இடுகைகள்

ஜூன், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூன்று அசல் கதைகளும் ஆறு மொழி பெயர்ப்புக் கதைகளும்

அளவில் பெரியதாக மாறி வரத் தொடங்கிய தலித் இதழின் அடுத்தடுத்த இதழில் இமையத்தின் இரண்டு கதைகள் வந்துள்ளன. பசிக்குப்பின்.. மாடுகள்.. இரண்டு கதைகளும் வெவ்வேறு வெளிகளில், வெவ்வேறு வயது மனிதர்களை உலவ விட்டுள்ள கதைகள். பசிக்குப்பின் கதையின் உலகம் ஒரு சிறுவனின் ஒரு நேரத்து உணவு சார்ந்த உலகம்.. தானியத்தைக் குத்தி அதிலிருந்து கிடைக்கும் தவிட்டைத் தின்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு சிறுவனின் மனசைத் திசை திருப்பி விடும் ‘ஐஸ் வண்டி’ ஏற்படுத்தும் சலனத்தை விரிவாகப் பதிவு செய்கிறார். ஒரு சிறுகதைக்கு அதுவே கூடப் போதுமானதுதான்.

தொலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதைகள்

படம்
சுஜாதாவை நினைவுகூரும் விதமாக உயிர்மை பதிப்பகம் சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் நவீன இலக்கியப் போக்குகளை அடையாளப்படுத்தும் படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 2014 இல் அதன் ஆறாவது ஆண்டு நிகழ்வில் சிறுகதைக்கான விருதைப் பெற்றுள்ளது என் ஸ்ரீராமின் மீதமிருக்கும் வாழ்வு என்ற சிறுகதைத் தொகுப்பு. கதைகள் எழுதப் பெற்ற முறையிலும் சரி, அளவிலும் சரி ஒரு சிறுகதைத் தொகுப்பின் வரையறைகளைத் தவிர்த்துள்ள தொகுப்பு இது. மொத்தம் 80 பக்கங்கள். கூறு, மீதமிருக்கும் வாழ்வு, விசுவாசம், மூன்று மழைக்காலங்கள் என 4 கதைகள் . இந்தத் தொகுப்பை இந்த ஆண்டின் சிறந்த தொகுப்பாக நான் தேர்வு செய்யவில்லை. ஆனாலும் வாசிக்கத் தக்க / வாசிக்க வேண்டிய கதைகளைக் கொண்ட தொகுப்பு எனச் சொல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

திரள் மக்கள் பண்பாடு: வெகுமக்கள் சினிமா

படம்
திரைப்படங்களைத் திறனாய்வு செய்தலின் பிரச்சினைகள் தமிழக அரசுக்கு அதிகமாக வரி கட்டுகிற துறை திரைப்படத் துறையே.எனவே,அரசு அதற்கான சலுகைகளை வழங்கிட வேண்டும் எனப் பெருங்குரலில் கோருகின்றனர். திரைப்படத் தயாரிப்புக்கு ஆகும் செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால் அந்தக் கலையை யாராலும் காப்பாற்ற முடியாது. இது இன்னொரு கூட்டத்தின் குரல். திருட்டு விசிடி-க்களின் அச்சுறுத்தல்களினால் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது திரைப்பட உலகம். இது மற்றொரு கூட்டத்தின் குரல் இந்தக் குரல்களோடு சேர்ந்து சினிமாவைப்பார்க்கலாமா? ரசிக்கலாமா..? தீபாவளிக்கு வந்த ஐந்து படங்களில் ........... மட்டுமே நிற்கப் போகிறது. மற்றதெல்லாம் பணால்.. இது ஒருவகை விமரிசனக்குரல். 1) --------- 2) ---------3)--------- 4) ------ 5) ------ 6)------ 7)-------- 8)--------- 9)-------- 10)----- இது இந்த வாரத்து வரிசை. அடுத்தவாரம் வரும் புதுவரவோடு அடுத்தவாரம் சந்திப்போம். இதுவும் ஒருவிமரிசனமுறை. எத்தனை நாளைக்குத்தான் இதேமாவு..தேசம்... பாதுகாப்பு.. தீவிரவாதம்.மீட்டெடுப்பு.காதல், திருடந்போலீஸ்... ப்ளீஸ் விட்டுவிடுங்களேன். இந்தக் கூற்றும் விமரிச

சாபமாகிவிடும் வரம்

நாடகப் பிரதியின் பகுதிகளை அல்லது கூறுகளைப் பற்றிப் பேசும் விமரிசகர்கள் இருவேறு தொகுதிகளைக் கூறி விளக்குகின்றனர்.

கிராமங்களூடாகச் சில பயணங்கள்

படம்
போலந்தில் நானி ரு ந்த   இரண்டாண்டுக் காலத்தில் ஐரோப்பிய நகரங்களைப் பார்க்க வேண்டும் என நினைத்ததை விடக் கிராமங்களைப் பார்க்கவே அதிகம் விரும்பினேன்; நினைத்தேன். நகரங்கள் பலவற்றிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் அக்கறை கொண்டதைவிடக் கிராமங்கள் சிலவற்றைப் பார்க்க வேண்டும்; அங்கே சில நாட்கள் தங்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. போலந்தின் குறுக்கும் நெடுக்குமாக நான் மேற்கொண்ட கார்ப்பயணங்கள் அந்த ஆசையை மேலும் மேலும் அதிகமாக்கின

மனிதநேயமும் நடப்பியல் வாதமும் :

மனிதநேயம் (Humanism) என்பது அடிப்படையில் தனிமனிதனின் கௌரவம் மற்றும் பெருமதியைக் குறித்த ஒரு தத்துவப் பார்வை. அதன் அடிப்படைக்கூறு , மனிதர்களுக்குள் செயல்படும் அறிவார்ந்த தன்மையையும் நல்லனவற்றிற்கும் உண்மைக்கும் பொறுப்பாக இருக்கும் குணங்களையும் கண்டறிந்து சொல்லுவது. இதன் தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு .