இடுகைகள்

இலக்கியப்பார்வை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயிர்மைச் சிறுகதைகள்.

இணைய இதழாயினும் அச்சிதழாயினும் முதல் வாசிப்புக்கான விருப்பம் அவற்றில் வரக்கூடிய சிறுகதைகளே. அதன் பின்னரே கவிதை, கட்டுரை என நகர்வேன். மாதந்தோறும் நான்கைந்து கதைகளை வெளியிடும் உயிர்மையில் ஒவ்வொரு மாதமும் ஒன்றிரண்டு கதைகள் முக்கியமான கதையாக – புத்தம் புதுக்கதையாக இருக்கும் என்பதால் கடந்த ஆறுமாதமாக வாசிக்காத கதைகளையும் வாசிக்கவேண்டும். ஆனால் இரண்டு நாட்களாக வாசித்த கதைகள் இந்த மாதத்தில் வந்துள்ள கதைகளை. 2026, ஜூன் இதழில் 5 சிறுகதைகளை அச்சிட்டுள்ளது.

வாசிப்புக்குறிப்புகள்

படம்
இரண்டு வாசிப்புக்குறிப்புகளும் அச்சாக இருக்கும் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறுவதற்காக எழுதப்பெற்ற குறிப்புகள். அந்நூல்கள் வரும்போது அவற்றை வாசிக்க இக்குறிப்புகள் உதவலாம். இல்லையென்றாலும் இவ்விருவரின் சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கும்போது இக்குறிப்புகள் உள்வாங்கி நீங்கள் வாசிக்கலாம்.

குறுங்கதைகளின் பன்முகங்கள்

  குறுங்கதைகளின் செவ்வியல் வெளிப்பாடுகள் இலக்கியத்தின் வடிவம்- வகை மாற்றங்களில் இரண்டு தன்மைகளைக் காணமுடிகின்றது. ஒன்றை இயற்கையான வளர்ச்சிநிலை எனவும், இன்னொன்றைத் தேவைக்கேற்ற மாற்றம் எனவும் சொல்லலாம். முதல்வகை வளர்ச்சி விதையிலிருந்து கிளைபரப்பி, காய்த்துக் கனியாகிப் பலன் தரும் வடிவம். ஆனால் தேவைக்கேற்ப நடக்கும் மாற்றம் ஒருவிதத்தில் அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவான போன்சாய் தாவரங்களைப் போன்றவை. அழகியலும் குறியீடும் கொண்டு வாசகர்களின் ஈர்ப்பைப் பூர்த்தி செய்வன. அந்த வகையில் இப்போது எழுதப்படும் குறுங்கதைகள் சமகால வாசகர்களின் தேவைக்கான இலக்கிய வடிவம். பசித்திருக்கும் பேய்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கே.பாலமுருகன் தொகுத்தளிக்கும் இக்குறுங்கதைகள் அந்த வடிவத்தின் செவ்வியல் தன்மைகள் கொண்ட கதைகள். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெரும்பாலானவை மரணத்திற்கு நெருக்கமான சூழலைக் காட்சிப்படுத்துகின்றன. அப்பாவின் மரணதிற்குக் காரணமாகும் அக்காவின் கூந்தல் ஒரு படிமமாக மாறி அந்தக் கதையோடு முடிந்துபோனாலும், சாவின் படிமங்கள் வெவ்வேறு காட்சிகளில் படர்ந்து நிற்கின்றன. மறுபடியும் தப்பிவந்த ...

குறுங்கதைகளின் செவ்வியல் வெளிப்பாடுகள்

படம்
இலக்கியத்தின் வடிவம்- வகை மாற்றங்களில் இரண்டு தன்மைகளைக் காணமுடிகின்றது. ஒன்றை இயற்கையான வளர்ச்சிநிலை எனவும், இன்னொன்றைத் தேவைக்கேற்ற மாற்றம் எனவும் சொல்லலாம். முதல்வகை வளர்ச்சி விதையிலிருந்து கிளைபரப்பி, காய்த்துக் கனியாகிப் பலன் தரும் வடிவம். ஆனால் தேவைக்கேற்ப நடக்கும் மாற்றம் ஒருவிதத்தில் அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவான போன்சாய் தாவரங்களைப் போன்றவை. அழகியலும் குறியீடும் கொண்டு வாசகர்களின் ஈர்ப்பைப் பூர்த்தி செய்வன. அந்த வகையில் இப்போது எழுதப்படும் குறுங்கதைகள் சமகால வாசகர்களின் தேவைக்கான இலக்கிய வடிவம். பசித்திருக்கும் பேய்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கே.பாலமுருகன் தொகுத்தளிக்கும் இக்குறுங்கதைகள் அந்த வடிவத்தின் செவ்வியல் தன்மைகள் கொண்ட கதைகள். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெரும்பாலானவை மரணத்திற்கு நெருக்கமான சூழலைக் காட்சிப்படுத்துகின்றன. அப்பாவின் மரணதிற்குக் காரணமாகும் அக்காவின் கூந்தல் ஒரு படிமமாக மாறி அந்தக் கதையோடு முடிந்துபோனாலும், சாவின் படிமங்கள் வெவ்வேறு காட்சிகளில் படர்ந்து நிற்கின்றன. மறுபடியும் தப்பிவந்த அம்மா சொல்லும் காட்சிகளும், மன்னிப்பற...

புள்ளிவிவர ஆய்வுகளின் தேவை.

படம்
தொடர்ந்து வாசிக்கும் உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் இடம்பெற்ற சிறுகதைகள் சார்ந்து புள்ளிவிவரப் பட்டியல்களை இணைத்துள்ளேன்.. இந்தப் பட்டியல்கள் மூலம் சில புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன.

தன் அனுபவமாதலும் தலைப்பிடலும்

படம்
இரண்டு சிறுகதைகள் நவம்பர் மாத இதழ்களில் படித்த கதைகளில் ஒன்று 'படிகள்'. எழுதியவர் அரவிந்தன் (அம்ருதா ) இன்னொன்று 'மதி'. எழுதியவர் பெருமாள் முருகன் (உயிர்மை). இவ்விரண்டு கதைகளை வாசித்து முடித்தவுடன் இரண்டு காரணங்களுக்காக நல்ல கதைகள் என்று தோன்றியது. முதல் காரணம் அந்தக் கதைகளுக்குக் கதாசிரியர்களுக்கு வைத்துள்ள தலைப்பும், அதன் பொருத்தப்பாடும். இரண்டாவது காரணம், அந்தக் கதைகளின் நிகழ்வுகளும் விவாதங்களும் எழுப்பிய உணர்வுகள் எனது அனுபவங்களோடு பொருந்திப்போனதும் எனலாம்.

ஃபீர்தௌவ்ஸ் ராஜகுமாரன்: சாய்வற்ற நடப்பியல்

படம்
நீண்ட இடைவெளிக்குப் பின் ஃபீர்தௌவ்ஸ் ராஜகுமாரனின் இரண்டு புனைகதைகள்அடுத்தடுத்து வாசிக்கக் கிடைத்தன. தமிழ்வெளியில் வந்துள்ள "இரைகள்" வாசித்து முடித்த நிலையில், நடுகல் இணைய இதழில் வந்துள்ள "தலைமுறைகள்" கிடைத்தது. இடையில் வேறு வாசிப்பு இல்லை.

தி.ஜானகிராமனின் சிறுகதைகளில் வெளிப்படும் எழுத்தாளுமை.

படம்
வரலாற்றில் வாழ்தல் என்பதாக நினைத்துக் கொள்வதே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று. ஒருவர் வரலாற்றின் பகுதியாக இருப்பதும், வரலாற்றை மாற்றுவதற்கான காரணமாக இருப்பதும் கூடுதல் மகிழ்ச்சிக்குரியன. ஒருவருக்கு மாற்றப்படும் வரலாற்றின் தொடக்கப் புள்ளியாக மாறும் வாய்ப்புக் கிடைக்கிறதென்றால் அவரும் அவர் சார்ந்த குழுவும் கொண்டாட்ட மனநிலைக்குள் நுழைகின்றனர் எனச் சொல்லலாம். சாகித்திய அகாடெமி திட்டமிட்டுள்ள இந்தக் கருத்தரங்கம் இதுவரை அறியப்பட்ட சிறுகதை வரலாற்றின் தொடக்கப்புள்ளியை நகர்த்திப் பார்ப்பதன் மூலம் மாற்று வரலாற்றை முன் வைக்க முயல்கிறது என நினைக்கிறேன். சிறுகதையின் தொடக்கம் வ.வே.சு. அய்யரின் குளத்தங்கரை அரசமரத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்ட வரலாற்றிற்குப் பதிலாகப் பாரதியின் வசன எழுத்துக்களில் சிலவற்றைத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி வடிவம் எனச் சொல்ல முயல்கிறது எனக் கருதிக் கொள்கிறேன்.

சமகாலத்தின் அகங்கள் : அரவிந்தனின் இரண்டு கதைகள்

படம்
தமிழில் உளவியல் எழுத்து எனப் பேசத்தொடங்கிய உடனேயே காமம், அதன் தொடர்ச்சியான பிறழ்வான உறவுகள், வரம்புகளை மீறுவதும் குற்றவுணர்வில் தவிப்பதும் எனவே விரிகின்றன. உளவியலைத் தனிமனிதச் சிக்கலாக மட்டுமே பார்ப்பதின் விளைவுகள் அது. உளவியல் சார்ந்த சொல்லாடல்களைத் திரளின் விளைவுகளாகப் பார்க்கும் பார்வையும் அதன் பின்னணிக் காரணங்களையும் பார்க்கத்தொடங்கினால் இளையோர் உளவியல், சடங்குகளின் உளவியல், சமய உளவியல், சாதிய உளவியல் என அதனை நீட்டிக்க முடியும். அப்படியான சிந்தனையோடு தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதைத் தேடித்தான் படிக்க வேண்டியுள்ளது.  அரவிந்தனின்  இரண்டு கதைகளில் நம் காலத்து அகம்    எழுதப்பட்டுள்ள விதத்தைக் காணலாம்.

அந்திமழை சிறுகதைப் போட்டி -2024

படம்
அந்திமழை மாத இதழின் இம்மாத இதழைச் சிறுகதைச் சிறப்பிதழ் என்று சொல்வதைவிட ஒரு சிறுகதைத் தொகுதி என்றே சொல்லத் தோன்றுகிறது. மொத்தம் 9 கதைகள். ஒன்பது கதைகளுமே அவ்விதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் சிறப்புக்கவனம் பெற்ற கதைகள். இந்த ஒன்பதோடு அடுத்த ஆறு கதைகளும் அடுத்த இதழில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இமிழ் சிறுகதைகள்: உலக இலக்கியத்திற்குள் நுழையும் முயற்சிகள்

படம்
ஆங்கிலத்தில் டையோஸ்போரா இலக்கியம் (Diaspora literature) என்னும் வகைப்பாடு ஏற்கெனவே இருக்கும் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் பலவற்றில் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களின் அடையாளத்தை மீட்கவும் தங்களுக்கென ஒரு தேசம் இல்லையென்றும் பேசிய அந்தப் பின்னணியைக் குறிக்கும் சொல்லாக டையோஸ்போரா என்னும் சொல் இலக்கிய விவாதங்களில் இடம் பெற்றுள்ளது. சிதறடித்தல், தேச அடையாளம் வேண்டல் என்ற அந்த மனநிலை ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஏறத்தாழப் பொருந்திப் போகும் என்ற அளவில் புலம்பெயர் இலக்கியம் என்ற சொல்லை ஆங்கில டையோஸ்போராவின் மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம்.

சரவணன் சந்திரனின் புனைவுகள் -சில குறிப்புகள்

படம்
நவீனத்துவத்தைக் கடக்கும் எழுத்துமுறை மனிதர்களை எழுதுவதை மட்டுமே தனது தீவிரமான வேலை என நினைக்கும் சரவணன் சந்திரனின் கதைக்குள் உருவாக்கப்படும் பாத்திரங்களில் பெரும்பாலோர் நிகழ்காலத்துப் பாத்திரங்கள்தான். அவர்களின் செயல்பாடுகளையும் நகர்வுகளையும் தீர்மானிப்பதில் கடந்த காலத்திற்கும் பெரிய அளவில் பங்கிருப்பதாக அவர் எழுதுவதில்லை. அதன் வழியாக உருவான மரபான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட வேண்டும் என்ற தவிப்போ அல்லது அதையே சரியென ஏற்றுக்கொண்ட மனநிலையோ வெளிப்படவில்லை. நீண்ட காலமாக இருக்கும் அமைப்புகளின் சிற்றலகுகளையும் பேரலகுகளையும் குறித்த விவாதங்களும் இல்லை. அவை தரும் நெருக்கடிகள் குறித்துக்கூடப் பெரிய அக்கறைகள் இல்லை. மனிதர்களின்/ பாத்திரங்களின் நெளிவுசுழிவுகளையே கதைக்கான விவாத மையமாக்கிக் கதைகள் செய்பவராகச் சரவணன் சந்திரன் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார். உருவாகிவரும் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப முடிவுகளை எடுத்து நகரும் மனிதர்களின் சாயலில் தனது கதாமாந்தர்களை உருவாக்குவதின் மூலம் அவரது கதைகள் நவீனத்துவத்தைக் கடந்த எழுத்தாக உருவாகி வருவதை வாசிக்க முடிகிறது. எல்லாவற்றையும் தற்காலிக ஏற்பாடுகளாகப் புர...

முழுமையும் முழுமையின்மையும் - சுரேஷ்குமாரின் இரண்டு கதைகள்

படம்
பாதிக்கதையைத் தாண்டும்போது இந்தக் கதை இப்படித்தான் முடியும் என்று நினைக்கும் வாய்ப்பைத் தராத எழுத்தாளர்களே தொடர்ந்து வாசிப்பதற்கான கதைகளைத் தருபவர்களாக இருக்கிறார்கள். இம்மாத உயிர்மையில் சுரேஷ்குமார் இந்திரஜித் எழுதியுள்ள பெரியம்மை அப்படியொரு கதை.

ஜெயமோகன் உரை- சில குறிப்புகள்

படம்
  கோவை புத்தகத்திருவிழாவில் ஜெயமோகன் வழங்கிய ஒருமணி நேர உரையைச் சுருதி தொலைக்காட்சியின் வழியாகக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘ என்றும் இனிக்கும்’ போன்ற அடைமொழியோடெல்லாம் அவர் தலைப்புகள் தருவதில்லை. ஆனால் புத்தகத்திருவிழா போன்ற பெருந்திரளுக்குப் பேசவேண்டும் என்று நினைக்கும்போது ‘மானே! தேனே!!’ என்றெல்லாம் போட்டுத்தான் பேசவேண்டிய நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியாது.

ஆற்றுகைப் பனுவல் என்னும் தேர்ச்சி

படம்
Antonin Artaud: The Insurgent, A Play By Charu Nivedita (in Tamil) என ஆங்கிலத்தில் தலைப்பிட்டுள்ள சாரு நிவேதிதாவின் நாடகப்பனுவல் வாசிக்கக் கிடைத்தது. ஆங்கிலத்தில் வைத்துள்ள இந்தத் தலைப்பை ‘அந்த்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்’  எனத் தமிழாக்கிக் கொண்டேன். அப்பனுவல் நாடக எழுத்தாளர் ஒருவரின் எழுத்துப் பனுவலாக இல்லாமல், ‘நிகழ்த்தவிருக்கும் அரங்கை மனதில் கொண்டு முழுமையான ஆற்றுகைப்பனுவலாக -டைரக்டோரியல் ஸ்கிரிப்டாக – எழுதப் பெற்றிருக்கிறது என்பது முதல் வாசிப்பிலேயே தோன்றியது. பனுவலை மேடையேற்றத் தயாராகும் இயக்குநர் சாரு தந்துள்ள குறிப்புகளைப் பின்பற்றிக் காட்சிக் கோர்வைகளையும் இசைப்பின்னணி, ஒளிமையமைப்பு போன்றவற்றையும் செய்தால் போதும். பார்வையாளர்களுக்கு முழுமையான – கொண்டாட்டமான நிகழ்வைப் பார்த்த நிறைவைத் தந்துவிட முடியும். அத்தனைக் குறிப்புகளையும் சாருவின் பனுவல் தனக்குள் கொண்டிருக்கிறது. கவிதை, கதை ஆகிய இரண்டும் அதன் நுகர்வோரான வாசகர்களிட த்தில் தனியாக – அந்தரங்கமாக உறவுகொள்ளும் தொடர்பியலைக் கொண்டவை. ஆனால் நாடக எழுத்து அதன் நுகர்வோரான பார்வையாளர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொள...

இயல்விருது பெற்ற பாவண்ணனுக்கு வாழ்த்து.

படம்
இயற்பண்புவாத எழுத்துமுறை பொதுவாகச் சலிப்பை உருவாக்கும். அச்சலிப்பைத் தீர்க்கும் அருமருந்தாக அவ்வகை எழுத்துக்குள் நுழைக்கப்பட்ட வாழ்க்கை நெறியொன்று உண்டு. அதனைச் சரியாகச் செய்து தனது எழுத்துகளுக்கு உலக இலக்கியத்தில் ஓரிடம் பிடித்தவர் ஆண்டன் செகாவ். தனது காலகட்டத்து ருஷ்ய வாழ்க்கையின் எல்லா அடுக்குகளையும் புனைவுகளாக எழுதிக்காட்டினார். அந்த அடுக்குகளில் நடக்க வேண்டிய மாற்றங்களை முன்வைத்து நாடகங்களை எழுதினார். ஒவ்வொரு இலக்கிய வடிவத்திற்குமான அழகியலைக் கடைப்பிடித்தவர் அவர்.