பத்மினி: “என்னோட குரலையே நாடகத்திலெ பயன்படுத்தி இருக்கிறதாகவும், அந்தப்போலீஸ்காரப்படுபாவிங்க செஞ்ச அக்கிரமத்தெ மேடையிலெ காட்டறதாகவும் கட்டாயம் வந்து பாக்கணும்னு” நீங்க லெட்டர் எழுதியிருந்தீங்க. பாண்டிக்கு பக்கத்திலெ இருவது கல் தூரந்தான் கடலூர்.. ஆனா அப்போ வரமுடியல.. ‘ கமிஷன்’ ‘வக்கீல்’னு அலைஞ்சிக்கிட்டு இருந்தேனா.. எம்பாடே பெரும்பாடா இருந்துச்சு.. அதுக்கும் மேல நாடகம் என்ன வேண்டிக்கிடக்கின்னு வரல. இப்போ (06-02-95) மதுரைக்குக்கூடத் தற்செயலாத்தான் வந்தேன். நாடகத்தெப் பார்த்தேன். ராமசாமி: பாண்டியிலெ நாடகம் நடந்தப்பவே நீங்க வருவீங்க.. நாடகம் முடிஞ்சப்புறம் ஒங்க கருத்தக் கேட்டுட்டு அதுக்கப்புறமும் திரும்பவும் ‘வார்த்தை மிருகம்’ நாடகத்தெ மேடையேத்திறதெப் பத்தி முடிவு செய்யலாம்னு நெனச்சிட்டிருந்தோம். ஆனா.. நீங்க வரல.. நாடகத்தப்பத்தின ரெவ்யூ, ‘தினமணி’யில வந்த அன்னைக்குத்தான், ‘பழனியப்பன் கமிஷன்’ ரிப்போர்ட்டும் வந்துச்சு.. ‘ மானபங்கம் செய்தார்கள்; ஆடையை உருவினார்கள்; ஆனா கற்பழிக்கப்படவில்லை’ என்பதுபோல அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. இரண்டையும் ஒன்னாப் படிச்சவுடனே நாடகத்துக்கு இன்னும் அர்...