இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மத்தேயு என்னும் தன்மை, முன்னிலை, படர்க்கை

படம்
தன்மை , முன்னிலை , படர்க்கை   இந்தச் சொற்களை இலக்கண ப் புலமையின் அடிப்படைச் சொற்களாக அறிமுகம் செய்துள்ளது நமது கல்வியுலகம். தான், யான், நான் என்பன தன்மைகள்- தன்மை ஒருமைகள். அவற்றின் பன்மைகளாக தாம், யாம், நாம், நாங்கள். முன்னிலையில் நீ என்பது ஒருமை; நீங்கள் என்பது பன்மை. அவன், அவள், அவர்,அது என்பன படர்க்கை யொருமைகள்; அவர்கள், அவை பன்மைகள். இ ச்சொற்களை உச்சரிக்கும்போது நான் என்னும் தன்னிலையும் நீ என்னும் மாற்றுநிலையும் அவள்/அவன் /அவர்-கள் , அவை என்னும் விலகல் அல்லது சுட்டுநிலையும் உருவாவ தைப் பற்றி இலக்கணப்புலம் விரிவாகப் பேசுகின்றது. இந்த உருவாக்கமே மொழியின் அடிப்படை வினையாற்றுக்கூறு. இவற்றி லிருந்தே அறிவுத்தோற்றம் நிகழ்கிறது.

சிங்கப்பூர் சேர்ந்துகொண்டது

படம்
பல்கலைக்கழக வேலைகள், கல்விசார்ந்த பயணங்கள் என்றால் தனியாகவே பயணம் செய்வேன். அதிலும் தமிழக/ இந்திய பயணங்களில் எப்போதும் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. குறிப்பிட்ட பயணங்களோடு குடும்ப நிகழ்வுகள் அடுத்தோ, தொடர்ந்தோ வரும் சூழ்நிலையில் நானும் மனைவியும் சேர்ந்து போய்விட்டுப் பணி நேரத்தில் பிரிந்துவிடுவோம். ஆனால் வெளிநாட்டுப் பயணங்களில் அப்படி இருக்க நினைப்பதில்லை.

கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு

படம்
எனது அயல் பயணங்கள் என்பன பெரும்பாலும் கல்விப்பயணங்கள் தான். உலகத்தமிழ் மாநாட்டிற்காக மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்வது மூன்றாவது அயல்நாட்டுப் பயணம். 2011 இல் பல்கலைக் கழகத்தில் தொலைதூர மையங்களைச் சௌதி அரேபியாவின் தம்மாமிலும் ரியாத்திலும் ஆரம்பிக்க அனுமதிக்கலாமா என்று பார்க்கச் சென்ற ஒருநபர் குழுவுப் பயணம்தான் எனது முதல் வெளிநாட்டுப் பயணம்.

ஆகச்சிறந்த நல்லாணும் நல்லாளும் - BOY BESTIE AND GIRL BESTIE

படம்
  உருளும் நிகழ்வுகளால் அல்லது சுழலும் சொற்களால் அலைகிறது நமது காலம். சுழலும் சொற்களை அல்லது உருளும் நிகழ்வுகளை உற்பத்தி செய்வதில் அனைத்து வகையான ஊடகங்களும் போட்டியில் இருக்கின்றன. எப்போதும் பெரும் நிகழ்வுகளைத் திறப்புச் செய்திகளாக (Breaking News) உருட்டிவிடும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் போட்டியாக சிறு நிகழ்வுகளை உண்டாக்கி உருட்டி விடும் வேலையைச் சமூக ஊடகங்கள் செய்கின்றன. ஒருவிதத்தில் பெரும்போக்குக் கதையாடல்(Grand Narration)களுக்குப் போட்டியாகச் சிறுபோக்குக் கதையாடல்(Little Narration)களை உற்பத்தி செய்யும் இப்பாவனைகள் பின் நவீனத்துவ விளையாட்டுகளில் ஒன்று. இவ்வகை விளையாட்டுகள் இருவேறு இணைகோடுகளில் பயணிப்பவை அல்ல. இரண்டும் கொண்டும் கொடுத்தும் அழிந்தும் அழித்தும் நகர்பவை. 

பாபநாசம்: குளியலும் கும்மிருட்டும்

படம்
நெல்லையிலிருந்த இருபத்தி மூன்றாண்டுகளில் அதிகம் குளித்த அருவி பாபநாசம் அகத்தியர் அருவிதான். நீர்த்தேக்கம் பாபநாசம் கீழணைத்தேக்கம்தான். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை பாபநாசம் கீழணையில் குளித்து வருகிறேன். ஏதாவது வாய்ப்புக் கிடைத்தால் பாபநாசம் போய் விடவே எப்போதும் விரும்புவேன். திருநெல்வேலிக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் விரும்புவது குற்றாலம் . ஆனால் எனக்குக் குற்றாலம் விருப்பமானதாக இருந்த தில்லை. அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து குளித்து வெளியேறுவதில் ஏற்படும் எந்தப் பிரச்சினையும் பாபநாசத்தில் இல்லை.

சாரதியிடம் மண்டியிடும் பார்த்தன்கள்

படம்
திருமதி. சசிகலா நடராசன் தமிழ்நாடு வருகிறார் என்பது செய்தியாக மட்டுமல்ல; அறிவிப்பாகவும் விளம்பரங்களாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அவரது வருகை வரப்போகும் சட்டமன்றத்தேர்தலையொட்டி அரசியல் நிகழ்வாக மாறும் வாய்ப்பு உண்டு. இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அ இ அதிமுகவின் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் பங்காற்றியவர் என்று ஊடகவியலாளர்களும் உதிரிக்கட்சித் தலைவர்களும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லாமல் தவிர்ப்பது திரு ம.நடராசன் செய்த புலப்படா அரசியல் நகர்வுகளை. அவர் இருந்தால் எடுக்கும் முடிவுகள் திராவிட இயக்கப்பார்வை கொண்டதாகவே இருக்கும் என்பது வரலாறு. அந்த வரலாற்றைக் கைவிட்டுவிட்டுத் திசைமாறுவாரா திருமதி சசிகலா என்பதை இரண்டொரு வாரங்களில் அறிய முடியும்

ஒரு புகையிரதப் பயணமும் மகிழுந்துப் பயணமும்

படம்
சிங்களர்களோடு சேர்ந்து பயணித்த ரயில் பயணம் போலவே சொல்லப்பட வேண்டிய இன்னொரு பயணம் மலையகத்திலிருந்து அதன் இன்னொரு சமதளப்பகுதியில் இருக்கும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மலைப்பாதைப்பயணம். வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதைப் பயணங்கள் இரவில் அமைவதைவிடப் பகலில் அமைவதே நல்லது. பார்ப்பதற்கான காட்சிகள் நிரம்பி நிற்கும். அசையும் மரங்கள் மேகத்தைத் தொட முயற்சிப்பதும், மேகத்திரள்கள் மரங்களைத் தழுவிச் செல்வதுமான காட்சிகளைப் பல பயணங்களில் பார்த்திருக்கிறேன். மேகமாக நகரும் பஞ்சுப்பொதிகள் சில நிமிடங்களில் கறுத்து இருண்டு மழைமேகமாகிப் பெய்யத்தொடங்கிவிடும். ஆனால் இந்த மலைப்பாதைப் பயணம் இரவுப்பயணம். எண்பது கிலோமீட்டர் தூரம் தான். இரண்டரை மணிநேரத்தில் போய்விடலாம் என்று சொன்னார்கள். ஆனால் தமிழே தெரியாத அந்த ஓட்டுநரோடு சென்ற அந்தப் பயணம் மூன்றரை மணிநேரமாக மாறிவிட்டது.