இடுகைகள்

சிறுகதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விழிப்புணர்வு நோக்கி இரு படங்கள்

படம்
 தான் சொல்ல நினைக்கும் கருத்துத்தான் முதன்மையானது;சொல்லும் முறை இரண்டாம்பட்சம் தான் என நினைப்பது உங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்காது. விழிப்புணர்வு அல்லது செய்தி சொல்லுதல், இயங்கத்தூண்டுதல் என்பன முன்வரும்போது கலையியல் தன்மைக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரவேண்டும். கலையியல் என்பது வாசிப்பவரை- பார்வையாளரைத் தன்னுள் இணைக்கும் உத்தி என்பதைப் புரிந்துகொண்டால் போதும். நேற்று நவம்பர் 25 அன்று இரண்டு படங்களும் இதில் கவனம் செலுத்தாத படங்களே..

அ.ராமசாமியின் விலகல் தத்துவம் - தேவி பாரதி

படம்
ஒன்று ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு கைகூடும் கனவு அது. 1957இல் பிறந்த, அப்போதைய கோவை மாவட்டத்தின் மிகச் சிறிய கிராமமொன்றில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த, தன் சக ஆசிரியர்களால் கே.என். எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட நல்லமுத்து ஆசிரியர் - முத்தம்மாள் தம்பதியின் மூத்தமகன் எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு அரசு உயர்நிலைப்பள்ளியொன்றில் குமாஸ்தாவாக இருப்பவன், 1993இல் எழுதி வெளியிட்ட 'பலி' என்னும் தமிழின் புகழ்பெற்ற தலித் சிறுகதை 2012இல் கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள ரானடே ஆடிட்டோரியத்தில் தமிழின் மூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமியின் எண்பதாவது பிறந்தநாளையொட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மூன்றுநாள் கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய நிகழ்வாக மேடையேற்றப்படவிருந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இப்போதைய தமிழ்த்துறைப் பேராசிரியரும் முன்னாள் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியரும் முன்னாள் வார்சா பல்கலைக்கழக ஆசியவியல் துறைத் தலைவரும் இந்த நாடகப்பிரதியை உருவாக்கியவரும் அதன் இயக்குனருமான பேராசிரியர் அ. ராமசாமியின...

ஏமாற்றங்கள்

இந்த ஏமாற்றம் ஒன்றும் புதியது அல்ல. சரியாகச் சொல்வதானால் நான் ஏமாறவில்லை என்பது தான் உண்மை. ஏமாந்தது சுந்தரமூர்த்திதான். ‘ ப்ளீஸ் டைம் ’ என்ற குரல்தான் அவளைப் பார்க்க வைத்தது. கடிகாரத்தைத் திருப்பி நேரத்தைப் பார்ப்பதற்கு முன்னால் அவளைப் பார்த்தேன். என்னை விடக் கூடுதலான உயரம். புருவங்களை உயர்த்திப் பார்க்க வேண்டியிருந்தது. அவளைப் பார்க்க விரிந்த கண்கள் கடிகாரத்தைப் பார்க்கும் போது உதவ மறுத்தன. நேரத்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் போனதற்கு உள்ளே போயிருந்த ஜின் கூடக் காரணமாக இருக்கலாம். போதை அதிகம் இல்லையென்றாலும் தெளிவாக எதிலும் கவனம் செலுத்துவதில் சிரமம் இருந்தது. அவள் கேட்டதற்கு நான் பதில் சொல்லாமல் இருந்ததைக் கவனித்த சுந்தரமூர்த்தி, என் கையை இழுத்து கடிகாரத்தைத் திருப்பி ‘ ஒன்பது நாற்பத்தி எட்டு’ என்று துல்லியமாகச் சொன்னான். அவ்வளவு துல்லியத்தை அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது சிரிப்பு வெளிப்படுத்தியது. சிரித்ததோடு ‘தேங்க் யூ வெரி மச்’ என்றும் சொன்னாள். அப்படிச் சொன்னபோது அவள் முகம் என்னிடமிருந்து சுந்தர மூர்த்தியிடம் திரும்பியிருந்தது.