இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விருதுகள் -2022

இந்தியாவில்மட்டுமல்ல உலகெங்கும் வழங்கப்படும் எல்லாவகை விருதுகளும் நபர்களின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் தான் தரப்படுகின்றன. விருதுகளை உருவாக்கியவர்களின் நோக்கம் சார்ந்த விருப்பு- வெறுப்பு ஒருவகை என்றால், விருதுக் குழுவில் இருக்கும் நபர்களின் விருப்பு - வெறுப்பு இன்னொருவகை.  இதற்காக அறிவிக்கப்படும் விருதுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளட வேண்டும் என அர்த்தமில்லை. இந்திய அரசின் கலை இலக்கிய அகாடெமிகளான சாகித்திய அகாடெமி,சங்கீத் நாடக அகாடெமி, லலித் கலா அகாடெமி போன்றனவற்றில் விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது எனத் தொடர்ந்து விமரிசனம் செய்யப்பட்டாலும் ஆளுங்கட்சி, அகாடெமிகளில் இருக்கும் நபர்கள், அவர்களால் நியமிக்கப்படும் தேர்வுக்குழுக்களால் விருப்பு வெறுப்புகளோடுதான் பரிந்துரைகள் நடக்கின்றன.  தமிழக அரசு ஆண்டுதோறும்  வழங்கும் விருதுகள் யாரால் தீர்மானிக்கப்படுகின்றன என்ற கேள்வியே இல்லை. கலைமாமணி விருதுகளும் அப்படித்தான்.

ஹேமிகிருஷ் – விலகி நிற்கும் கதைசொல்லி

வாசிப்பும் தடைகளும் தொடர்ச்சியாக வாசித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தடுப்பதில் முதல் காரணியாக இருப்பது வித்தியாசம் காட்டாத தன்மை என்றே சொல்வேன். கவிதைத் தொகுதிகளில் இந்தத் தடையை உணர, பத்திருபது கவிதைகளையாவது தாண்டவேண்டியதிருக்கும். ஆனால் சிறுகதைத் தொகுப்பு என்றால் நிலைமையே வேறு. தொகுப்பொன்றில் முதல் கதையை வாசித்து முடித்து விட்டு அடுத்த கதையைத் தொடங்கி வாசிக்கும்போது இரண்டிலும் புனைவுக்கூறு சார்ந்து வித்தியாசம் இல்லையென்றால் மூன்றாவதாக ஒன்றைத் தொடங்குவவதில் சுணக்கம் ஏற்பட்டு விடுவதைத் தடுக்கமுடியாது. நாட்கணக்கிலான இடைவெளிக்குப் பின்னரே வாசிப்பைத் தொடர முடியும். இந்தச் சுணக்கம் ஏற்படாமல் அண்மையில் வாசித்து முடித்த சிறுகதைத் தொகுப்பாக ஹேமிகிருஷின் நெட்டுயிர்ப்பு. தொடர் வாசிப்பில் தொகுப்பின் 10 கதைகளையும் வாசித்து முடிக்க முடிந்தது. இந்த ஒரு காரணமே, அண்மையில் வந்த சிறுகதைத் தொகுப்புகளில் கவனித்து வாசிக்க வேண்டிய தொகுப்பு எனப் பரிந்துரைக்கப் போதும் என்று நினைக்கிறேன்.

நந்தனார் தெருக்களின் மனிதர்கள்

படம்
தொடர்ச்சியாகச் சந்தித்துக்கொண்டே இருக்கும் நண்பர்கள் என்றால் முதல் சந்திப்பும் அச்சந்திப்பில் பேசிக்கொண்ட உரையாடல்களும் நினைவில் இல்லாமல் போக வாய்ப்புண்டு. அதே வேளையில் முதல் சந்திப்பின் உரையாடல்களே நெருங்கிய நட்புக்காரணமாக இருந்தது என்றால் முதல் சந்திப்பின் பதிவுகளும் சொற்களும் மனதிலிருந்து அழிந்துவிடுவதில்லை. மனிதர்களைக் குறித்த நினைவுகளுக்கும் ஞாபகங்களுக்கும் சொல்லப்பட்ட இந்தக் குறிப்பு வாசித்த எழுத்துகளுக்கும் பொருந்தக் கூடியனவாகப் பல நேரங்களில் இருக்கிறது. விழி பா. இதயவேந்தனின் கதைகளில் முதன்முதலில் வாசித்த கதை ‘நந்தனார் தெரு’ அவரை நினைத்துக் கொள்ளும்போது அந்தக் கதையே எப்போதும் நினைவுக்கும் வரும். முதல் தொகுப்புக்கு அந்தக் கதையைத் தான் தலைப்பாக வைத்திருந்தார். அவரது மறைவுக்குப்பின் கருப்புப் பிரதிகள் வெளியிட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகளுக்கும் “நந்தனார் தெரு, மற்றும் சில கதைகள்” என்றே தலைப்பிட்டுள்ளது

இந்திய ஞானமார்க்கத்தில் வள்ளலாரின் சன்மார்க்கநெறி

படம்
மனிதகுல வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. மனிதர்களின் தோற்றம் பற்றிய அறிவியல் பார்வைகள் உருவாகியிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகளாகவே மொழிகள், கலைகள், கருத்துகள் போன்றனவும் என்ற கருத்தும் உருவாகியிருக்கின்றன. ஆனாலும் மனிதத் தோற்றம் பற்றிய சமயங்களின் கருத்துகள் வேறாக இருக்கின்றன. மனித உருவாக்கம் கடவுளால் நிகழ்ந்தது என்ற கருத்தே பெரும்பாலான சமயங்கள் சொல்லும் முன்வைப்பு. இந்த முன்வைப்பின் தொடர்ச்சியாகவே, மொழியின் தோற்றம், கலைகளின் தோற்றம், கருத்துகளின் தோற்றம் பற்றியனவும் கடவுளோடு தொடர்பு கொண்டனவாக நம்பப்படுகின்றன.

மொழி அரசியல்: மதவாத அரசியல் இணையும் புள்ளிகளும் விலகும் தடங்களும்

படம்
காசி தமிழ்ச்சங்கமம்-2022 சங்கமம்: சங்கமம் என்ற சொல்லுக்கு முன்னால் ‘தமிழ்’ இணைக்கப்பட்டுத்                ‘தமிழ்ச்சங்கமம்’ என்றொரு நிகழ்வு இம்மாதம் – நவம்பர் 16 ஆம் தேதி முதல் நடந்துகொண்டிருக்கிறது. நடக்கும் இடம் காசி. சங்கமம் என்பது கூடுகை; சங்கமம் என்பது கலத்தல்; சங்கமம் என்பது ஆறு.

ரஜினிகாந்தின் பாபா: ஆன்மீக அரசியல்

படம்
பாபா படத்தை இரண்டு தடவை பார்த்தேன்.  முதல்நாள் தீவிரமான ரசிகர்களுடன் – அவா்களின் ஆரவாரத்துடன், ஆராதனைகளுடன், ஆவேசத்துடன் படம்பார்த்தபின் திரும்பவும் பத்தாவது பார்த்தேன்;     பின்னிரவுக் காட்சி, டிக்கெட் வாங்குவது அவ்வளவு சிரமமாக இல்லை. பத்து ரூபாய் கூடுதலாக விற்றார்கள். இருபது ரூபாய்க்குப் பதில் 30 ரூபாய். மணி 10.25க்கு அரங்கிற்குள் நுழைந்தபோது, பாதி அரங்கம் காலியாக இருந்தது.

பாபா முதல் சந்திரமுகி வரை

படம்
மூன்று முகங்கள் பாபா படத்தின் மூலமாகச் சறுக்கலைச் சந்தித்தபோது அவர் அப்படியே சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பு திரைப்படத்துறையினரிடமிருந்து வந்தது என்பதைவிட அதற்கு வெளியே இருந்தவர்களிடமிருந்தே வந்தது. அவரால் மட்டுமல்ல; தனது வாழ்க்கையின் சரிபாதிக்காலத்தை ஒரு துறைக்கு ஒப்புக்கொடுத்த யாராலும் அந்தத் துறையைவிட்டு ஒதுங்கிவிட முடியாது. மூன்றுமுகம் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த வெற்றிப்படம். இன்றைய ரஜினி தனது சொந்த வாழ்க்கையில் விரும்பி ஏற்றுக் கொண்ட மூன்று முகங்கள் அதிலிருந்து வேறுபட்டவை. ஆன்மீகம், அரசியல், நடிகன் ஆகியவைதான் அந்த முகங்கள்.ஆன்மீக முகம் அந்தரங்கமானது. தனிமனிதர்களின் வாழ்க்கையில் அடியோட்டமாக இருக்கும் அந்த அடையாளம் எப்படிப்பட்டது என்பதை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாதது. ஆனால், அரசியல் முகம் அப்படிப்பட்டதில்லை. பெருந்திரளை ஒன்று திரட்டுவதையும், வழிநடத்துவதையும் பற்றி வெளிப்படையாகப் பேசவேண்டியது. அந்தரங்கத்தையும் வெளிப்படைத் தன்மையையும் ஒருசேரக் கொண்டிருப்பது நடிகன் என்ற அடையாளம். ரஜினியைப் பொறுத்தவரையில் நடிக

மண்ணின் மைந்தர்களும் .........

இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுபத்தைந்து வயதைத் தாண்டிய சிலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் நினைவில் இருக்கலாம். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறானதாக இருக்கிறது.

முனைவர் தே.ஞானசேகரன்- கல்விப்புல எல்லைகளைத் தாண்டியவர்.

படம்
இன்று முற்பகலில் (நவம்.24) பேரா.தே.ஞானசேகரனின் மறைவுச் செய்தி அலைபேசி வழியாகவும் முகநூல் குறிப்புகள் வழியாகவும் வந்து சேர்ந்தன. ஓய்வுபெற்று 2 ஆண்டுகள் தான் ஆகின்றன. அதற்குள் மரணம் என்பதை ஏற்கமுடியவில்லை.

வரலாற்றுவாதத்தின் சிக்கல்கள்

மக்கள் உரிமைகளையும் விடுதலையையும் முன்னெடுக்க நினைக்கும் சமுதாய இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் வரலாறு படைப்பது பற்றிய அக்கறைகளை விட வரலாற்றைப் பயன்படுத்துவது பற்றியே அதிகம் சிந்திக்கின்றன. கடந்த காலம் தரும் படிப்பினைகள் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும் எதிர் காலத்தை வடிவமைக்கவும் உதவும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. தனிநபர் சார்ந்து பல நேரங்களில் இந்த நம்பிக்கை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் திரள் மக்கள் இயக்கங்கள் முன் வைக்கும் போராட்டங்களுக்கும் விடுதலைக்கும் அது அப்படியே பொருந்தக் கூடியதுதானா? என்பது தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

இலக்கியமும் வாசிப்பும் ஏற்பும்.

படம்
‘கவிதைகள் எப்போதும் விற்பனைக்கல்ல;அவரவர் மனத்திருப்திக்கு மட்டும் உரியது’ என்றே தோன்றுகிறது. எப்போதும் கவிதைகள் அச்சிடப்பெற்று வெளியீடுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. முகநூலில் பகிரப்படும் வெளியீட்டு விழா அழைப்பிதழ்கள் வழியாகவே ஒவ்வொரு வாரமும் பத்துக்குக் குறையாமல் கவிதை நூல்கள் வெளிவருவதாக அறியமுடிகிறது. அதே நேரம் நூலகங்களுக்கு நூல்கள் எடுக்கும் நூலக ஆணைக்குழு கவிதைகள் வாங்குவதை நிறுத்தி ஆண்டுகள் பல ஆகிவிட்டன என்ற தகவலும் இருக்கிறது.

தேர்வுமுறைகள் மாற்றப்பட வேண்டும்.

படம்
தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு அறிமுகப் படுத்தப்பெற்ற பின்னணியில் தமிழகப் பள்ளிக்கல்வி வாரியம் பள்ளிப்பாடங்களைச் சீரமைப்புச் செய்வது தொடர்பாகவும், தரமுயர்த்துவது தொடர்பாகவும் ஆரம்ப நிலையில் பல்வேறு விவாதங்களை நடத்தியது. மையப் பள்ளிகள் வாரியப் பாடங்கள், சிறப்பான கல்வியை வழங்கும் கேரளப்பள்ளிக் கல்வி வாரியம் மட்டுமல்லாமல், வெளிநாடுகள் சிலவற்றின் பாடத்திட்டங்களையும் பெற்று ஒப்பிட்டுப் பேசினார்கள் கல்வியாளர்கள். ஆரம்ப நிலைப்பேச்சுகள் தாண்டி, பாடங்கள் எழுத வழிகாட்டப்பட்டன. நானும் ஒரு குழுவில் தமிழ்ப் பாடங்கள் எழுதும் குழுவில் இருந்தேன்..

படங்கள் வழி மதுரை நினைவுகள்

படம்
மதுரை என்னுடைய நகரமென்று இப்போதும் சொல்கிறேன். அந்நகரில் இருந்த ஆண்டுகள் குறைவுதான். மாணவனாக விடுதிகளில் 6 ஆண்டுகள் தங்கியிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரியில் வாலஸ் விடுதியிலும் வாஸ்பன் விடுதியிலும் 4 ஆண்டுகள். பல்கலைக்கழக விடுதியில் இரண்டு ஆண்டுகள். தொடர்ந்து திருமணம் செய்துகொண்டு ஆய்வு செய்த ஆய்வாளர்களுக்கான குடியிருப்பில் 5 ஆண்டுகள். அதன்பிறகு கே கே நகரில் ஒரு ஒண்டுக் குடித்தனமாக ஓராண்டு. மொத்தம் 12 ஆண்டுகள். ஆனால் எனது கிராமத்திலிருந்து நான் வாழ்ந்த பல நகரங்களுக்கும் போக மதுரைதான் வழி. எனது கிராமம் இப்போதும் மதுரை மாவட்டத்திற்குள் தான் இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு கிளையான வாசிமலையான் கோவில் மலைக்குத் தெற்கே இருக்கும் தச்சபட்டி என்ற அந்தக் கிராமம் அப்போதும் 70 தலைக்கட்டுதான்; இப்போதும் அதே 70 தலைக்கட்டுதான். வளர்ச்சியே இல்லாத கிராமம். அங்கிருந்து மதுரைக்கு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு காரணங்களுக்குப் போய் வந்திருக்கிறேன். வாழ்ந்திருக்கிறேன். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக்கட்டமைப்பும் நுட்பங்களும்

படம்
சங்க்ரதாஸ் சுவாமிகளின் 50 நாடகங்களில் 14 நாடகங்கள் அச்சில் கிடைக்கின்றன. கிடைக்கின்ற 14 நாடகங்களையும் வாசித்து முடிக்கின்ற ஒருவருக்கு அவரது நாடகக் கட்டமைப்பு எது எனச் சுலபமாகப் புரிந்துவிடும். “நற்திறக் கட்டமைப்பு“ என்ற எளிமையான வடிவத்தையே சுவாமிகள் தனது நாடக வடிவமாகக் கொண்டுள்ளார். நற்திறக் கட்டமைப்பு அனைத்து நாடகங்களிலும் அமைந்துள்ள விதத்தை விரிவாகப் பார்ப்பதற்குப் பதிலாக அவரது “பிரஹலாதா என்ற நாடகம் எவ்வாறு நாற்திற வடிவக் கட்டமைப்புடன் உள்ளது என்பதைக் காணலாம். இது ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்‘ என்பது போலப் பின்னா் அனைத்து நாடகக் கதைகளோடும் பொருத்திப் பாரத்துக்கொள்ள ஏதுவாக அமையும்.

சங்கரதாஸ் சுவாமிகள்: வாழ்வும் பணியும்

படம்
தமிழை இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பேசுவது மரபு. ஒவ்வொரு பிரிவிற்கும் அதற்கெனச் சிறப்பாகப் பணியாற்றியவா்களைத் தமிழா்கள் நினைவில் வைத்து மரியாதை செலுத்தவும் தவறுவதில்லை. இயல் தமிழக்காகத் தமிழா்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் பெயா்கள் எண்ணிக்கையில் அதிகமானவை. இசைத் தமிழுக்கோ இவ்வெண்ணிக்கை மிகவும் குறைவு. நாடகத் தமிழுக்கு அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் பல பெயா்கள் நினைக்கப்படுகின்றன. தனது சிலப்பதிகாரக் காப்பியத்தினூடாக அரங்கேற்று காதையை எழுதிய இளங்கோவடிகள் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் நாடகத்தமிழுக்கு இலக்கணம் எழுதிய பரிதிமாற் கலைஞா் என்னும் வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரி வரை பல பெயா்கள் அதில் உண்டு. அப்பெயா்களுள் சங்கரதாஸ் சுவாமிகளின் பெயா் தனித்துவம் வாய்ந்தது. 

காட்சிகள் நகர்கின்றன; கனவுகள் சிதைகின்றன

படம்
ஒரு சினிமா வெளிவந்து முதல் காட்சி முடிவதற்கு முன்பே சில நூறு விமரிசனக் குறிப்புகள் வந்துவிழும் காலத்தில் இருக்கிறோம். சமூக ஊடகங்களின் வரவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தில் தமிழ்ச் சினிமா உலகம் -சினிமாவைத் தொழிலாக நம்பியிருக்கும் தொழிலாளர்களும் வணிகர்களும் பெரிதாகப் பாதிக்கப்படுகிறார்கள் எனப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் சமூக ஊடகங்களின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டது சினிமா உலகம் அல்ல; பத்திரிகை உலகம் என்றே சொல்வேன்.

நியாயங்கள்

1980 களில் பல கிராமங்களிலும் கல்லூரி வளாகங்களிலும் அரங்கேறிய நாடகம் நியாயங்கள். நான் நடித்த முதல் தெருநாடகம் அதுதான். பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த நாடகத்திற்குத் தேவை இருக்காது என்று நினைத்த காலம் உண்டு. ஆனால் அப்போதைய தேவையைவிடக் கூடுதல் தேவையுடையதாக மாறியிருக்கிறது. சாதிய முரண்களை உள்ளடக்கிய தெருநாடகங்களின் முன்னோடி வடிவம் இது. நினைவிலிருந்து அதனை எழுதியுள்ளேன். அரங்கேற்ற நினைப்பவர்கள் மேடையேற்றலாம்.

காவாலம் நாராயண பணிக்கருடன் நேர்காணல்

படம்
புதுவை நாடகப்பள்ளிக் காலத்தில் எனது அறிதலுக்காகவும் மாணவர்களுக்குக் கற்பிக்கவுமெனத் தேடிச்சேகரித்த பனுவல்கள் பல.    நாடகத்திற்கென வந்த தி எனக்ட் , தி ட்ராமா ரெவ்யூ , சீகல் தியேட்டர் க்வார்ட்டர்லி போன்ற இதழ்களில் வந்த நேர்காணல்கள் பலவற்றை தொகுத்து வைத்திருந்தேன். அவற்றில் வந்த சிறுநாடகங்களை மாணவர்களின் மேடையேற்றத்திற்காகத் தமிழில் மாற்றம் செய்து கொடுத்ததுண்டு. அதேபோல் அப்போது வந்த வெளி, புதிய நம்பிக்கை போன்ற இதழ்களுக்காக நேர்காணல்களை மொழிமாற்றம் செய்ததுண்டு.  அப்படி மொழிமாற்றம் செய்த ஒரு நேர்காணல் இது. மலையாள முன்னோடி நாடகாசிரியராக அறியப்பட்ட நாராயணப்பணிக்கர் (1928-2016), பின்னர் இந்திய அளவிலும் உலக அரங்கியலின் போக்கிலும் தாக்கம் செலுத்தியவர். கவிஞராகவும் நாடகாசிரியராகவும் இயக்குநராகவும் அவர் பெற்ற விருதுகளும் கவனங்களும் முக்கியமானவை. நாடகத்திற்கென சங்கீத் நாடக அகாதெமி விருதும், பெல்லோஷிப்பும், பத்மபூஷன் என்ற தகைகையும் பெற்றவர்

எஸ்.ரா.வின் ஞாபகக்கல்: நல்லதொரு உருவகக்கதை

படம்
எஸ்.ராமகிருஷ்ணனின் ஞாபகக்கல், பெண்ணென்னும் பொதுப்பெயருக்குரியவளாக இருக்கும் வரை அவளுக்குள்ளிருக்கும் விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் எல்லாம் குடும்பத்தின் பாத்திரம் ஒன்றைத் தாங்கும்போது தொலைந்துபோகும் மாயத்தை உருவகமாக முன்வைத்துள்ளது. ஆண் முதன்மைக்குடும்ப அமைப்பில் பெண்களின் விருப்பங்களைத் தொலைத்துக்கட்டும் பாத்திரங்களாக மனைவி, அம்மா போன்ற பாத்திரங்கள் இருப்பதைக் கதை விவரிப்பின் மூலம் உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். குறிப்பாக இந்தியக் குடும்ப அமைப்பின் மீது நேரடியான விமரிசனத்தைக் கதை முன்வைக்கிறது.

கூட்டம் - ஒற்றை

  கூட்டம்- ஒற்றை . இவ்விரண்டில் எது முந்தியது என்று கேட்டால் ஒற்றையென்னும் தனிமையே முந்தியது எனச் சொல்பவரும் உண்டு. கூட்டமாக இருந்தவர்களே தனியர்களாக மாறினார்கள் என்பவர்களும் உண்டு. ஒன்றுக்குப் பின் உருவானதே இரண்டு, மூன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்னும் எண்ணுப்பெயர்கள்.

பா.செயப்பிரகாசம் என்னும் தெக்கத்திக்காரர்

படம்
நிலப்பரப்பு சார்ந்தும் சொல்முறைகள் சார்ந்தும் பேசப்பட வேண்டிய கதாமாந்தர்கள் சார்ந்தும் கரிசல் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவர் சூரியதீபன். அந்தப் பெயர் அறிமுகமானது மன ஓசை இதழ் வழியாகவே. ஆனால் அதற்கும் முன்பே பா.செயப்பிரகாசம் என்ற பெயர் அறிமுகம். கரிசல் எழுத்தின் முன்னத்தி ஏராகக் கி.ராஜநாராயணன் பெயரை முதலில் வைத்துத் தொடங்கும் பெரும்பாலான பட்டியல்களில் மூன்றாவதாக வந்து நின்றவர் பா.செயப்பிரகாசம். இரண்டாவது பெயர் பூமணி.

குழுக்கள் - கருத்துகள் - செயல்பாடுகள்

படம்
நிறுவனங்களின் செயல்பாடுகளில் பலதரப்புக் கருத்துகளும் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் குழுக்களை அமைத்தல் நடைமுறைச் செயல்பாடாக இருக்கிறது. அரசர்களின் அதிகாரம் செயல்பாட்டில் இருந்த காலத்தில் அரசர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல அமைச்சர்கள் குழுக்கள் இருந்தன என்பதை வரலாற்றுக்குறிப்புகள் தருகின்றன. எண்பேராயம், ஐம்பெருங்குழு போன்ற பெயர்களைத் தமிழ்க் கல்வெட்டுகள் சொல்கின்றன. வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி - நியமனம், குலுக்கல் முறைத் தேர்வுகள் வழியாக உருவான அக்குழுக்கள் ஆலோசனைகளை மட்டுமே வழங்கமுடியும். முடிவு எடுக்கும் - செயல்படுத்தும் அதிகாரம் அரசர்களின் கையில்தான் இருந்தது.

விஜயராவணனின் ஆரஞர் உற்றன கண் : தமிழில் எழுதப்பெற்ற உலகக்கதை

படம்
விஜயராவணனின் கதையில் இடம்பெற்றுள்ள இரண்டு பாத்திரங்களும் தமிழர்கள் அல்ல; தமிழ் நிலப்பரப்புகளோடு தொடர்புடையவர்களும் அல்ல. ஜெர்மனியின் ‘ஸ்டட்கர்ட்’ நகரில் ஆண்டு நிறைவு நாளின் கொண்டாட்டக் காட்சிகளின் பின்னணியில் தற்செயலாகச் சந்தித்த புலம்பெயர்ந்த இளைஞனோடு நட்புக் கொண்டு, அவனோடு தன்னை இணைத்துக் கொண்ட ஹன்னா என்ற ஜெர்மானிய நங்கையின் காதல் கதை எனச் சுருக்கமாக நான் சொல்லிவிட முடியும்.

கோவையில் ஒரு கலைக்கூடம்

படம்
தன்னிடம் ஒரு கலையுணர்வு இருக்கிறது; அதனைப் பொதுவில் வைக்கும்போது முழுமையடைகிறது என்ற நம்பிக்கை இந்திய மனிதர்களிடம் இல்லை. கோ இல்கள் தான் கலை வெளிப்பாட்டுக்களங்களாக இருந்திருக்கின்றன. பண்டைக்காலத்தில் புரவலனை நாடித்தான் புலவர்கள் போய்ப் பாடிப்பரிசில் பெற்றிருக்கிறார்கள். கூத்தரும் பொருநரும் விறலியரும் பாடினிகளும் ஆற்றுப் படுத்தப்பட்ட விதங்களைத் தமிழிலக்கியங்கள் சாட்சிப்படுத்துகின்றன. புரவலன் இல்லையென்றால் இறைவன். இறைவன் இருப்பதாக நம்பும் இடத்தில் நின்று நெக்குருகிப் பாடியிருக்கிறார்கள்.

நாடகங்களின் ஊடாகப் பிரபஞ்சனின் படைப்புத்தளம்

படம்
படைப்பு- படைப்பாளர் உறவு கதாபாத்திரம் ஒன்றின், அல்லது நிகழ்வு ஒன்றின், அல்லது இருப்பு ஒன்றின், அல்லது இருப்பின்மை ஒன்றின் – இப்படி எல்லாவிதமான ஒன்றுகளின் மீது கருத்தை, எண்ணத்தை, புன்சிரிப்பை, ஏளனத்தை, ஏக்கத்தை, மனநிறைவைப் பதிவு செய்து விட வேண்டும் என்று தோன்றும்பொழுது படைப்புச் செயல் தொடங்குகிறது. படைப்பாளி அவற்றின் கால நீட்டிப்பையும், வெளியின் விரிவையும் தடுத்து நிறுத்தி, தனது குறிப்பை அதன் மீது ஏற்றிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறான். படைப்புச் செயல் நிறைவடைகிறது.

எழுதுவதும் பேசுவதுமாய்- ரவிக்குமாரின் இரண்டு நூல்களை முன்வைத்து

படம்
கண்காணிப்பின் அரசியல் உரையாடல் தொடர்கிறது இரண்டு நூல்களும் 1995 இல் விளிம்பு ட்ரஸ்ட்/ விடியல் வெளியீடுகளாக வந்தன. முன்னது ரவிக்குமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பின்னது அவர் மொழிபெயர்ப்பு செய்த பேட்டிகளும் எழுத்துகளும் அடங்கிய மொழிபெயர்ப்பு நூல்.

சூழலில் உழல்தல்

படம்
அ. மார்க்ஸ், எஸ்.வி ஆர் போன்றோரால் பயன்பெற்ற அவரது தலைமுறைப் படைப்பாளிகள் இருக்கிறார்கள். எஸ்.வி.ஆரின் சீடர்கள் இன்றும் அவரைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர் புனைவு பக்கம் சென்றிருந்தால் அவரை தலைமேல் தூக்கி வைத்திருப்பார்கள். அ. மார்க்ஸை இன்றும் ஒரு அரசியல் போராளி, கருத்தாளர் என்பதைத் தாண்டி அவரது கருத்தியல் பங்களிப்புக்காக நாம் அங்கீகரிப்பதில்லை. இதையே நான் அ. ராமசாமிக்கும், ஜமாலனுக்கும் சொல்வேன். இந்த விமர்சகர்களின் அவல நிலை என்னவென்றால் அவர்கள் எழுதுவதை நிறுத்திய சில ஆண்டுகளில் மொத்த உலகமும் அவர்களை மறந்து விடும். எத்தனை ஆயிரம் பக்கங்கள்! யாருமே பொருட்படுத்த மாட்டார்கள். இன்று ஓரளவுக்கு வாசிக்கப்படும் வரலாற்று, பண்பாட்டு ஆய்வாளர்களுக்கும் இதையே சொல்வேன். (இது அவர்களுடைய தவறல்ல, இது நம் சூழலின் அவலம்.) Abilash Chandran

சீதாராமம் என்னும் நாடு தழுவிய சினிமாவும் விருமன் என்னும் ஊர் தாண்டாத சினிமாவும்

படம்
சீதாரா(ம) ம், விருமன் -இரண்டும் அடுத்தடுத்துப் பார்க்கக் கிடைத்த சினிமாக்கள். முன்பு போல் திரையரங்குகளுக்குப் போய்ப் படங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் குறைந்துவிட்ட சூழலில் இரு படங்களையும் இணையதளங்கள் வழியாகவே பார்க்க முடிந்தது.

மதுரைப் புத்தகக் காட்சிச் சந்திப்புகள்

  பெயர் மறந்த நண்பர் ----------------------------- நேற்று மதுரைப் புத்தகக் கண்காட்சியில் இவரைச் சந்தித்தேன். நான் எழுதிய இரண்டு மூன்று கட்டுரைகளில் இவரின் பெயரைக் குறிப்பிட நினைத்தேன். அப்போதெல்லாம் நினைவுக்கு வரவே இல்லை. ஆனால் அவரது அப்பா பெயர் நினைவில் இருந்ததால் நெல்லை வேலாயுதத்தின் மகன் என்று குறிப்பிட்டேன். நேற்றுச் சந்தித்தவுடன் அதை உடனடியாகச் சொல்லிவிட்டேன். உடனே தனது பெயரை - ராஜன் என்று சொல்லி நினைவுபடுத்தினார்.

பயிலரங்கு: பதிவுகளும் படங்களும்

படம்
தங்கள் பணிகளும் கருத்துகளும் தொடர்ந்து பேசப்பட வேண்டும் என நினைக்கும் பேராசிரியர்கள் தாங்கள் பணியாற்றிய பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் தங்கள் பெயரில் அறக்கட்டளைகளை நிறுவித் தருகிறார்கள். அப்படி நிறுவப்படும் அறக்கட்டளைகள் தொடர்செயல்பாடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். சில இடங்களில் பொறுப்பான தலைமைகளும் ஆர்வமிக்க ஆசிரியர்களும் இருக்கும் நிலையில் தொடர்செயல்பாடுகள் உறுதிப்படும். பல பல்கலைக்கழகங்களில் அது சாத்தியப்படாமல் போயுள்ளன.

வெளிகடக்கும் விளையாட்டுகள்

‘தரமான பொருட்கள்; நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள் ‘எனப் போட்டி வியாபாரம் தனது இலக்குகளைத் தீர்மானித்துக் கொண்டு செயல்படும் காலத்தில் இந்திய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வியாபாரத்தில் போட்டிகளை அனுமதித்தால், நுகர்வோருக்கு நன்மை கிடைக்கும் என்பது தாராளமயப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. இந்த அடிப்படை விதி நடைமுறையிலுள்ள சந்தையில் சரியாகப் பொருந்தி வருகிறதா..? என்று கேட்டால் ஆதரவான பதிலும் சொல்ல முடியாது ; எதிரான பதிலையும் சொல்லி விட முடியாது.

தணிக்கைத்துறை அரசியல்

படம்
இப்படி எழுதுவதால் ஊழலை ஆதரிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற முன்குறிப்போடு எழுதுகிறேன்: அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல்கள் குறித்து விரிவான தகவல்கள் வெளிவருகின்றன; விவாதங்கள் நடக்கின்றன; குற்றச்சாட்டுகள் - தண்டனைகள்- விடுவிப்புகள் என நீள்கின்றன. தொடர்ச்சியாக வெளிப்படும் இத்தகவல்களால் இந்தியா ஊழல் மலிந்த நாடு என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொண்டே இருக்கிறது.

உங்கள நீங்க எப்படி பாக்க விரும்புறீங்க... ஓராள் நாடகத்தின் சாத்தியங்கள்

படம்
நமது நிகழ்காலம் கண்காணிப்பின் காலம். குறிப்பாக முதலாளியின் அதன் அடுத்த கட்டப் பாய்ச்சலாகப் பன்னாட்டு வணிக வலைப்பின்னலுக்குள் நகர்ந்தபோது அனைவரையும் கட்டுக்குள் வைப்பதற்குக் கண்டுப்பிடித்த பேராயுதம் ”அட்டைகள்( ID CARDS)” குடிமைப்பொருட்கள் வாங்குவதற்கு ஒரு குடும்பத்தின் உறுப்பினராக ஆகவேண்டும் என்ற வலியுறுத்தலின் வழியாக உருவான “அடையாள அட்டை”ப் பண்பாட்டை தேசத்தின் உறுப்பினர் என்ற பேரடையாளமாக மாற்றியிருக்கிறது. அவ்வகையான அட்டைகள் இல்லாதவர்கள் நாடற்றவர்களாகக் கருதப்பட்டுத் தனியான முகாம்களில் அடைக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம். ஒரு நாட்டிற்குள் இருப்பவர்களையே சிலவகையான தகவல்களைத் தரமுடியவில்லை என்றால் அட்டை வழங்காமல் சிறப்பு முகாம்களுக்குள் தள்ளிவிடும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன நவீன அரசுகள்.

தமிழ்க் கவிதைக்குள் திணையென்னும் படிமம்

படம்
இந்தக் கேள்விகள் கவிதைகளை எழுதுபவர்களின் கேள்விகள் அல்ல. கவிதை வாசகர்களின் கேள்விகளும்கூட அல்ல. ஆனால் இலக்கியத்திறனாய்வு என்னும் விமரிசனம், “கவிதையை எப்படி வாசிப்பது?” என்ற கேள்வியில் தொடங்கி, “கவிதை எவ்வாறு உருவாகிறது?” என்பதை விளக்கிக் கொண்டே இருக்கின்றது. இப்படி விளக்குபவர்களை திறனாய்வாளர்கள் என்று சொல்வதைவிடவும், இலக்கியத்தை ஒரு கோட்பாடாக்கி விளக்கிவிட நினைப்பவர்கள் என்று சொல்லலாம்.

சேடபட்டி முத்தையா: ஒரு நினைவு அலை

படம்
  இப்போது சேடபட்டி என்றொரு தொகுதி இல்லை. 2008 இல் உருவாக்கப்பட்ட தொகுதி மறுவரையில் அதன் ஒரு பகுதி திருமங்கலம் தொகுதிக்குள்ளும் இன்னொரு பகுதி உசிலம்பட்டித் தொகுதிக்குள்ளும் கரைந்து போய்விட்டது. என்றாலும் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் தான் இருந்தது. இப்போது அதுவும் தேனி நாடாளு மன்றத் தொகுதியாக மாறி விட்டது. அதன் பிறகும் அந்தப் பெயர் அவரது பெயருக்கு முன்னால் அடைமொழியாகவே இருந்தது. இந்த மாற்றங்களுக்கு முன்பே எனது வாக்குரிமையை அத்தொகுதியிலிருந்து மாற்றிக் கொண்டேன்.

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்

தாமிரபரணி, நெல்லை மாவட்டத்தின் ஊர்ப்பெயர்கள், சைவப் பெருங் கோயில்கள், திருவிழாக்கள், அவை சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளின் விவரிப்பு போன்றவற்றின் வழியாகக் கவி கலாப்பிரியா தனது கவிதைக்கு வட்டாரத்தன்மையை உருவாக்கியிருக்கிறார். ஆனால் அக்கவிதைகளுக்குள் உலவும் மாந்தர்களின் காதல், காமம், தவிப்பு, அதன் வழியெடுக்கும் முடிவுகள் போன்றன வட்டார எல்லைகளைத் தாண்டி விரியக்கூடியன.

பாஞ்சாலி சபதம் - நாடகப்பனுவலாக்கம்

படம்
தமிழின் மறுமலர்ச்சிக் கிளைகள் ஒவ்வொன்றிலும் தனது திறனால் புதுத்துளிர்களை உருவாக்கியவர் கவி பாரதி. கவிதை கட்டுரை, புனைகதை, தன்வரலாறு எனப் பல தளங்களில் அவரது பங்களிப்புகள் பின்வந்தவர்களுக்கு முன்னோடியாக இருக்கின்றன. பழைய இலக்கியப்பனுவல்களின் வாசிப்பையும் ஆக்கத்தையும்கூட, தான் வாழுங்காலத்தைப் பதிவு செய்தல் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாற்றிப்புதுமை செய்தவர் அவர். இந்தப் போக்கிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வது பாஞ்சாலி சபதம் என்னும் குறுங்காப்பியம். மகாபாரதமென்னும் இதிகாசத்திலிருந்து ஒரு பகுதியைத் தன் காலத்திற்கேற்ற விவாதப்பொருளாக்கிய பாரதியின் பாஞ்சாலி சபதம், அவருக்குப் பின் பல்வேறு பதிப்புகளையும் பனுவலாக்கங்களைக் கண்டு வருகிறது. அப்பனுவலாக்கங்களின் வழித் தமிழர்களின் கலை வெளிப்பாட்டுப் பார்வையில் பாஞ்சாலி சபதத்திற்கு ஓர் உயர்வான இடம் இருப்பதை உறுதி செய்கின்றனர். இக்கட்டுரை குறுங்காப்பியமென்னும் இலக்கிய வகைப்பாட்டிற்குள் வைத்துப் பாரதி எழுதிய பாஞ்சாலி சபதத்தை நாடகப்பனுவலாக்கம் செய்யும் விதத்தை விவரிக்கிறது. குறுங்காப்பியங்களும் நாடகமும் இந்தியச் செவ்வியல் மொழிகளான சம்ஸ்கிருதமும

ராசேந்திர சோழனின் இசைவு: பிறழ்வெழுத்தின் மோசமான முன் மாதிரி

படம்
ஆண் - பெண் உறவுகளின் பிறழ்வு நிலையை எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் தான் எழுதப்போகும் கதை பொதுப்புத்தி சார்ந்த வாசிப்பு மனநிலை ஏற்றுக்கொள்ளாத ஒன்றை - பொதுச்சமூகம் இயல்பானதாகக் கருதாத ஒன்றை எழுதுகிறேன் என்ற உணர்வுடன் தான் எழுதுவார்கள். அதனாலேயே பாத்திரங்களின் மீறலை -பிறழ்வு உறவை நியாயப்படுத்தும் உரையாடல்களையும் காரணங்களையும் முன்வைத்து விவாதித்துக் கதையை நகர்த்துவதுண்டு. அப்படி இல்லாமல் பிறழ்வு உறவுகளில் ஈடுபடுகின்றவர்கள் அதனைப் பிறழ்வாகக் கருதாமல் இயல்பான உறவாகவே நினைக்கின்றனர்; ஏற்று நகர்கின்றனர் என்ற பார்வையைப் புனைவுக்குள் வைத்து எழுதியவர்கள் பட்டியல் ஒன்று உள்ளது. தமிழில் அப்பட்டியலில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே.

கொண்டாடப்படவேண்டியவர் சாரு

சாரு நிவேதிதாவின் எழுத்துகள் மீது காட்டப்படும் வன்மம் என்பது அவரது ஆளுமை மீது காட்டப்படும் வன்மம் அல்லாமல் வேறில்லை. மரபான அமைப்புகள் மீது நம்பிக்கையும் வழிபாட்டு மனோபாவமும் கொண்ட தமிழ் எழுத்தாளர்களில் பலர் நவீனத்துவத்தின் மீது நம்பிக்கைகொண்டவர்களாகப் பாவனை செய்பவர்கள். சரியாகச் சொல்வதானால் இப்பாவனை யாளர்களுக்கு நவீனத்துவத்தின் சாராம்சவாதம் மட்டுமே உவப்பானது. ஆனால் மரபின் மீது மூர்க்கமான எதிர்ப்பைக் காட்டுவதோடு சாராம்சத்தைக் கடந்தவர் சாரு நிவேதிதா. உரிப்பொருளில் மட்டுமல்லாது வெளிப்பாட்டு முறையிலும் அதனைக் கைக்கொண்ட ஒரு முன்மாதிரி அவர்.

சிறார்களுக்கான நாடகங்கள் -ஒரு குறிப்பு

படம்
தமிழில் நாடகக் கலையின் இருப்பே கேள்விக்குரியதாக இருக்கிறது. நவீன நாடகங்கள் என்ற அறிமுகம்கூடத் தமிழில் அதன் சரியான அர்த்தத்தில் வெளிப்படவில்லை. ஒரு செய்தியை அல்லது ஒரு கேள்வியை நிகழ்வாக்கிப் பார்வையாளனை நோக்கிக் காட்சிப்படுத்திய நிகழ்வுகள்தான் நவீன நாடகங்களாக அறிமுகப்பட்டன. அந்தப் போக்கிலிருந்து மாற்றங்களை உருவாக்கிப் பல்வேறு வகைப்பட்ட நாடகப்பிரதிகளும் மேடையேற்ற முறைகளும் உள்ளன என்ற தகவலே பொது வாசகனுக்கு அல்லது பார்வையாளனுக்கு இன்னும் எடுத்துச் செல்லப்படவில்லை.

சாகித்திய அகாதெமியின் ‘யுவபுரஷ்கார்’

படம்
  விடுதலை பெற்ற இந்தியாவில் கலை, இலக்கிய வளர்ச்சிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட   அகாதெமிகளில் எழுத்துக்கலைகளுக்கான அமைப்பு சாகித்திய அகாதமி   (நுண்கலைகளுக்கானது லலித் கலா அகாதெமி; நிகழ்த்துக்கலைகளுக்கானது சங்கீத் நாடக   அகாதெமி). பல்வேறு நோக்கங்களுடன் 1954 இல் உருவாக்கப்பட்ட சாகித்திய அகாதெமி அடுத்த (1955) ஆண்டிலிருந்தே ஒவ்வொரு இந்திய மொழிக ளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை எழுதியவர்களுக்கு விருதுகள் வழங்கத் தொடங்கியது. அவ்விருது தேசிய அளவில் கிடைக்கும் அங்கீகாரம் என முன்வைக்கப்பட்ட நிலையில் அவ்விருதைப் பெற்றுக்கொள்ளும் போட்டி ஆரம்பமானது.   அதன் விருதுகள் வழங்கியதின் வழியாகவே சாகித்திய அகாதெமியின் இருப்பைப் பலரும் அறிந்துகொண்டார்கள். நூலுக்கு விருது எனச் சொல்லப்பட்டாலும் தொடக்கம் முதலே ஆளுமைகளுக்கு விருது என்பதே நடைமுறையாகத் தமிழில் இருந்து வந்துள்ளது. எப்போதாவது சில ஆண்டுகளில் விருதுக்குழுவினர் ஆளுமையைப் பின்னுக்குத் தள்ளி எழுத்தை அங்கீகரிப்பதாக நினைத்துக் கொண்டார்கள்.

நெல்லையின் கண்ணன்: பேச்சின் ரசிகர்

படம்
நெல்லையில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, அதற்குத் தமிழின் நாடக முன்னோடியான (மனோன்மணீயம்) சுந்தரனார் பெயரும் வைக்கப்பட்டாலும் ஆரம்பத்திலேயே தமிழ்த்துறை தொடங்கப்படவில்லை. 1991 இல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆன பின்பே 1996 இல் தான் தமிழியல் துறை தொடங்கப்பட்டது. காலத்தாழ்ச்சியில் தமிழியல் துறை தொடங்கப்பட்ட பின்னணியில் உள்ளூர் தமிழ் அமைப்புகளும் ஆர்வலர்களும் இருந்தார்கள். “சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை இருக்கவேண்டியதின் காரணங்களைச் சுட்டிக்காட்டிப் பத்திரிகைகள் எழுதின” அப்படி எழுத வைத்தவர்களில் ஒருவராக நெல்லை கண்ணனும் இருந்தார் என அவரே சொன்னார்.

தமிழர்களின் அலைந்துழல்வுச் சித்திரங்கள்

படம்
  புலம்பெயர் இலக்கியங்கள் என்ற சொல்லாடல் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ் இலக்கியப்பரப்பிற்குள் தவிர்க்கமுடியாத சொல்லாடலாக மாறியிருக்கிறது.   இலக்கிய வகைமைப்பாட்டில் வரையறைகள் தேவையான ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தச் சொல்லாடலின் வரவு தனி ஈழக்கோரிக்கைக்கான போராட்டங்கள், போர்கள், வெற்றிகள், தோல்விகள், அமைதிப் பேச்சுகள், மீறல்கள், உள்நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வுகள், அகதி நிலை வாழ்க்கை என்பனவற்றோடு தொடர்புபற்றி நிற்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்ந்தவர்களைப் பற்றிய பதிவுகளாகவும் இருப்பின் துயரங்களாகவும் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்களின் விவரிப்புகளாகவும் எழுதப்பெற்ற கவிதைகளும் புனைகதைகளும் இப்போது தமிழின் புலம்பெயர் இலக்கியங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்

படம்
தமிழ்க் கவிதையின் மரபைப் பற்றிப் பேசும் கல்வியாளர்கள் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் தமிழ் மரபின் தொடக்கம் எனக் கொள்வதில் பின் வாங்குவதில்லை. கல்வித்துறை சாராத இலக்கியத் திறனாய்வாளர்களும் கூடத் தமிழ்க் கவிதையியலின் தொடக்கம் இவையே என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வர். புதிய ஐரோப்பியத் திறனாய்வாளர்கள் அல்லது திறனாய்வுக்கோட்பாடுகள் எப்போதும் அரிஸ்டாட்டிலை மறந்துவிட்டுச் சொல்லாடல்களைத் தொடங்குவதில்லை. அவர் முன்வைத்த இலக்கிய அடிப்படைகளை உள்வாங்கியவர்களாகவும் அதிலிருந்து கிளர்ந்தெழுந்த கருத்தியல்களை முன்வைப்பவர்களாகவுமே தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். அரிஸ்டாடிலின் தொடர்ச்சி நான் அல்லது நானொரு புதிய அரிஸ்டாடிலியவாதி (New Aristotelian) என்று சொல்வதில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது; மகிழ்ச்சி இருக்கிறது.

இருவகைக் கவிதையாக்கம் - திட்டமிடலும் இன்மையும்

படம்
எழுத்தின் இயக்கம் இப்படிப்பட்டதுதான் என உறுதியாகச் சொல்லமுடியாது. கதைப் பின்னல் கொண்ட புனைகதை, நாடகம் போன்றனவற்றை முன் திட்டமிடலின்றி எழுதிவிட இயலாது. ஆனால் கவிதைக்குப் பெரிய அளவு முன் திட்டமிடல் தேவைப்படுவதில்லை. ஆனால் திட்டமிடாமல் எழுதிய கவிதைகளைப் பின்னர் ஒழுங்குபடுத்தும்போது ஒருவகைத் திட்டமிடல் அமையவே செய்யும். அண்மையில் முன்னுரைகள் எழுதுவதற்காக வாசித்த இவ்விரு பெண்கவிகளின் தொகுதிக்குள் ஒன்று முழுமையும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தன்மையைக் காணமுடிந்தது. இன்னொன்றில் பெரிய திட்டமிடல்கள் இன்றிய அன்றாட நிகழ்வுகளுக்குள் உணர்வுகளைத் தேக்கிவைக்கும் இயல்பைக் காணமுடிந்தது. 

இணைநேர்கோட்டுப் பயணிகள்

படம்
கடந்த ஐம்பதாண்டுத் தமிழ் அரங்கியலுக்குள் இருப்பதாக நினைப்பவர்கள் திருப்பத்திரும்ப உச்சரிக்கும் பெயர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எண்ணத்தொடங்கும்போதே முதல் கைவிரல்கள் மடங்குவதற்கு முன்பே வந்து விடக்கூடிய பெயர்களில் இவ்விரண்டு பெயர்களும் – சி.மௌனகுரு, இந்திரா பார்த்தசாரதி – கட்டாயம் இருக்கும். தமிழ் அரங்கியலுக்குள் இருப்பவர்கள் என்று சொன்னதை வைத்து, நடிகர்களாக, பின்னணிக் கலைஞர்களாக, இயக்குநர்களாக இருப்பவர்கள் என நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. தமிழ் மொழியைப் பாவித்து அரங்கியல் நிகழ்வுகள் நடக்கும்போது தவறாமல் பார்த்துவிடவேண்டும் என நினைக்கும் பார்வையாளர்களாக இருந்தால்கூடப் போதும் அவர்கள் இந்த இரண்டு பெயர்களையும் உச்சரித்து வியந்த பின் தான் நகரமுடியும்

பொன்னிநதி -சொல்லிலிருந்து காட்சிக்கு....

படம்
பொன்னியின் செல்வனில் இடம் பெறப்போகும் "பொன்னி நதி பார்க்கணும்” என்ற பாடலை நேற்று இரவு இரண்டு தடவை பார்த்தேன்; பின்னர் ஒரு தடவை கேட்டேன். இன்று காலையில் நடக்கும்போதும் இரண்டு தடவை ஒலிக்கோர்வையாகக் கேட்டேன். பிறகு காட்சி விரிவோடு ஒரு முறை பார்த்தேன். ”காவிரியாள் நீர்மடிக்கு .... ”என்ற சொல்லோடு அந்தக் காட்சி விரிகிறது என்றாலும் ‘பொன்னிநதி’ என்ற சொல்லோடுதான் பாடல் அழைக்கப்படப்போகிறது.

வகைப்படுத்துதல் வெளிப்பாடுகள்

தனது கவிதைகளை வாசிக்க நினைக்கும் வாசகருக்கு ஏதாவது ஒருவிதத்தில் உதவவேண்டும் என்று பெரும்பாலான கவிகள் நினைப்பதில்லை. கால வரிசையில் அடுக்கப்படும் கவிதைகள் கூடக் கவிதையை எழுதிய கவியின் மனப்பாங்கு மாற்றத்தைப் புரிந்துகொள்ள உதவும். அதைத் தாண்டி வகைப்பாடு செய்வதற்குச் சில அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவதொன்றைப் பின்பற்றலாம். அதனைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டால் வாசிப்பவர்கள் அதனைப் பின்பற்றிச் செல்வார்கள்.

பேச்சுமரபும் எழுத்துமரபும்

படம்
பேச்சும் எழுத்தும் உலகப்புகழ்பெற்ற பேச்சுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கன்னிப் பேச்சு, கடைசிப்பேச்சு, காவியப்பேச்சு, உரைவீச்சு, தீப்பொறி, வெடிப்பேச்சு, நரிப்பேச்சு எனப் பேச்சுபற்றிய பெயர்ச்சொற்களை நினைக்கும்போது பலர் நினைவுக்கு வரலாம். பேச்சால் வாழ்ந்தவர்களும் உண்டு; வீழ்ந்தவர்களும். ஆண்டவர்களும் உண்டு ; மாண்டவர்களும் உண்டு. 

வெங்கடேஷ் சக்கரவர்த்தி

படம்
அவரைச் சினிமா விமர்சகர் என்று சொல்வதைவிடச் சினிமாவைக் கற்பித்துக் கொண்டே இருந்த ஆசிரியர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் வகுப்பெடுத்த திரைப்பட ரசனை வகுப்புகள் பலவற்றில் இருந்திருக்கிறேன். முதன் முதலில் சந்தித்தது மதுரை மருத்துவக்கல்லூரிக்கருகில் இருந்த “ இந்திய மருத்துவக் கழகத்தின் அரங்கில்” . அங்கு யதார்த்தா நடத்திய சினிமா ரசனை வகுப்பில் ராஜனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். அதற்கு முன்பே ப்ரீத்தம் சக்கரவர்த்தியைத் தெரியும். பரிக்‌ஷாவின் நாடகங்களில் பார்த்திருக்கிறேன்.