நிர்வாக நடைமுறைகளும் நீதிபரிலானமும் - சில குறிப்புகள்
ஒற்றை அடையாள அட்டை தரப்படவேண்டும்.
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒற்றை அடையாள அட்டையை இப்போதாவது தரவேண்டும். அதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது. ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை அதனைச் செய்யவேண்டும். இதனை முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே செய்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக 18 வயதைத் தாண்டியவர்களுக்கு வாக்குரிமை அட்டையை வழங்கும் சிறப்புச்சீர்திருத்தம் நடக்கிறது.
பிரிட்டானிய ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற இந்தியாவின் குடிமக்களாக ஆகும் தகுதி இவை; இந்தத் தகுதியோடு கூடிய மக்களின் எண்ணிக்கை இவ்வளவு; இதில் ஒருவரின் குறியீட்டு எண் இது என்ற அடையாள அட்டையைத் தரவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒவ்வொன்றும் இத்தகைய எண்ணைக் கொண்டே குடிமக்களை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நாட்டிற்குள் பணியாற்றவரும் ஒருவருக்கு தற்காலிகக் குடியுரிமை அட்டையை வழங்குகின்றார்கள். அந்த நாடுகளுக்குள் வரும் விருந்தினர்களுக்கு இத்தகைய அடையாள அட்டையை வழங்குவதில்லை.
நாட்டின் நிரந்தரக்குடிகளுக்குரிய குறியீட்டு எண்களும் தற்காலிகக் குறியீட்டு எண்ணைக் கொண்ட அடையாள அட்டைகளும் வேறானவை. அவற்றின் பயன்பாடுகளும் வேறானவை. அரசு தரும் சில சலுகைகளைப் பெறுவதற்கும் தனியார் துறையினரின் வணிகச் சூழலைப் பயன்படுத்தும் வாய்ப்புக்கும் இத்தகைய அட்டைகள் தேவை. இந்த அட்டையைக் கொண்டே கல்வி, வங்கி, மருத்துவமனை, போக்குவரத்து, வணிக நிறுவனங்கள் போன்ற பலவற்றிலும் பதிவுகளும் தொடர்பாடலும் நடக்க வேண்டும். இப்போது இருக்கும் ஆதார் அட்டையும் அதிலிருக்கும் குறியீட்டு எண்ணையும் இதற்கு முழுமையாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அதனை முறையாகச் செய்யாததால் குடிமைப்பொருள் வழங்கல், வாக்களிப்பு போன்றனவற்றிற்குப் பயன்படுத்தத் தயங்குகின்றன ஒன்றிய, மாநில அரசுகள். தனியார் நிறுவனங்களோ அவ்வப்போது மாறக்கூடிய அலைபேசி எண்களைத் தொடர்பாடலாகப் பயன்படுத்துகின்றன.
ஒரு நபருக்கு ஓரட்டை என்பதை ஒன்றிய அரசும் மாநில அரசும் ஏற்காமல் தவிர்ப்பதுபோலவே பல்வேறு நிறுவனங்களும் தவிர்க்கின்றன. இப்படி இருப்பதின் பின்னணியில் எளிமையான ஊழல் காரணம் ஒன்றிருப்பதாகவே நினைக்கின்றேன். ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு பிரிவுக்கும் தனியான அடையாள அட்டைகளை வழங்குவதற்காகச் செலவழிக்கும் தொகையில் அந்தந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் தனியாகப் பலன் அடைகின்றார்கள்.
அரசு நிறுவனங்களில் இப்படி நடப்பதை எனது அனுபவத்தில் சொல்லமுடியும். நான் பணியாற்றிய கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு பொதுவான அடையாள அட்டை ஒன்று வழங்கப்படும். பிறகு நூலக அடையாள அட்டை, தேர்வுக்கான அடையாள அட்டை, விளையாட்டு, நாட்டுநலம், இளைஞர் நலம் எனச் சிறப்புக்குழுக்களின் அடையாள அட்டை என ஒவ்வொன்றுக்குள் நுழையும்போதும் தனித்தனி அட்டைகளை வழங்குவார்கள். அதற்குப் பதிலாகப் பொது அட்டையிலேயே ஒவ்வொன்றையும் கூட்டித் தரும் ( Top -Up) தொழில்நுட்பம் இருக்கின்றது என்பதற்குள்ளேயே நுழைவதில்லை.
ஒரே நாடு ஒரே பண்பாடு எனப் பேசுகின்றவர்கள் கூட ஒரு மனிதர்; ஒரேயொரு அடையாள அட்டை எனப் பேசுவதில்லை என்பதுதான் நகை முரண்.
இதற்கு மாறாகப் பொதுச் சமூகத்தை- குடிமைச் சமூகத்தின் பெரும்பாலான மனிதர்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வழக்குகளும் தொடர்கதைகளின் அத்தியாயங்களாக ஆகிவருவதை வருத்தத்தோடு கவனித்து விட்டு ஒதுங்கிக் கொள்வது சமூகப் பொறுப்பின்பாற்பட்டதாகாது. ஏனென்றால் பொதுச் சமூகத்தைப் பாதிக்கக் கூடிய வழக்குகளின் நடவடிக்கைகளும் முடிவுகளும் திருப்பங்கள் நிறைந்த தொடர்கதைகளாக ஆக்கப்பட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள் எத்தகையன என்பதைச் சரியாகக் கணித்துச் சொல்லும் ஆற்றல் நீதிமன்றங்களுக்கே கூட இல்லை.
சமூகத்தின் பொது அமைதிக்கே கூட சில வழக்குகளின் முடிவுகள் பாதகத்தை ஏற்படுத்தி விடக்கூடும்.இத்தகைய வழக்குகள் பல நீதிமன்றங்களின் எல்லைக்குள் வராமலேயே முடிந்திருக்க வேண்டியவை என்ற போதிலும் அவற்றில் தொடர்புடைய தனிநபர்கள் தொடக்க நிலையிலேயே நீதிமன்றங்களின் கதவைகளைத் தட்டிவிடுகின்றனர். தனக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்ற சுயநலத்தின் பெயராலும், சிலவகையான குழுக்கள் பாதிக்கப் படக்கூடும்; அதனைத் தடுத்தாக வேண்டும் என்ற பொது நலத்தின் பெயராலும் தொடரப்படும் வழக்குகள் கால எல்லைக்குள் இயங்க வேண்டிய அமைப்புகளை இயங்க விடாமல் செய்து வருகின்றன.
இந்தப் போக்கு அதிகரித்து வருவது நீதிமன்றங்களின் மேல் குடிமைச் சமூகத்திற்கும் அதன் உறுப்பினர்களான குடிகளுக்கும் உள்ள நம்பிக்கையைக் காட்டலாம் என்று பலர் வாதிடக்கூடும். அதே நேரத்தில் மக்களாட்சி முறையின் மேலும் அதன் தொடர் அமைப்புக்கள் மேலும் நமது சமூகம் நம்பிக்கை இழந்து கொண்டே வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பாசனத்திற்கு அணையிலிருந்து நீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை கூட நீதிமன்றங்களுக்கு வருகின்றன. இந்தக் கோரிக்கையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசின் பொதுப்பணித்துறையைச் சார்ந்தது. அரசின் வேலை வாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள் அறிவிக்கை வந்த நிலையிலேயே நீதிமன்றங்களை அணுகி தடைகள் வாங்கப் படுகின்றன. போக்குவரத்துத் துறையில் அதன் ஊழியர் தனது பணியைச் சரியாகச் செய்யவில்லை என்பதற்கும், அரசு மருத்துவ மனைகளில் கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படவில்லை என்பதற்காகவும் நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலை வருவது நல்லதல்ல.
பொதுத்துறைகளும் நீதிமன்றமும்
மக்களாட்சி நடக்கும் ஒரு நாட்டில் ஒவ்வொரு துறைசார்ந்த எண்ணங்களும் முடிவுகளும் ஒன்று போல இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானதல்ல. ஆனால் நமது நாட்டில் ஒரேயொரு துறைசார்ந்த எண்ணங்களும் முடிவுகளும் கூட ஒன்று போல இருப்பதே இல்லை. அந்த நேரத்துச் சிந்தனையில் தற்காலிகமான முடிவுகளே எடுக்கப் படுகின்றன. அப்படி எடுக்கும் முடிவுகள் அந்த நேரத்தில் ஏற்கத்தக்கது போலத் தோன்றலாம். சரியான நீதி கிடைத்து விட்டது என்று கூடச் சொல்லலாம். ஆனால் தற்காலிக மகிழ்ச்சி பல நேரங்களில் அந்தத் துறையின் பொது நியதிக்குப் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறை சார்ந்த பல முடிவுகள் நீதிமன்றங்களால் எடுக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். குறிப்பாகத் தொழில் கல்விப் படிப்புகளான மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின் படியே தான் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டிலும் அந்தத் தொடர்கதை பல கட்டங்களைத் தாண்டித் தான் நடந்து வருகிறது. மருத்துவக் கல்விக்கான அனுமதி நிரந்தரமான முடிவு என்று யாராவது சொல்ல முடியுமா.? அத்தோடு தனியார் மற்றும் சுயநிதிப்பொறியியல் கல்லூரிகளின் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் முடிவுகளையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்.டாக்டர் தொழில் தான் உன்னதமானது; இந்த தேசத்தில் அதிக பட்ச இலட்சியம் என உருவாக்கப் பட்டுள்ள பொதுப் புத்தியின் ஓட்டத்தோடு ஊடகங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் வெளியிடுகின்றன. அப்பொதுக் கருத்தோட்டத்தின் தாக்கத்தோடு தான் நீதித்துறையின் வழிகாட்டுதலும் இருக்கிறது.
ஒரு கல்வி வாரியம் பின்பற்றும் பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள்கள் சென்ற ஆண்டு எளிமையானவை; இந்த ஆண்டு கடினமானவை என்ற வாதங்கள் எல்லாம் பொதுப்புத்தி சார்ந்த வாதங்களாக இருக்க முடியுமே தவிர அறிவியல் பூர்வ உண்மை களாக இருக்க முடியாது. அத்துடன் நிகழ்காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்; கடந்த காலம் என்பது இறந்துவிட்ட காலம் என்று முடிவு செய்து அவர்களுக்கு வாய்ப்பே வழங்கக் கூடாது என வாதிடுவது எப்படிச் சரியாக இருக்க முடியும்.
இதே தேசத்தில் தான் அரசாங்கம் நடத்தும் குடிமைப் பணியாளர் - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.- தேர்வுகளுக்குப் பல மருத்துவர்களும், பொறியாளர்களும், கல்லூரிப் பேராசிரியர்களும் தயார் செய்து தேர்வு எழுதுகின்றனர். ஏற்கெனவே அந்தத்துறையில் வேலைகளைப் பெற்றுக் கொண்டு பணியில் சேர்ந்த பின்னும் படித்து குடிமைப் பணிகளுக்கு வருகின்றனர். அங்கெல்லாம் ஏற்கெனவே உங்களுக்கு வேறு வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது; அதனால் உங்களுக்கு இங்கு நேர்காணல் கிடையாது எனச் சொல்வதில்லை. அதற்கு மாறாக அமைப்புகளும் ஊடகங்களும் பாராட்டுக்களை வழங்குவதையே கண்டுள்ளோம்.
ஒரு தேசத்தின் குடிமகன் அல்லது குடிமகள் எந்தத் துறையில் தனது அறிவைப் பெறுவது என்பதையும், அந்த அறிவை எந்தக் கூட்டத்திற்குப் பயன்படுத்துவது என்பதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட முடிவாக இருக்க வேண்டுமே ஒழிய அமைப்புகளின் தற்காலிக முடிவுகளால் தீர்மானம் ஆவதாக இருக்கக் கூடாது. எல்லா வகையான கல்விப் பட்டங்களிலும் சேருவதற்கு அந்தத் துறை சார்ந்த கல்வியாளர்களின் குழுவான பாடத்திட்டக் குழுவினர் தான் அடிப்படை விதிகளை உருவாக்குகின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட விதிகள், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள பொதுப் பேரவைகளான ஆட்சிப் பேரவைகளில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுகின்றன. அவ்வொப்புதலையும் கூடப் பல்கலைக்கழகங்களின் உயர் அமைப்புக்களான ஆட்சிக் குழுக்கள் விரிவாக விவாதித்து மேலொப்புதல் வழங்கலாம் அல்லது மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பலாம். இத்தகைய வழிமுறைகள் இப்போதுள்ள உயர்கல்வித் துறையில் இருக்கின்றன.
கல்வித்துறையில் மட்டும் அல்ல; அரசு மற்றும் பொதுத்துறைகள் எல்லாவற்றிலும் இந்த நான்கு அடுக்கு முறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் அந்தத்துறை சார்ந்த பல தரப்புப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். அவர்களோடு பொது மக்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இருக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன. அவற்றைத் தலைமையேற்று ஒருங்கிணைக்கும் பொறுப்பில் தான் அந்தத்துறையின் தலைமைப் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும்.
நடைமுறையில் நமது அமைப்புக்கள் அவ்வாறு செயல்பட வில்லை என்பதே தனிமனிதர்களின் கருத்தோட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு துறையின் ஆலோசனை அமைப்புக்களும் அதன் உறுப்பினர்களும் தங்களின் கடமை களையும் உரிமைகளையும் தவற விட்டு விட்டு அந்தந்த துறையின் தலைமைப் பொறுப்பாளர்களின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு எல்லாவற்றிற்கும் ஒப்புதல் அளிப்பவர்களாக இருக்கின்றனர் என நினைக்கிறார்கள். அல்லது தனக்கும் தனது குழுவிற்கும் சாதகமான அம்சங்களுக்காக வாதாடி அதிகாரத்தில் பங்கு பெற்றுக் கொள்பவர்கள் மட்டுமே என்று கருதுகிறார்கள்.
பொதுநலன் சார்ந்து தனது உறுப்பினர் கடமையாற்றும் மனிதர்களைக் காண முடியாத நிலையில் அந்த அமைப்புக்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், அந்தத் துறைக்கு வெளியில் இருந்து நீதியைப் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.இந்தப் போக்கைத் தீவிரப்படுத்தும் விதத்தில் நீதிமன்றங்களும் ஊடகங்களும் பணியாற்றுகின்றன. அது ஒருவிதத்தில் ஆறுதலற்றவனுக்கு ஆறுதல் தரும் கானல் நீர் தான். என்றாலும் இந்தப் போக்கு தொடர்ந்து கொண்டிருப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்பதைச் சொல்ல வேண்டியவர்கள் ஊடகத்துறைச் செயலாளிகளும் அறிவாளிகளும் என்பதை மறந்து விடக் கூடாது.
மக்களாட்சியில் பொறுப்புணர்வுகள்
ஜனநாயகத்தைப் பாதுகாக்க நமது அமைப்பு ஏற்படுத்தியுள்ள இந்தப் பல அடுக்கின் உறுப்பினர்கள், ஒவ்வொரு கட்டத்திலும் அதனைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களைப் பதவி காரணமான தலைவர்கள் என்பதாகப் பார்க்க வேண்டுமே ஒழிய, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டவர்களாகக் கருதவேண்டியதில்லை. அமைப்புகளில் செயல்படும் ஒவ்வொருவரும் சிந்தனை செய்வதும், செயல்படுவதும் அவசியம்.
அனைவருக்குமாகத் தலைவர்களே சிந்திப்பார்கள் என நினைப்பதும், அவர்களது சிந்தனைகளின்படி செயல்படும்போது கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பணியில் பங்கு பெற்றதாகவே இருக்கும். அதனால் தனிமனிதர்களுக்கும் சமூகத்திற்கும் பாதகம் ஏற்படும் போது இந்த நீதிமானின் ரத்தத்தில் எனக்குப் பங்கில்லை என்று சொல்லித் தப்பித்து விட முடியாது.
இவை குறியீட்டு உத்திகள்
டிசம்பர் 28, 2024
நமது காலம் ஊடகங்களின் காலம். ஊடகங்களுக்குப் பெருந்திரள் போராட்டங்களைவிடக் குறியீட்டுப் போராட்டங்கள் வசதியானவையாக இருக்கின்றன. ஒத்திகைப் பார்த்த காட்சிகளோடு கூடிய குறியீட்டுப் போராட்டங்களைப் பல கோணங்களில் காட்சிப்படுத்த முடிகிறது. நேர்நிலையிலும் எதிர்நிலையிலும் விவாதங்களை உருவாக்க முடிகிறது. அதன் வழியாக உருவாகும் அரசியல் சொல்லாடல்களைப் பெருந்திரளிடம் - வாக்காளர்களிடம் நீண்டகாலத்திற்குப் பதிய வைக்க முடிகிறது. அந்த வ'கையில் அண்ணாமலையின் 'சாட்டையடிப்போராட்டம்' காலத்திற்கேற்ற வடிவம் என்றே சொல்வேன்.
பகுத்தறிவோடும் நவீனத்துவப் பார்வையோடும் அரசியல் இயங்க வேண்டுமென நினைப்பவர்களுக்குப் பா.ஜ.க.வின் மாநிலத்தலைவரின் போராட்ட வடிவங்கள் நகைப்புக்குரியனவாகத் தோன்றலாம். இந்தியாவின் தேர்தல் அரசியலைச் சமகாலப்புரிதலோடும் நவீன வாழ்க்கையின் அர்த்தத்தோடும் அந்தக் கட்சி அணுகவில்லை. எப்படியும் வெற்றி என்ற கீதையின் உபதேசப்படியும் சாணக்கிய நீதியின்படியும் தேர்தலை அணுகுகிறது .
பா.ஜ.க.வின் தேர்தல் நகர்வுகள் வாக்கு வங்கியின் பொது உளவியலைச் சரியாகத் திட்டமிட்டுக்கொண்டு அதற்கேற்ற உத்திகளைத் தேர்வு செய்வதாக இருக்கிறது. தேசியக்கட்சியாக இருந்தபோதிலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் பரப்புரைகளை மாற்றுகிறார்கள். ஒரு மாநிலத்திற்குள்ளேயே மாவட்ட எல்லைக்குள்ளும் ஒரு தொகுதிக்குள்ளும் வேறு உத்திகள் பின்பற்றப்படுகின்றன. அதன் பின்புலத்தில் இருப்பது சாதியவாதக் கணக்கும் மதவாதக் கணக்குகளும் மட்டுமே.
தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதற்கான அரசியலை முன்னெடுப்பதைத் தவிர்த்துவிட்டு, இரண்டாமிடம் நோக்கிய நகர்வுகளே இப்போது அதன் இலக்குகள்.
தனது வாக்குவங்கியின் பொதுமனம் சடங்குகள், நம்பிக்கைகள், சாதிப் பெருமைகள், மதப் பெரும்பான்மை வாதம் கொண்டவர்களால் ஆனது என்பதைத் திட்டவட்டமாக அறிந்து செயல்படுகிறார்கள். அத்தோடு தமிழகம் பகுத்தறிவு பேசும் கட்சிகளின் வெளி அல்ல என்பதை நிரூபிப்பதும் பா.ஜ.க.வின் முதன்மையான இலக்கு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இந்தியச் சாதிய மனம், தன்னை வருத்திக்கொண்டு கடவுளிடம் மன்றாடினால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையில் இயங்கும் தன்மை கொண்டது. கிராமியத் தெய்வங்களை வணங்குபவர்களின் நம்பிக்கையோடு தொடர்புடையவை இந்த அடையாளங்கள். செருப்பணியாமல் நடத்தல், சாட்டையால் தன்னையே அடித்து வருத்திக்கொள்ளுதல் போன்றன இயல்பான வடிவங்களாக உள்ளன. சாட்டையால் மட்டுமல்ல இதைவிடக் கூடுதலாக வருத்திக்கொள்ளும் சடங்குகள் எல்லாம் உள்ளன. பெருந்திரளாகச் சௌடாம்பிகைக்கு முன்னால் கத்தியால் மார்பிலடித்துக் காயப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் வரிசையாக நிற்க வைத்துத் தேங்காயைத் தலையிலடித்து உடைக்கும் வழிபாடுகள் இருக்கின்றன.
பொதுமனத்தின் போக்கோடு மட்டுமல்லாமல், தனித்தனி சாதிகளின் நம்பிக்கைகளை உள்வாங்கிப் போராட்ட வடிவங்களைத் தேர்ந்தெடுத்துக் கட்சிக்காரர்களுக்குப் பயிற்சி அளித்துக் களம் இறக்கும் பணியைத் திருவாளர் அண்ணாமலை செய்யக்கூடும். பகுத்தறிவுப் பார்வையோடு வைக்கும் விமரிசனங்களை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். இவையெல்லாம் அண்ணாமலையின் தேர்தல் உத்திகள்
மாற்றப்படும் சொல்லாடல்கள்
மார்ச் 05, 2021
தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களில் திரும்பத் திரும்ப உருவாகி உருண்டுகொண்டே இருக்கும் முதன்மையான எதிர்வு பிராமணர் x பிராமணர் அல்லாதோர் என்பது. இதனை உருவாக்கியவர்கள் பிராமணர் அல்லாதோரிலிருந்து உருவான பெரியாரும் அவரது வழித்தோன்றல்களும். அதனை மாற்றித் தமிழின் முதன்மைச் சொல்லாடலாக ஆக்கப்பட்ட சில எதிர்வுகள் உண்டு. அவற்றுள்,ஏழைகள் x பணக்காரர்கள் எனப்பேசிய வர்க்க அரசியல் முற்பட்டது. அதனைத் தொடர்ந்து உருவான தலித்துகள் x தலித்தல்லாதோர் எனப்பேசிய விளிம்பு நிலை அரசியல் காலத்தில் பிற்பட்டது.
வர்க்க அரசியலும் விளிம்புநிலை அரசியலும் தலா பத்தாண்டுகள் செல்வாக்கோடு இருந்தன.
1960 களின் பிற்பாதியில் பிராமணரல்லாதார் அரசியல் அதிகாரத்திற்கு வந்துவிட்ட நிலையில் அதன் மீது ஏற்பட்ட அதிருப்திகளும் ஏமாற்றங்களும் வேறுவகைச் சொல்லாடல்களுக்குள் நகர்த்தும்/ நகரும் வேலைகளைச் செய்தன. அப்போது உருக்கொண்ட சொல்லாடலே வர்க்க அரசியல். சமத்துவம், சமதர்மம் எனப்பேசிய பொதுவுடைமை இயக்கங்களின் தோற்றம் பிராமணரல்லாதார் இயக்கங்களுக்கு முற்பட்டது என்றாலும் எல்லாத்தளத்திலும் முதன்மைப்பட்ட காலமாக எழுபதுகளின் பின்பாதியையும் எண்பதுகளின் முன்பாதியையும் சொல்லவேண்டும்.
1990 களில் ஏற்பட்ட சோவியத் வீழ்ச்சியும் உலக மயத்தின் எழுச்சியும் சேர்ந்து வர்க்க அரசியலைத் தளரச்செய்தன. அந்த இடத்தை விளிம்புநிலை அரசியல் அல்லது தலித் அரசியல் பிடித்துக்கொண்டது. பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழா தந்த எழுச்சி விளிம்புநிலை அரசியலைக் குறிப்பான தலித் அரசியலாக மாற்றியது. அதன் செல்வாக்கும் வளர்ச்சியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிதைக்கப்பட்டது . சிதைத்ததின் பின்னணியில் இருப்பது மத அரசியல். இந்தியாவில் மத அரசியல் என்பது பிராமண மேலாண்மையைத் திரும்பக் கொண்டுவர நினைக்கும் அரசியலன்றி வேறில்லை.
பிராமணர் x பிரமாணரல்லாதோர் அரசியலில் ஆதிக்கத்தின் குறியீடாக இருந்த பிராமணர்கள் வர்க்க அரசியலிலும் தலித் அரசியலிலும் பின்னகர்த்தப் பட்டார்கள். பிராமணர்களின் இருப்பு கண்ணுக்குப் புலப்படாத இருப்பாக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் ஒருவகையில் அவர்களைப் பாதிக்கப்பட்டோரின் இடத்திற்கு நகர்த்தியது. பிராமணர்களிலும் ஏழைகள் உண்டு என்ற கருத்தும், தலித்துகளைப் போலவே பிராமணர்களும் விளிம்புநிலையில் தள்ளப்பட்டுள்ளனர் என்ற சொல்லாடல்களும் உருவாக்கப்பட்டதை நினைவில் கொள்ளவேண்டும்.
1970 முதல் 2020 வரையிலான ஐம்பதாண்டுக்காலத்தை எனது அறிதலின் காலமாக நினைக்கிறேன். இந்த அரைநூற்றாண்டுக் காலத்தை கருத்தியல் எதிர்வுகள் வழியாகவே கடந்து வந்திருக்கிறேன். இப்படிக் கடந்ததைத் தொடரமுடியாமல் தடுக்கின்றன அண்மைய நிகழ்வுகள். குறிப்பாகக் கடந்த ஐந்தாண்டுகளின் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் பாரதிய ஜனதாவை மையப்படுத்திய சொல்லாடல்களாக மாற்றிவிட்டார்கள்.
செல்வி ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் தமிழ்நாட்டில் தொடரும் ஆட்சியை அந்தக் கட்சியே நடத்துகிறது என்ற பாவனையை உண்டாக்கி விட்டது. அ இ அதிமுகவின் உடையக்காரணம் அதுதான். உடைந்த கட்சியை ஒட்டுவைத்ததும் அதுதான். ஒட்டிய பின்னும் நிரந்தரத்தன்மையை உண்டாக்காமல் தற்காலிகத் தன்மையை நீட்டிப்பதின் பின்னணியிலும் அதுதான். இப்போது தேர்தல் கூட்டணிகளை உருவாக்குவதில் அது ஒரு முனை; வலுவான முனை. தனது இருப்பைக் காட்டிக்கொள்ள எதனையும் தவறவிடுவதில்லை பா.ஜ.க.. திருமதி சசிகலா குற்றவாளி எனச் சிறைக்கு அனுப்பியதும் அதுதான். டி.டி.வி. தினகரனை அமைதியாக்கியதும் அதுதான். ஆளுங்கட்சி உடையப் போகிறது என்பதின் பின்னணியில் இருப்பதும் அதுதான். சசிகலா அரசியலுக்கு வருகிறார் எனச் சொல்லவைப்பதும்; அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார் எனச் சொல்லத்தூண்டுவதும் அதுதான் எனக் கருத்துருவாக்கம் நடந்துவிட்டது. எல்லாம் அதுவாக இருக்கும் இந்த நிலையில் பாரதப்போரின் இடையில் உபதேசிக்கப்பட்ட கீதாபதேசத்தின் வரிகள் -எல்லாம் நானே; நீங்கள் எல்லாம் கருவிகள். கொல்வதும் நானே; கொடுப்பதும் நானே - என்பன நினைவுக்கு வரலாம்.
தமிழ்நாட்டு மக்களிடம் - வாக்காளர்களிடம் குறிப்பிட்ட வாக்குச் சதவீதம் எதுவும் இல்லாமலேயே எல்லாவற்றின் எதிர்வாகவும் அந்தக் கட்சி மாறிக் கொண்டுவிட்டது. எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதான பாவனையை உருவாக்கிவிட்டது. தி.மு.க x பா.ஜ.க., என்பதான இரட்டை எதிர்வின் பின் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், முன் ஒன்றாக மாறுவது அடுத்த கட்ட வேலை. அதுவும் நடக்கலாம்.
நடத்த நினைக்கும் இந்த நகர்வில் பா.ஜ.க. என்பது சனாதன மீட்பு; முதலாளிய மீட்பு என்பதை நேரடியாகச்சொல்லும் கருவிதான். அதன் கருத்தியல் வடிவம் என்பது பிராமணர் x பிராமரல்லாதார் என்று பெரியார் கட்டமைத்த எதிர்வின் தற்போதைய வடிவம் தான். இப்போதும் பிராமணர்கள் கண்ணுக்குப் புலப்படாத இருப்பாகப் பா.ஜ.க.விற்குள் அலைகின்றார்கள். கண்ணுக்குப் புலப்படாதனவற்றை மருத்துவ அறிவியல் கிருமிகள் என்கிறது.
#தேர்தல்2021
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒற்றை அடையாள அட்டையை இப்போதாவது தரவேண்டும். அதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது. ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை அதனைச் செய்யவேண்டும். இதனை முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே செய்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக 18 வயதைத் தாண்டியவர்களுக்கு வாக்குரிமை அட்டையை வழங்கும் சிறப்புச்சீர்திருத்தம் நடக்கிறது.
பிரிட்டானிய ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற இந்தியாவின் குடிமக்களாக ஆகும் தகுதி இவை; இந்தத் தகுதியோடு கூடிய மக்களின் எண்ணிக்கை இவ்வளவு; இதில் ஒருவரின் குறியீட்டு எண் இது என்ற அடையாள அட்டையைத் தரவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒவ்வொன்றும் இத்தகைய எண்ணைக் கொண்டே குடிமக்களை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நாட்டிற்குள் பணியாற்றவரும் ஒருவருக்கு தற்காலிகக் குடியுரிமை அட்டையை வழங்குகின்றார்கள். அந்த நாடுகளுக்குள் வரும் விருந்தினர்களுக்கு இத்தகைய அடையாள அட்டையை வழங்குவதில்லை.
இரண்டாண்டுகள் போலந்தில் பணியாற்றியபோது எனக்கு வழங்கப் பெற்ற அட்டையில் நான் இருக்கக்கூடிய கால அளவைக் குறிப்பிட்டே போலந்து அரசாங்கம் ஓரட்டையை வழங்கியது. அமெரிக்காவில் பணியாற்ற வருபவர்களுக்குத் தனி அடையாளம் கொண்ட எண்ணும் வண்ண அட்டையும் தரப்படுகின்றது. பச்சை அட்டை பெற்றவர்கள் குடியுரிமை பெற்றவர்கள். மற்றவர்கள் வேலைக்காக வந்தவர்கள்; வேலை இல்லையென்றால் வெளியேற வேண்டியவர்கள். ஆறுமாத காலம் தங்கியிருந்து சுற்றிப்பார்க்க அனுமதி உண்டு. அதற்குப் பிறகு ஒருநாளும் அனுமதிக்க மாட்டார்கள். மீறினால் இன்னொரு முறை நுழைய முடியாது.
நாட்டின் நிரந்தரக்குடிகளுக்குரிய குறியீட்டு எண்களும் தற்காலிகக் குறியீட்டு எண்ணைக் கொண்ட அடையாள அட்டைகளும் வேறானவை. அவற்றின் பயன்பாடுகளும் வேறானவை. அரசு தரும் சில சலுகைகளைப் பெறுவதற்கும் தனியார் துறையினரின் வணிகச் சூழலைப் பயன்படுத்தும் வாய்ப்புக்கும் இத்தகைய அட்டைகள் தேவை. இந்த அட்டையைக் கொண்டே கல்வி, வங்கி, மருத்துவமனை, போக்குவரத்து, வணிக நிறுவனங்கள் போன்ற பலவற்றிலும் பதிவுகளும் தொடர்பாடலும் நடக்க வேண்டும். இப்போது இருக்கும் ஆதார் அட்டையும் அதிலிருக்கும் குறியீட்டு எண்ணையும் இதற்கு முழுமையாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அதனை முறையாகச் செய்யாததால் குடிமைப்பொருள் வழங்கல், வாக்களிப்பு போன்றனவற்றிற்குப் பயன்படுத்தத் தயங்குகின்றன ஒன்றிய, மாநில அரசுகள். தனியார் நிறுவனங்களோ அவ்வப்போது மாறக்கூடிய அலைபேசி எண்களைத் தொடர்பாடலாகப் பயன்படுத்துகின்றன.
ஒரு நபருக்கு ஓரட்டை என்பதை ஒன்றிய அரசும் மாநில அரசும் ஏற்காமல் தவிர்ப்பதுபோலவே பல்வேறு நிறுவனங்களும் தவிர்க்கின்றன. இப்படி இருப்பதின் பின்னணியில் எளிமையான ஊழல் காரணம் ஒன்றிருப்பதாகவே நினைக்கின்றேன். ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு பிரிவுக்கும் தனியான அடையாள அட்டைகளை வழங்குவதற்காகச் செலவழிக்கும் தொகையில் அந்தந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் தனியாகப் பலன் அடைகின்றார்கள்.
அரசு நிறுவனங்களில் இப்படி நடப்பதை எனது அனுபவத்தில் சொல்லமுடியும். நான் பணியாற்றிய கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு பொதுவான அடையாள அட்டை ஒன்று வழங்கப்படும். பிறகு நூலக அடையாள அட்டை, தேர்வுக்கான அடையாள அட்டை, விளையாட்டு, நாட்டுநலம், இளைஞர் நலம் எனச் சிறப்புக்குழுக்களின் அடையாள அட்டை என ஒவ்வொன்றுக்குள் நுழையும்போதும் தனித்தனி அட்டைகளை வழங்குவார்கள். அதற்குப் பதிலாகப் பொது அட்டையிலேயே ஒவ்வொன்றையும் கூட்டித் தரும் ( Top -Up) தொழில்நுட்பம் இருக்கின்றது என்பதற்குள்ளேயே நுழைவதில்லை.
ஒரே நாடு ஒரே பண்பாடு எனப் பேசுகின்றவர்கள் கூட ஒரு மனிதர்; ஒரேயொரு அடையாள அட்டை எனப் பேசுவதில்லை என்பதுதான் நகை முரண்.
இதுபோன்ற நடைமுறைகளைக் குறித்து நீதிமன்றங்கள் பேச மறுக்கின்றன. ஆனால் பேசக் கூடாத இடங்களில் எல்லாம் நுழைந்து குட்டையைக் குழப்புகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறையையொட்டிப் போடப்பட்ட வழக்கில் வந்துள்ள தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கிராமப்புறங்களில் நடக்கும் மரத்தடிப் பஞ்சாயத்துகளின் தீர்ப்பைப்போன்றன. நடப்பில் இருக்கும் அரசதிகாரத்தின் - குறிப்பாக ஒன்றிய அரசின் அதிகாரத்தின் மனநிலையையொட்டித் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்பை "யானையைப் பார்த்த குருடர்களின் மனநிலை"யோடு ஒப்பிடத்தோன்றுகிறது.
இந்தத்தீர்ப்பில் எந்தவிதமான உறுதித்தன்மையும் இல்லை. தீர்ப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை எடுத்துக்கொண்டு அவரவர்க்குச் சாதகமாக விளங்கிக் கொள்ளலாம்; விளக்கிக்கொள்ளலாம். ஆனால் நடக்கப்போவதென்னவே பழைய நிலையின் தொடர்ச்சிதான். உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுநோக்கம் என்ன? எத்தகைய சமூகப்பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது? அதற்கேற்பத் தனிமனிதர்களையும் குடும்பம் தொடங்கி, சாதி, சமயம், சிறிய - பெரிய நிறுவனங்கள், சமூக அமைப்புகள், இறுதியாக அரசமைப்புகள் வரை செயல்பட வேண்டிய நடைமுறைகளை உருவாக்கித்தரவேண்டிய நோக்கத்தில் தீர்ப்புகள் வழங்கவேண்டும். ஆனால் இந்தியாவின் நீதிமன்றங்கள் அதனைச் செய்யத் தவறிக்கொண்டே இருக்கின்றன.
எழுதப்பட்ட சட்ட விதிகளின்படி நீதியை வழங்காமல், நீதி வழங்கும் இடத்தில் அமரும் நீதிபதிகளின் மனச்சாட்சிப்படி தீர்ப்புகளைச் சொல்கின்றன. அதன் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் சிதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சிதைக்கும் பணிகள் இப்போது தொடங்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளிலேயே அது வெளிப்பட்டது.
*******
பத்திரிகைகளின் செய்திக் கிடங்குகளில் நீதிமன்றங்களும் ஒன்று என்பது இதழியல் மாணவர்களின் பாலபாடம். இதழியல் கல்வி, ஊடகக்கல்வியாக மாறிவிட்ட சூழ்நிலையிலும் நீதிமன்றங்கள் அந்த நிலையை விட்டுக் கொடுத்து விடவில்லை. அச்சு ஊடகங்களுக்கும் காட்சி ஊடகங்களுக்கும் நீதிமன்றங்கள் செய்திகளை வழங்கும் கிடங்குகளாகவே இருக்கின்றன ; சில மாற்றங்களுடன்.நீதிமன்றங்களைச் செய்திக் கிடங்காக வைத்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்படுபவை பெரும்பாலும் செய்திக் கட்டுரைகளாக இருந்தன.
அதற்கேற்ப நிதானமும் சட்டத்தின் நுட்பங்களும் வாசகர்களுக்கு வந்து சேரும் நிலைமையும் இருந்தது. அந்த நிலைமை இப்பொழுது முடிவுக்கு விட்டது. இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்கள், பரப்பூட்டும் தலைப்புச் செய்திகளை வழங்கும் அமைப்புகளாக மாறி வருகின்றன.தொலைக்காட்சிகளின் செய்தித் தொகுப்பில் தினசரி உயர் நீதிமன்றங்கள் அல்லது உச்சநீதிமன்றக் கட்டிடங்கள் காட்சி ரூபத்தில் வந்து போகின்றன. பல நேரங்களில் நீதிமன்றக் கட்டிடத்தின் பின்புலத்தில் வழக்குரைஞர்கள் தொலைக்காட்சிக் காமிராக்களுக்குப் பேட்டி அளிக்கின்றனர்.
குடும்ப வழக்குகள்
அண்மைக்காலத்தில் சில வழக்குகளில் நீதிமன்றங்கள் தரும் தடைகளும் விடைகளும் ஊடகங்களில் இடம் பெறும் தொடர்கதைகள் மற்றும் தொடர்களின் இடத்தையும் பிடித்துக் கொள்ளும் அளவுக்குத் திடீர் திருப்பம் கொண்டனவாகவும் சுவாரசியம் நிறைந்தனவாகவும் மாறி வருகின்றன. இப்படிச் சொன்னவுடன் வந்தனா- ஸ்ரீகாந்த் , பிரசாந்த்-கிரகலெட்சுமி போன்ற திரைப்படப் பிரபலங்களின் குடும்ப வழக்குகள் நினைவுக்கு வந்தால் அதற்குப் பொறுப்பு நீதிமன்றங்கள் மட்டுமல்ல; ஊடகங்களும் தான். இவ்விரு வழக்குகளை ஒத்த நூற்றுக்கணக்கான வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு வகையான நீதிமன்றங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
வாதி- பிரதிவாதிகளின் பணவசதிக்கேற்ப முறையீடுகள், மேல் முறையீடுகள் என அவை தொடர்ந்து கொண்டும் இருக்கின்றன. அத்தகைய வழக்குகளில் இடம் பெறும் வாதிகளும் பிரதிவாதிகளும் அவர்களைச் சார்ந்த உறவினர்களும் பொதுச் சமூகத்தின் வெளிச்சத்தில் அறியப்படாத பாத்திரங்கள். அதனால், அந்த வழக்குகள் ஒரு நாள் செய்திக் கட்டுரைகளாகச் சில செய்தித்தாள்களில் இடம் பெறுவதோடு முடிந்து போய்விடுகின்றன. கணவனால் கைவிடப்பட்ட மனைவி, இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபன் என்னும் பொதுச் சொற்களால் எழுதப்படும் அந்தச் செய்திக் கட்டுரைகள் பல நேரங்களில் சமூகவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களின் தரவுகளாக அமைவதைத் தாண்டி வேறு வகையான முக்கியத்துவம் எதையும் பெறுவதில்லை. ஆனால் பிரபலங்களின் வழக்குகளை அப்படி முடிப்பதை நீதிமன்றங்களும் விரும்புவதாகத் தெரியவில்லை; அவை குறித்துச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் விட்டுவிடுவதாக இல்லை.
தனிமனிதர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை நீதிமன்றங்களின் கையில் ஒப்படைத்து விட்டு ஒவ்வொரு நாளும் எழுதப்படும் திருப்பங்கள் நிறைந்த அத்தியாயங்களின் பாத்திரங்களாக ஆகிக் கொண்டிருப்பதைப் பற்றிப் பொதுச் சமூகம் கவலைப்பட வேண்டியதில்லை.அப்படி மாறுவது தவிர்க்கவே முடியாத ஒன்று என்னும் நிலையில் தான் குடும்ப வழக்குகள் நீதிமன்றங்களின் விசாரணைக் கூண்டுகளில் ஏறுகின்றன.அத்தகைய வழக்குகளால் பாதிக்கப் படுகிறவர்கள் தனிமனிதர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே என்பதால் பொதுச் சமூகத்திற்கு அத்தகைய வழக்குகள் சுவாரசியமான தொடர்கதை வாசிப்பாக இருப்பதைத் தவிர வேறு பரிமாணங்களைத் தரப்போவதுமில்லை.
இந்தத்தீர்ப்பில் எந்தவிதமான உறுதித்தன்மையும் இல்லை. தீர்ப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை எடுத்துக்கொண்டு அவரவர்க்குச் சாதகமாக விளங்கிக் கொள்ளலாம்; விளக்கிக்கொள்ளலாம். ஆனால் நடக்கப்போவதென்னவே பழைய நிலையின் தொடர்ச்சிதான். உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுநோக்கம் என்ன? எத்தகைய சமூகப்பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது? அதற்கேற்பத் தனிமனிதர்களையும் குடும்பம் தொடங்கி, சாதி, சமயம், சிறிய - பெரிய நிறுவனங்கள், சமூக அமைப்புகள், இறுதியாக அரசமைப்புகள் வரை செயல்பட வேண்டிய நடைமுறைகளை உருவாக்கித்தரவேண்டிய நோக்கத்தில் தீர்ப்புகள் வழங்கவேண்டும். ஆனால் இந்தியாவின் நீதிமன்றங்கள் அதனைச் செய்யத் தவறிக்கொண்டே இருக்கின்றன.
எழுதப்பட்ட சட்ட விதிகளின்படி நீதியை வழங்காமல், நீதி வழங்கும் இடத்தில் அமரும் நீதிபதிகளின் மனச்சாட்சிப்படி தீர்ப்புகளைச் சொல்கின்றன. அதன் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் சிதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சிதைக்கும் பணிகள் இப்போது தொடங்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளிலேயே அது வெளிப்பட்டது.
*******
பத்திரிகைகளின் செய்திக் கிடங்குகளில் நீதிமன்றங்களும் ஒன்று என்பது இதழியல் மாணவர்களின் பாலபாடம். இதழியல் கல்வி, ஊடகக்கல்வியாக மாறிவிட்ட சூழ்நிலையிலும் நீதிமன்றங்கள் அந்த நிலையை விட்டுக் கொடுத்து விடவில்லை. அச்சு ஊடகங்களுக்கும் காட்சி ஊடகங்களுக்கும் நீதிமன்றங்கள் செய்திகளை வழங்கும் கிடங்குகளாகவே இருக்கின்றன ; சில மாற்றங்களுடன்.நீதிமன்றங்களைச் செய்திக் கிடங்காக வைத்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்படுபவை பெரும்பாலும் செய்திக் கட்டுரைகளாக இருந்தன.
அதற்கேற்ப நிதானமும் சட்டத்தின் நுட்பங்களும் வாசகர்களுக்கு வந்து சேரும் நிலைமையும் இருந்தது. அந்த நிலைமை இப்பொழுது முடிவுக்கு விட்டது. இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்கள், பரப்பூட்டும் தலைப்புச் செய்திகளை வழங்கும் அமைப்புகளாக மாறி வருகின்றன.தொலைக்காட்சிகளின் செய்தித் தொகுப்பில் தினசரி உயர் நீதிமன்றங்கள் அல்லது உச்சநீதிமன்றக் கட்டிடங்கள் காட்சி ரூபத்தில் வந்து போகின்றன. பல நேரங்களில் நீதிமன்றக் கட்டிடத்தின் பின்புலத்தில் வழக்குரைஞர்கள் தொலைக்காட்சிக் காமிராக்களுக்குப் பேட்டி அளிக்கின்றனர்.
குடும்ப வழக்குகள்
அண்மைக்காலத்தில் சில வழக்குகளில் நீதிமன்றங்கள் தரும் தடைகளும் விடைகளும் ஊடகங்களில் இடம் பெறும் தொடர்கதைகள் மற்றும் தொடர்களின் இடத்தையும் பிடித்துக் கொள்ளும் அளவுக்குத் திடீர் திருப்பம் கொண்டனவாகவும் சுவாரசியம் நிறைந்தனவாகவும் மாறி வருகின்றன. இப்படிச் சொன்னவுடன் வந்தனா- ஸ்ரீகாந்த் , பிரசாந்த்-கிரகலெட்சுமி போன்ற திரைப்படப் பிரபலங்களின் குடும்ப வழக்குகள் நினைவுக்கு வந்தால் அதற்குப் பொறுப்பு நீதிமன்றங்கள் மட்டுமல்ல; ஊடகங்களும் தான். இவ்விரு வழக்குகளை ஒத்த நூற்றுக்கணக்கான வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு வகையான நீதிமன்றங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
வாதி- பிரதிவாதிகளின் பணவசதிக்கேற்ப முறையீடுகள், மேல் முறையீடுகள் என அவை தொடர்ந்து கொண்டும் இருக்கின்றன. அத்தகைய வழக்குகளில் இடம் பெறும் வாதிகளும் பிரதிவாதிகளும் அவர்களைச் சார்ந்த உறவினர்களும் பொதுச் சமூகத்தின் வெளிச்சத்தில் அறியப்படாத பாத்திரங்கள். அதனால், அந்த வழக்குகள் ஒரு நாள் செய்திக் கட்டுரைகளாகச் சில செய்தித்தாள்களில் இடம் பெறுவதோடு முடிந்து போய்விடுகின்றன. கணவனால் கைவிடப்பட்ட மனைவி, இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபன் என்னும் பொதுச் சொற்களால் எழுதப்படும் அந்தச் செய்திக் கட்டுரைகள் பல நேரங்களில் சமூகவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களின் தரவுகளாக அமைவதைத் தாண்டி வேறு வகையான முக்கியத்துவம் எதையும் பெறுவதில்லை. ஆனால் பிரபலங்களின் வழக்குகளை அப்படி முடிப்பதை நீதிமன்றங்களும் விரும்புவதாகத் தெரியவில்லை; அவை குறித்துச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் விட்டுவிடுவதாக இல்லை.
தனிமனிதர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை நீதிமன்றங்களின் கையில் ஒப்படைத்து விட்டு ஒவ்வொரு நாளும் எழுதப்படும் திருப்பங்கள் நிறைந்த அத்தியாயங்களின் பாத்திரங்களாக ஆகிக் கொண்டிருப்பதைப் பற்றிப் பொதுச் சமூகம் கவலைப்பட வேண்டியதில்லை.அப்படி மாறுவது தவிர்க்கவே முடியாத ஒன்று என்னும் நிலையில் தான் குடும்ப வழக்குகள் நீதிமன்றங்களின் விசாரணைக் கூண்டுகளில் ஏறுகின்றன.அத்தகைய வழக்குகளால் பாதிக்கப் படுகிறவர்கள் தனிமனிதர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே என்பதால் பொதுச் சமூகத்திற்கு அத்தகைய வழக்குகள் சுவாரசியமான தொடர்கதை வாசிப்பாக இருப்பதைத் தவிர வேறு பரிமாணங்களைத் தரப்போவதுமில்லை.
பொதுச்சமூகத்தின் எதிர்பார்ப்புகள்
இதற்கு மாறாகப் பொதுச் சமூகத்தை- குடிமைச் சமூகத்தின் பெரும்பாலான மனிதர்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வழக்குகளும் தொடர்கதைகளின் அத்தியாயங்களாக ஆகிவருவதை வருத்தத்தோடு கவனித்து விட்டு ஒதுங்கிக் கொள்வது சமூகப் பொறுப்பின்பாற்பட்டதாகாது. ஏனென்றால் பொதுச் சமூகத்தைப் பாதிக்கக் கூடிய வழக்குகளின் நடவடிக்கைகளும் முடிவுகளும் திருப்பங்கள் நிறைந்த தொடர்கதைகளாக ஆக்கப்பட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள் எத்தகையன என்பதைச் சரியாகக் கணித்துச் சொல்லும் ஆற்றல் நீதிமன்றங்களுக்கே கூட இல்லை.
சமூகத்தின் பொது அமைதிக்கே கூட சில வழக்குகளின் முடிவுகள் பாதகத்தை ஏற்படுத்தி விடக்கூடும்.இத்தகைய வழக்குகள் பல நீதிமன்றங்களின் எல்லைக்குள் வராமலேயே முடிந்திருக்க வேண்டியவை என்ற போதிலும் அவற்றில் தொடர்புடைய தனிநபர்கள் தொடக்க நிலையிலேயே நீதிமன்றங்களின் கதவைகளைத் தட்டிவிடுகின்றனர். தனக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்ற சுயநலத்தின் பெயராலும், சிலவகையான குழுக்கள் பாதிக்கப் படக்கூடும்; அதனைத் தடுத்தாக வேண்டும் என்ற பொது நலத்தின் பெயராலும் தொடரப்படும் வழக்குகள் கால எல்லைக்குள் இயங்க வேண்டிய அமைப்புகளை இயங்க விடாமல் செய்து வருகின்றன.
இந்தப் போக்கு அதிகரித்து வருவது நீதிமன்றங்களின் மேல் குடிமைச் சமூகத்திற்கும் அதன் உறுப்பினர்களான குடிகளுக்கும் உள்ள நம்பிக்கையைக் காட்டலாம் என்று பலர் வாதிடக்கூடும். அதே நேரத்தில் மக்களாட்சி முறையின் மேலும் அதன் தொடர் அமைப்புக்கள் மேலும் நமது சமூகம் நம்பிக்கை இழந்து கொண்டே வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பாசனத்திற்கு அணையிலிருந்து நீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை கூட நீதிமன்றங்களுக்கு வருகின்றன. இந்தக் கோரிக்கையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசின் பொதுப்பணித்துறையைச் சார்ந்தது. அரசின் வேலை வாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள் அறிவிக்கை வந்த நிலையிலேயே நீதிமன்றங்களை அணுகி தடைகள் வாங்கப் படுகின்றன. போக்குவரத்துத் துறையில் அதன் ஊழியர் தனது பணியைச் சரியாகச் செய்யவில்லை என்பதற்கும், அரசு மருத்துவ மனைகளில் கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படவில்லை என்பதற்காகவும் நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலை வருவது நல்லதல்ல.
பொதுத்துறைகளும் நீதிமன்றமும்
மக்களாட்சி நடக்கும் ஒரு நாட்டில் ஒவ்வொரு துறைசார்ந்த எண்ணங்களும் முடிவுகளும் ஒன்று போல இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானதல்ல. ஆனால் நமது நாட்டில் ஒரேயொரு துறைசார்ந்த எண்ணங்களும் முடிவுகளும் கூட ஒன்று போல இருப்பதே இல்லை. அந்த நேரத்துச் சிந்தனையில் தற்காலிகமான முடிவுகளே எடுக்கப் படுகின்றன. அப்படி எடுக்கும் முடிவுகள் அந்த நேரத்தில் ஏற்கத்தக்கது போலத் தோன்றலாம். சரியான நீதி கிடைத்து விட்டது என்று கூடச் சொல்லலாம். ஆனால் தற்காலிக மகிழ்ச்சி பல நேரங்களில் அந்தத் துறையின் பொது நியதிக்குப் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறை சார்ந்த பல முடிவுகள் நீதிமன்றங்களால் எடுக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். குறிப்பாகத் தொழில் கல்விப் படிப்புகளான மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின் படியே தான் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டிலும் அந்தத் தொடர்கதை பல கட்டங்களைத் தாண்டித் தான் நடந்து வருகிறது. மருத்துவக் கல்விக்கான அனுமதி நிரந்தரமான முடிவு என்று யாராவது சொல்ல முடியுமா.? அத்தோடு தனியார் மற்றும் சுயநிதிப்பொறியியல் கல்லூரிகளின் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் முடிவுகளையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்.டாக்டர் தொழில் தான் உன்னதமானது; இந்த தேசத்தில் அதிக பட்ச இலட்சியம் என உருவாக்கப் பட்டுள்ள பொதுப் புத்தியின் ஓட்டத்தோடு ஊடகங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் வெளியிடுகின்றன. அப்பொதுக் கருத்தோட்டத்தின் தாக்கத்தோடு தான் நீதித்துறையின் வழிகாட்டுதலும் இருக்கிறது.
ஒரு கல்வி வாரியம் பின்பற்றும் பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள்கள் சென்ற ஆண்டு எளிமையானவை; இந்த ஆண்டு கடினமானவை என்ற வாதங்கள் எல்லாம் பொதுப்புத்தி சார்ந்த வாதங்களாக இருக்க முடியுமே தவிர அறிவியல் பூர்வ உண்மை களாக இருக்க முடியாது. அத்துடன் நிகழ்காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்; கடந்த காலம் என்பது இறந்துவிட்ட காலம் என்று முடிவு செய்து அவர்களுக்கு வாய்ப்பே வழங்கக் கூடாது என வாதிடுவது எப்படிச் சரியாக இருக்க முடியும்.
இதே தேசத்தில் தான் அரசாங்கம் நடத்தும் குடிமைப் பணியாளர் - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.- தேர்வுகளுக்குப் பல மருத்துவர்களும், பொறியாளர்களும், கல்லூரிப் பேராசிரியர்களும் தயார் செய்து தேர்வு எழுதுகின்றனர். ஏற்கெனவே அந்தத்துறையில் வேலைகளைப் பெற்றுக் கொண்டு பணியில் சேர்ந்த பின்னும் படித்து குடிமைப் பணிகளுக்கு வருகின்றனர். அங்கெல்லாம் ஏற்கெனவே உங்களுக்கு வேறு வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது; அதனால் உங்களுக்கு இங்கு நேர்காணல் கிடையாது எனச் சொல்வதில்லை. அதற்கு மாறாக அமைப்புகளும் ஊடகங்களும் பாராட்டுக்களை வழங்குவதையே கண்டுள்ளோம்.
ஒரு தேசத்தின் குடிமகன் அல்லது குடிமகள் எந்தத் துறையில் தனது அறிவைப் பெறுவது என்பதையும், அந்த அறிவை எந்தக் கூட்டத்திற்குப் பயன்படுத்துவது என்பதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட முடிவாக இருக்க வேண்டுமே ஒழிய அமைப்புகளின் தற்காலிக முடிவுகளால் தீர்மானம் ஆவதாக இருக்கக் கூடாது. எல்லா வகையான கல்விப் பட்டங்களிலும் சேருவதற்கு அந்தத் துறை சார்ந்த கல்வியாளர்களின் குழுவான பாடத்திட்டக் குழுவினர் தான் அடிப்படை விதிகளை உருவாக்குகின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட விதிகள், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள பொதுப் பேரவைகளான ஆட்சிப் பேரவைகளில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுகின்றன. அவ்வொப்புதலையும் கூடப் பல்கலைக்கழகங்களின் உயர் அமைப்புக்களான ஆட்சிக் குழுக்கள் விரிவாக விவாதித்து மேலொப்புதல் வழங்கலாம் அல்லது மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பலாம். இத்தகைய வழிமுறைகள் இப்போதுள்ள உயர்கல்வித் துறையில் இருக்கின்றன.
கல்வித்துறையில் மட்டும் அல்ல; அரசு மற்றும் பொதுத்துறைகள் எல்லாவற்றிலும் இந்த நான்கு அடுக்கு முறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் அந்தத்துறை சார்ந்த பல தரப்புப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். அவர்களோடு பொது மக்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இருக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன. அவற்றைத் தலைமையேற்று ஒருங்கிணைக்கும் பொறுப்பில் தான் அந்தத்துறையின் தலைமைப் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும்.
நடைமுறையில் நமது அமைப்புக்கள் அவ்வாறு செயல்பட வில்லை என்பதே தனிமனிதர்களின் கருத்தோட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு துறையின் ஆலோசனை அமைப்புக்களும் அதன் உறுப்பினர்களும் தங்களின் கடமை களையும் உரிமைகளையும் தவற விட்டு விட்டு அந்தந்த துறையின் தலைமைப் பொறுப்பாளர்களின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு எல்லாவற்றிற்கும் ஒப்புதல் அளிப்பவர்களாக இருக்கின்றனர் என நினைக்கிறார்கள். அல்லது தனக்கும் தனது குழுவிற்கும் சாதகமான அம்சங்களுக்காக வாதாடி அதிகாரத்தில் பங்கு பெற்றுக் கொள்பவர்கள் மட்டுமே என்று கருதுகிறார்கள்.
பொதுநலன் சார்ந்து தனது உறுப்பினர் கடமையாற்றும் மனிதர்களைக் காண முடியாத நிலையில் அந்த அமைப்புக்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், அந்தத் துறைக்கு வெளியில் இருந்து நீதியைப் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.இந்தப் போக்கைத் தீவிரப்படுத்தும் விதத்தில் நீதிமன்றங்களும் ஊடகங்களும் பணியாற்றுகின்றன. அது ஒருவிதத்தில் ஆறுதலற்றவனுக்கு ஆறுதல் தரும் கானல் நீர் தான். என்றாலும் இந்தப் போக்கு தொடர்ந்து கொண்டிருப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்பதைச் சொல்ல வேண்டியவர்கள் ஊடகத்துறைச் செயலாளிகளும் அறிவாளிகளும் என்பதை மறந்து விடக் கூடாது.
மக்களாட்சியில் பொறுப்புணர்வுகள்
ஜனநாயகத்தைப் பாதுகாக்க நமது அமைப்பு ஏற்படுத்தியுள்ள இந்தப் பல அடுக்கின் உறுப்பினர்கள், ஒவ்வொரு கட்டத்திலும் அதனைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களைப் பதவி காரணமான தலைவர்கள் என்பதாகப் பார்க்க வேண்டுமே ஒழிய, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டவர்களாகக் கருதவேண்டியதில்லை. அமைப்புகளில் செயல்படும் ஒவ்வொருவரும் சிந்தனை செய்வதும், செயல்படுவதும் அவசியம்.
அனைவருக்குமாகத் தலைவர்களே சிந்திப்பார்கள் என நினைப்பதும், அவர்களது சிந்தனைகளின்படி செயல்படும்போது கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பணியில் பங்கு பெற்றதாகவே இருக்கும். அதனால் தனிமனிதர்களுக்கும் சமூகத்திற்கும் பாதகம் ஏற்படும் போது இந்த நீதிமானின் ரத்தத்தில் எனக்குப் பங்கில்லை என்று சொல்லித் தப்பித்து விட முடியாது.
இவை குறியீட்டு உத்திகள்
டிசம்பர் 28, 2024
நமது காலம் ஊடகங்களின் காலம். ஊடகங்களுக்குப் பெருந்திரள் போராட்டங்களைவிடக் குறியீட்டுப் போராட்டங்கள் வசதியானவையாக இருக்கின்றன. ஒத்திகைப் பார்த்த காட்சிகளோடு கூடிய குறியீட்டுப் போராட்டங்களைப் பல கோணங்களில் காட்சிப்படுத்த முடிகிறது. நேர்நிலையிலும் எதிர்நிலையிலும் விவாதங்களை உருவாக்க முடிகிறது. அதன் வழியாக உருவாகும் அரசியல் சொல்லாடல்களைப் பெருந்திரளிடம் - வாக்காளர்களிடம் நீண்டகாலத்திற்குப் பதிய வைக்க முடிகிறது. அந்த வ'கையில் அண்ணாமலையின் 'சாட்டையடிப்போராட்டம்' காலத்திற்கேற்ற வடிவம் என்றே சொல்வேன்.
பகுத்தறிவோடும் நவீனத்துவப் பார்வையோடும் அரசியல் இயங்க வேண்டுமென நினைப்பவர்களுக்குப் பா.ஜ.க.வின் மாநிலத்தலைவரின் போராட்ட வடிவங்கள் நகைப்புக்குரியனவாகத் தோன்றலாம். இந்தியாவின் தேர்தல் அரசியலைச் சமகாலப்புரிதலோடும் நவீன வாழ்க்கையின் அர்த்தத்தோடும் அந்தக் கட்சி அணுகவில்லை. எப்படியும் வெற்றி என்ற கீதையின் உபதேசப்படியும் சாணக்கிய நீதியின்படியும் தேர்தலை அணுகுகிறது .
பா.ஜ.க.வின் தேர்தல் நகர்வுகள் வாக்கு வங்கியின் பொது உளவியலைச் சரியாகத் திட்டமிட்டுக்கொண்டு அதற்கேற்ற உத்திகளைத் தேர்வு செய்வதாக இருக்கிறது. தேசியக்கட்சியாக இருந்தபோதிலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் பரப்புரைகளை மாற்றுகிறார்கள். ஒரு மாநிலத்திற்குள்ளேயே மாவட்ட எல்லைக்குள்ளும் ஒரு தொகுதிக்குள்ளும் வேறு உத்திகள் பின்பற்றப்படுகின்றன. அதன் பின்புலத்தில் இருப்பது சாதியவாதக் கணக்கும் மதவாதக் கணக்குகளும் மட்டுமே.
தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதற்கான அரசியலை முன்னெடுப்பதைத் தவிர்த்துவிட்டு, இரண்டாமிடம் நோக்கிய நகர்வுகளே இப்போது அதன் இலக்குகள்.
தனது வாக்குவங்கியின் பொதுமனம் சடங்குகள், நம்பிக்கைகள், சாதிப் பெருமைகள், மதப் பெரும்பான்மை வாதம் கொண்டவர்களால் ஆனது என்பதைத் திட்டவட்டமாக அறிந்து செயல்படுகிறார்கள். அத்தோடு தமிழகம் பகுத்தறிவு பேசும் கட்சிகளின் வெளி அல்ல என்பதை நிரூபிப்பதும் பா.ஜ.க.வின் முதன்மையான இலக்கு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இந்தியச் சாதிய மனம், தன்னை வருத்திக்கொண்டு கடவுளிடம் மன்றாடினால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையில் இயங்கும் தன்மை கொண்டது. கிராமியத் தெய்வங்களை வணங்குபவர்களின் நம்பிக்கையோடு தொடர்புடையவை இந்த அடையாளங்கள். செருப்பணியாமல் நடத்தல், சாட்டையால் தன்னையே அடித்து வருத்திக்கொள்ளுதல் போன்றன இயல்பான வடிவங்களாக உள்ளன. சாட்டையால் மட்டுமல்ல இதைவிடக் கூடுதலாக வருத்திக்கொள்ளும் சடங்குகள் எல்லாம் உள்ளன. பெருந்திரளாகச் சௌடாம்பிகைக்கு முன்னால் கத்தியால் மார்பிலடித்துக் காயப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் வரிசையாக நிற்க வைத்துத் தேங்காயைத் தலையிலடித்து உடைக்கும் வழிபாடுகள் இருக்கின்றன.
பொதுமனத்தின் போக்கோடு மட்டுமல்லாமல், தனித்தனி சாதிகளின் நம்பிக்கைகளை உள்வாங்கிப் போராட்ட வடிவங்களைத் தேர்ந்தெடுத்துக் கட்சிக்காரர்களுக்குப் பயிற்சி அளித்துக் களம் இறக்கும் பணியைத் திருவாளர் அண்ணாமலை செய்யக்கூடும். பகுத்தறிவுப் பார்வையோடு வைக்கும் விமரிசனங்களை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். இவையெல்லாம் அண்ணாமலையின் தேர்தல் உத்திகள்
மாற்றப்படும் சொல்லாடல்கள்
மார்ச் 05, 2021
தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களில் திரும்பத் திரும்ப உருவாகி உருண்டுகொண்டே இருக்கும் முதன்மையான எதிர்வு பிராமணர் x பிராமணர் அல்லாதோர் என்பது. இதனை உருவாக்கியவர்கள் பிராமணர் அல்லாதோரிலிருந்து உருவான பெரியாரும் அவரது வழித்தோன்றல்களும். அதனை மாற்றித் தமிழின் முதன்மைச் சொல்லாடலாக ஆக்கப்பட்ட சில எதிர்வுகள் உண்டு. அவற்றுள்,ஏழைகள் x பணக்காரர்கள் எனப்பேசிய வர்க்க அரசியல் முற்பட்டது. அதனைத் தொடர்ந்து உருவான தலித்துகள் x தலித்தல்லாதோர் எனப்பேசிய விளிம்பு நிலை அரசியல் காலத்தில் பிற்பட்டது.
வர்க்க அரசியலும் விளிம்புநிலை அரசியலும் தலா பத்தாண்டுகள் செல்வாக்கோடு இருந்தன.
1960 களின் பிற்பாதியில் பிராமணரல்லாதார் அரசியல் அதிகாரத்திற்கு வந்துவிட்ட நிலையில் அதன் மீது ஏற்பட்ட அதிருப்திகளும் ஏமாற்றங்களும் வேறுவகைச் சொல்லாடல்களுக்குள் நகர்த்தும்/ நகரும் வேலைகளைச் செய்தன. அப்போது உருக்கொண்ட சொல்லாடலே வர்க்க அரசியல். சமத்துவம், சமதர்மம் எனப்பேசிய பொதுவுடைமை இயக்கங்களின் தோற்றம் பிராமணரல்லாதார் இயக்கங்களுக்கு முற்பட்டது என்றாலும் எல்லாத்தளத்திலும் முதன்மைப்பட்ட காலமாக எழுபதுகளின் பின்பாதியையும் எண்பதுகளின் முன்பாதியையும் சொல்லவேண்டும்.
1990 களில் ஏற்பட்ட சோவியத் வீழ்ச்சியும் உலக மயத்தின் எழுச்சியும் சேர்ந்து வர்க்க அரசியலைத் தளரச்செய்தன. அந்த இடத்தை விளிம்புநிலை அரசியல் அல்லது தலித் அரசியல் பிடித்துக்கொண்டது. பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழா தந்த எழுச்சி விளிம்புநிலை அரசியலைக் குறிப்பான தலித் அரசியலாக மாற்றியது. அதன் செல்வாக்கும் வளர்ச்சியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிதைக்கப்பட்டது . சிதைத்ததின் பின்னணியில் இருப்பது மத அரசியல். இந்தியாவில் மத அரசியல் என்பது பிராமண மேலாண்மையைத் திரும்பக் கொண்டுவர நினைக்கும் அரசியலன்றி வேறில்லை.
பிராமணர் x பிரமாணரல்லாதோர் அரசியலில் ஆதிக்கத்தின் குறியீடாக இருந்த பிராமணர்கள் வர்க்க அரசியலிலும் தலித் அரசியலிலும் பின்னகர்த்தப் பட்டார்கள். பிராமணர்களின் இருப்பு கண்ணுக்குப் புலப்படாத இருப்பாக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் ஒருவகையில் அவர்களைப் பாதிக்கப்பட்டோரின் இடத்திற்கு நகர்த்தியது. பிராமணர்களிலும் ஏழைகள் உண்டு என்ற கருத்தும், தலித்துகளைப் போலவே பிராமணர்களும் விளிம்புநிலையில் தள்ளப்பட்டுள்ளனர் என்ற சொல்லாடல்களும் உருவாக்கப்பட்டதை நினைவில் கொள்ளவேண்டும்.
1970 முதல் 2020 வரையிலான ஐம்பதாண்டுக்காலத்தை எனது அறிதலின் காலமாக நினைக்கிறேன். இந்த அரைநூற்றாண்டுக் காலத்தை கருத்தியல் எதிர்வுகள் வழியாகவே கடந்து வந்திருக்கிறேன். இப்படிக் கடந்ததைத் தொடரமுடியாமல் தடுக்கின்றன அண்மைய நிகழ்வுகள். குறிப்பாகக் கடந்த ஐந்தாண்டுகளின் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் பாரதிய ஜனதாவை மையப்படுத்திய சொல்லாடல்களாக மாற்றிவிட்டார்கள்.
செல்வி ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் தமிழ்நாட்டில் தொடரும் ஆட்சியை அந்தக் கட்சியே நடத்துகிறது என்ற பாவனையை உண்டாக்கி விட்டது. அ இ அதிமுகவின் உடையக்காரணம் அதுதான். உடைந்த கட்சியை ஒட்டுவைத்ததும் அதுதான். ஒட்டிய பின்னும் நிரந்தரத்தன்மையை உண்டாக்காமல் தற்காலிகத் தன்மையை நீட்டிப்பதின் பின்னணியிலும் அதுதான். இப்போது தேர்தல் கூட்டணிகளை உருவாக்குவதில் அது ஒரு முனை; வலுவான முனை. தனது இருப்பைக் காட்டிக்கொள்ள எதனையும் தவறவிடுவதில்லை பா.ஜ.க.. திருமதி சசிகலா குற்றவாளி எனச் சிறைக்கு அனுப்பியதும் அதுதான். டி.டி.வி. தினகரனை அமைதியாக்கியதும் அதுதான். ஆளுங்கட்சி உடையப் போகிறது என்பதின் பின்னணியில் இருப்பதும் அதுதான். சசிகலா அரசியலுக்கு வருகிறார் எனச் சொல்லவைப்பதும்; அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார் எனச் சொல்லத்தூண்டுவதும் அதுதான் எனக் கருத்துருவாக்கம் நடந்துவிட்டது. எல்லாம் அதுவாக இருக்கும் இந்த நிலையில் பாரதப்போரின் இடையில் உபதேசிக்கப்பட்ட கீதாபதேசத்தின் வரிகள் -எல்லாம் நானே; நீங்கள் எல்லாம் கருவிகள். கொல்வதும் நானே; கொடுப்பதும் நானே - என்பன நினைவுக்கு வரலாம்.
தமிழ்நாட்டு மக்களிடம் - வாக்காளர்களிடம் குறிப்பிட்ட வாக்குச் சதவீதம் எதுவும் இல்லாமலேயே எல்லாவற்றின் எதிர்வாகவும் அந்தக் கட்சி மாறிக் கொண்டுவிட்டது. எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதான பாவனையை உருவாக்கிவிட்டது. தி.மு.க x பா.ஜ.க., என்பதான இரட்டை எதிர்வின் பின் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், முன் ஒன்றாக மாறுவது அடுத்த கட்ட வேலை. அதுவும் நடக்கலாம்.
நடத்த நினைக்கும் இந்த நகர்வில் பா.ஜ.க. என்பது சனாதன மீட்பு; முதலாளிய மீட்பு என்பதை நேரடியாகச்சொல்லும் கருவிதான். அதன் கருத்தியல் வடிவம் என்பது பிராமணர் x பிராமரல்லாதார் என்று பெரியார் கட்டமைத்த எதிர்வின் தற்போதைய வடிவம் தான். இப்போதும் பிராமணர்கள் கண்ணுக்குப் புலப்படாத இருப்பாகப் பா.ஜ.க.விற்குள் அலைகின்றார்கள். கண்ணுக்குப் புலப்படாதனவற்றை மருத்துவ அறிவியல் கிருமிகள் என்கிறது.
#தேர்தல்2021



கருத்துகள்