இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்த்துகள் அம்பைக்கு.....

படம்
இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. பெண்மையச் சொல்லாடல்களை வெளிப்படுத்தும் வடிவமாகத் தனது சிறுகதைகளைத் தொடர்ந்து தந்துகொண்டிருந்தவர். இதுவரை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களின் பங்களிப்புகளோடு ஒப்புநோக்க, இந்த விருது அவருக்குத் தாமதமாகவே தரப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். கட்டுரைகள், சிறுகதைகள் என்ற இரு வடிவங்களில் அவரது வெளிப்பாடுகள் இருந்தபோதிலும் சிறுகதையே அம்பையின் அடையாளம்.

தீர்க்கவாசகன் கவிதைகள்

கட்டுரை மனம் என்னுடையது. ஆனால் விரிவாக அமர்ந்து எழுதமுடியாத கட்டுரைகளைக் கவிதை வடிவத்திற்குள் அடைத்துவிடவும் முயற்சிசெய்வேன். அந்த வகையில் எனது கவிதைகள் எப்போதும் புறம் சார்ந்த நிகழ்வுகளை விவரிப்பனவாகவும் விமரிசனம் செய்வனவாகவும் இருக்கின்றன. 

ராவணனை நினைவில் வைத்திருக்கும் திரிகோணமலை

படம்
ராமாயணம் கற்பனை; அதில் வரும் பாத்திரங்களும் இடங்களும் புனையப் பட்டவை. ராவணனின் தலைநகரான லங்காபுரியும் அங்கிருந்த மனிதர்களும் இப்போதிருக்கும் இலங்கையோடு தொடர்புடையன அல்ல என்று முடிவுகளை முன்வைத்த ஆய்வுகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். வட இந்தியாவில் இருக்கும் அயோத்தியிலிருந்த ராம லக்குவனர்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் இருக்கும் இலங்கைத்தீவுக்கு வந்திருக்க முடியுமா?

அலையடிக்கும் திரிகோணமலை

படம்
திரிகோணமலை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது காலை 6.30.கண்ட காட்சி இந்த மான். காட்டுக்குள்ளும் காட்சிச் சாலையிலும் மான் இணைகள்/கூட்டங்கள் தான் இதுவரையான அனுபவம். கடைகளும் மனிதர்களும் நிரம்பிய இடத்தில் தனியொரு மானாகப் பார்த்தில்லை. மானும் மிரளவில்லை. மக்களும் கண்டுகொள்ளவில்லை.

ஜயரத்ன என்னும் மனிதம்

படம்
இரண்டாவது இலங்கைச் செலவில் மறக்க முடியாத பயண அனுபவத்தைத் தந்தவர்கள் சிங்களமொழி பேசும் மனிதர்களாக இருந்தது தற்செயல் நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். கொழும்பு – பேராதனை புகையிரதப் பயணத்தில் சந்தித்தவரும் புத்த குருமார்களும் தந்த அனுபவத்திற்கு மாறான அனுவத்தைச் சபரகமுவ பல்கலைக்கழக வாகன ஓட்டி தந்தார். மலையகத்திலிருந்து சபரகமுவ பல்கலைக்கழகம் போய்த் திரும்பிய பயணம் மறக்கமுடியாத பயணமாக ஆனதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் பல்கலைக்கழக வாகனத்தின் ஓட்டுநரென்றால், இரண்டாவது காரணம் அந்த மலைப்பயணத்தின் வளைவு நெளிவுகளும் அடர்வனப் பகுதிகளும் எனலாம்.

சிங்களப் பகுதிக்குள் ஒரு தமிழ்த்துறை

படம்
இலங்கையின் மற்ற பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் பலரும் வந்து போவார்கள்; நான் பணியாற்றும் சப்ரகமுவ பல்கலைக் கழகத்திற்கு இலங்கையின் தமிழறிஞர்களும் எழுத்தாளர்களும் கூட அதிகம் வருவதில்லை. நீங்கள் திரும்பவும் இலங்கை வரும்போது கட்டாயம் சப்ரகமுவ பல்கலைக் கழகத்திற்கு வரவேண்டும். கற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு இருக்கும் எங்கள் மாணவ மாணவிகளோடு உரையாட வேண்டும் எனத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் அப்துல் ஹக் லறீனா.

வந்த வழி தெரிகிறது; போகும்பாதை... ? மலையகமென்னும் பச்சைய பூமி…

படம்

பெருமைமிக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில்….

படம்
  ஐந்தாவது நாள் இரண்டு பயணங்களிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரண்டிரண்டு சொற்பொழிவுகள் வழங்குவதற்காக அழைக்கப்பட்டேன். தமிழ்நாட்டிலும் இந்தியாவிலிருக்கும் பல்வேறு மாநிலத் தமிழ்த் துறைகளிலும் எனது விருப்பத்துறைகளாக இலக்கியவியல், அரங்கியல், ஊடகவியல், பண்பாட்டியல் சார்ந்து பல உரைகளை வழங்கியிருந்தாலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரைகள் சிறப்பான உரைகளென நினைத்துக் கொள்கிறேன்.  அந்த வாய்ப்புக் கிடைத்ததற்காக எப்போதும் மகிழ்ச்சி அடைகிறவன் நான். 

புகையிரத (ரயில்) பயணத்தில்

படம்
இலங்கை போன்ற குட்டி நாட்டில் நீண்ட தூரப் பயணங்களை இருப்பூர்தி வழியாகத் திட்டமிடலாம். தூரப் பயணங்களுக்குப் பேருந்துகளே போதுமானது; ஏற்றது. 2016 இல் சென்ற முதல் இலங்கைப் பயணத்தில் ரயிலைப் பார்க்கவே இல்லை. போர்க்காலம் முடிந்து 7 ஆண்டுகள் ஆன நிலையிலும் தமிழர் பகுதிக்குள் செல்லும் பாதைகள் இன்னும் செப்பனிடப்படவில்லை என்றும், ஓடும் ரயில்களும் பழைய ரயில்கள் என்றும் சொன்னதால் அந்தத்தடவை ரயில் பயணம் பற்றி யோசிக்கவே இல்லை.

நகர்வலம் : அடுக்குமாடிகளும் ராஜபாட்டைகளும்

படம்
உலகமயப் பொருளாதாரத்தையும் அதுசார்ந்த வர்த்தகத்தையும் உள்வாங்கிக் கொண்ட நிலையில் எல்லா நாட்டின் தலைநகரங்களும் மாற்றத்தைப் பெருமளவு சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சில நாடுகளில் அலுவல் ரீதியான தலைநகர் ஒன்றாகவும் வணிகத் தலைநகர் இன்னொன்றாகவும் பண்பாட்டுத்தலைநகர் மற்றொன்றாகவும் இருக்கும். பன்னெடுங்கால வரலாறு கொண்ட நாடுகளில் ஒவ்வொரு நகரங்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கவே செய்யும்.

புதிய படிப்புகளை நோக்கி ஒரு நிறுவனம்

படம்
கொழும்புவில் இரண்டாவது நாள் இலங்கைக்கு வந்த முதல் பயணத்திற்கும் இரண்டாவது பயணத்திற்கும் பெரிய அளவு வேறுபாடு உண்டு. முதல் பயணம் முழுவதும் கல்விப்புல ஏற்பாட்டுப் பயணம். ஆனால் இரண்டாவது பயணத்தில் எல்லா ஏற்பாடுகளும் சொந்த ஏற்பாடு போல. அதனைச் செய்து தந்தவர்கள் நண்பர்களே. கொழும்புக்கான பொறுப்பை எடுத்துக் கொண்டவர் ஷாமிலா முஸ்டீன்.

நுழைவும் அலைவும் : சில கவனக் குறிப்புகள்

படம்
  கொழும்புவில் முதல் நாள் இலங்கை இந்தியாவின் நெருங்கிய    நட்பு நாடு. அதனால் இந்தியர்களுக்கு நுழைவு அனுமதி வழங்குவதில் கெடுபிடிகளைக் குறைத்துக் கொண்டுவிட்டது.  இலங்கைக்கான விமானத்தில் ஏறும் விமான நிலையத்தில் இந்திய இருப்பிடச் சான்றுகளைக் காட்டி நுழைவு அனுமதிபெற்றுக் கொள்ளலாம் ( On arrival Visa) என்ற நிலை உருவான பின்பு இலங்கைச் சுற்றுலா எளிதாக மாறிவிட்டது என்று பலரும் சொன்னார்கள். அத்தோடு, கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளில் கொழும்பில் வெடித்த தொடர் வெடிகுண்டுகளுக்குப் பின் வெளிநாட்டார் வருகை குறைந்ததைச் சரிசெய்ய , இலங்கை அரசாங்கம் உள் நுழைவு அனுமதிகளை எளிதாக்கியிருப்பதாக வும் சொல்லப்பட்டது. சுற்றுலாப் பொருளாதாரத்தை நம்பும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கைக்குள் அயல்நாட்டார் வருவதைத் தடுக்கும் விதிகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ; நம்பிக்கையைத் தகர்த்துவிடும் என்பதால் உள்ளே அனுமதிப்பதில் கெடுபிடிகளைக் காட்டுவதில்லை

எனக்குள்ளிருந்த இலங்கைத் தீவு

படம்
லங்காபுரியைக் கடல்சூழ்ந்த தீவாகவே எனது முதல் வாசிப்பு சொன்னது. ஆகாய மார்க்கமாகத் தூக்கிச் செல்லப்பட்ட சீதா தேவியைத் தேடிச்செல்லும் அனுமன் தனது தாவுதிறனால் கடல் தாண்டிப் போய் இறங்கிய மலையும், அரண்மனையும் பற்றிய வர்ணனையை எனது தாத்தாவுக்கு வாசித்த போது எனக்குள் இலங்கைப் பரப்பு ஓர் அரக்கனின் ஆட்சி நடக்கும் பூமியாக அறிமுகமானது. சீதாதேவையைத் தூக்கிச் சென்ற ராவணனின் இலங்காபுரியாக எனக்குள் நுழைந்த பிரதேசப்பரப்பு ராஜ கோபாலாச்சாரியாரின் சக்கரவர்த்தித் திருமகன் வழியாக அறிமுகமான பிரதேசம். 

நின்று பார்த்த மாலையும் கடந்து வந்த காலையும்

படம்
  எத்தனை கோயில்கள்.. எத்தனை கடவுள்கள்   இன்றைய மாலை /13-12-21 இந்தியப் பரப்பெங்கும் பல்வேறு கோயில்களில் இருக்கும் எல்லாத் தெய்வங்களையும் ஓரிடத்திற்குக் கொண்டு வந்து குவித்து வைத்திருக்கிறார்கள் அந்த வெளியில். ஏழெட்டு ஏக்கர் நிலப்பரப்பில் உயர்ந்த சுற்றுச் சுவர்களுக்குள் 108 கோயில்களும் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

புதுமுகங்கள்; புதிய பாதைகள் - புல்புல் இஸபெல்லா, ஈழவாணி

படம்
  திறக்கும் வெளிகளுக்குள் நுழைவது மட்டுமல்ல; புதியபுதிய வெளிகளையே திறக்கிறார்கள் பெண்கள். பெண்களின் நுழைவுகள் ஆச்சரியப்பட வேண்டியனவல்ல. அடையாளப்படுத்தப்பட வேண்டியன

கவியின் அடையாளத்தைத் தேடுதல்: அ.ரோஸ்லினின் வாலைக்குழைக்கும் பிரபஞ்சம் தொகுப்பை முன்வைத்து

படம்
தமிழில் கவிதை வடிவத்திற்கு நீண்ட தொடர்ச்சி உண்டு. அத்தோடு தொடக்க நிலையிலேயே எளிய வடிவமாகவும் சிக்கலான வடிவமாகவும் உணரப்படும் தன்மைகளோடு தமிழ்ச் செவ்வியல் கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. செவ்வியல் கவிதைகளுக்குப் பிறகு செவ்வியல் கவிதைகளுக்கு இணையாகச் சிக்கலாகவும் எளிமையாகவும் வெளிப்பட்டுள்ளவை நவீனத்துவ கவிதைகள்.

கையறு: மரணத்தின் தாலாட்டு

படம்
தமிழர்களின் அலைந்துழல்வுச்சித்திரங்கள் சப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அமெரிக்காவின் அணுகுண்டுகள் வீசப்பட்ட நாட்கள்: ஆகஸ்டு- 6/ 9/ 1945. உலகத்தின் பார்வையில் பேரழிவு ஆயுதமாகப் பார்க்கப்பட்ட அணுகுண்டு, சப்பானின் அருகிலிருந்த பழைய பர்மா, மலேசியா, சீனா, தாய்லாந்து, முதலான நாட்டு மக்களால் வேறுவிதமாக உணரப்பட்டது. சிலர் தங்களின் விடுதலையின் கருவியாக அதை நினைத்தனர். இதுதான் வரலாற்றின் சுவைகூடிய நகைமுரண்