இடுகைகள்

ஜனவரி, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சந்தேகங்களின் தொகுதி

எழுத்து மட்டுமல்ல எல்லாவிதமான கலைச்செயல்பாடுகளும் ஒருவிதத்தில் மனிதர்களின் அனுபவங்களாகவும், அனுபவங்களின்மேல் எழும் நம்பிக்கைகளாகவும் உள்ளன. அதேபோல் விமரிசனங்கள், அவற்றின்மேல் எழுப்பப்படும் சந்தேகங்களாகவும் சந்தேகங்களுக்கான காரணங்களைத் தொடுப்பதுமாகத்தான் இருக்கின்றன. விமரிசனங்களின் மேல் சந்தேகங்கொள்ளக் கூடுதலாகவே சாத்தியங்கள் இருக்கின்றன.கதாபாத்திரங்கள் அவர்கள் இயங்கிடும் பிரதேசம், அதற்கான காலம் என நிகழ்ச்சிகளை உருவாக்கும் நாடகம், நாவல், போன்றன ஒருவிதத்தில் வரலாறுதான். கவனம் ஒருவரலாறுதான். படைப்பாளியின் பார்வையில் படைப்பில் இடம்பெறும் நிகழ்வுகள் எல்லாமே நடந்தவைகளாகக்கூட இருக்கலாம். இவைகள் தவிர இன்னும் பல நடந்திருக்க கூடும், அவர்கள் அறியாமல். நடந்த எல்லாவற்றையும் பதிவுசெய்வது ஒரு படைப்பாளியின் வேலையும் அல்ல. ஆனால் பதிவுகள் அந்தப் படைப்பாளியின் கோணத்தில்தான் வாசகனிடம் வந்து சேர்கிறது என்பது விளக்கவேண்டிய ஒன்றல்ல. தன் வரலாறாக எழுதப்பட்ட கருக்காக இருந்தாலும்சரி, சிலுவைராஜ் சரித்திரமாயினும்சரி படைப்பாளியின் கோணம் இருக்கத்தான் செய்கிறது. பிரக்ஞை பூர்வமாக சொல்லுவதிலும் சொல்லாமல் தவிர்ப்பதிலும்...

ஒருவிதத்தில் சமூகப் பொறுப்பு என்பதும், அரசியல் நோக்கம் என்பதும் பெருங்கதையாடலின் வடிவங்களே .. அ.ராமசாமியுடன் நேர்காணல்

படம்
உங்களுடைய இளமைக்காலம் குறித்து, குறிப்பாக இலக்கிய நாடகத்துறைக்கு நீங்கள் வருவதற்குக் காரணமாக அமைந்த சம்பவங்கள் .... எனது இளமைப் பருவத்தைப் பற்றிச் சொல்ல சிறப்பாக எதுவும் இல்லை. நான் வெளிப்படுத்துகின்ற கலை , இலக்கிய ஆர்வம் என்பது தானாக வந்ததில்லை. எனது கல்வியின் பகுதியாக நானே உருவாக்கிக் கொண்ட ஒன்றுதான். பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிற காலத்திலேயே கதை படித்தல், நாடகம் பார்த்தல், சினிமாவுக்குப் போதல் என்பதைச் செய்யும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவனாகவே நானும் இருந்தேன். ஆனால் நான் அவற்றையே எனது படிப்புக்கான துறையாகவும் வேலைக்கான ஒன்றாகவும், என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் துறையாகவும் ஆக்கிக் கொண்டேன் என்பதுதான் எனக்கு வாய்த்த ஒன்று.