இடுகைகள்

அக்டோபர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ராஜ் கௌதமனின் தன் வரலாற்று நாவல்கள்

படம்
                                        கதை அல்லாத பிற குறிப்புகள் எப்போதும் தன்னை அந்நியனாக உணரும் சிலுவையின் அங்கதம் சமகாலத் தமிழ்ச் சமூகத்தையும் தன்னையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இலக்கிய உத்திகளின் துணையின்றி, தன் ‘வாழ்க்கைப் பார்வையையே’ மையமாகக் கொண்டு இயங்கும் புதிய புனைகதை முயற்சி இது. இப்படியான சிறு அறிமுகத்தைப் பின் அட்டையில் கொண்டிருக்கிறது ராஜ் கௌதமனின் இரண்டாவது நாவல் காலச்சுமை,

வாழ்ந்து கெடும் குடும்பங்களின் கதை: பாவண்ணனின் ஒரு மனிதரும் சிலவருஷங்களும்

  ரங்கசாமி நாயக்கர் காலை எட்டுமணிக்கு நாயக்கர் கடை திறப்பார். கடை திறப்பு ஒரு தினுசுதான். விசிறிக்காம்பு நீளத்துக்கு பெரிய சாவியை மடியில் வைத்திருப்பார். கடைக்கு நூறு அடி தூரத்தில் நாயக்கர் வருகிறார் என்றால் கடைவாசலில் வேலைக்காரப் பையன்கள் வந்திருப்பார்கள். பாவண்ணன் சொல்லும் கதை

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு:பெண்ணெழுத்தின் முதல் அடையாளம்

படம்
தமிழில் புனைகதை இலக்கியம் தொடங்கிய காலந்தொட்டே இந்த வேறுபாடு உண்டு. இலக்கியத்தின் நோக்கம் சார்ந்த இந்த வேறுபாடு தமிழுக்கு மட்டும் உரியதல்ல. உலக இலக்கியம் எல்லாவற்றிலும் இருக்கும் ஒன்று தான். அதிலும் உழைப்பு , ஓய்வு என அன்றாட வாழ்க்கையைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து வாழப் பழகிக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தின் தோற்றத்தோடு தொடர்புடைய புனைகதை எழுத்தின் வரவிற்குப் பின் இந்த வேறுபாடுகள் இருப்பது ஆச்சரியம் எதுவுமில்லை. தீவிர எழுத்துக்காரர்கள் ( Serious literature ) வணிக எழுத்துக்காரர்கள் ( Commercial ) என்பதாக அணி பிரிந்து போட்ட சண்டைகளே ஒரு காலகட்டத்தில் தமிழின் திறனாய்வாகக் கருதப்பட்டது.

வார்சாவிற்கு வந்து விட்டேன்.

படம்
என்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக அறிமுகப் படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதில்லை என்றாலும் அதுதான் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக ஆக்கியிருக்கிறது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைப்பள்ளி தொடங்கப் பட்டபோது(1989) அதன் முதல் விரிவுரையாளராக தேர்வு செய்யப்பட்ட நான், 1997 இல்  திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை தொடங்கப்பட்ட போது அத்துறைக்காகத் தேர்வு செய்யப்பட்ட முதல் ஆசிரியர்.  வழக்கமான பல்கலைக்கழக ஆசிரியப் பணியோடு தமிழில் வரும் தீவிர இதழ்களில் சமகால இலக்கியம், கலை, பண்பாட்டு நிகழ்வுகள் மற்றுமல்லாது அரசியல் நிகழ்வுகளையும் விமரிசனம் செய்பவனாக- வெகுமக்கள் மனநிலை சார்ந்து கருத்துக்களை முன் வைத்து விவாதிப்பவனாக அறியப்பட்டுள்ளேன். மாணவப் பருவம் தொடங்கி இலக்கியப் பத்திரிகைகளோடு தொடர்பு கொண்டு எழுதி வருகிறேன். பட்டப்படிப்புக் காலத்தில் அசோகமித்திரன் பொறுப்பில் வந்த கணையாழியில் கவிதைகள் எழுதியிருக்கிறேன். அதே காலகட்டத்தில் ஆனந்த விகடன் பொன்விழாவை ஒட்டி மாணவர் பக்கம் வெளியிட்ட போது அதிலும் கவிதைகள் எழுதினேன். கவிதை

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

படம்
ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவது என்பது எல்லாத் துறையிலும் நடக்கின்ற ஒன்றுதான்.இலக்கியத் துறையில் செயல்படும் ஒருவன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு, "நிகழ்கால இலக்கியப்பரப்பில் எனது இடம் என்ன ?" என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டு விடை தேட வேண்டும். திருப்தியளிக்கும் பதில் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் வாசகர்களுக்கு அல்லது இலக்கிய வரலாற்றுக்குப் புதுவகையான படைப்பு கிடைக்க வேண்டும். தூர்வை என்ற நாவல் மற்றும் மூன்று சிறுகதைத் தொகுதிகள் வழியாகத் தமிழ்ப் புனைகதைப் பரப்பில் ஓரிடத்தை உறுதி செய்து கொண்ட சோ.தர்மன், கிடைத்துள்ள இடத்தில் திருப்தி அடை யாமல் மேலும் கேட்டுக்கொண்டதின் விளைவு அவரது இரண்டாவது நாவல் கூகையாக உருவாகியுள்ளது.