இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருமணம் என்னும் நிக்காஹ்: தமிழ்ச் சினிமாவின் பொதுப் போக்கிலிருந்து ஒரு விலகல்

படம்
காதல் பற்றிப் பேசாத ஒரு தமிழ்ச்சினிமா ஆண்டில் ஒன்றிரண்டு கூட வருவதில்லை.  ‘இவர்களின் காதல் எப்படிப்பட்டது தெரியுமா?’ என்றொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு கதையை விரிக்கிறார்கள் நமது தமிழ்ப்பட இயக்குநர்கள். அப்படி விரிக்கும் தொண்ணூறு சதவீதக் கதைகள் நமது சங்கக் கவிதைகளின் விரித்தி உரைகள் தான்.

பத்துக்கதைகள்- புனைவின் பத்து முகங்கள்

படம்
கல்லூரிக் காலத்தில் மாதம் தவறாமல் வாசித்துக் கொண்டிருந்த இலக்கியப் பத்திரிகை கணையாழி. “இலக்கியச் சிந்தனையின் மாதச் சிறுகதையாக கணையாழியில் வந்த கதை தேர்வு பெற்றுள்ளது”என்ற குறிப்பை அதில் அடிக்கடி பார்ப்பேன். எனக்குள் பலவிதமான தூண்டுதல்களைச் செய்த குறிப்பு அது என்பதை எப்போதும் மறப்பதில்லை. இந்தக் கட்டுரைக்கும்கூட அந்தக் குறிப்புதான் தூண்டுதல் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

கற்றது தமிழ் : ஒரு விவாதம்

படம்
அபிலாஷ்: ========= அ.ராமசாமி “கற்றது தமிழ்” பற்றி ஒரு மீள்பதிவு போட்டிருக்கிறார். அதில் தமிழ் படித்ததினால் ஒருவன் கொலைகாரனாய் மாறுவதாய் வருவதாய் கூறி குழப்புகிறார். உதாரணமாய் //அப்படிச் சொல்வதன் மூலம் அவன் செய்த தான்தோன்றித் தனமான வாழ்க்கைப் பயணங்களுக்கும் பொறுப்புணர்வற்ற முடிவுகளுக்கும் தமிழ்க் கல்வி தான் காரணமோ என நினைக்கும்படி படத்தின் கதை அமைப்பும் கட்டமைப்பும் உருவாக்கப் பட்டுள்ளது. // ஆனால் இது தவறான புரிதல். நகரமும் அந்நியமாதலும் தான் அவனை கொலைகாரனாக்குகிறது. இதை அவர் கவனிக்கவில்லை. காம்யுவின் தாக்கம் இப்படத்தில் உண்டு. படத்தை இன்னும் சரியாக கவனித்து - குறிப்பாய் ஐரோப்பிய தத்துவ பின்னணியில் - அவர் எழுத வேண்டும். இது தமிழ் கற்பது பற்றின சினிமா அல்ல. அது படத்தின் புரொமோஷனுக்கான ஒரு தந்திரம். படத்தில் தமிழ் தேசியவாதமும் ஆழமாய் இல்லை. இது அந்நியமாதலுக்கும் நகர்மய வன்மத்துக்கான உறவை பேசுகிற படம்.