நிகழ்த்தும் கவிதைகளை எழுதுவது -பயிலரங்க அனுபவம்
கவிதைகளை எழுதவும் வாசிக்கவும் எனத் திட்டமிட்டுக் கொண்ட ஆறுநாள் பயிலரங்கிற்கு நான் எடுத்துக் கொண்ட பொருண்மையே இந்தத் தலைப்பு. நிகழ்த்துதலைக் கோரும் கவிதைகளின் தன்மைகள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டி, அதைப்போல நீங்களும் எழுதவேண்டும் என்று மரபான உத்தியில் தொடங்கி, புதியன நோக்கி நகர்த்துவதே எனது திட்டம். பொதுவானப் பயிலரங்குகளில் இந்த மரபான உத்தியைப் பலரும் பின்பற்றுவார்கள்.