பெண் உடலை உணர்தல் : உமாமகேஸ்வரியின் இரண்டு கதைகள்
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdXEZD7bhVj1MaLY0gOWDI5pqrP3UsJeL8yGYdUpcl7B6qPvD1-kh-FAkYmThqoSwmj8TcRky0gDxZk2gCHMVaTW6TQ1kiexlHM2AeR89layxi95Zn9wwBVfiOaHcuPgcRogggbKJPSoJd/s320/Umamahes.jpg)
ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதை கொண்டிருக்க வேண்டும்' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான். 'கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை' என்பது போன்ற திகில் தன்மையை ஆரம்பமாகக் கொண்ட கதை உமா மகேஸ்வரியின் குளவி.(காலச்சுவடு, 200/ஆகஸ்டு, 2016) ஒற்றை நிகழ்வைக் கொண்டதாக - கதைக்குள் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்ணின் செயல்பாடுகளை மட்டுமே விவரிப்பதாக இருந்த கதைக்குள் வேலைக்காரப் பெண்ணொருத்தியோடு நடத்தும் அந்த ஒரேயொரு கூற்று அவளைப்பற்றிய இன்னொரு பரிமாணத்தை உருவாக்குகிறது.