இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ந.முத்துசாமி-புஞ்சைக்கும் புரிசைக்குமிடையே அலைந்த மனம்

படம்
தற்செயலான ஒத்துப்போகும் ஒன்று’ என விட்டுவிடத் தக்கதுதான் என்றாலும் சொல்லவேண்டிய ஒன்று. உறவினர்களின், நண்பர்களின் மரணச்செய்திகள் வருவதற்குச் சற்று முன்போ, வரும் நேரத்திலோ மரணிப்பவர்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருப்பது நடக்கிறது. மரணம் குறித்த மனத்தின் முன்னறிவிப்பில் பெரிதான அமானுஷ்யம் ஒன்றும் இல்லையென்றாலும் முன்னுணர்த்துவது அச்சமூட்டும் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.

எட்டுக்கால் பூச்சியும் இரண்டு கால் மனிதனும்.

அன்று புதன் கிழமை. அதனால் முந்திய நாளும் வேளை நாள் தான். ஒருவேளை இன்று திங்கட்கிழமையாக இருந்தால் எங்களை ஏற்றிச் செல்லும் வாகனத்திற்கு இரண்டு நாள் ஒய்வு இருந்திருக்கும். இந்த இரண்டு நாளில் எட்டுக்கால் பூச்சிக்கு இது சாத்தியம் தானா? என்ற கேள்விக்குள் என் மனம் இறங்கியிருக்காது. அதனால் எனது கவனம் அதன் மேல் படாமல் கூடப் போயிருக்கும்.

நவீன நாடகமும் தலித் நாடகமும்

நாடகம் என்றால் என்ன?  “ராமசாமி கந்தசாமியாக நடிப்பதை முத்துசாமி பார்த்துக் கொண்டிருப்பது தான் நாடகம். நாடகத்தை அதன் மற்ற அலங்காரங்களையெல்லாம் களைந்துவிட்டு சாராம்சமான விஷயம் எது என்று பார்த்தால் இது தான் நாடகம்“  நான் வாசித்த நோ்காணல் ஒன்றின் முதல் கேள்வியும் அதற்கான பதிலின் தொடக்கமும் இது. (நோ்காணல் செய்யப்பட்டவர்; கே. எஸ். ராஜேந்திரன், டெல்லி, தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவா், இந்நாள் ஆசிரியா். நோ்காணல் செய்தவா்; சி. அண்ணாமலை, பத்திரிகையாளா்) இதில் பதிலை விடவும் கேள்வியை முக்கியமானதாகக் கருதவேண்டியுள்ளது.

தரமான பொழுதுபோக்குப்படங்கள்

படம்
96 : கடந்த காலத்துக் காதலின் அலைவுகள் பார்க்கும் சினிமா ஒவ்வொன்றையும் அதற்குள் பேசப்படும் கருத்தியல் சார்ந்த விவாதப் புள்ளிகளைக் கண்டறிந்து - அதன் எதிர்மறை X உடன்பாட்டுநிலைகளை முன்வைத்துப் பேசபவனாக மாறிப்போனேன். அதனால் கருத்தியல்களைத் தாங்கும் காட்சிகள், வசனங்கள், பின்னணியின் இசைக்கோலங்கள், வண்ணங்கள், நகர்வுகள், காட்சிப்படுத்தப்படும் தூரம், நெருக்கம் எனத் திரைமொழியின் கூறுகளால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களின் வழியாக உருவாக்கப்படும் முன்வைப்புகள் என்னென்ன நோக்கங்கள் கொண்டன; பார்வையாளத்திரளை எந்தப் பக்கம் திருப்பும் வல்லமைகொண்டன எனப் பேசிப்பேசி எனது சினிமா குறித்த பதிவுகளுக்கொரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன். அச்சொல்லாடல்களுக்கு வலுச்சேர்ப்பதற்காகச் சில படங்களின் நிகழ்வெளியை முதன்மாக முன்வைத்து விவாதிப்பதுண்டு. சில படங்களின் காலப் பிண்ணனித் தகவல்களைத் திரட்டி விவாதித்ததுண்டு. சில படங்களின் இயக்குநர்களின் -நடிகர்களின் - தயாரிப்பு நிறுவனங்களின் புறத்தகவல்களின் வழியாகவும் விவாதித்ததுண்டு. இப்படி விவாதிப்பது சினிமாவைப் பார்ப்பதற்கான - திரள்மக்களின் நோக்கிலிருந்து பார்ப்பதற்கான ஒரு கோணம்

வாரிசுகளின் அரசியல்: வாரிசுகளின் சினிமா

படம்
  ’நடிகா் விஜய் நடித்த “ஆதி“ படத்தினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்ற முணுமுணுப்புகள் திரை அரங்க உரிமையாளா்களிடமிருந்தும் திரைப்பட விநியோகஸ்தா்களிடமிருந்தும் எழுந்ததையும் அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஏ. சந்திரசேகர் தந்த புள்ளி விவரங்களையும் விளக்கங்களையும் செய்தித்தாள்களில் வாசித்திருக்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலை:புதிய களம்- புதிய மொழி

படம்
முன்குறிப்பு: · சினிமா பார்ப்பதில் எனது விருப்பமான காட்சிநேரம் எப்போதும் இரண்டாம் ஆட்ட நேரம்தான். எனது இரண்டாம் ஆட்டம் என்பது நகரவாசிகளின் இரண்டாம் ஆட்டமல்ல. கிராமத்துக் கீற்றுக்கொட்டகையின் இரண்டாம் ஆட்டம். இரவு 10 மணிக்குத் தொடங்கி நடு இரவுக்குப் பின் முடியும் காட்சி. படிப்புக் காலத்தில் விடுதிக்காப்பாளர்களுக்குத் தெரியாமல் மதில் தாண்டிப் பார்த்த சினிமாக்காட்சிகளின் நேரம் அது. இப்போதும் அது தொடர்கிறது.

அந்தப் போட்டியில் நானும் இருந்தேன்.

அண்மையில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆந்திர மாநிலம், குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைப் பேராசிரியர் கோ.பாலசுப்பிரமணியன் அவர்களைத் தெரிவுசெய்து நியமித்திருக்கிறார் தமிழக ஆளுநர். துணைவேந்தராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள். 

பாலா: நம்பிக்கையூட்டுதலின் மறுபக்கம்

படம்
படைப்பு அல்லது கலை யாருக்குப் பயன்பட வேண்டும்? என்ற வினாவிற்கு “வாசகனுக்கு அல்லது பார்வையாளனுக்கு“ என்று சொல்லப்படும் விடையில், சொல்பவரின் சார்புநிலை வெளிப்படுவதில்லை. அதற்கு மாறாக, “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே“ என்பதாகப் பதில் சொன்னால் அவா் இடதுசாரி என அறியப்படலாம். “தனிமனிதனின் மன விசாரணைக்கும் விரிவுக்குமே கலை இலக்கியங்கள்“ என்று சொன்னால் அவரை வலதுசாரி என அடையாளப்படுத்தலாம். ஆனால் “படைப்பு யாருக்குச் சொந்தம்…….? என்ற வினாவிற்கு வலதுசாரியும் இடதுசாரியும் தருகின்ற விடை ஒன்றுதான் “படைப்பு படைப்பாளிக்குச் சொந்தம்“ என்பதுதான் அந்தப் பதில்.