எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.
கவிதைகள்: ஆக்கங்களும் வாசிப்புகளும். செம்மொழியான தமிழுக்குத் தனித்துவமான இலக்கியவியல் ஒன்று இருக்கிறது. எல்லாச் செவ்வியல் மொழிகளிலும் இருக்கும் இலக்கியவியல் நூல்கள் பேசுவதைப் போலத் தமிழின் இலக்கியவியல் நூலான தொல்காப்பியமும் இலக்கியத்தை ஆக்கும்/ செய்யும் முறைகளையே பேசுகின்றது. ஆனால் அதன் துணைவிளைவுகள் சில இருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.