இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எந்த உலகத்தில் வாழ்கின்றோம்

படம்
தினசரிப் பேச்சில் பழமொழிகளின் பயன்பாடு அர்த்ததோடு இருப்பதும் உண்டு. அர்த்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி மிகக் கூடுதலான அர்த்தத்தோடு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் பழமொழி என்றே இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் பழமொழியாக இது இருக்கிறது.

சரவணன் சந்திரனின் புனைவுகள் -சில குறிப்புகள்

படம்
நவீனத்துவத்தைக் கடக்கும் எழுத்துமுறை மனிதர்களை எழுதுவதை மட்டுமே தனது தீவிரமான வேலை என நினைக்கும் சரவணன் சந்திரனின் கதைக்குள் உருவாக்கப்படும் பாத்திரங்களில் பெரும்பாலோர் நிகழ்காலத்துப் பாத்திரங்கள்தான். அவர்களின் செயல்பாடுகளையும் நகர்வுகளையும் தீர்மானிப்பதில் கடந்த காலத்திற்கும் பெரிய அளவில் பங்கிருப்பதாக அவர் எழுதுவதில்லை. அதன் வழியாக உருவான மரபான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட வேண்டும் என்ற தவிப்போ அல்லது அதையே சரியென ஏற்றுக்கொண்ட மனநிலையோ வெளிப்படவில்லை. நீண்ட காலமாக இருக்கும் அமைப்புகளின் சிற்றலகுகளையும் பேரலகுகளையும் குறித்த விவாதங்களும் இல்லை. அவை தரும் நெருக்கடிகள் குறித்துக்கூடப் பெரிய அக்கறைகள் இல்லை. மனிதர்களின்/ பாத்திரங்களின் நெளிவுசுழிவுகளையே கதைக்கான விவாத மையமாக்கிக் கதைகள் செய்பவராகச் சரவணன் சந்திரன் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார். உருவாகிவரும் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப முடிவுகளை எடுத்து நகரும் மனிதர்களின் சாயலில் தனது கதாமாந்தர்களை உருவாக்குவதின் மூலம் அவரது கதைகள் நவீனத்துவத்தைக் கடந்த எழுத்தாக உருவாகி வருவதை வாசிக்க முடிகிறது. எல்லாவற்றையும் தற்காலிக ஏற்பாடுகளாகப் புர

முழுமையும் முழுமையின்மையும் - சுரேஷ்குமாரின் இரண்டு கதைகள்

படம்
பாதிக்கதையைத் தாண்டும்போது இந்தக் கதை இப்படித்தான் முடியும் என்று நினைக்கும் வாய்ப்பைத் தராத எழுத்தாளர்களே தொடர்ந்து வாசிப்பதற்கான கதைகளைத் தருபவர்களாக இருக்கிறார்கள். இம்மாத உயிர்மையில் சுரேஷ்குமார் இந்திரஜித் எழுதியுள்ள பெரியம்மை அப்படியொரு கதை.

ஈழப்போர்க்கால நாவல்களில் பயங்கரவாதியின் இடம்

படம்
1983 ஜூலை 23 இல் நிகழ்ந்த கறுப்பு ஜூலை எனக் குறிக்கப்படும் பெருநிகழ்வு ஈழப்போராட்டத்தில் ஒரு தொடக்கம். அந்த நிகழ்வே ஆயுதப் போராட்டத்தை தனி ஈழத்துக்கான பாதை என்பதாக அறிவிக்கச் செய்தது. அந்தத் தொடக்கத்திற்கு வயது 40. ஆனால் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்கால் பேரழிவோடு நிறைவுபெற்றது. தனித்தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டத்தைக் கடைசிவரை நடத்திய விடுதலைப்புலிகள், ஆயுதங்களை மௌனித்துக் கொள்வதாக அறிவித்த நிகழ்வு முள்ளிவாய்க்கால் பேரழிவாகச் சுட்டப்படுகிறது. அந்த நாள் மே,18. 2009.

மந்திரத்தறி: உள்ளடுக்குகள் கொண்ட நாடகப்பனுவல்

படம்
வடிவங்களும் வாசிப்பும் இலக்கியப்பனுவல்கள் அதனதன் உள்கட்டமைப்பின் வழியாக இலக்கிய வாசகர்களைத் தேடுகின்றன. ஒவ்வொரு இலக்கிய வடிவத்தின் உள்கட்டமைப்பைப் புரிந்து கொண்டவர்களே கவிதை, புனைகதை, நாடகம் என்பதான இலக்கிய வடிவங்களின் வாசகர்களாக இருக்கமுடியும். அப்படியல்லாதவர்கள் பொதுநிலையாக வாசகர்கள் எனத் தங்களை அழைத்துக்கொள்வதில் சிக்கல் எதுவுமில்லை. ஆனால் நாடகத்தின் வாசகர் எனச் சொல்லிக்கொள்ள விரும்பினால், அவ்வடிவத்தின் அக, புறக் கட்டமைப்புகள் குறித்த அறிதல் இருக்கவேண்டும். நாடகப்பனுவலுக்குள் உருவாக்கப்படும் முரண்நிலைப் பாத்திரங்களின் நகர்வுகள் வழியாகவே நாடகப்பனுவலின் வாசிப்பு நிகழும்; நிகழவேண்டும் என்பதைத் தனது கவிதையியலில் விவரிக்கிறார் அரிஸ்டாடில். அதில் விளக்கப்பெற்றுள்ள உள்கட்டமைப்பில் இருக்கும் தொடக்கம், முரண்நிலை வெளிப்பாடு, சிக்கல் மலர்ச்சி, உச்சநிலைக் கூர்மை, பின்விளைவுகள் வழியான முடிவு என்பதான நல்திறக் கட்டமைப்புப்பனுவல்களுக்கு உலக நாடக இலக்கியத்தில் நீண்ட வரலாறு உண்டு.

இல்லாமல் போன 15 மணி நேரம்

படம்
சென்னையிலிருந்து கிளம்பிய இண்டிகோ விமானம், கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ‘எடுத்தது கண்டனர்; இட்டது கேட்டார்’ என்ற கம்பனின் வரி நினைவுக்கு வந்தது. மீனம்பாக்கம் விமான தளத்திலிருந்து கிளம்பும்போது நேரம் 04.45. ஒரு விசும்பலுடன் மேலே ஏறியது. அந்த விசும்பல் முடிந்து சின்னதான இடித்தலோடு கோவையில் தரையிறங்கும்போது நேரம் 05.35.

பொதுமனம் முன்வைக்கும் பெரும்பான்மைவாதம்

படம்
இந்தியப் பெரும்பான்மை வாதம் என்பது அறியப்பட்ட சமய, மொழி, இன, பெரும்பான்மைவாதமாக மட்டும் இல்லை. மெல்லமெல்ல நகர்ந்து நடுத்தர வர்க்கம் என்னும் பெரும்பான்மை வாதமாக மாறிக்கொண்டிருக்கிறது. சரியாகச் சொல்வதானால் இந்தியாவில் நடுத்தரவர்க்கம் பெரும்பான்மை வர்க்கம் கூட இல்லை. இன்னும் கிராமங்களில் வாழும் இந்தியர்களே அதிகமானவர்கள். ஆனால் அவர்களையும் நடுத்தரவர்க்கமனப்பான்மைக்குள் கொண்டுவரும்வேலையை ஊடகங்கள் செய்துகொண்டிருக்கின்றன.