இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நமது கிராமங்களும் நமது நகரங்களும்

படம்
கடந்த ஒரு நுற்றாண்டுத் தமிழ்க் கலை, இலக்கியங்கள்- குறிப்பாக சினிமாக்கள், ‘நகரங்கள்‘ என்பதனைக் கிராமங்களின் எதிர்வுகளாகவே சித்திரித்து முடித்துள்ளன.

விலகிச் செல்லும் அந்தரங்கம்

திருமணம் நடக்கும் அந்த மண்டபம் எனக்குப் புதிய ஒன்று அல்ல. திருமணத்தில் கலந்து கொள்ள வருவது இதுதான் முதல் முறை. இப்போது மண்டபம் இருக்கும் இடத்தில் திரை அரங்கம் இருந்தது. அப்போது இந்த இடத்திற்குப் பல முறை வந்திருக்கிறேன். நூறு நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படங்கள் சிலவற்றை அந்த திரை அரங்கில் தான் பார்த்தேன். எல்லா வசதிகளும் கொண்ட திருமண மண்டபமும் வணிக வளாகமும் என அந்த இடம் மாறி விட்டது.

பிரிப்பின் விளைச்சல்கள்: ஆண்டாளைச் சுற்றியும் தமிழ்த்தாயை முன்வைத்தும்

படம்
· மோதல்-முரண்   · மாற்று-எதிர்    · வேறுபாடு – வித்தியாசம்  § மோதல் என்ற சொல்லும் முரண் என்ற சொல்லும் ஒரே பொருள் தரும் சொற்கள் அல்ல. மோதல் என்றால் மனம் நினைத்துக் கொள்ளும் அர்த்தம் வேறு; முரண் என்றால் மனம் உணரும் அர்த்தம் வேறு.  § மாற்று என்ற சொல்லின் பொருளையே எதிர் என்ற சொல்லின் பொருளாகச் சொல்ல முடியாது; சொல்லக்கூடாது. இரண்டும் வேறுவேறு.  § வேறுபாடு என்ற சொல்லுக்கு இணையான இன்னொரு சொல்லாக வித்யாசத்தைக் கருதமுடியாது; கருதக்கூடாது. ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட்டது. 

தமிழ் நாடகங்கள் நவீனமான கதை

படம்
"தமிழர்களாகிய நாம் ‘நவீனம்’ என்பதை ஐரோப்பாவின் அனைத்து அர்த்தங்களோடும் உள்வாங்கிக் கொண்டோம் என்பதில்லை"

வன்முறையை மோகிக்கும் அரசியல் சினிமா: அந்நியன்

படம்
“கேப்பையில் நெய் வடியுதுன்னு சொன்னா கேப்பவனுக்கு மதியெங்க போச்சு“ என்பது தமிழ் நாட்டுக் கிராமங்களில் சொல்லப்படும் பழமொழி. இந்தப் பழமொழி ஷங்கரின் ’அந்நியன்’ படத்துக்குப் பொருத்தமானது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், ஷங்கர் தமிழ்நாட்டில் கிராமங்கள் இருக்கிறதா? கிராமத்திலும் மனிதா்கள்தான் வாழுகிறார்களா? என்று கேட்கக்கூடும்.