பாசாங்குகள் இல்லாத ஒரு பகிர்வு: அபத்தம் இதழில் ஓர் உரையாடல்
2023, ஜூன் -ஜூலை மாதவாக்கில் ஒருமாதம் கனடாவில் இருந்தேன். மகன் இருக்கும் ஒட்டாவில் இருந்து கொண்டு அருகில் இருக்கும் சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பயணம் செய்ததோடு, தலைநகர் டொரண்டோ நகருக்கும் சென்றேன். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள் என நண்பர்கள் பலர் அங்கே இருக்கிறார்கள். இரண்டு நாவல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதோடு நண்பர்களோடும் சந்திப்புகளும் இருந்தன. அப்போது அங்கிருந்து வெளியாகும் அபத்தம் இதழின் ஆசிரியர்கள் ஜார்ஜ், கற்சுறா ஆகியோரோடும் சந்திப்பு நடந்தது. சந்திப்பு நடந்த கற்சுறாவின் உணவுவிடுதிக்கு என்னை அழைத்துச்சென்றவர் நண்பர் சின்னசிவா. முழு உரையாடலிலும் அவர் இருக்கவில்லை. பாதிநேரம் இருந்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார். அங்கே நான்குபேரும் பேசிக்கொண்ட உரையாடலைத் தொகுத்துத் தந்துள்ளது அபத்தம் இதழ்.