பரபரப்பின் கணங்களும் விளைவுகளும்
தமிழின் நிகழ்கால இலக்கியத் தளத்திலும் சிந்தனைத்தளத்திலும் செயல்படும் பத்து எழுத்தாளர்களின் பத்து நூல்களை வெளியிடும் வெளியீட்டு நிகழ்ச்சியை அந்நூல்களைப் பதிப்பித்துள்ள உயிர்மைப் பதிப்பகம் சென்னை ஓரியண்ட் லாங்மேன் புத்தகக்கடையின் பின்புறம் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் - 07-01-06, மாலை 6 மணிக்குத் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தது. தமிழ் நாட்டின் மதிப்புமிக்க அரசியல் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு தலைமை தாங்கி நூல்களை வெளியிட , ஒவ்வொரு நூலாக வெளியிடுவதும் அதைப் பெற்றுத் கொண்டவர் , பதினைந்து நிமிடத்திற்குள் நூலை அறிமுகப்படுத்தியோ , விமரிசனம் செய்தோ பேசி முடிப்பது என்பது பதிப்பகத்தாரின் ஏற்பாடு.