இடுகைகள்

நினைவின் தடங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜெயகாந்தனின் வாசகனாக நான்

படம்
08- 04 -2015 இரவு எட்டுமணிக்குத் தொடங்கிய ஐ. பி. எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் முடிந்த கையோடு செய்தி அலைவரிசைகளுக்குத் தாவியபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி வந்துவந்து போய்க்கொண்டிருந்தது. தூங்குவதற்காகக் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை.

இரண்டு படங்கள்- ஒரு நினைவு

படம்
ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு மதுரையில் ஒருவாரம் நடந்தது (1981 ஜனவரி, 4-10) அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் அமர்வுகள் எல்லாம் பெரும்பாலும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மு.வ.அரங்கிலும் துறைகளின் கருத்தரங்க அறைகளிலும் நடந்தன. கலை நிகழ்ச்சிகள் எல்லாம் மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடந்தன. அவற்றில் எல்லாம் பங்கேற்கும் வாய்ப்புகள் இளம் மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் மாநாட்டிற்கு வரும் திரளான மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிதான்.

சென்னைப்பயணத்தில் இரண்டு நிகழ்வுகள்

படம்
சென்னை எனக்கு விருப்பமான நகரமல்ல. அங்கேயே தங்கி வாழும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் அதனைத் தவிர்த்தே வந்துள்ளேன். அதே நேரம் அந்த நகரத்தை வெறுத்து ஒதுக்கியும் விடமுடியாது. தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பதால் எனது விருப்பப்புலம் சார்ந்த நிறுவனங்களும் நிகழ்வுகளும் அங்கேதான் இருக்கின்றன; நிகழ்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பிள்ளைகள் இருவரும் அங்கே இருந்தார்கள். அதனால் அதிகம் போய் நாட்கள் கணக்கில் தங்கியதுண்டு. அதிகமாக இரண்டு வாரங்கள் அளவு தங்கியுள்ளேன். அப்போது சென்னையில் இலக்கிய நிகழ்வுகளில் பார்வையாளனாகப் பங்கேற்றுவிட்டுத் திரும்புவேன். இப்போது ஓய்வுக்காலம் என்றாலும் அங்கே தங்கி நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியவில்லை. 

நாறும்பூநாதனை நினைத்துக்கொள்கிறேன்

படம்
நாறும்பூநாதன் தனது செயல்பாடுகள் மூலம் பாளையங்கோட்டை -நெல்லை என்ற இரட்டை நகரத்திற்குப் பலவிதமாகத் தனது இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தார். இப்போது அவரது மரணச்செய்தி வந்துள்ளது. அவரது இன்மையைச் சில ஆண்டுகளாவது அந்த நகரங்கள் உணரவும் கூடும்.

நள்ளிரவுக் கொடுங்கனவுகள்: கரோனாவின் அலைகளைக் கடந்து...

படம்
2020/ மார்ச் 15/ ================ நெருங்குகிறது கொரானா ========================= சென்னையில் அது நடுத்தரமான தங்கும் விடுதி. நான்கு நாட்களாக இங்கேதான் இருக்கிறேன். பகலில் அதிகம் கூட்டம் இருக்காது. இரவிலும் கூடத் தாமதமாகவே ஆட்கள் நடமாட்டம் தெரியும். ஆனால் காலையில் எல்லா அறைகளின் முன்னாலும் ஆட்கள் நிற்பார்கள். விடுதியில் தங்குபவர்களுக்குக் காலை உணவு வழங்கும் இடத்தில் 10 மணி வரை ஆட்களின் பேச்சொலி கேட்கும். பெரும்பாலும் சினிமாவோடு தொடர்புடையவர்களும், தொலைக்காட்சி தொடர்பானவர்களும் அதிகம் தங்குவார்கள்.

கவனம் பெறுதல்

படம்
சிறப்பான அங்கீகாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் செய்யும் பணிகளை அன்றாடப் பணிகளாகக் கொண்டவர்கள் ஆசிரியர்களும் பத்திரிகையாளர்களும். அந்தப்பணியோடு தொடர்புடைய வேறொன்றைச் செய்யும்போது கவனிக்கப்படுவதும் பாராட்டப்படுவதும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பமாகிவிடும்.  மகிழ்ச்சியளிக்கக் கூடிய திருப்பங்களை இந்த வாரத்தில் பெற்ற இவ்விருவரையும் பாராட்டுகிறேன்.  மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருது (தமிழ்) பெற்றுள்ளார் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பா.விமலா. கடந்த ஆண்டு திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் மொழிபெயர்ப்பு சார்ந்த கட்டுரை ஒன்றை வாசித்தார். அதன் தொடர்ச்சியில் அவரது முனைவர் பட்டம், மொழிபெயர்ப்புகள் குறித்த அறிமுகம் உண்டு . மலையாளத்தில் ஜமீலா எழுதிய 'எண்ட ஆணுங்கள்' என்ற தன் வரலாற்று நூலைத் தமிழில் மொழி பெயர்த்ததற்காக இந்த ஆண்டுக்கான (2024) விருதாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாராட்டும் வாழ்த்தும். தமிழ்ப்பேராசிரியர்கள் இன்னொரு மொழியைக்கற்று மொழிபெயர்ப்பு செய்து விருதுபெ...

கிறிஸ்துமஸ் நினைவுகள்

படம்
2023,டிசம்பர். 25 / ஒலியும் வழியுமாக இருக்கும்  ஆலயமணி ஏஜி சர்ச் என்பதைச் சொல்லியே என் வீட்டின் அடையாளத்தைத் தொடங்குகிறேன். அதன் விரிவு அசெம்பிளிஸ் ஆப் காட்ஸ் ( ASSEMBLIES OF GODS) என ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படும் பெத்தேல் ஏசு சபை. சிலுவையின் உச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் மணிக்கூண்டில் ஆலயமணியெல்லாம் இல்லை. மின்கலத்தில் நகரும் பெரியதொரு கடிகாரம் இருக்கிறது. ஒவ்வொரு மணிக்கும் அதன் எண்ணிக்கையில் மணி அடித்து ஓய்ந்தபின் பைபிள் வாசகம் ஒன்றைச் சொல்லி முடிக்கும். இரவு 11 மணிக்குப் பிறகு இந்த நடைமுறையை நிறுத்திக் கொண்டு, அடுத்த நாள் காலையில் ஐந்து தடவை அடித்துத் துயில் எழுப்பி ஒரு வாசகத்தைச் சொல்லும் ஆரம்பத்தையும் முடிவையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொள்கிறேன். இடையில் அடித்துமுடிக்கும் மணியோசைகளை நான் செவிமடுப்பதில்லை. வசனங்களைக் கேட்டுக்கொள்வதுமில்லை. திருமங்கலத்தில் நானிருக்கும் இடத்தின் நகர்ப்பகுதிக்கு முகமதுஷாபுரம் என்று பெயர். அதன் மேற்குப் பகுதியில் ஒரு மசூதி இருக்கிறது. கிழக்குப்பகுதியில் தேவாலயம் இருக்கிறது. தெற்கிலும் வடக்கிலும் சின்னச்சின்னதாகக் கோயில்கள் இருக்கின்றன. என் வீட்ட...

அ.மார்க்ஸ் - தொடர் சிந்தனையாளர்

படம்
சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் அ.மார்க்ஸ் -75 என்றொரு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. சென்னையில் இருந்திருந்தால், அந்நிகழ்வின் பார்வையாளனாகக் கலந்து கொண்டிருப்பேன். அ.மார்க்ஸின் கரம்பற்றிக் குலுக்கும் ஆசை உண்டு. அதற்கு இப்போது சாத்தியமில்லை.

திறனாய்வாளர் ராஜ்கௌதமனின் நினைவின் ஊடாக....

படம்
எழுத்தாளர் ராஜ்கெளதமன் மறைந்தார். சிலுவை ராஜின் சரித்திரம் தன் கடைசிப் பக்கத்தை எழுதிக் கொண்டது. 2024 நவம்பர் 13 அன்று காலை 5.46 எனக்காட்டிய புதியமாதவியின் இந்தப் பதிவுக்கு விருப்பக்குறியிடத் தயங்கியது கை.

மு.நடேஷ் நினைவுகள்

படம்
நடேஷ் எனது நண்பர் அல்ல. ஆனால் எனக்கு விருப்பமான அரங்கியல் துறையோடு ஓவியராகவும் ஒளியமைப்புத்துறையில் இருந்தவர் என்ற வகையில் நீண்டகால் அறிமுகம் உண்டு. நான் இருபதுகளின் நிறைவுக்காலத்தில் தீவிரமாக நாடகத்துறையில் இயங்கிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தபோது அவரது நுழைவு இருந்தது. அப்போது அவருக்கு வயது இருபத்தைந்துகூட ஆகியிருக்காது. அத்துறை சார்ந்த கருத்துநிலையில் அவரோடு முரண்பட்டும் உடன்பட்டும் பயணம் செய்திருக்கிறேன்.

ஜெயந்தன் விருது விழா

படம்
நிறைவில் ஒரு நாடகம் தொடக்கத்தில் ஒரு குறும்படம் கலையின் ஓர்மை என்பது தொடக்கத்தை எப்படி முடிக்கிறது என்பதில் இருக்கிறது. அதுபோலவே ஒரு கலைசார்ந்த நிகழ்ச்சிகளையும் நல்ல ஓர்மையுடன் அமைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தொடக்கமும் முடிவும் எப்படி இருக்க வேண்டும் எனக் கணித்துத் திட்டமிடுவார்கள். அப்படியானதொரு திட்டமிடல் “ஜெயந்தன் விருது வழங்கும் விழாவில் இருந்தது. வழக்கமான வரவேற்புரை, நன்றியுரையைத் தாண்டி இருந்தன. ஆனால் மொத்த நிகழ்வையும் உரைகளாகத் திட்டமிடாமல் பார்வையாளர்களுக்கு ஜெயந்தனின் எழுத்துகளைக் குறும்படமாகவும், நாடக நிகழ்வாகவும் தரவேண்டும் எனத் திட்டமிட்டிருந்தது மொத்த நிகழ்வுக்கும் ஒருவித ஓர்மையை உருவாக்கித் தந்திருந்தது.

வெள்ளெருக்குப் பூத்த நிலம்

படம்
இறப்பும் பிறப்பும் நம்கையில் இல்லை. பிறப்பைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்ய அறிவியல் முயன்று வெற்றியும் பெற்றுவருகிறது. குழந்தை பிறக்கவேண்டிய நேரத்தைக் கூடத் திட்டமிட்டுத் தருகிறது நவீன மருத்துவம். ஆனால் இறப்பு? மரணங்களைத் திட்டமிடவோ, தள்ளிப்போடவோ முயன்ற முயற்சிகளுக்கெல்லாம் கிடைப்பன தோல்விதான். இறப்பின் கணம் எதுவெனச் சொல்லுதல் யார்க்கும் எளிதன்று.மரணவாசல் எப்போதும் திறந்தே கிடக்கிறது. அழைத்துச் செல்லும் வாகனங்கள் சத்தமில்லாமல் வருகின்றன. ஏறிச்செல்பவர்களும் மௌனமாய் ஏறுகிறார்கள். இருப்பவர்கள் மட்டும் கதறிக் கழிக்கிறார்கள். ஓலத்தின் உச்சத்தில் உளறிக் கொட்டுகிறார்கள். இதற்கிடையில் வரப்போகும் மரணத்தைச்சொல்லும் தூதுவன் வந்தான் என்று சொல்லும் மனிதர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். இறப்பை முன் அறிவிப்பு செய்யும் ஆற்றல் இயற்கைக்கும் மனித உடம்புக்கும் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கவே செய்கிறது. “மதுரையில் வந்து கோவலன் தலைவெட்டப்பட்டுச் சாவான்” என்று சொல்லவில்லை என்றாலும், “இந்நகரத்திற்குள் நுழைவது நல்லதல்ல; சோகம் ஒன்று நிகழப்போகிற” தென வைகை ஆற்றில் படர்ந்திருந்த செடிகொடிகள் கண்ணீர் வ...

ஆர். எம். வீரப்பன் -ஒரு நினைவுக்குறிப்பு

படம்
தமிழ்நாட்டின் வெகுமக்கள் மனப்போக்கைத் தீர்மானிக்கும் சினிமாவையும் தேர்தல் அரசியலையும் தனது இணை நேர்கோடுகளாகக் கொண்டு வாழ்ந்த ஆளுமைகளில் ஒருவர் ஆர். எம் .வீரப்பன். இவ்விரு கோடுகளில் தனித்தனிப்பாதையில் பயணித்தாலும், இரண்டுக்குள்ளும் ஒட்டியும் வெட்டியும் பயணம் செய்ததாகவும் அவரது வாழ்க்கையின் முடிச்சுகள் இருந்தன.

இரங்கலை எழுதும் கலை

படம்
கருணா:நிகழக்கூடாத மரணம் டிசம்பர் 22, 2020 நேரடித் தொடர்புகள் இல்லாத நிலையிலும் நண்பர்கள் என்ற அடையாளத்தோடு வாசிக்கவும் முரண்படவும் உரையாடவும் உதவி கேட்கவுமான வாய்ப்புகள் கொண்ட சமூக ஊடகத்தின் காலத்தில் வாழும் நமக்கு சில மரணங்கள் நிகழக்கூடிய மரணங்களாகத் தோன்றிக் கடந்துபோகின்றன. சில மரணங்கள் நிகழ்ந்திருக்கக் கூடாது என்று தோன்றுகின்றன.

அஷ்வகோஷ்: தொடரும் நினைவுகள்

படம்
  காலையில் அஷ்வகோஷின் மரணச்செய்திக்குப் பின் அவர் குறித்த நினைவுகள் ஓடிக்கொண்டே இருந்தன. கடைசியாக அவரைச் சந்தித்தது அவருக்கு ’விளக்கு விருது’ வழங்கும் விழாவின்போது. பார்த்துக் கையைப்பிடித்து மகிழ்ச்சியைச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். முழுவதும் இருக்கவில்லை.

சுந்தரராமசாமி

படம்
நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்லவில்லை. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து கவனிக்க வேண்டிய நோயாளிகளுக்கான பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தான் சொல்லியது. ஆனால் நான் என்னவோ அதனை மரண அறிவிப்பாகவே எடுத்துக் கொண்டு உரையாடல்களைத் தொடங்கியிருந்தேன்.

இப்படியாக முடிந்தது 2022

படம்
எனது எழுத்துகளின் அடிப்படைத்தன்மை என்னவென்று கேட்டால், எல்லாவற்றையும் சூழலில் வைத்து வாசித்துப் பேசுவது என்றே சொல்ல விரும்புகிறேன். பார்ப்பனவற்றையும் கேட்பனவற்றையும் வாசிப்பனவற்றையும் உணர்வனவற்றையும் உள்வாங்கிப் பகுப்பாய்வுக்குட்படுத்தி வாசிக்கிறேன். ஆம் எல்லாமும் வாசிப்புத்தான். வாசித்தனவற்றை வகைப்படுத்திப் புரிந்துகொள்கிறேன். புரிந்துகொண்டதின் அடிப்படையில் விளக்கங்களையும் மதிப்பீடுகளையும் முன்வைக்கிறேன்.

முனைவர் தே.ஞானசேகரன்- கல்விப்புல எல்லைகளைத் தாண்டியவர்.

படம்
இன்று முற்பகலில் (நவம்.24) பேரா.தே.ஞானசேகரனின் மறைவுச் செய்தி அலைபேசி வழியாகவும் முகநூல் குறிப்புகள் வழியாகவும் வந்து சேர்ந்தன. ஓய்வுபெற்று 2 ஆண்டுகள் தான் ஆகின்றன. அதற்குள் மரணம் என்பதை ஏற்கமுடியவில்லை.

பா.செயப்பிரகாசம் என்னும் தெக்கத்திக்காரர்

படம்
நிலப்பரப்பு சார்ந்தும் சொல்முறைகள் சார்ந்தும் பேசப்பட வேண்டிய கதாமாந்தர்கள் சார்ந்தும் கரிசல் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவர் சூரியதீபன். அந்தப் பெயர் அறிமுகமானது மன ஓசை இதழ் வழியாகவே. ஆனால் அதற்கும் முன்பே பா.செயப்பிரகாசம் என்ற பெயர் அறிமுகம். கரிசல் எழுத்தின் முன்னத்தி ஏராகக் கி.ராஜநாராயணன் பெயரை முதலில் வைத்துத் தொடங்கும் பெரும்பாலான பட்டியல்களில் மூன்றாவதாக வந்து நின்றவர் பா.செயப்பிரகாசம். இரண்டாவது பெயர் பூமணி.

மதுரைப் புத்தகக் காட்சிச் சந்திப்புகள்

  பெயர் மறந்த நண்பர் ----------------------------- நேற்று மதுரைப் புத்தகக் கண்காட்சியில் இவரைச் சந்தித்தேன். நான் எழுதிய இரண்டு மூன்று கட்டுரைகளில் இவரின் பெயரைக் குறிப்பிட நினைத்தேன். அப்போதெல்லாம் நினைவுக்கு வரவே இல்லை. ஆனால் அவரது அப்பா பெயர் நினைவில் இருந்ததால் நெல்லை வேலாயுதத்தின் மகன் என்று குறிப்பிட்டேன். நேற்றுச் சந்தித்தவுடன் அதை உடனடியாகச் சொல்லிவிட்டேன். உடனே தனது பெயரை - ராஜன் என்று சொல்லி நினைவுபடுத்தினார்.