இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சரவணகார்த்திகேயனின் கதையாக்கம் – பீத்தோவனின் சிம்ஃபொனியை முன்வைத்து

படம்
நண்பகல் நேரத்து மயக்கம் – சினிமாவைப்பார்த்து(மார்ச்11)விட்டு அச்சிதழ் ஒன்றுக்குக் கட்டுரை எழுதலாம் என்று தொடங்கினேன். தொடங்கியவுடனேயே சில நாட்களுக்கு முன்பு வாசித்த அந்தக்கதை நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்த கதை பீத்தோவனின் சிம்ஃபொனி. எழுதியவர் சரவணகார்த்திகேயன். அக்கதை கிழக்கு டுடே இணையப்பத்திரிகையில் வந்துள்ள குறிப்பை முகநூலில் சொல்லியிருந்தார் சரவணகார்த்திகேயன். அதில் நான் வாசிக்கவிலை. எழுத்தாளர் சிஎஸ்கே (writercsk.com) என்ற அவரது வலைப்பூவில் கதையை வாசித்திருந்தேன். உயிர்மையில் வந்த நூல்கள் தவிர அவரது எழுத்துகளில் பலவற்றை அதில் தான் வாசித்திருக்கிறேன் .

கோவையில் பார்த்த நாடகங்கள்

படம்
2022-மார்ச் 27 இல் உலக அரங்கியல் நாள் கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துச் சொன்ன பிறகு சென்னையிலும் கோவையிலும் சில நாடகங்கள் பார்க்கக் கிடைத்தன. சென்னையில் பிரசன்னா ராமஸ்வாமி மேடையேற்றிய இமையத்தின் கதைகளைத் தழுவிய நாடகங்களைத் தனியாக எழுதியுள்ளேன். இங்கே கோவையில் பார்த்த நாடகங்கள் பற்றிய குறிப்புகளை மட்டும் தொகுத்துத் தருகிறேன்.கோவை நகரில் பார்க்கக் கிடைத்தவை மட்டுமே. 

படம் தரும் நினைவுகள்-2

படம்
அமெரிக்கன் கல்லூரியின் முதன்மைக் கட்டட மாடியில் உள்ளமேடையில் எடுக்கப்பட்ட படம். 1989 - எனது இயக்கத்தில் மேடை ஏறிய முதல் நாடகமான ஞான.ராஜசேகரனின் ‘வயிறு’ நாடகத்தின் மேடையேற்றத்திற்குப் பின் பார்வையாளர்கள் எல்லாம் வெளியேறியபின் நடிகர்களும், நாடகத்தோடு பின்னணி வேலைசெய்தவர்களுமாக இருக்கிறோம்.

கோடைகாலக் குறிப்புகள் -1

படம்
போன வருடத்தை விட இந்த வருட வெயில் கூடுதல் - ஒவ்வொரு வருடக் கத்திரி வெயிலின் போதும் இந்த வாக்கியத்தை யாராவது சொல்லக் கேட்டிருக்கிறேன். கோவையிலும் அந்தச் சொற்களைக் கேட்கிறேன். கோவையின் கோடை காலம் முழுப்பங்குனி மாதமும் என்கிறார்கள். சித்திரை பாதியில் வெயில் குறைந்துவிடும். சில்லென்ற மேலைக்காற்று நீலகிரி மலையிலிருந்து இறங்கிவருவதை உணரமுடியுமாம். போனவருடம் உணரவில்லை. இந்த ஆண்டு உணரும் வாய்ப்புண்டு. 

சிவசங்கரிக்கு வாசகனின் வாழ்த்து

படம்
  ஒரு காலகட்டத்தில் எனது வாசிப்புக்குரிய எழுத்தாளராக இருந்த சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இவ்விருதைப் பெற்ற இந்திரா பார்த்தசாரதியும் பேரா.அ.அ.மணவாளனும் கூட எனது வாசிப்புக்குரியவர்களாக இருந்தவர்கள். அவர்கள் விருதுபெற்றபோது மகிழ்ச்சியோடு வாழ்த்தியவன் என்ற நிலையில் இப்போது சிவசங்கரிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுபத்திரிகை வாசிப்புக்கு முன்னால் -கல்லூரிக் காலத்திய வாசிப்புக்குரிய எழுத்தாளர்களாக இருந்தவர்கள் பட்டியல் ஒன்று. அந்தப் பட்டியலில் இரண்டு ஆண்களும் -சுஜாதா, பாலகுமாரந் இரண்டு இந்துமதி, சிவசங்கரி - தொடர்கதைகளால் வார இதழ்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பதின் பருவத்தின் கடைசியில் இருந்தவர்களுக்கான எழுத்துகள். அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் என வாசித்துத் திளைத்த காலம் அது. எழுத்தாளர்கள். கல்லூரி நூலகம், விடுதியின் படிப்பகம் என தேடி அலையாமலேயே கிடைக்கும். சினிமாக்காரர்களுக்கு இணையாக இந்த நான்குபேரின் படங்களும் பத்திரிகைகளில் இடம்பெறுவதும் வாசிப்பின் பின்னணியில் காரணங்களாக இருந்தன. அவர்களின் கதைகள் மரபான கூட்டுக் குடும்பங்களிலிருந

படையெடுக்கும் சினிமாச் செயலிகள்

படம்
இவ்வகைப் படங்களுக்கெல்லாம் மேற்கத்தியப் படங்களே முன்மாதிரிகள். தனிமனித மூளையில் உருவாகும் சிக்கல்கள் எவ்வகையான குற்றச்செயல்களாக வெளிப்படுகின்றன என்பதை அவற்றோடு தொடர்புடைய அறிவியல் சிந்தனைகளோடு விவாதிக்கும் படங்களை எடுப்பார்கள். அதற்காக அதன் ஆழத்திற்குள் சென்று விவாதிக்கும் காட்சிகளும் உரையாடல்களும் இடம்பெறும். ஆனால் இப்போது இணையவழித் திரையிடல்களில் வரும் இந்திய/ தமிழ்ப் படங்கள் அவற்றை மேல்கட்டுமான நிலையில் விவாதித்து நகர்கின்றன.

சொல்முறைமைகள் : ஒற்றை நோக்கும் பல்நோக்கும்

படம்
எழுதப்பெற்ற - சொல்லப்பட்ட முறையால் சிறப்பாகிவிடும் கதைகள் இப்போது அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. எழுத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சொல்முறைமையில் புதிய மாதிரிகளை உருவாக்குகிறார்கள். இந்தமாத (ஜனவரி, 2023) அம்ருதாவில் அச்சேறியுள்ள இரண்டு சிறுகதைகளுமே சொல்முறையால் வாசிப்புத்திளைப்பை உண்டாக்கும் கதைகளாக இருக்கின்றன. அதற்குக் காரணம் கதைகளை எழுதிய இந்திரா பார்த்தசாரதிக்கும் கவி.கருணாகரனுக்கும் எழுத்தில் இருக்கும் நீண்ட பயிற்சிகளே என நினைக்கிறேன். இந்திரா பார்த்தசாரதியின் கதையின் தலைப்பு: இறுதிமுடிவு. கருணாகரனின் கதையின் தலைப்பு: சித்தா. இவ்விரு கதைகளில் ஒன்று ஒற்றை நோக்குடன் நேர்கோட்டுக் கதைக் கூற்றாகவும்(Linear narration), இன்னொன்று பல்நோக்குடன் வரிசைமாற்றுச் சொல்முறை ( Non -Linear narration ) அமைப்பிலும் எழுதப்பெற்றுள்ளன. இவ்விரு சொல்முறைகளில் நேர்கோட்டுச் சொல்முறை மரபான கதைசொல் முறையாகவும், வரிசையற்ற சொல்முறை நவீனத்துவச் சிக்கலை எழுதுவதற்கு ஏற்ற வடிவமாகவும் கருதப்படுகிறது.

அவதாரம் : எப்போதும் நினைவில் இருக்கும் சினிமா.

படம்
தமிழ் சினிமா பரப்பில் தேர்ந்த நடிப்புக்கலைஞர்கள் என்ற வரிசையில் அறியப்படும் பெயர்களுள் ஒன்று நாசர். அவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் சினிமா அவதாரம்(1995). கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட அந்தப் படம் பல காரணங்களுக்காக இப்போதும் நினைவில் இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல; வெகுமக்கள் ரசனைக்கான படங்களை மட்டும் பார்த்துவிட்டுக் கடந்துவிடும் பலருக்கும் நாசர் என்ற நடிகரின் பெயரைச் சொன்னவுடன் அவர் இயக்கிய ‘அவதாரம்’ படமும் நினைவுக்கு வருவதைக் கவனித்திருக்கிறேன். தமிழ்ச் சினிமாக்களைப் பற்றி நண்பர்களோடு நடக்கும் கலந்துரையாடலில் உங்கள் நண்பர்களில் ஒருவர் அந்தப் படத்தை நினைவூட்டிப் பேசுவதைக் கேட்டிருக்கலாம். அறிவுத்தளத்திலும் பொதுத்தளத்திலும் நினைவூட்டிப் பேசப்படும் படங்கள் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றுப் போக்கில் ஒரு இடத்தைப் பிடித்துத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை. அதே நேரம் அவதாரம் முதன்முதலில் வெளிவந்தபோது பெருந்திரளான மக்களால் அதிகம் பார்க்கப்படவில்லை என்ற உண்மையையும் இங்கே நினைத்துக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. வணிகரீதியான வெற்றி என்ற எல்லையைத் தொடும் அளவுக்குப