எஸ்.ரா.வின் ஞாபகக்கல்: நல்லதொரு உருவகக்கதை
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6RliWapNRTpAHaetO2KqJ2IjDZhjSOmRVu_Nedb0Cw-xSC43_P4ZIbGeWVuZtL9jpJaNJzehaz0peh79zHG7eABgToKQIEnauvC2wP7ifdpFEz7WlU14GR49y-aSdMYpJ0eCwZxX7PxzSROjrCszg5eGfIY64dGEDOgn0625vKWI85mP23rEP91Rr-A/w173-h200/296076322_553956643079273_1665944432800006063_n.jpg)
எஸ்.ராமகிருஷ்ணனின் ஞாபகக்கல், பெண்ணென்னும் பொதுப்பெயருக்குரியவளாக இருக்கும் வரை அவளுக்குள்ளிருக்கும் விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் எல்லாம் குடும்பத்தின் பாத்திரம் ஒன்றைத் தாங்கும்போது தொலைந்துபோகும் மாயத்தை உருவகமாக முன்வைத்துள்ளது. ஆண் முதன்மைக்குடும்ப அமைப்பில் பெண்களின் விருப்பங்களைத் தொலைத்துக்கட்டும் பாத்திரங்களாக மனைவி, அம்மா போன்ற பாத்திரங்கள் இருப்பதைக் கதை விவரிப்பின் மூலம் உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். குறிப்பாக இந்தியக் குடும்ப அமைப்பின் மீது நேரடியான விமரிசனத்தைக் கதை முன்வைக்கிறது.