இடுகைகள்

நான் ராமசாமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீயா ? நானா? ஆண்டனி என்னும் ஆளுமை

படம்
ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் எதற்கும் போகாமல் வீட்டில் இருந்தால் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை. செய்து கொண்டிருக்கும் வேலை முக்கியமானது என்ற போதும் அதை நிறுத்திவிட்டுப் பார்க்கத் தூண்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது நீயா? நானா? வெளியூர் போனதால் பார்க்கத் தவறியிருந்தால் மறு ஒளிபரப்பின் போதாவது பார்த்துவிட வேண்டும் என்றே விரும்புகிறேன்.

பிறந்த நாள் கொண்டாட்டம்.

படம்
பிப்ரவரி, 17 -இந்தத் தேதியை எனது பிறந்தநாளாக அரசாங்கப்பதிவேடு ஒன்றில் எழுதியவர் என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டு எழுதிய உத்தரப்புரம் பஞ்சாயத்து ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியர். வலதுகை தலையைத் தாண்டி இடதுகாதைத் தொடவேண்டும் என்ற வழக்கம்போல் சொன்னார் அவர். எளிதாகத் தொட்டது எனது வலதுகரம். ஏனென்றால் அப்போது ஐந்து வயதைத் தாண்டிப் பல மாதங்கள் ஓடியிருந்தன. ஐந்து வயது முடிந்தபோது தொடங்கிப் பள்ளிக்கூடம் போகச்சொல்லிக் கையில் கம்போடு விரட்டினார் எனது மூத்த அண்ணன். பல நாட்கள் கம்பும் கையுமாகப் பள்ளிக்கூடம் வரை கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவார். அவர் போன பின்பு நான் வெளியே வந்து பள்ளிக்குப் பின்னால் இருந்த தாழங்குளத்தில் நீச்சல் அடித்துவிட்டு ஆலமரத்தின் கிளைகளிலிருந்து தொங்கும் விழுதுகளில் உட்கார்ந்து ஆடியும் நேரம் கழித்துத் திரிந்தேன்.

இப்படிக்கடந்துபோனது 2023

படம்
2024 ஆம் ஆண்டு பயணங்களாலும் மன உளைச்சல்களாலும் ஆன ஆண்டு.  கோவையில் பணியில் தொடர்வதா வேண்டாமா என்பதையிட்டு மன உளைச்சல் இருந்த து. கடந்த மேயில் அங்கு பணியில் சேர்ந்து ஓராண்டு முடியும் நிலையில் வெளியேறிவிடலாம் என நினைத்ததுண்டு. விடுப்பு அளித்து போய்வாருங்கள் எனக் கல்லூரிச் செயலர் சொன்ன போது திரும்பவும் தொடர்ந்தேன். ஆனால் உடலும் மனமும் ஒத்துழைக்கவில்லை. பன்னிரண்டு மாதங்களில் மூன்று மாதம் அயல் நாட்டில். அமெரிக்காவில் 80 நாட்களும் கனடாவில் 40 நாட்கள்.    

கி.ராஜநாராயணன்-புதுச்சேரி - அ.ராமசாமி

படம்
35 கி.ரா.வைத் தொகுத்தளித்த கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிட்ட எனக்கு எல்லாப் படங்களையும் வீட்டில் வைத்துப் புரட்டிக்காட்டினார் கி.ரா. அப்படிக் காட்டும்போது, அவரை ஓவியங்களாக வரைந்த ஆதிமூலத்தின் ஓவியங்களில் இருக்கும் பாவனைகளோடு இளவேனிலின் படங்களை ஒப்பிட்டுப் பேசினார். படங்கள் எடுப்பதற்காக இளவேனிலோடு புதுவையைச் சுற்றிவந்ததைச் சிரிப்போடு சொல்லிக் கொண்டே வந்தார். நான் முதன் முதலில் வந்து தங்கியிருந்த ஜமீன்தார் கார்டனிலும், அங்காளம்மன் நகரிலும் படம் எடுக்கவில்லை. நீங்கள் இருந்திருந்தால் ஒருவேளை அங்கும் போய்ப் படங்களை எடுத்திருப்போம் என்று சொன்னார்.

அ.ராமசாமி -புதுச்சேரி- கி.ராஜநாராயணன் -3

படம்
30 ஒரு இடத்தை அதன் பூர்வீகத்தோடும் மனிதர்களின் நிகழ்கால இருப்போடும் சேர்த்து வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர் கி.ரா. அவரோட புனைகதைகளில் இந்தக்கூறு தூக்கலாவே இருக்கும். ‘என்னோட கதைகள் இட த்தெ எழுதிக்காட்டுதா? இடத்திலெ இருக்கிறெ மனுசங்களெ எழுதிக்காட்டுதான்னு உறுதியாச் சொல்ல முடியாது’ என்று ஒருமுறை சொன்னார். பாண்டிச்சேரிக்கு வந்தபிறகு அந்த ஊரைப் பற்றிப் பலரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் காட்டிய ஆர்வத்தைப் பின்னர் நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதிலும் காட்டினார்.

கி.ரா. -புதுச்சேரி - நான் -2

படம்
21 புதுவைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியனைத் தடாலடியான நிர்வாகி என்றுதான் சொல்ல வேண்டும். அவர் நினைத்ததைச் செய்துவிடுவார். அப்பல்கலைக் கழகத்திற்குத் தேசிய அளவிலும் உலக அளவிலும் இடங்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வெவ்வேறு துறைகளில் அதற்கான நபர்களை அழைத்துவந்தார். பன்னாட்டு உறவுகளும் அரசியலும் என்ற துறையில் உலக அளவில் அறியப்பட்ட ஒருவரை வருகைதரு பேராசிரியராக ஆக்கினார். அவர் திரு ராஜீவ்காந்தி காலத்தில் நடந்த மூன்றாம் உலக நாடுகளின் கூட்டறிக்கையை - பெல்கிரேட் முன்வைப்பு - உருவாக்கியவர். உயிரியல் துறைக்குச் சலீம் அலியின் பெயரைச் சூட்டி, அவரது சீடர் ஒருவரைக் கொண்டுவந்தார். விளையாட்டுத்துறையின் முதன்மையராக இந்திய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவரை நியமனம் செய்தார்.

கி.ராஜநாராயணன் - புதுச்சேரி - நான் -1

படம்
1 . அமெரிக்கன் கல்லூரி, இரண்டாமாண்டு பட்டப்படிப்பில் சிறுகதை வகுப்பு. பேரா.சுதானந்தா வட்டார இலக்கியம் என்ற வகைமைப்பாட்டை விளக்கிச் சொல்லிவிட்டு “கதவு” கதையை வகுப்பிலேயே வாசிக்கச் சொன்னார். வகுப்பு முடியும்போது நமது துறை நூலகத்தில் அவரது நூல்கள் உள்ளன. இன்று மாலை நூலகம் திறந்திருக்கும். விரும்புபவர்கள் எடுத்துச் சென்று வாசிக்கலாம் என்றார்.  நூலகத்திலிருந்து  கோபல்ல கிராமத்தை - வாசகர் வட்டம் வெளியீடு – எடுத்துக் கொண்டேன்.

பண்பாட்டு அரசியலை முன்வைத்த மறுபேச்சுகள் -ந.முருகேசபாண்டியன்.

படம்
1981 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் எம்.ஃபில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பு இடைவேளையின்போது துறை அலுவலகத்திற்குப் போய்க், கடிதம் எதுவும் எனக்கு வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அப்பொழுது தற்செயலாகப் பார்த்த அஞ்சலட்டையில் கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் மாதந்திரக் கூட்டத்திற்கான அறிவிப்பைப் பார்த்தவுடன் வியப்பாக இருந்தது. அதுவும் அந்தக் கடிதம் முதலாமாண்டு படிக்கிற அ. ராமசாமி என்ற மாணவர் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இடதுசாரிப் பின்புலத்தில் இளம் மாணவரா? என்று யோசித்தவாறு அஞ்சலட்டையை எடுத்துக்கொண்டு முதலாமாண்டு வகுப்பிற்குப் போனேன். ”யாருங்க ராமசாமி?” என்ற எனது கேள்விக்கு நான்தான் என்று எழுந்து வந்த மாணவர் பின்னர் எனக்கு நெருக்கமானார்.

திரைப்படைப்புகளின் கூர் முனைகளும் மழுங்கு முனைகளும் -மதியழகன்

படம்
மனிதர்கள் தங்கள் எஞ்சிய பொழுதைக் கழிக்க தேரும் ஒரேயொரு விஷயமாக திரைப்படங்கள் அல்லது அதன் துண்டுக் காட்சிகள் விளங்கி வருகின்றன. திரைப்படங்களைத் தாண்டி வேறு பொழுதுபோக்கில்லை. சுகிசுக்கவும், விவாதிக்கவும், முரண்படவும் இறுதியாகக் கொண்டாடவும் முதன்மையாக இருப்பன திரைப்படங்கள் மட்டும்தான். திரைப்படக்கலையின் பல்லாயிரம் முனைகளின் ஏதாவது ஏதாவதொரு முனை குறித்து மணி கணக்கில் பேசிட அடித்தட்டு மக்கள் வரைக்கும் தகவல்களும் வியப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. இப்படி எல்லாத் தட்டு மக்களும் அறிந்திருக்கும் சினிமாக்கலையின் கூர்முனைகளையும் மழுங்கு முனைகளையும் ஆய்ந்து பதிவுசெய்ய வேண்டிய அவசியம் அறிஞர்களுக்கு இருக்கிறது. இந்நூலில் ஆழமாகவும் தெளிவாகவும் அக்கரையுடனும் பன்முனைப் பார்வைகளும் சீரியப் பார்வைகளும் என சிறப்பாய் ஆய்ந்துதுள்ளார் அ. ராமசாமி அவர்கள்.

பல்துறை வாசிப்பினூடாக இந்தப் பயணம்.. -கவி.கருணாகரன்

படம்
இலக்கிய வாசிப்பும் விமர்சனமும் என்ற அடிப்படையில் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் சமகால ஆளுமையாளர்களில் முக்கியமானவர் பேராசிரியர் அ. ராமசாமி. அ.ரா, தொழில் மற்றும் கற்கை ரீதியாக நாடகம், மொழி,இலக்கியம் ஆகிய துறைகளைக் கொண்டவராக இருந்தாலும் அவருடைய ஈடுபாட்டுப் பரப்பானது சினிமா, அரசியல், சமூகவியல், பண்பாடு, இலக்கியம், வரலாறு, நாடகம், மொழி எனச் சமூகத்திலும் வரலாற்றிலும் கலந்து ஊடாடிச் செல்லும் துறைகளோடும் விரிந்தது. இன்னும் நுணுகிப் பார்த்தால் இந்த எல்லை மேலும் விரிந்து பெண்ணியம், தலித்தியம், திராவிடவியல், பெரியாரியல் எனவாகச் செல்வதையும் காணலாம். அடிப்படையில் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையே. ஒரு வட்டத்திலிருக்கும் பல்வேறு பகுதிகள். ஒன்றின் மீது ஈடுபாடும் ரசனையும் பரிச்சயமும் வந்து விட்டால், பிறகு அனைத்தின் மீதும் அது பரவிக் கொள்ளும்.

பறவைகளின் பாடுங்காலம் -சுகிர்தராணி

படம்
மக்களின் இயங்குவெளியாகவும் புழங்குதளமாகவும் இருப்பது மொழியே. அம்மொழி பேசும் மக்களின் அறிவு ஊற்றாகவும் அதன் வழியே செயல்படுதளத்தை அமைத்துக் கொள்ளும் வாயிலாகவும் விளங்குவது மொழியே. நம் கருத்துகளை பிறர்க்குத் தெரிவிப்பதற்கும், பிறர் கருத்தைத் நாம் அறிந்து கொள்வதற்கும் உதவும் மொழியில், மக்களின் வாழ்க்கை, வாழ்வியல் முறைகள், வாழ்வில் பின்பற்றப்பட வேண்டிய அறங்கள், காதல், காமம், வீரம் போன்றவற்றை வெளிப்படுத்த வேண்டி, மன மகிழ்ச்சிக்காகவும் சமூக நோக்கிற்காகவும் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. ஆரம்பத்தில் அவை செய்யுள்களாக எழுதப்பட்டன. நீண்ட நெடுங்காலமாக அவை செய்யுள் மரபாகவே தொடர்ந்து வந்தன. அந்த வகையில் தமிழில் சங்க இலக்கியம் என்பது மிகப்பெரிய கொடை. உலகம் முழுமைக்கும் அறத்தை, வீரத்தை, காதலைப் போதித்த மிகப்பெரிய வாழ்வியல் இலக்கியம் அது. அதைப் படைத்தவர்கள் பெரும்பான்மையோர் ஆண்கள். அதில் பத்தில் ஒரு பங்கினர் பெண்கள் என்பது ஆய்வுகள் மூலம் வெளிப்படையாக அறியப்பட்டாலும் இன்னும் கூடுதலாக இருந்திருக்கலாம் அல்லது இருந்திருக்க வேண்டும் என்பதே நம் பெருவிருப்பமாக இருக்கிறது.

பாசாங்குகள் இல்லாத ஒரு பகிர்வு: அபத்தம் இதழில் ஓர் உரையாடல்

படம்
2023, ஜூன் -ஜூலை மாதவாக்கில் ஒருமாதம் கனடாவில் இருந்தேன். மகன் இருக்கும் ஒட்டாவில் இருந்து கொண்டு அருகில் இருக்கும் சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பயணம் செய்ததோடு, தலைநகர் டொரண்டோ நகருக்கும் சென்றேன். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள் என நண்பர்கள் பலர் அங்கே இருக்கிறார்கள். இரண்டு நாவல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதோடு நண்பர்களோடும் சந்திப்புகளும் இருந்தன. அப்போது அங்கிருந்து வெளியாகும் அபத்தம் இதழின் ஆசிரியர்கள் ஜார்ஜ், கற்சுறா ஆகியோரோடும் சந்திப்பு நடந்தது. சந்திப்பு நடந்த கற்சுறாவின் உணவுவிடுதிக்கு என்னை அழைத்துச்சென்றவர் நண்பர் சின்னசிவா. முழு உரையாடலிலும் அவர் இருக்கவில்லை. பாதிநேரம் இருந்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.  அங்கே நான்குபேரும் பேசிக்கொண்ட உரையாடலைத் தொகுத்துத் தந்துள்ளது அபத்தம் இதழ்.  

சொல்வது நட்புக்காக மட்டுமல்ல

படம்
நான் இதையே சமகால வரலாறு,இலக்கியம் என்பேன்.தொடர்ந்து பேரா.அ.ராமசாமி எல்லா துறை சார்ந்த விசயங்களிலும் ஆர்வமும்,அறிவும் ஊட்டும் வகையில் எழுதி வருகிறார்.விமர்சகர் என்பதை தாண்டி அவரின் சமூக அரசியல், கல்வி, பாடதிட்டம், தேர்வுகள்,சினிமா,நாடகம்,கலைகள், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் வகுப்பறைக்கு வெளியே உள்ள சமூக பேராசிரியர்கள்,அறிஞர்கள் பட்டியலில் பேரா.அ.ராமசாமிக்கும் முக்கிய பங்குண்டு. உயர்கல்விக்கு உரிய உருத்தான பேரறிஞர்கள் குழுவோ,வாரியமோ இருந்தால் இவர் அங்கு அங்கீகரிக்கபட வேண்டும். வயது வரம்புக்குட்பட்டவராக இருந்தால் துணைவேந்தராக நியமிக்கலாம். விமர்சகர், சமகால பதிவர் ,திறனாய்வு என்ற வகையில் கண்டிப்பாக சாகித்ய அகாடமி போன்ற உயரிய விருதுகள் வழங்க வேண்டும் கார்த்திக், சீடு, மதுரை

படங்கள் வழி மதுரை நினைவுகள்

படம்
மதுரை என்னுடைய நகரமென்று இப்போதும் சொல்கிறேன். அந்நகரில் இருந்த ஆண்டுகள் குறைவுதான். மாணவனாக விடுதிகளில் 6 ஆண்டுகள் தங்கியிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரியில் வாலஸ் விடுதியிலும் வாஸ்பன் விடுதியிலும் 4 ஆண்டுகள். பல்கலைக்கழக விடுதியில் இரண்டு ஆண்டுகள். தொடர்ந்து திருமணம் செய்துகொண்டு ஆய்வு செய்த ஆய்வாளர்களுக்கான குடியிருப்பில் 5 ஆண்டுகள். அதன்பிறகு கே கே நகரில் ஒரு ஒண்டுக் குடித்தனமாக ஓராண்டு. மொத்தம் 12 ஆண்டுகள். ஆனால் எனது கிராமத்திலிருந்து நான் வாழ்ந்த பல நகரங்களுக்கும் போக மதுரைதான் வழி. எனது கிராமம் இப்போதும் மதுரை மாவட்டத்திற்குள் தான் இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு கிளையான வாசிமலையான் கோவில் மலைக்குத் தெற்கே இருக்கும் தச்சபட்டி என்ற அந்தக் கிராமம் அப்போதும் 70 தலைக்கட்டுதான்; இப்போதும் அதே 70 தலைக்கட்டுதான். வளர்ச்சியே இல்லாத கிராமம். அங்கிருந்து மதுரைக்கு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு காரணங்களுக்குப் போய் வந்திருக்கிறேன். வாழ்ந்திருக்கிறேன். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு

அலைகளைக் கடந்து...

படம்
ஒமிக்ரான் அலையாக மாறியுள்ள மூன்றாவது அலைக்கு முதல் அலையில் இருந்ததுபோல அடங்கி இருப்பது என்று முடிவு . முதல் அலையின்போது உருவாக்கப்பட்ட அச்ச உணர்வும் பீதியும் வீட்டுக்குள் முடக்கிப்போட்டது. வீட்டு மாடியில் தான் ஒருமணி நேரம் நடை. வாரம் ஒருமுறை தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் கடைகளுக்குப் போய் வந்ததைத் தவிர வெளியேற்றமே கிடையாது. 

2021 - இது தோல்வியின் கதை

படம்
டிசம்பர் 6 ஆம் தேதி பிற்பகல் 4.35 -க்கு அழைத்த தொலைபேசி 11-12-2021 பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராஜ்பவனில் ஆளுநரைச் சந்திக்க வேண்டும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான கலந்துரையாடல் இது எனச் சொல்லிவிட்டு வைத்துவிட்டது. அழைத்தவர் ஆளுநரின் தனிச் செயலக அதிகாரி என்று சொன்னார். கூடுதல் தகவல்களைக் கேட்க நினைத்துத் தொடர்ந்த நிலையில் வைத்துவிட்டார்.

ஈழத்தமிழ் இலக்கியம்: எழுதப்பட்டனவும் எழுதப்படுவனவும்

படம்
பேராசிரியர் அ. ராமசாமி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கல்விப்புலம் சார்ந்தவராக மட்டுமல்லாமல் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு சார்ந்த சிற்றிதழ்களில் 1983 தொடங்கிக் கட்டுரைகள் எழுதி வருவதன் மூலம் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். தொடர்ச்சியாக ஈழ இலக்கிய புத்தகங்களை வாசித்து அது பற்றி எழுதிவருபவர்.அவருடனான மின்னஞ்சல் வழியான நேர்காணல் இது நேர்காணல் செய்து அகழ் இதழில் வெளியிட்டபோது நேர்காணலுக்குத் தந்த தலைப்பு:   வெற்று இரக்கத்தைப் பெறக்கூடிய எழுத்துகள் அலுப்பானவை:

அலைதலும் தனிதலும் -1

அலைந்து திரிதலின் பல நிலைகளைக் கடந்திருப்பதுபோலவே தனித்திருத்தலின் அனுபவங்களும் இருக்கவே செய்கின்றன. முதல் தனித்திருத்தல் பத்து வயதில். நான்காம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறை.கமலை வடத்தில் தாவி ஏறிச்சாடித் தடுமாறாமல் இருக்க இரண்டு பக்கத்திலும் கைகளை நீட்டி மாடுகளின் பின்முதுகில் கை வைத்தபோது விழுந்தது ஒரு அடி. இடது பக்க மயிலைக்காளை அடித்தால் முதுகில் விழும். வலதுபக்கச் செவலையின் அடி கன்னத்தில் விழுந்தது.கன்னம் வீங்கியது. கண்ணுக்கு வந்தது கன்னத்தோடு போனது என்று நினைத்திருந்த நேரத்தில் மாட்டு வாலில் கட்டியாக இருந்த சாணித்துகளொன்று கண்ணுக்குள் இறங்கி ஒருவாரத்திற்குப் பின் ரத்தச் சிவப்பில் கொப்பளம் காட்டியது. முலைக்கட்டியிருக்குன்னு பெரியம்மா அத்திபட்டி மாரியம்மனுக்கு விளக்குப் போடுவதாக நேர்ந்தார். வெங்கலத்தாம்பாளத்தில் வெண்சங்குரசி ஒத்தடம் கொடுத்துப் பார்த்தார்கள். வெளிமருத்துவம் தாண்டி அமுதப்பால், நந்தியாவட்டைச் சாறு என்ற கைமருத்துவத்தில் இறங்கி உள்மருத்துவத்திற்கு நகர்ந்தது. ஒருமாதம் பள்ளிக்கூடம் போகவில்லை. சுத்திப்பட்டிக்கெல்லாம் தாய்க்கிராமம் எழுமலை. அங்கிருந்தவர் அரை வைத்திய

நானும் எனது இயக்கங்களும் :ஜீவநதி – மாத சஞ்சிகையில் நேர்காணல்

தை /13 வது ஆண்டுமலர்/ 136-137  நேர்காணல்:அ.ராமசாமி  சந்திப்பு:இ.சு.முரளிதரன்  இலக்கியம், நாடகம், சினிமா, வரலாறு எனப் பன்முக அடையாளங்களுக்கு உரித்தானவர்அ.ராமசாமி. மதுரை மாவட்டத்திலுள்ள தச்சபட்டியில் 1959இல் பிறந்தவர். ஒளிநிழல் உலகம், மாறும் காட்சிகள், சங்கரதாஸ் சுவாமிகள், வட்டங்களும் சிலுவைகளும், ஒத்திகை, நாடகங்கள் விவாதங்கள், அலையும் விழித்திரை, நாவல் என்னும் பெருங்களம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறையில் பேராசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 

தொடர்ச்சியான பேச்சுகள்....

காலம் இதழின் வாசகர்களுக்கு உங்களை அறிமுகம் செய்யவேண்டியதில்லை இருந்தபோதிலும் காலம் படிக்கப்படும் -விவாதிக்கப்படும் தமிழ்ச்சிந்தனை வெளிக்கு உங்களை எப்படிக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள். முன்பெல்லாம் என்னையொரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதில் ஆர்வத்தோடு இருந்தேன். அதற்காக வாதாடியிருக்கிறேன். இப்போது அப்படி நினைக்கவில்லை. என்னையொரு கல்வியாளனாக - பொறுப்பான பேராசிரியராக முன்னிறுத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறேன். பொறுப்புள்ள பேராசிரியராக இருப்பதில் எழுத்தாளராக இருப்பதும் அடங்கும் என்றும் நம்புகிறேன். இருந்தபோதிலும் கலை இலக்கியவெளிக்குள் எனது நகர்வுகளைக் குறித்துச் சொல்வது தற்புகழ்ச்சியாகாது என்பதால் இதைச் சொல்லவிரும்புகிறேன்.எப்போதும் நான் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்பவனாக இருந்து வந்துள்ளேன். ஒரு தன்னிலையை அல்லது அடையாளத்தை உருவாக்கியபின் அதை நானே அழித்தும் இருக்கிறேன். தன்னுணர்வோடு விலகுவதாகக் கருதித் திரும்பவும் அதற்குள் பயணித்திருக்கிறேன். எப்போதும் உள்ளேயும் வெளியேயுமான பயணங்கள் சாத்தியமாகிக் கொண்டே இருந்தன. தொடர்ந்து ஏனிப்படி நடக்கிறது என்றுகூடப்பல நேரங்களில் நினைத்துக் க