காலத்திற்கேற்ற தமிழ் இலக்கியக்கல்வி பல்கலைக்கழகப் பணி ஓய்வுக்குப்பின் தொடர்ந்த கரோனா காலம் முடக்கிப் போட்டுவிட்டது. தொடர்ந்து கலை, இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபடத் திட்டமிட்டதை எல்லாம் மாற்றிப் போட்டு விட்டது. இந்த நிலையில் தான் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் கொடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு படைப்பாக்கக் கல்வியை மையப்படுத்தித் தமிழ்ப் பாடத்திட்டம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தேன். காலத்திற்கேற்பவும் மாணாக்கர்களின் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கத்துடனும் அதனை உருவாக்கினேன். அதன் தொடர்ச்சியில் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இப்போதிருக்கும் இளங்கலை, முதுகலைப் பட்டங்களின் தமிழ் இலக்கியக் கல்வியை மாற்றும் நோக்கமும் இருந்தது. அதற்கேற்ப ஒரு பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. கோவை குமரகுரு வளாகத்தில் உள்ளபன்முகக்கலை அறிவியல் கல்லூரி (Liberal Arts and Science) என்ற பெயருக்கேற்ப அதன் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புள்ள பட்டப்படிப்புகளாக ஆக்க நினைத்த நான் ஒன்றரை ஆண்டுகளில் அங்கிருந்து வெளியேறினேன். அதற்கு அங்குத் தமிழ்த்துறையில் பணியாற்றிய ஆசிரியர்களிடமிருந்த...