இது நினைவஞ்சலி அல்ல
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது வாழ்த்துத் தெரிவித்து ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். ரமேஷ் பிரேதனுக்கு வாழ்த்து 2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட உள்ளது. பாண்டிச்சேரி (1989-97) காலத்தில் நேரடிப்பழக்கம் உண்டு. அங்கு நடக்கும் இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளில் சந்தித்துக் கொள்வோம். நிறப்பிரிகை சார்பாக நடந்த கூட்டு விவாதங்களின் போதெல்லாம் இருந்ததுண்டு. அதிகம் பேசுபவராகப் பிரேம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் இவரது வாசிப்பும் உரையாடலும் இருவரது பெயரிலுமாக வந்த எழுத்துகளில் பங்காற்றியதாக அவர்களின் நண்பர்கள் சொல்லுவார்கள். ரமேஷ் என்றே அழைப்போம். அவரோடு இணைந்து எழுதிய இன்னொருவரைப் பிரேம் என்று அழைப்போம். இருவரும் சேர்ந்து ரமேஷ்- பிரேம் என்ற பெயரிலும், பிரேதா-பிரேதன் என்ற பெயரில் எழுதியனவற்றைக் கிரணம், சிதைவு போன்ற இதழ்களில் வாசித்ததுண்டு. அந்தக்காலத்தில் இவர் தனியாக எதுவும் எழுதியதாக நினைவில் இல்லை. இப்போது ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் எழுதும் கவிதைகளையும் சிறுகதைகளையும் வாசித்திருக்கிறேன். முகநூல் குறிப்புகளாகச் சிலவற...