இடுகைகள்

டிசம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அடையாளம் அழிக்கும் புனைவு வெளி

படம்
இந்த ஐந்து கதைகளும் புத்தம் புதிதான கதைகள். 2015, நவம்பர் மாதத்தில் வந்த இதழ்களில் அச்சான கதைகள். கதைகளை எழுதியவர்கள் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களும்கூட. எழுதியனுப்பிவிட்டு அச்சேறுவதற்குக் காத்திருக்காமல் அனுப்பினால் உடனே அச்சாகும் வாய்ப்புள்ள எழுத்தாளர்கள். அதுதான் அவர்களை அறியப்பட்ட எழுத்தாளர்களாக ஆக்குகிறது. அறியப்பட்ட எழுத்தாளர் என்பது அவர்களின் எழுத்தின் வழியாக அறியப்பட்ட அடையாளமே. எப்படி அறிந்திருக்கிறோம் என்பதோடு அவர்களின் கதைகளின் விவரங்களை முதலில் தந்துவிடலாம். அறியப்பட்ட எழுத்தாளர்கள்: வாசிக்கக் கிடைத்த கதைகள்: அம்பை-தன்னுணர்வு கொண்ட பெண்ணியப் புனைவு எழுத்துகளின் தனிக் குரல் . அவரது கதை: தொண்டை புடைத்த காகம் ( இந்து தமிழ், பக் 190 -195) · ஆண்- பெண் உறவின் சிக்கலான புள்ளிகளை- பாலியல் சார்ந்த ஈர்ப்பினை லாவகமாக எழுதுவதில் தேர்ச்சி பெற்ற கை வண்ணதாசனின் கை. அவரது கதை: சற்றே விலகி, உயிர் எழுத்து, (பக்.44- 48) · சாதியமுரண் சார்ந்த கிராம வாழ்வில் தலித்துகளின், குறிப்பாகத் தலித் பெண்களின் துயரத்தையும் தணிந்து போய்விடாத தன்னம்பிக்கையையும் சிறுகதைகளாகத் தொடர்ந்து எழுதிவரு

சல்லிக்கட்டு : வட்டாரப் பண்பாட்டு அடையாளம்

படம்
படப்பிடிப்புக் கருவிகளுடன் தவிக்கும் செய்தி ஊடகக்காரர்களின் ஒருவார காலத் தவிப்பாக ஆகி விட்டது ஜல்லிக்கட்டு. காளைகளால் நிரம்பி வழியும் வாடிவாசலுக்கும், வழக்கறிஞர்களின் வாதங்களால் நிரம்பி வழியும் நீதிமன்ற வாசலுக்கும் இடையே அலையும் ஊடகங்களின் பரபரப்பு போன ஆண்டு நிகழ்வு. இந்த ஆண்டும் நிகழலாம்; இனி ஒவ்வொரு ஆண்டும் தொடரலாம்.

சாகித்திய அகாதெமி: இலக்கியவியலின் போர்க்களம்

படம்
“சாகித்திய அகாதெமியின் விருதுகளைத் திரும்பத்தருதல்” என்பதற்குள் இப்போது நுழைய வேண்டியதில்லை. ‘திருப்பித் தந்தேயாக வேண்டும்’ என்று எதிர்பார்க்கவும் தேவையில்லை. அது அவரவர் விருப்பமும் நிலைபாடும் சார்ந்தது. அதேநேரத்தில் அரசதி காரமும், அதன் துணையில் வளரும் பிளவுசக்திகளும் தொடர்ந்து சகிப்பின்மையை விதைக்கும்போது எழுத்தை வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்டியங்கும் ஓர் எழுத்தாளன், தனது எதிர்ப்புணர்வைக் காட்டாமலும் இருந்து விடக்கூடாது. சகிப்பின்மையையும் தேசத்தின் பல்லிணக்க நிலைக்கெதிரான கருத்துநிலையையும் முன்வைத்து இந்தியா முழுவதும் நிகழ்ந்த போராட்டத்தில் தானே முன்வந்து சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எந்தத் தமிழ் எழுத்தாளரும் பங்கேற்கவேண்டுமென நினைக்கவில்லை என்பது தமிழ் எழுத்துலகத்திற்கு ஒரு களங்கம் என்பதிலும் சந்தேகமில்லை.

கலை - கலைஞன் - காலம் :எஸ். வைத்தீஸ்வரனின் கதையெழுப்பும் விசாரணை

  இலக்கியப்பனுவலென நினைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கி முடிக்கும் எல்லாப் பனுவல்களும் அந்த உணர்வை தந்துவிடுவதில்லை. சில பனுவல்களை அப்படி நினைக்காமலேயே வாசிக்கத் தொடங்கி முடிக்கும்போது ‘நீ வாசித்தது கூடுதல் கவனம் செலுத்தி வாசித்திருக்கவேண்டிய இலக்கியப்பனுவல்’ என மனம் சொல்லும்.  திரும்ப வாசிக்கும்போது இன்னொரு புரிதலும் உருவாகும். அப்படியான புரிதல்கள் கிடைக்கவும், உணர்வெழுச்சி உண்டாகவும் காரணமாக இருப்பவை எழுதுகிறவர் உருவாக்கித் தரும் பின்னணிகள் சார்ந்தவைகள் என்பது ஏற்கத்தக்க ஒன்று

பயிலரங்கு அறிவிப்பு

  தமிழியல் ஆய்வுகள் :  நிகழ்ந்துள்ளனவும்                               நிகழ்த்தப்படவேண்டியனவும்    

மழைக்காலப் பாடல்கள்

இந்தவருடத்து மழை என்னைக் கவிதைகள் எழுதவைத்துவிட்டது நன்றி மழைக்கு---