இடுகைகள்

கவிதைகள் பற்றி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போலச்செய்த காமரூபங்களும் நினைக்கப்படும் காதல்களும்- செந்தியின் கவிதையுலகம்

படம்
இப்போது வெளியீடு காணும், செந்தியின்  சில்க்கின் கண்களை அணிந்துகொண்ட ஒருத்தி  கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை வாசித்துக் கொள்ளலாம்.   

இரங்கலை எழுதும் கலை

படம்
கருணா:நிகழக்கூடாத மரணம் டிசம்பர் 22, 2020 நேரடித் தொடர்புகள் இல்லாத நிலையிலும் நண்பர்கள் என்ற அடையாளத்தோடு வாசிக்கவும் முரண்படவும் உரையாடவும் உதவி கேட்கவுமான வாய்ப்புகள் கொண்ட சமூக ஊடகத்தின் காலத்தில் வாழும் நமக்கு சில மரணங்கள் நிகழக்கூடிய மரணங்களாகத் தோன்றிக் கடந்துபோகின்றன. சில மரணங்கள் நிகழ்ந்திருக்கக் கூடாது என்று தோன்றுகின்றன.

வண்ணக்கலவைத் தொட்டியில் அலையும் குதூகலம்

படம்
இலக்கிய வாசிப்பு ஒவ்வொரு வடிவத்திற்கும் வேறானது. நாவலை வாசிப்பதுபோலவே நாடகத்தை வாசித்துவிட முடியாது. நாவலையும் நாடகத்தையும் விரும்பி வாசிக்கும் ஒருவருக்கு சிறுகதைகளும் கவிதைகளும் விருப்பமில்லாமல் போகவும் வாய்ப்புண்டு. சிறுகதைகளுக்குள் நுழைந்து மனம் ஒப்பும் ஒன்றைக் கைப்பற்றிக் கதையை ரசித்து விடும் ஒருவர் கவிதையின் வாசலைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கவும் கூடும்.

அவ்வப்போது மனுஷ்யபுத்திரன்

படம்
பெருங்கவிகள் ஏற்படுத்தும் நெருக்கடி ஒரு மொழியில் இயங்கும்/ இயங்கிய பெருங்கவிகளின் கவிதைகளைத் தொகுத்து வகைப்பாட்டிற்குள் வைத்துப் பேசுவது எந்தத் திறனாய்வாளருக்கும் எளிதானதல்ல. திறனாய்வாளர்களைத் திணறடிக்கும் மரபுத்தொடர்ச்சியின் தொடக்கம் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஔவையும் கபிலரும். செவ்வியல் கவிதைக்குப் பின்னர் அற இலக்கிய காலத்தில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைக் காட்ட முடியும். ராமாயணம் எழுதிய கம்பரின் பிறகவிதைப் பனுவல்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது அந்த வரிசையை அவர் நீட்டித்தார். பக்திக்கவிதைகளில் அப்படியொரு பெரும் ஆளுமையைக்காட்டுவது எளிதல்ல. ஓரளவு ஆண்டாளின் பாவைப்பாடல்களையும் நாச்சியார் திருமொழியையும் ஒரு சிறிய விலகல் என்று சுட்டலாம். சிற்றிலக்கியப்பரப்பில் அப்படியொரு பெருங்கவியைச் சுட்டிக்காட்டமுடியாது. இந்த மரபுத்தொடர்ச்சியில் பெரும்பாய்ச்சல் கவி.பாரதி. அவருக்குப் பின் அந்த இடத்தில் நிற்பவராகக் கவி.மனுஷ்யபுத்திரனையே சொல்லமுடியும். புனைகதைகளில் இப்படியான சுட்டிக்காட்டலுக்குப் பலர் இருக்கிறார்கள். ஈழத்தமிழ்க் கவிதைப்பரப்பில் சேரன், ஜெயபாலன், வில்வரத்தினம், கருணாகரன் போன்றோர் அப்

தமிழ்க் கவிதைக்குள் திணையென்னும் படிமம்

படம்
இந்தக் கேள்விகள் கவிதைகளை எழுதுபவர்களின் கேள்விகள் அல்ல. கவிதை வாசகர்களின் கேள்விகளும்கூட அல்ல. ஆனால் இலக்கியத்திறனாய்வு என்னும் விமரிசனம், “கவிதையை எப்படி வாசிப்பது?” என்ற கேள்வியில் தொடங்கி, “கவிதை எவ்வாறு உருவாகிறது?” என்பதை விளக்கிக் கொண்டே இருக்கின்றது. இப்படி விளக்குபவர்களை திறனாய்வாளர்கள் என்று சொல்வதைவிடவும், இலக்கியத்தை ஒரு கோட்பாடாக்கி விளக்கிவிட நினைப்பவர்கள் என்று சொல்லலாம்.

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்

தாமிரபரணி, நெல்லை மாவட்டத்தின் ஊர்ப்பெயர்கள், சைவப் பெருங் கோயில்கள், திருவிழாக்கள், அவை சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளின் விவரிப்பு போன்றவற்றின் வழியாகக் கவி கலாப்பிரியா தனது கவிதைக்கு வட்டாரத்தன்மையை உருவாக்கியிருக்கிறார். ஆனால் அக்கவிதைகளுக்குள் உலவும் மாந்தர்களின் காதல், காமம், தவிப்பு, அதன் வழியெடுக்கும் முடிவுகள் போன்றன வட்டார எல்லைகளைத் தாண்டி விரியக்கூடியன.

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்

படம்
தமிழ்க் கவிதையின் மரபைப் பற்றிப் பேசும் கல்வியாளர்கள் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் தமிழ் மரபின் தொடக்கம் எனக் கொள்வதில் பின் வாங்குவதில்லை. கல்வித்துறை சாராத இலக்கியத் திறனாய்வாளர்களும் கூடத் தமிழ்க் கவிதையியலின் தொடக்கம் இவையே என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வர். புதிய ஐரோப்பியத் திறனாய்வாளர்கள் அல்லது திறனாய்வுக்கோட்பாடுகள் எப்போதும் அரிஸ்டாட்டிலை மறந்துவிட்டுச் சொல்லாடல்களைத் தொடங்குவதில்லை. அவர் முன்வைத்த இலக்கிய அடிப்படைகளை உள்வாங்கியவர்களாகவும் அதிலிருந்து கிளர்ந்தெழுந்த கருத்தியல்களை முன்வைப்பவர்களாகவுமே தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். அரிஸ்டாடிலின் தொடர்ச்சி நான் அல்லது நானொரு புதிய அரிஸ்டாடிலியவாதி (New Aristotelian) என்று சொல்வதில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது; மகிழ்ச்சி இருக்கிறது.

இருவகைக் கவிதையாக்கம் - திட்டமிடலும் இன்மையும்

படம்
எழுத்தின் இயக்கம் இப்படிப்பட்டதுதான் என உறுதியாகச் சொல்லமுடியாது. கதைப் பின்னல் கொண்ட புனைகதை, நாடகம் போன்றனவற்றை முன் திட்டமிடலின்றி எழுதிவிட இயலாது. ஆனால் கவிதைக்குப் பெரிய அளவு முன் திட்டமிடல் தேவைப்படுவதில்லை. ஆனால் திட்டமிடாமல் எழுதிய கவிதைகளைப் பின்னர் ஒழுங்குபடுத்தும்போது ஒருவகைத் திட்டமிடல் அமையவே செய்யும். அண்மையில் முன்னுரைகள் எழுதுவதற்காக வாசித்த இவ்விரு பெண்கவிகளின் தொகுதிக்குள் ஒன்று முழுமையும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தன்மையைக் காணமுடிந்தது. இன்னொன்றில் பெரிய திட்டமிடல்கள் இன்றிய அன்றாட நிகழ்வுகளுக்குள் உணர்வுகளைத் தேக்கிவைக்கும் இயல்பைக் காணமுடிந்தது. 

வகைப்படுத்துதல் வெளிப்பாடுகள்

தனது கவிதைகளை வாசிக்க நினைக்கும் வாசகருக்கு ஏதாவது ஒருவிதத்தில் உதவவேண்டும் என்று பெரும்பாலான கவிகள் நினைப்பதில்லை. கால வரிசையில் அடுக்கப்படும் கவிதைகள் கூடக் கவிதையை எழுதிய கவியின் மனப்பாங்கு மாற்றத்தைப் புரிந்துகொள்ள உதவும். அதைத் தாண்டி வகைப்பாடு செய்வதற்குச் சில அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவதொன்றைப் பின்பற்றலாம். அதனைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டால் வாசிப்பவர்கள் அதனைப் பின்பற்றிச் செல்வார்கள்.

தொடக்கநிலைக்கவிதையின் நுட்பங்கள்

படம்
  தமிழ்க் கவிதைகளின் சொல்முறைமை பற்றிய சொல்லாடல்கள் நம்மிடையே அதிகம் இல்லை. திறனாய்வாளர்கள் எப்போதும் கவிதை முன்வைக்கும் கருத்தியல், வாழ்க்கை பற்றிய புரிதல் (த்ரிசனம் என்ற சம்ஸ்க்ருதச் சொல்லால் குறிக்கும் ஒன்று) எனப் பேசுவதையே விவரித்துக் கடக்கின்றனர். கவிதை எழுதத் தொடங்கும் ஒருவர் எதனில் தொடங்கலாம்; அங்கிருந்து எப்படி நகரலாம்? எங்கே நகரமுடியாமல் தத்தளிப்பு உண்டாகும்? அத்தத்தளிப்பின் காரணிகள் எவையெவையாக இருக்கக்கூடும் போன்றன பேசப்பட வேண்டும்.

மனையுறைச் சேவலும் பேடும்

படம்
  பொழுது புலர்ந்தது. சொல்லிவிட்டுச் சேவல் பேடுடன் தனக்கான இரையைத் தேடி இறங்கிவிட்டது. முருங்கை மரத்தின் இலைகளிலிருந்தும் பூக்களிலிருந்தும் காய்களிலிருந்தும் விழுந்து பரவியிருக்கும் தேன் துளிகளையொத்த சிறுதானியங்களைத் தேடி உண்கின்றன இரண்டும். இவ்விரண்டும் மனையுறைவாசிகள்.

உலகக்கவிதை நாள் -2022

உலகக் கவிதை நாளுக்காக ஒவ்வொரு வருடமும் நான் வாசித்த/ பிடித்த/ அறிமுகம் செய்ய நினைக்கும் கவிதைகளை முகநூலில் பகிர்வதுண்டு. இந்த ஆண்டும் மார்ச் 15 கவிதைகளுக்கான நாளில் 15 பேருடைய கவிதைகளைப் பகிர்ந்தேன். இந்தப் பதினைந்துக்குள் சம அளவில் பெண்களின் கவிதைகள் இடம்பெற வேண்டும் என நினைத்தேன். அதேபோல் இன்றைய தமிழ்க்கவிதைகள் என்பன வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் வெளிக்குள் மட்டும் எழுதப்படுவன அல்ல. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களால் எழுதப்படுபவை. இப்பதினைந்து கவிதைக்குள் அந்தப் பரப்பும் கவனத்தில் கொள்ளப்பட்டன. தனித்தனியாக வாசித்த இந்தக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கலாம். அப்படி வாசிக்கும்போது வெவ்வேறு போக்குகள் தமிழ்க் கவிதைக்குள் இருப்பதை உணரமுடியும்.

கவியின் அடையாளத்தைத் தேடுதல்: அ.ரோஸ்லினின் வாலைக்குழைக்கும் பிரபஞ்சம் தொகுப்பை முன்வைத்து

படம்
தமிழில் கவிதை வடிவத்திற்கு நீண்ட தொடர்ச்சி உண்டு. அத்தோடு தொடக்க நிலையிலேயே எளிய வடிவமாகவும் சிக்கலான வடிவமாகவும் உணரப்படும் தன்மைகளோடு தமிழ்ச் செவ்வியல் கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. செவ்வியல் கவிதைகளுக்குப் பிறகு செவ்வியல் கவிதைகளுக்கு இணையாகச் சிக்கலாகவும் எளிமையாகவும் வெளிப்பட்டுள்ளவை நவீனத்துவ கவிதைகள்.

வேதாகமத்தின் வாசனை வீசும் கவிச்சொற்கள்

தமிழ்க்கவிதை மரபில் செவ்வியல் அகக்கவிதைகளுக்கு நீண்ட தொடர்ச்சியும் நீட்சியும் உண்டு. அத்தொடர்ச்சியை உரிப்பொருள் சார்ந்த நீட்சி எனவும், வடிவம் சார்ந்த நீட்சி என்றும் அடையாளப்படுத்தலாம். அன்பின் ஐந்திணைகளான முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்பனவற்றின் உரிப்பொருட்களான இருத்தல், ஊடல், புணர்ச்சி, இரங்கல், பிரிவு என்பனவற்றிற்கு அதிகம் தொடர்ச்சி உண்டு. அதனை இங்கே விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் அந்த நீட்சியை மைக்கல் கொலினின், “இவனைச் சிலுவையில் அறையுங்கள்” எனத் தலைப்பிட்ட கவிதைத் தொகுதியில் காணமுடியவில்லை. அதற்கு மாறாக அகக்கவிதையின் வடிவத் தொடர்ச்சியின் நீட்சியாக அவரது கவிதைகள் அமைந்துள்ளன. அப்படியான ஒரு தொனி ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போது என்னை வந்து மோதுவதை உணர்ந்துகொண்டே இருக்க முடிந்தது.

மிதக்கும் வெளிகளை எழுதுதல்: நவீன கவிதையின் இரண்டு புதுமுகங்கள்

படம்
இலக்கிய உருவாக்கம் பற்றிப் பேசும் இலக்கியவியல் நூல்கள் முன்வைக்கும் அடிப்படை விதிகள் சில உள்ளன. காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் இலக்கியத்திற்குரிய பொதுக்கூறுகளாக முன்வைக்கின்றன. அம்மூன்றையும் ஓர்மைப்படுத்தி இணைப்பதின் வழியாக இலக்கிய வடிவங்கள் பொதுத்தன்மையோடு உருவாகின்றன. அவ்விலக்கிய வடிவங்களின் வெளிப்பாட்டுப் பாங்கும் அதன் வழி உருவாகும்/உருவாக்கும் மனநிலை சார்ந்து வடிவங்களின் சிறப்புநிலைகள் கவனம் பெறுகின்றன.

கையறு நிலையின் கணங்கள்

படம்
 இந்த ஆண்டு( 2021) இல் வெளிவந்த   கவிதைத் தொகுதிகள் இரண்டு அடுத்தடுத்து வாசிக்க க் கிடைத்தன. முதலில் வாசித்தது ரூபன் சிவராஜா வின் எழுதிக் கடக்கின்ற தூரம். இரண்டாவதாக வாசித்தது சுகன்யா ஞானசூரி யின் நாடிலி. எழுதியவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமலேயே கூட இந்தக் கவிதைத் தொகுதிகளின் தலைப்பை   வைத்துக் கொண்டு கவிதைகள் எழுப்பப் போகும் சாராம்சத்தைப் பேசிவிடலாம்.

விரித்தலின் அழகியல்: கருணாகரனின் கவிதை மையங்கள்

இலக்கியத்தின் இயக்கமும் வாசிப்பும் எழுத்தின் இயக்கம் எல்லாவகையான பனுவல்களிலும் ஒன்றுபோல் நிகழ்வதில்லை. நாடகம், புனைகதை, கவிதை என அதனதன் வடிவ வேறுபாடுகளுக்கேற்பவே நிகழ்கிறது. வடிவ வேறுபாட்டிற்குள்ளும் ஒவ்வொரு எழுத்தாளரும் கைக்கொள்ளும் முன்வைப்பு முறைகளுக்கேற்பவும் இயக்கம் நிகழும். பனுவல்களுக்குள் நிகழ்த்தப்படும் இயங்குமுறையை, அதன் வடிவப்புரிதலோடு வாசிக்கும் வாசிப்பே முழுமையான வாசிப்பாக அமையும்.

அகத்திணைக்காட்சிகள்

படம்
தமிழ்ச் செவ்வியல் கவிதைக்குள் இடம்பெறும் உரிப்பொருட்கள் புணர்ச்சி, பிரிவு,இருத்தல்,  இரங்கல், ஊடல் ஆகிய அன்புசார்ந்த அகநிலையோடு, ஒருபால் விருப்பமும், பொருந்தாக் காமமும் என்னும் அன்புசாரா அகநிலையாகவும் இருக்கின்றன. இவ்வுரிப்பொருட்கள் அகப்பாடல்களில்  திரும்பத்திரும்ப இடம்பெறுகின்றன. அதனால் கூறியது கூறல் என்னும்  நிலையைக் கொண்டிருக்கின்றன என்ற விமர்சனத்தை எதிர்கொள்கின்றன. ஆனால் அவற்றிற்குள் இடம்பெறும் கருப்பொருட்களும் முதல்பொருளும் உருவாக்கும் உருவகம், உவமை, இறைச்சி, உள்ளுறை  போன்றன  கவிதையியல் நுட்பங்களாக மாறி விடுவதைக் காணமுடிகிறது. ஒரு குறுந்தொகையில் நிலாவும்,  கலித்தொகைப்பாடலில் சொம்பும், அகநானூற்றில் வீடுறைச் சேவலும் பேடும் உருவாக்கும் அர்த்தத்தளங்கள் ரசிக்கத்தக்கனவாக மாறவிடுகின்றன.

மெல்லினக்கவிதைகள் - ஒரு குறிப்பு

படம்
  நேர்க்காட்சிகளாகவும், கற்பனையாகவும் காட்சிச்சித்திரங்களை வரைபவர்கள் மென்வண்ணங்களால் தீட்டும்போது வெளிப்படுவது வரையப்படும் ஓவியக்காட்சிகளின் மென்மையியல் மட்டுமல்ல; வரையும் ஓவியரின் மென்மைக்கலையியலும் அழகியலும் தான்.

தில்லையின் விடாய்: உடலரசியலின் வெளிப்பாடுகள்

படம்
  அவன் தூங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடிக்கும் என் நெஞ்சில் புடைத்து எழுகின்ற வலியைப் பொத்திக்கொண்டு நான் உயிர்க்கின்றேன்