இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலத்திற்கேற்ற தமிழ் இலக்கியக்கல்வி

படம்
  காலத்திற்கேற்பவும் மாணாக்கர்களின் வேலை வாய்ப்பை நோக்கமாகவும் கொண்டு தமிழ் இலக்கியக் கல்வியை மாற்றும் திட்டத்தை முன்வைத்துப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பன்முகக்கலை அறிவியல் கல்லூரி (Liberal Arts and Science) என்ற பெயருக்கேற்ப அதன் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புள்ள பட்டப்படிப்புகளாக வடிவமைத்துள்ளது   குமரகுரு கல்வி நிறுவனங்களில் கலை அறிவியல் கல்லூரி.     

மனையுறைச் சேவலும் பேடும்

படம்
  பொழுது புலர்ந்தது. சொல்லிவிட்டுச் சேவல் பேடுடன் தனக்கான இரையைத் தேடி இறங்கிவிட்டது. முருங்கை மரத்தின் இலைகளிலிருந்தும் பூக்களிலிருந்தும் காய்களிலிருந்தும் விழுந்து பரவியிருக்கும் தேன் துளிகளையொத்த சிறுதானியங்களைத் தேடி உண்கின்றன இரண்டும். இவ்விரண்டும் மனையுறைவாசிகள்.

கறுப்புமில்லை-வெளுப்புமில்லை: வண்ணங்கள்

படம்
நயன்தாரா - விக்னேஷ் திருமணம் சமூக ஊடகங்களின் பெரும்போக்காக -ட்ரெண்டாக உருட்டப்பட்டன. இரண்டு நாளைக்கு முன் கமல்ஹாசன் நடித்த விக்ரம்- 2 என்ற சினிமாவின் உருவாக்கமும் அது உண்டாக்கிய உணர்வுகளும் உருட்டல்கள். அதற்கு முன் கலைஞர் பிறந்தநாள். எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குதல். இப்படியான உருட்டல்களால் சமூக ஊடகங்களின் இருப்பு தவிர்க்க முடியாதனவாக மாற்றப்படுகின்றன. மாற்றப்படும் நிகழ்வுகளைக் கவனித்தால் அவற்றிற்குப் பேருருத்தன்மைகள் இருப்பதைக் கவனிக்கலாம்.

அ.ராமசாமியின் விலகல் தத்துவம் - தேவி பாரதி

படம்
ஒன்று ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு கைகூடும் கனவு அது. 1957இல் பிறந்த, அப்போதைய கோவை மாவட்டத்தின் மிகச் சிறிய கிராமமொன்றில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த, தன் சக ஆசிரியர்களால் கே.என். எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட நல்லமுத்து ஆசிரியர் - முத்தம்மாள் தம்பதியின் மூத்தமகன் எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு அரசு உயர்நிலைப்பள்ளியொன்றில் குமாஸ்தாவாக இருப்பவன், 1993இல் எழுதி வெளியிட்ட 'பலி' என்னும் தமிழின் புகழ்பெற்ற தலித் சிறுகதை 2012இல் கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள ரானடே ஆடிட்டோரியத்தில் தமிழின் மூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமியின் எண்பதாவது பிறந்தநாளையொட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மூன்றுநாள் கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய நிகழ்வாக மேடையேற்றப்படவிருந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இப்போதைய தமிழ்த்துறைப் பேராசிரியரும் முன்னாள் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியரும் முன்னாள் வார்சா பல்கலைக்கழக ஆசியவியல் துறைத் தலைவரும் இந்த நாடகப்பிரதியை உருவாக்கியவரும் அதன் இயக்குனருமான பேராசிரியர் அ. ராமசாமியின...