இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர்கள் இப்படி மட்டும் தான் இருக்கிறார்களா ஜெயமோகன்?

படம்
இப்படி இருக்கிறார்கள் என்று தலைப்பு வைத்து ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=36719 எழுதிய அந்தக் கட்டுரை ”இப்படிப் பட்ட ஒரு கூட்டம்  தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது” என்று எழுதிக் காட்டியதோடு முடித்திருந்தால் தனது வலைப்பூவில் அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளில் ஒன்று என நினைத்து வாசிக்கப்பட்டு விடப்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை வழங்காமல் இப்படிப்பட்ட கூட்டம் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து சொல்ல முயன்றதன்

மொழிக் கல்வியும் மொழிவழிக் கல்வியும்

படம்
தமிழக அரசு அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழி வகுப்புகளை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற அறிவிப்பை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்று குழப்பமாக இருக்கிறது. இன்றைய உலகமயச் சூழலில் தாய்மொழிவழிக் கல்வியை மட்டும் வலியுறுத்தும் தைரியம் என க்கு இல்லை. அப்படி வலியுறுத்துபவர்களுக்கு கிடைக்கக் கூடிய பட்டங்கள் பலவாக இருக்கும் என்பதும் எனக்கு தெரியும் . நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத பிற்போக்குவாதி ; மொழி வெறியன் ; கிணற்றுத்தவளை என்பதான தூற்றல் வார்த்தைகளால் அர்ச்சனை கள் கிடைக்கலாம்.

பாலாவின் பரதேசியைப் பற்றியும் சுற்றியும்

 படம் வருவதற்கு முன்பாகப் பலவிதமான எதிர்பார்ப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிவிட்டு படத்தை வெளியிடுவது இப்போது ஓர் வியாபார உத்தியாக இருக்கிறது. பாலாவின் பரதேசியும் அப்படியான உத்திக்குப் பிறகுதான் திரையரங்குகளுக்கு வந்தது. போலந்தின் தலைநகர் வார்சாவில் அந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு இல்லை. இணையங்களில் கிடைக்கும் இணைப்புகள் வழியாகத்தான் பார்க்க முடிந்தது. நான் பார்த்து முடிப்பதற்குள் பலவிதமான விமரிசனங்கள் அந்தப் படத்தை நோக்கி எழுதப்பட்டன. நேர்மறையான விமரிசனங்களை விடவும் எதிர்மறை விமரிசனங்களே அதிகம் வந்தன. கதை உருவாக்கம், திரைக்கதை ஆக்கம், வசனம் எழுதுபவரின் பின்னணி, படப்பிடிப்பு நிகழ்வுகள், பாடல் வெளியீட்டு நிகழ்வு எனப் படத்துக்கு வெளியே இருக்கும் பலவற்றைப் பற்றிய முன் அபிப்பிராயங்களோடு எழுப்பப்பட்ட விமரிசனங்களைத் தாண்டி அந்தப் படத்தின் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டும் என்பதால் விரிவான விமரிசனம் ஒன்றை லண்டனிலிருந்து வரும் “எதுவரை- உரையாடலுக்கான வெளி ” என்னும் இணைய இதழில் எழுதியுள்ளேன். படத்தைப் பற்றியும் படத்தைச் சுற்றி எழுப்பப்பெற்ற விமரிசனங்கள் பற்றியும் அந்தக் கட

எனக்குள் நுழைந்த எம்.எ. நுஃமான்.

படம்
கழிந்ததின் ஏக்கம் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் நாஸ்டால்ஜியா (Nostalgia). இச்சொல்லின் பயன்பாட்டு அர்த்தம் பெரும்பாலும் இடம் சார்ந்த பழைய நினைவுகளோடு பொருத்தம் கொண்டதாக இருக்கிறது. இடம் பற்றிய நினைவு என்பது வெற்றுப் பரப்பு பற்றிய நினைவாகக் கரையாமல் அப்பரப்பில் நின்று தளைக்கும் தாவரங்களையும், அலைந்து திரியும் விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய நினைவுகளாகவும் நீள்கின்றன. இவ்வாறான இயற்கையின் வளங்களைப் பற்றிய நினைவுகளுக்குள் மனிதர்களும் அலைந்தார்கள்; அலைகிறார்கள்; அலைவார்கள் என எழுதுவதே இலக்கியப் பதிவுகளாக மாறுகின்றன. அப்பதிவுகள் அலைந்து திரிந்தார்கள் என்று சொல்வதோடு, நிலைத்து நின்று வாழ்ந்தார்கள்; தங்களுக்குள் முரண்பட்டார்கள்; மோதினார்கள் எனச் சொல்லத் தொடங்கி நீண்டது. மோதலும் முரணும் மட்டுமல்ல இணக்கமும் குதர்க்கமும் எழுந்தன என விரிந்தன. இவையெல்லாம் மனிதர்களுக்குள்ளாகவே நடந்து முடிந்து போனது என்று நினைக்க வேண்டியதில்லை; அளிக்கப்பட்ட நிலப்பரப்போடும், நிலப்பரப்பில் இயங்கிய தாவரங்களோடும் விலங்குகளோடும் கூடப் பிணக்கும் இணக்கமும் ஏற்பட்டன எனப் பதிவு செய்யும்போது, அப்பதிவுகள் வாழ்க்கையின் பதி

வார்சாவில் ஒரு நேர்காணல்

போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக மாணாக்கர்களின் வளாகப் பத்திரிகை  செட்னா -ஸ்டூடன்ஸ் கெஜட்டா .  என்னுடைய நேர்காணல் வந்துள்ளது. இரண்டு பகுதிகளாக உள்ள நேர்காணலைப் பின்வரும் இணைப்புகளில் வாசிக்கலாம்.   http://gazeta-sedno.pl/3874/whats-up-uw-a-passage-to-india-part-1/ http://gazeta-sedno.pl/3881/whats-up-uw-a-passage-to-india-part-2/