இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வகைப்படுத்துதல் வெளிப்பாடுகள்

தனது கவிதைகளை வாசிக்க நினைக்கும் வாசகருக்கு ஏதாவது ஒருவிதத்தில் உதவவேண்டும் என்று பெரும்பாலான கவிகள் நினைப்பதில்லை. கால வரிசையில் அடுக்கப்படும் கவிதைகள் கூடக் கவிதையை எழுதிய கவியின் மனப்பாங்கு மாற்றத்தைப் புரிந்துகொள்ள உதவும். அதைத் தாண்டி வகைப்பாடு செய்வதற்குச் சில அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவதொன்றைப் பின்பற்றலாம். அதனைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டால் வாசிப்பவர்கள் அதனைப் பின்பற்றிச் செல்வார்கள்.

பேச்சுமரபும் எழுத்துமரபும்

படம்
பேச்சும் எழுத்தும் உலகப்புகழ்பெற்ற பேச்சுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கன்னிப் பேச்சு, கடைசிப்பேச்சு, காவியப்பேச்சு, உரைவீச்சு, தீப்பொறி, வெடிப்பேச்சு, நரிப்பேச்சு எனப் பேச்சுபற்றிய பெயர்ச்சொற்களை நினைக்கும்போது பலர் நினைவுக்கு வரலாம். பேச்சால் வாழ்ந்தவர்களும் உண்டு; வீழ்ந்தவர்களும். ஆண்டவர்களும் உண்டு ; மாண்டவர்களும் உண்டு. 

வெங்கடேஷ் சக்கரவர்த்தி

படம்
அவரைச் சினிமா விமர்சகர் என்று சொல்வதைவிடச் சினிமாவைக் கற்பித்துக் கொண்டே இருந்த ஆசிரியர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் வகுப்பெடுத்த திரைப்பட ரசனை வகுப்புகள் பலவற்றில் இருந்திருக்கிறேன். முதன் முதலில் சந்தித்தது மதுரை மருத்துவக்கல்லூரிக்கருகில் இருந்த “ இந்திய மருத்துவக் கழகத்தின் அரங்கில்” . அங்கு யதார்த்தா நடத்திய சினிமா ரசனை வகுப்பில் ராஜனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். அதற்கு முன்பே ப்ரீத்தம் சக்கரவர்த்தியைத் தெரியும். பரிக்‌ஷாவின் நாடகங்களில் பார்த்திருக்கிறேன்.

கோவையோடு ஞானியும்

படம்
கோவை புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். சந்தித்தவர்களில் - மேடையில் அவரின் பெயரைக் குறைந்தது பத்துப்பேராவது உச்சரித்திருப்பார்கள். கண்காட்சியில் மட்டும் என்றுகூடச் சொல்லமுடியாது. கோவையில் இருக்கும் இந்த இரண்டு மாதத்தில் நான் சந்திக்கும் பலரும் அவரது பெயரைச் சொல்வதும் அவரது தாக்கம் அவர்களுக்குள் எப்படி இருந்தது என்பதும் சொல்லப்படுகிறது. ஞானி கோவையின் இலக்கியமுகமாக இருந்துள்ளார் என்பதைத் திரும்பத்திரும்ப உணரமுடிகிறது.

கலை அடிப்படைகள் -….. கற்பிக்கின்றவர்களுக்கும் கற்கின்றவர்களுக்குமான குறிப்புகள்

படம்
கலை இலக்கியப் படைப்புகளை வகுப்பறைக் கல்வி முறையில் கற்பிப்பதுவும், கற்றுக் கொள்வதும் சாத்தியம் தானா?அப்படிக் கற்றுக் கொண்ட ஒருவர் படைப்பில் ஈடுபடுதலும் திறமான படைப்புகளை உருவாக்குதலும் இயலுமா..?  இவ்வளவு ஏன்../திறமான ஆசிரியர்களால் திறமான படைப்புகள் எதுவும் உருவாக்கப்படுவது சாத்தியமில்லையே…  இவை போன்ற வினாக்களும் ஐயங்களும் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. இந்த வினாக்களும் ஐயங்களும் இன்றுள்ள கலை, இலக்கியப் படைப்புக் கல்வி முறையின் மீதான வினாக்களாகவும் ஐயங்களாகவும் கூட இருக்கலாம்.ஒரு படைப்பாளி, தனது படைப்பு வடிவம் சார்ந்து எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்போதைய பட்டம் சார்ந்த கலை, இலக்கியக் கல்வி முறையில் உள்ளதா?கற்றுக் கொள்ளாமல் தவிர்த்துவிட வேண்டியனவற்றைத் தவிர்த்துவிட முடியுமா? இந்த யோசனைகளுக்கெல்லாம் கிடைப்பது எதிர்மறை விடைகள் தான். அந்த விடைகளினூடாக தற்போதைய கல்வி ஒரு படைப்பாளியை உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  அப்படியானால் வேறென்ன நோக்கம் கொண்டது?

அரசுத்துறைகள் கவனிக்க வேண்டிய ஒன்று

படம்
இப்போது நான் பணியிலிருக்கும் கோவை குமரகுரு கல்லூரியின் ஆசிரியர்கள் அனைவரும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காட்டுக்குள் இருக்கும் ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.இந்த ஆண்டின் கல்லூரிக்கான இலக்குகள், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடங்கள், பாடங்களைத் தாண்டிய வாய்ப்புகள், நடத்தவேண்டிய விழாக்கள், கொண்டாட்டங்கள் குறித்த திட்டமிடல்களைக் கல்லூரி முதல்வரோடு கலந்தாலோசித்து துறையின் தலைவர்கள் செய்தார்கள்.

பாராட்டும் பரிசும்

  தனது பிறந்த நாளைக் கவிஞர்கள் தினமாக அறிவித்துக் கவிஞர் ஒருவருக்கு விருது அளித்து வருகிறார் பாடலாசிரியர் வைரமுத்து என்பது இதுவரை கேள்விப்பட்ட செய்தியாக இருந்தது. இன்று நேரில் பார்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இந்த ஆண்டுக்கான கவிஞர்கள்தின விருதைப் பெறும் பெயராகக்கவி சக்திஜோதி பெயர் அறிவிக்கப்பட்டபோதே அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு நேரிலும் வந்து வாழ்த்துவேன் எனச் சொல்லியிருந்தேன். நிகழ்வு நான் இப்போதிருக்கும் கோவையில் நடைபெறுவதாக விளம்பரத்தில் சொல்லப்பட்டதும் ஒரு காரணம்.

தொடரும் இ.பா.வின் விமரிசனங்கள்

படம்
இந்திரா பார்த்தசாரதிக்கு இன்று வயது 92 முடிந்துவிட்டது. இப்போதும் எழுதிக்கொண்டே இருக்கிறார். இம்மாத உயிர்மையில் அவர் எழுதிய கதையின் தலைப்பு: பிரிவு. இரண்டு மாதங்களுக்கு முன்னால் மே மாதத்தில் இதே உயிர்மையில் எழுதிய கதையின் தலைப்பு : பொய்க்கடவுள்.

வெளிப்பட வேண்டும்; வெளிப்படுத்த வேண்டும்: போலந்து கல்வி முறை பற்றி ஓர் அறிமுகம்.

படம்
கல்விச் சாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது தொடங்கி ஒவ்வொரு கட்டத்தையும் இந்தியப் பெற்றோர்கள் தவிப்போடு தான் கடக்கிறார்கள். தவிப்பிலேயே பெரிய தவிப்பு பள்ளிப்படிப்புக்கு முந்திய பாலர் வகுப்புகளை நடத்தும் நிறுவனங்களில் இடம்பிடிப்பதாக இருக்கிறது. பாலர் பள்ளியைத் தொடர்ந்து தங்கள் மனம் விரும்பும் ஒரு பள்ளியில் இடம் கிடைக்கும் என்றால் இந்திய நடுத்தரவர்க்கமும் மேல் நடுத்தர வர்க்கமும் அசையும் அசையாச் சொத்தையெல்லாம் விற்றுக் கட்டிவிடத் தயாராக இருக்கிறார்கள். முந்தின நாள் இரவிலேயே பள்ளிவாசலில் படுத்து வரிசையில் நின்று விண்ணப்பப் படிவம் பெற்றுப் பணத்தைக் கட்டிவிட்டால் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கவனிக்கும் பொறுப்பைத் தக்காரிடம் ஒப்படைத்துவிட்டதாக நம்பும் மனோவியாதியைப் போக்கும் மருந்து இந்தியாவில் கிடைப்பது அரிது. அதைவிடக் கூடுதலான மனத்திருப்தியைத் திருப்தியான கல்லூரி ஒன்றில் தன் பிள்ளையைச் சேர்த்துவிட்ட பெற்றோர்களிடம் காண முடிகிறது.

முதல் மரியாதை :மகிழ்ச்சியின் தருணங்கள்

படம்
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச் சமூகத்தின் செவிகளுக்கு விருந்தளித்த இசை அமைப்பாளர் இளையராஜா இந்திய அரசின் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராகப் பொறுப்பேற்க உள்ளார். வாழ்த்துகள். மகிழ்ச்சி.

உச்சநட்சத்திரப் போட்டியும் பேரங்காடிச் சந்தையும்

வெகுமக்கள் ஊடகங்களுக்குத் தேவை “உச்சநட்சத்திரங்கள் ( SUPER STARS)” சாகசங்கள் வழி முன்னுக்குவரும் ஒற்றை நபர்களைத் தெரிவுசெய்து கொண்டாடும் பண்பாடு ஊடகப் பண்பாட்டின் விருப்பங்களில் ஒன்று. இருசக்கர வாகனத்தில் அதிவேகச் சாதனையாளர் டி,டி.எப். வாசன் ( TTF.VASAN ) அண்மையக் கண்டுபிடிப்பு நட்சத்திரம். வளர்ந்துவரும் சமூக ஊடகங்களுக்குத் தேவையான ஓற்றை நட்சத்திரம்.

தொடக்கநிலைக்கவிதையின் நுட்பங்கள்

படம்
  தமிழ்க் கவிதைகளின் சொல்முறைமை பற்றிய சொல்லாடல்கள் நம்மிடையே அதிகம் இல்லை. திறனாய்வாளர்கள் எப்போதும் கவிதை முன்வைக்கும் கருத்தியல், வாழ்க்கை பற்றிய புரிதல் (த்ரிசனம் என்ற சம்ஸ்க்ருதச் சொல்லால் குறிக்கும் ஒன்று) எனப் பேசுவதையே விவரித்துக் கடக்கின்றனர். கவிதை எழுதத் தொடங்கும் ஒருவர் எதனில் தொடங்கலாம்; அங்கிருந்து எப்படி நகரலாம்? எங்கே நகரமுடியாமல் தத்தளிப்பு உண்டாகும்? அத்தத்தளிப்பின் காரணிகள் எவையெவையாக இருக்கக்கூடும் போன்றன பேசப்பட வேண்டும்.