இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழியல் ஆய்வு என்னும் பன்முகம்

படம்
தமிழ் ஆய்வு, இயல் என்னும் சொல்லை இடையில் இணைத்துக்கொண்டு தமிழியல் ஆய்வு என்னும் சொற்சேர்க்கை செய்ய நினைக்கும்போது அதன் தளங்கள் பலதரப்பட்டனவாக, அதன் நிலைகள் பலபரப்புகளில் விரிவனவாக ஆகின்றன. தமிழ் பற்றிப் பேசும் ஒரு நிறுவனம் எப்போது தனது பேச்சுகளை விரிக்க நினைக்கின்றதோ, அப்போது அந்நிறுவனச் சொல்லாடல்கள் தமிழ்ச் சொல்லாடல்களாக இல்லாமல் தமிழியல் சொல்லாடல்களாக மாறுகின்றன.

விளையாட்டுகள்: கொண்டாட்டமாகவும் களியாட்டமாகவும் .

என்னைத் தீவிரமான விளையாட்டுக்காரன் என நினைத்துக்கொள்ளவில்லை என்றாலும் விளையாட்டு விரும்பி என்றே நம்புகிறவன்.சொந்த ஊரில் கபடி அணி உருவாக்கி உசிலம்பட்டி வட்டத்திலிருந்து அடுத்த வட்டமான தேனிக்குச் சென்று திரும்பியதுண்டு. பள்ளியில் விளையாண்ட விளையாட்டுகள் கால்பந்தும் கிரிக்கெட்டும்.

இருவரில் ஒருவர் : சூடாமணியின் அந்நியர்கள்

படம்
பெண்ணெழுத்தின் நிகழ்வெளிகளில் முதன்மையானது குடும்பவெளி. பாலினம் சார்ந்த ஒடுக்குமுறை நிலவும் நுண் அமைப்பாக இருப்பது குடும்பவெளிதான் என்ற அடிப்படையில் குடும்ப அமைப்பே தொடர்ந்து விவாதப்பொருளாகப் பெண்களால் முன்னெடுக்கப்படுகின்றன. குடும்ப வெளிக்குள் பெண் x ஆண் என்ற பாலின முரண்பாட்டைக் கட்டமைத்து எதிர்நிலைச் சொல்லாடல்களால் ஆணின் இருப்பும் இயக்கமும் பெண்ணை இரண்டாவதாக உணரச்செய்கிறது என்ற முடிவை நோக்கி நகர்த்திச் செல்வது எளிது என்பதால் கூடக் குடும்பவெளியைக் கதைப்பரப்பாகத் தெரிவுசெய்வது முதன்மை பெற்றிருக்கலாம். 

திருப்பத்தூரில் நாடகவிழா:நவீனத்தமிழ் அரங்கவியல் : தொடரும் சில செயல்பாடுகள்

பிரித்துப்பிரித்து விளையாடுவது நவீனத்துவத்தின் மூன்றாவது விதி. முதல் இரண்டு விதிகள் என்னென்ன என்று கேட்கவேண்டாம். அவைபற்றி இங்கே எழுதப் போவதில்லை. எழுதவேண்டுமென்ற கட்டாயமுமில்லை. ‘நவீன’ என்ற முன்னொட்டோடு இயங்கத் தொடங்கிய தமிழ்க் கலை. இலக்கியச் செயல்பாடுகள் தொடர்ச்சியாகப் பிரிந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த விளையாட்டிலிருந்து அரங்கவியல் மட்டும் தப்பித்துவிடும் எத்தணத்தோடு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. நவீன நாடகம் பலமாகத் தேய்ந்தும் கொஞ்சமாகத் தீவிரப்பட்டும் தொடர்கின்றது. இந்நிலை தமிழின் பலமோ.. பலவீனமோ அல்ல. அரங்கவியலின் பலமும் பலவீனமும்.

நாடகக் கலை: ஆய்வுகளும் அடிப்படை நூல்களும்

நவீன அரங்கியலின் பயணங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது தமிழில் நாடகக் கலையைக் கற்பிப்பதற்கான அடிப்படையான நூல்கள் இல்லை என்ற உண்மையும் வந்துபோனது. தமிழை இயல், இசை, நாடகம் எனப் பிரித்துப் பேசும் நாம் அவற்றை முறையாக க்கற்றுக்கொள்ளத் தேவையான அடிப்படை நூல்களை உருவாக்கியிருக்கிறோமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. தொல்காப்பியம் போன்றதொரு இயல் தமிழ் வரைவிலக்கண நூலை அதன் அர்த்தத் தளங்களில் கற்பிக்காமல் கைவிட்ட பெருமையுடையது தமிழ்க் கல்வியுலகம். இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் அப்படியான நூல்கள் தேவை என்பதைக் கூட உணர்த்தமுடியவில்லை. 

மகளிரியலின் துன்பியல் சித்திரம் : பாவையின் திறவி

படம்
நிகழ்காலத்தில் பெண்ணியம் என்னும் கலைச்சொல் முழுமையான அரசியல் கலைச்சொல்லாக மாறிவிட்டது. இப்படியொரு அரசியல் கலைச்சொல்லை உருவாக்கித் தங்களின் விடுதலை அரசியலைப் பேசுவதற்குப் பெண்ணிய இயக்கங்கள் கடந்து வந்த நடைமுறைத் தடைகளும் கருத்தியல் முரண்பாடுகளும் பற்பல. மனிதத் தன்னிலையின் அடையாளமாக- பரிமாணங்களாகச் சொல்லப்படும் உடலியல், சமூகவியல், உளவியல் கூறுகள் ஒவ்வொன்றிலும் முன்வைக்கப்பட்ட விவாதங்களை வென்றே பெண்கள் கடந்து வந்துள்ளார்கள். உலகிலுள்ள எல்லாப் பெண்களும் அப்படிக் கடந்துவந்துவிட்டார்கள் என்று தடாலடியாக ஒருவர் மறுக்கலாம். ஆனால் பெண்களால் முடியாத பரப்புகள் இருக்கின்றன எனச் சொல்லப்பட்ட ஒவ்வொன்றிலும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட முன்மாதிரிப் பெண்களை உலகம் பரவலாகக் கண்டுவிட்டது.