இடுகைகள்

நாடகவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலைந்ததொரு கொடுங்கனவு

பத்மினி: “என்னோட குரலையே நாடகத்திலெ பயன்படுத்தி இருக்கிறதாகவும், அந்தப்போலீஸ்காரப்படுபாவிங்க செஞ்ச அக்கிரமத்தெ மேடையிலெ காட்டறதாகவும் கட்டாயம் வந்து பாக்கணும்னு” நீங்க லெட்டர் எழுதியிருந்தீங்க. பாண்டிக்கு பக்கத்திலெ இருவது கல் தூரந்தான் கடலூர்.. ஆனா அப்போ வரமுடியல.. ‘ கமிஷன்’ ‘வக்கீல்’னு அலைஞ்சிக்கிட்டு இருந்தேனா.. எம்பாடே பெரும்பாடா இருந்துச்சு.. அதுக்கும் மேல நாடகம் என்ன வேண்டிக்கிடக்கின்னு வரல. இப்போ (06-02-95) மதுரைக்குக்கூடத் தற்செயலாத்தான் வந்தேன். நாடகத்தெப் பார்த்தேன்.

திரள்மக்களைச் சந்தித்த இருபெரும் கலைஞர்கள்

படம்
பெருந்தடங்கள் பதித்த கலைஞர் பேரா. கே. ஏ. குணசேகரனை எனது நீண்ட நாள் நண்பர் என்று சொல்வதைவிட இருவரும் ஒருசாலை மாணாக்கர்கள் எனவும் ஒரே கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள் எனவும் சொல்வதே சரியாக இருக்கும். 15 ஆண்டுக்காலம் மாணவர்களாகவும் ஆசிரியப்பணியிலும் ஒன்றாகப் பயணித்தவர்கள் நாங்கள் நானெல்லாம் ஒருவேலையைத் தொடங்க வேண்டுமென்றால் பத்துத் தடவையாவது யோசிப்பேன். ஒன்றுக்கு இரண்டாகத் திட்டங்களைப் போடுவேன். ஆரம்பித்துவிட்டுப் பின்வாங்குவேன். ஏற்றுக் கொண்டு முடித்துவிடலாம் எனக் கிளம்பிப் பயணத்தைத் தொடங்கித் தயக்கத்துடன் பாதியில் திரும்பிய பயண அனுபவங்களெல்லாம் உண்டு.இப்படியே போனால் சொதப்பிவிடுவோமே என்று மனம் சொல்லும்போதே முன்வைக்கக் கால்கள் தயங்கிவிடும். ஓரடி முன்னால் போய்விட்டுப் பின்னால் ஈரடி வைப்பதே வாடிக்கையாகிவிடும். என்னுடைய இயல்பு இது என்றால், இதற்கு நேரெதிரானவர் நண்பர் கே.ஏ.ஜி. இந்தமாதிரியான கெட்ட பழக்கங்களெல்லாம் அவரிடம் எட்டிப் பார்த்ததே இல்லை. இதை நான் அவரருகில் இருந்து பதினைந்து ஆண்டுகள் பார்த்திருக்கிறேன். பக்கத்திலிருந்த காலத்தில் மட்டுமல்லாமல், தூரமாகப் போன பின்பும் அதனைப் பார்த்து ரச...

தூத்துக்குடியில் ஒரு நாடகவிழா

படம்
பார்வையாளனாகவும்  பங்கேற்பாளனாகவும் தமிழ்நாட்டின் முதன்மையான நகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருவண்ணாமலை, புதுச்சேரி போன்ற நகரங்களில் தோன்றிய நவீன நாடகக்குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்ட காலமாக 1980 தொடங்கி 20 ஆண்டுகளைச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் ஒரு நடிகனாகவும் அரங்கச் செயல்பாடுகள் பலவற்றில் பங்கேற்றவனாகவும் தமிழகமெங்கும் அரங்கேறிய நவீன நாடகங்களைக் கான்பதற்காகப் பயணம் செய்துகொண்டே இருப்பேன். மதுரையின் நிஜநாடக இயக்கத்தின் உறுப்பினராகவும் புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் ஆசிரியனாகவும் இருந்து பங்கேற்ற – பார்த்த நாடகங்களுக்காகச் செய்த பயணங்கள் மறக்க முடியாதவை. அப்படிப் பார்த்த நாடகங்கள் பலவற்றைப் பற்றியும் எழுதிய விமரிசனக்கட்டுரைகள் தொகுக்கப்படாமல் இருக்கின்றன.

தொடரும் ஒத்திகைகள்

படம்
அங்கம் : 1 காட்சி : 1 இடம்: நாடக ஒத்திகைக்கூடம். சுவர்களில் நடன முத்திரைகள் கொண்ட சுதை உருவங்கள், புகைப்படங்கள் உள்ளன. நாட்டுப்புறக் கலைகளின் பாணியிலான சிற்பங்களும் திரைச்சீலைகளும் சுவர்களை ஒட்டி இருக்கின்றன. மையத்தில் சிறியதும் பெரியதுமான சதுர செவ்வக மேடைகள் கிடக்கின்றன. அவற்றில் இருவர் மூவராக அமர்ந்துள்ளனர். அவர்களின் உடைகளில் விசேஷமாகக் குறிப்பிட எதுவும் இல்லை. மொத்தம் பதினைந்து பேர் அங்கு உள்ளனர். ஓரத்திலிருக்கும் ஸ்டீரியோப் பெட்டியிலிருந்து இசையின் ஒலி மெல்லியதாகக் கேட்கிறது. உள்ளே நுழைந்த உதவி இயக்குநர், இசை எழுப்பும் கருவியை நிறுத்தி விட்டு கையில் கொண்டு வந்த நாடகத்தின் பிரதிகளைப் பெயர் சொல்லிக் கொடுக்கிறார். கொடுத்து முடிக்கும் முன் இயக்குநர் வந்து விடுகிறார். இயக்குநர்:  ரவி ஸ்கிரிப்ட் கொடுத்து முடிங்க. பைண்டிங் நல்லா பண்ணியிருக்கா . இன்னையிலிருந்து ஸ்கிரிப்ட் வீட்டுக்குக் கொண்டு போகலாம். சீக்கிரம் படிச்சிடணும் [ரவி அவர்களிடம் சென்று கொடுத்துவிட்டு வந்து இயக்குநருக்கு நேர் எதிரில் உட்காருகிறார்] இயக்குநர்: ரவி நீங்களே பிராக்கெட்ஸ் படிங்க. யாருக்கு என்ன கேரக்டர...