இடுகைகள்

ஜூன், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாதிவாரிக் கணக்கெடுப்பு

இந்த முறையும் தவற விட்டுவிடும் வாய்ப்பு இருந்தது. நல்ல வேளையாக அது நடக்கவில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கி விட்டது என்ற அறிவிப்புக்குப் பின் பத்து நாட்கள் வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை. கட்டாயம் நாங்கள் சென்னைக்குச் செல்ல வேண்டும். அரை மனதோடு தான் சென்னைக்குச் சென்றோம். அங்கிருந்து ஒவ்வொரு நாளும் பக்கத்து வீட்டுக்காரரிடம் வீடு பத்திரமாக இருக்கிறதா? என்று கேட்டுக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் கணக்கெடுப்பாளர்கள் வந்தார்களா? என்றும் கேட்டு வைத்தோம். ‘ வரவில்லை’ என்று சொன்ன பின் தான் நிம்மதி.

திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போகாமல் தப்பிக்கும் ஆசை தான்..

செம்மொழித் தமிழ் மாநாட்டில் உங்கள் பங்கு என்ன? இந்தக் கேள்வியைக் கடந்த ஆறு மாத காலத்தில் யாராவது ஒருவர் அவ்வப்போது கேட்டுக் கொண்டே தான் இருந்தார்கள். இன்று வரை குறைந்தது 50 விதமான பதில்களை நானும் சொல்லியிருப்பேன். எந்தப் பதில் யாருக்குத் திருப்தி அளித்தது என்று தெரியவில்லை. ஒரு பல்கலைக் கழகத்தின் தமிழியல் துறையில் தலைவராக இருக்கக் கூடிய ஒருவரிடம்- தொடர்ந்து தமிழின் நவீன இலக்கியங்கள், விமரிசனங்கள் குறித்து அக்கறை கொள்ளும் இலக்கிய மற்றும் தீவிரமான இதழ்களில் எழுதக் கூடிய என்னிடம் இந்தக் கேள்வி கேட்கப் படும் காரணம் ஒன்றும் புரியாத ஒன்றல்ல. ஆனால் அந்தக் கேள்விக்கு தீர்மானமான ஒரு பதிலை என்னால் சொல்ல முடியவில்லை என்பதுதான் அதில் இருந்த சோகம்.

உலகமயமாதலுக்கு எதிராக ஒரு நாடகம் : முருகபூபதியின் மிருகவிதூஷகம்

பாண்டிச்சேரி நிகழ்கலைப்பள்ளியில் கற்றுத் தேர்ந்த பின் தங்களுக்கான தனித்தன்மைகளை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து நாடகக்காரர்களாகவே வலம் வரும் ஒரு சிலரில் முக்கியமானவர் முருகபூபதி என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. நிகழ்கலைப் பள்ளியின் தேர்வுக்கான தயாரிப்புகளின் போதே உரையாடலை அதிகம் சார்ந்திருக்காமல் தனியுரையை அதிகம் சார்ந்த- மனவெளிக்குள் பயணம் செய்யும் நாடகப் பிரதிகளைத் தேர்வு செய்து மேடையேற்றியவர் அவர்.

பயணங்கள் அற்ற கோடை விடுமுறை..

இந்தக் கோடை விடுமுறையில் விருப்பமான பயணம் என ஒன்றையும் மேற்கொள்ளவில்லை. சொந்தக் காரணங்களால் இப்படி நேர்ந்து விட்டது. கோடை விடுமுறை முடியப்போகும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்த்தால் எனது நீண்ட பயணங்கள் எல்லாம் கோடை விடுமுறையில் நிகழ்ந்தனவாகவே இருக்கின்றன என்பது புரிகிறது

வரலாறு எழுதுவது பற்றிச் சில குறிப்புகள்

இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வே கிடையாது- என்றொரு வாக்கியத்தைக் கல்வித்துறையில் செயல்படும் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. இக்கூற்றை முழுமையான உண்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது; கொஞ்சமும் உண்மையில்லை என்று தள்ளி விடவும் முடியாது.

ஒதுக்கி வைத்தல்- பங்கேற்றல்- கொண்டாடுதல்

படம்
எனது முகவரிக்கு மாதந்தோறும் வந்து சேரும் ஏழெட்டு இடைநிலைப் பத்திரிகைகளின் துணுக்குச் செய்திகளை முதல் புரட்டுதலில் வாசிப்பது வழக்கம். இலக்கியவாதிகளுக்கான அஞ்சலிக் குறிப்புகள், பெற்ற விருதுகள் பற்றிய குறிப்புகள், அந்தந்த பத்திரிகைகளின் உள்வட்டாரத்திற்குரிய இலக்கிய நிகழ்வுகள், கூட்டங்கள், பற்றிய பதிவுகள், இலக்கியக் கிசுகிசுக்கள், வம்பளப்புகள் போன்றன அந்த முதல் புரட்டுதலில் கவனம் பெற்று விடும். இந்த மாதம் –பிப்ரவரி- மிகுந்த கவனத்தோடு ஒரு பெயரையும் குறிப்பையும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, புத்தகம் பேசுது, உயிர் எழுத்து, தீராநதி, புதிய கோடாங்கி என என் வீட்டுக்கு வந்து சேரும் எல்லாப் பத்திரிகைகளிலும் தேடினேன். ஒரு பத்திரிகையிலும் அந்தக் குறிப்பு இல்லை.

நகரவாசியான கதை

திருநெல்வேலி , கட்டபொம்மன் நகர், ஏழாவது தெரு, செந்தில் நகர், மனை எண் 10. இந்த முகவரிக்கு நான் குடிவந்தது 2002, பிப்ரவரி மாதம் ஆம் தேதி. தனிக் குடித்தனம் தொடங்கிய பின் குடியேறும் எட்டாவது வீடு. இதற்கு முன் குடியிருந்த ஏழு வீடுகளும் வாடகை வீடுகள். இது சொந்த வீடு.

துயரத்தின் பாடல்கள்

சட்டையின் பாடல்