இடுகைகள்

மார்ச், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொடரும் வட்டார தேசியம்

அதிகாரப் பரவலாக்கம் பற்றி ஜனநாயக ஆர்வலர்களும் அறிவுஜீவிகளும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். மையப்படுத்தப்படும் அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் போக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் வெளிப்பாடு. மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பில் சில மாநில மக்களின் நலன்களும்¢, மாநில அரசுகளின் உரிமைகளும் கண்டு கொள்ளப்படவில்லை; அதிகாரம் பரவலாக்கப் பட வேண்டும்; மேலிருந்து கீழ் நோக்கி அப்பரவல் நகரவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டதுண்டு. ஒற்றைக் கட்சியின் ஆட்சி மைய அரசில் இருந்த போது இத்தகைய குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன. 

புலம் பெயர்ந்தோர் இலக்கியம்

இலங்கைத் தமிழர்களின் இருபத்தைந்தாண்டுக் காலப் போராட்டத்தை, வரலாற்றின் பக்கங்களில் எவ்வாறு எழுதுவீர்கள்? என ஒரு வரலாற்று ஆசிரியரிடம் கேட்டுப் பாருங்கள். உடனடியாக எந்தப் பதிலையும் அவர் சொல்லி விட மாட்டார். காரணம் ஈழத்தமிழர்களின் கனவான ஈழத்தனிநாடு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற முடிவு தெரியாமல் வரலாற்றை எப்படி எழுதுவது என்ற குழப்பம் தான். எந்த ஒரு நிகழ்வையும் வெற்றி- தோல்வியைக் கொண்டே முடிவு செய்யும் அடிப்படைப் பார்வை கொண்டது வரலாறு. அதனால் அது நிகழ்காலத்தைப் பற்றிய கருத்துரைப்பை எப்போதும் தள்ளிப் போடவே செய்கிறது.

சுஜாதா - நினைவுகளில் நிற்பார்

படம்
மாணவர்களுக்கு உரைநடைகளின் மாதிரிகளைக் காட்டுவதற்காகப் பலரின் உரைநடைகளைத் தொகுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சில பெயர்களைக் குறித்து வைத்துத் தேடிக் கொண்டிருந்தேன். அந்தப் பெயர்ப்பட்டியலில் சுஜாதாவின் பெயரும் இருந்ததால் அவரது கட்டுரைக்காகப் பழைய கணையாழியின் கடைசிப் பக்கங்களைத் தேடிக் கொண்டிருந்த போது அந்தக் குறுஞ்செய்தி வந்தது. அப்போது இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும். எனது கைபேசியின் திரையில் தெரிந்த அந்தச் செய்தி எழுத்தாளர் சுஜாதா இறந்து விட்டார் என்று காட்டியது. அதைப் பார்த்த பின்பு எனது தேடல் நின்று போய்விட்டது.

வெண்ணெயும் சுண்ணாம்பும்

தொழில் நுட்பத் தேர்ச்சி பெற்ற ஊழியர்களும் அறிவார்ந்த மனித உற்பத்தியும் தாராளமயப் பொருளாதாரத்திற்கு அடிப்படையான தேவைகள். இத்தேவைகளைத் தீர்க்கும் சக்தி உடையவை உயர்கல்வி நிறுவனங்கள் தான். தாராளமயப் பொருளாதாரத்தை முன்மொழியும் - உலகமயத்தைத் தீர்மானிக்கும்- உலக வங்கியும் மேற்கத்திய நாடுகளும் பின்னின்று இயக்க, நமது அறிஞர்களும் வல்லுநர்களும் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தைத் தயாரித்துள்ளனர். இந்த ஐந்தாண்டுத் திட்டத்தை உயர்கல்விக்கான ஐந்தாண்டுத் திட்டமாக அறிவித்துள்ளதே அதற்குச் சான்று.