலையாகத் தான் பார்க்க வேண்டும் என்பதில்லை.இந்த ஆண்டில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை (50 ஓவர்கள்) போட்டியின் இறுதிப்போட்டியை நேரலையாகப் பார்க்கவில்லை. அதேபோல் நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரலை நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை, இப்போது பார்த்து முடித்துவிட்டேன்.

ஆண்டாளைச் சுற்றியும் தமிழ்த்தாயை முன்வைத்தும் -சில குறிப்புகள்

படம்
· மோதல்-முரண் · மாற்று-எதிர் · வேறுபாடு – வித்தியாசம் § மோதல் என்ற சொல்லும் முரண் என்ற சொல்லும் ஒரே பொருள் தரும் சொற்கள் அல்ல. மோதல் என்றால் மனம் நினைத்துக் கொள்ளும் அர்த்தம் வேறு; முரண் என்றால் மனம் உணரும் அர்த்தம் வேறு. § மாற்று என்ற சொல்லின் பொருளையே எதிர் என்ற சொல்லின் பொருளாகச் சொல்ல முடியாது; சொல்லக்கூடாது. இரண்டும் வேறுவேறு. § வேறுபாடு என்ற சொல்லுக்கு இணையான இன்னொரு சொல்லாக வித்யாசத்தைக் கருதமுடியாது; கருதக்கூடாது. ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட்டது.

உணவும் பண்பாட்டு அடையாளங்களும்.

படம்
அதிகாலை நாலு மணிக்கு ரயிலேறி தமிழ் நாட்டின் தென்கோடியிலிருந்து வடகோடி ஊரான ஜோலார்ப் பேட்டை போய்ச் சேர்ந்த போது இரவு ஏழு மணி. மறுநாள் நடக்க இருக்கும் விழா/கருத்தரங்கம் திருப்பத்தூரில் இந்தியப் பழங்குடிப் பண்பாடும் திராவிடப் பண்பாடும்   [ தூய நெஞ்சக் கல்லூரியில் 2007, டிசம்பர் 18,19] என்றொரு கருத்தரங்கம்.   

பொதுமனம் முன்வைக்கும் பெரும்பான்மைவாதம்

படம்
இந்தியப் பெரும்பான்மை வாதம் என்பது அறியப்பட்ட சமய, மொழி, இன, பெரும்பான்மைவாதமாக மட்டும் இல்லை. மெல்லமெல்ல நகர்ந்து நடுத்தர வர்க்கம் என்னும் பெரும்பான்மை வாதமாக மாறிக்கொண்டிருக்கிறது. சரியாகச் சொல்வதானால் இந்தியாவில் நடுத்தரவர்க்கம் பெரும்பான்மை வர்க்கம் கூட இல்லை. இன்னும் கிராமங்களில் வாழும் இந்தியர்களே அதிகமானவர்கள். ஆனால் அவர்களையும் நடுத்தரவர்க்கமனப்பான்மைக்குள் கொண்டுவரும்வேலையை ஊடகங்கள் செய்துகொண்டிருக்கின்றன.

பிராமணியம் என்பது நபர்கள் அல்ல.

படம்
ஒரு காலகட்டத்தில் ஏற்புடையவர்கள் இன்னொரு காலத்தில் எதிர்ப்பாளர்களாகவும்  எதிரிகளாகவும் ஆவதற்குப் பல காரணங்கள் இருக்கும். நமது கருத்து மாற்றங்கள் காரணங்களாக இருப்பதுபோல, அவர்களின் செயல்பாடுகளும் காரணங்களாவதுண்டு. சமூக ஊடகங்களின் வரவுக்கு முன்பு இவ்வகை மாறுபாடுகள் வெளியில் தெரியாமல் ஒதுங்குவதும் ஒதுக்குவதுமாக இருந்துள்ளது. இப்போது சமூக ஊடகங்களில் பாவனையாக இருக்கும் நட்புப்பட்டியல் என்பது உண்மையில் நட்புப்பட்டியல் அல்ல. தெரிந்தவர்; சந்தித்தவர்; நம்மை ஏற்கக்கூடியவர்; எதிர்ப்புநிலையை அறிந்துகொள்வதற்காகக் கவனிக்கப்படுபவர் எனப் பலநிலைகளில் இருப்பவர்களைக் கொண்ட பட்டியலே நட்புப்பட்டியல். 

பனிக்கால வாடையல்ல; அக்கினிக்கால வெக்கை

படம்
முன்னுரையாக ஒரு தன்னிலை விளக்கம் கூட்டத்தில் ஒருவனாக இருப்பது தவறில்லை. கூட்டத்தோடு கூட்டமாக இருக்க நினைப்பதும் கூடத் தவறெனச் சொல்லமுடியாது.    இணைந்து கொள்ள முடியாத கூட்டங்களை வேடிக்கை பார்க்க ஆசைப்படலாம். இப்படித்தான் நான் இருந்துள்ளேன். உள்ளூர்த் திருவிழாக்கள் மட்டுமல்ல; உலகத் திருவிழாக்களையும் பார்த்திருக்கிறேன். மதுரையின் சித்திரைத் திருவிழாவில் பல ஆண்டுகள் பங்கேற்றுத் திரிந்தவன். திருவிழாக்களில் மட்டுமல்ல; தேர்தல்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பரிப்புகள், அடக்குமுறைகள், புறக்கணிப்புகள், பலியிடல்கள், கொண்டாட்டங்கள் எனப்பலவிதமான கூட்டங்களைப் பார்த்திருக்கிறேன்; பங்கேற்றிருக்கிறேன்.

அபிலாஷ்: குடும்ப அமைப்பின் மீதான விமரிசனம்

படம்
இன்று காலை ஒரு பயணத்தின்போது ஹலோ எப்.எம்மில் (106.4) பாடல்களுக்கிடையே நண்பர் அபிலாஷ் சந்திரனோடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நடத்திய உரையாடல்களையும் கேட்டுக்கொண்டே பயணம் செய்தேன். அவர் முகநூலில் எழுதும் ஆண் X பெண் முரண்களை மையமிட்ட உரையாடல்கள். அவரது முகநூல் விவாதங்களை வாசித்தபோது தோன்றிய கருத்துகள், இன்று வானொலி உரையாடலைக் கேட்டபின் கூடுதல் அழுத்தம் பெற்றதால் இப்போது சொல்லத்தோன்றுகிறது.

திராவிட மாதிரி: முன்னெடுக்கப்படும் பண்பாட்டு நகர்வுகள்

படம்
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சி ஒன்றினால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒட்டுமொத்தப் பரப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முன்வைக்கப்படும். தேசியக் கட்சிகள் தேசத்தைப் பெரும்பரப்பாகக் கணக்கில் வைத்துப் பேசுகின்றன. மாநிலக்கட்சிகள் மாநிலத்தின் எல்லைகளையே தனது பெரும்பரப்பாக்கி வாக்குறுதிகளை முன்வைக்கின்றன. தேர்தலுக்குப் பின் ஆட்சியதிகாரத்திற்கு வரும் நிலையில், பெரும்பரப்புக்கும் சென்றுசேரும் வாக்குறுதிகளை ‘நிறைவேற்றிக் காட்டினோம்’ எனச் சொல்வதற்காக முன்னுரிமை அளிக்கின்றன. அத்தகைய நிறைவேற்றங்களே அந்தக் கட்சிக்கு வாக்குவங்கியைத் தக்க வைக்க உதவும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றிய ‘மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்’ என்னும் திட்டம் அப்படியானதொரு திட்டம்.