இடுகைகள்

காட்சிகள் நகர்கின்றன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நல்ல சினிமாவாக ஆகத்தவறிய இரண்டு படங்கள்

படம்
சினிமாவை வழங்கும் இணையச் செயலிகள் வழியாகக் குற்றம், வழக்கு, துப்பறிதல், தண்டனை என வடிவமைக்கப்படும் மலையாளப் படங்கள் சலிப்பைத் தருகின்றன. அதனால்    தமிழ்ப் படங்களின் பக்கம் போகத் தோன்றியது. அடுத்தடுத்து இரண்டு படங்களைப் பார்த்தேன். இதற்கான தூண்டுதலாக முகநூலில்  நண்பர்கள் எழுதிய குறிப்புகள் இருந்தன. எழுதியவர்கள் ஏன் அந்தப் படங்களைப் பார்க்கவேண்டும் என்று   சொல்லவில்லை என்றாலும் ‘பார்க்கலாம்’ என்று பரிந்துரைத்து ஒதுங்கினார்கள். அதனால் கொஞ்சம் ஆர்வம் தூண்டப்பட்டது. தூண்டப்பட்ட ஆர்வத்தில் முதலில் பார்த்த சினிமா 'பெரிசு' இரண்டாவதாகப் பார்த்தது "ஜெண்டில் வுமன்".

காட்சிகள் நகர்கின்றன

படம்
ஒரு சினிமா வெளிவந்து முதல் காட்சி முடிவதற்கு முன்பே சில நூறு விமரிசனக் குறிப்புகள் வந்துவிழும் காலத்தில் இருக்கிறோம். சமூக ஊடகங்களின் வரவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தில் தமிழ்ச் சினிமா உலகம் -சினிமாவைத் தொழிலாக நம்பியிருக்கும் தொழிலாளர்களும் வணிகர்களும் பெரிதாகப் பாதிக்கப்படுகிறார்கள் எனப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் சமூக ஊடகங்களின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டது சினிமா உலகம் அல்ல; பத்திரிகை உலகம் என்றே சொல்வேன். குறிப்பாகத் தினசரிகளிலும் வார இதழ்களிலும் சினிமா விமரிசனங்களை எழுதிவந்த பத்திரிகையாளர்கள் தான் முதன்மையான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார்கள். பல இதழ்கள் அவை வெளியிடும் சினிமா விமரிசனங்களுக்கு எந்தப் பொருத்தமும் பலனும் இல்லையென்று தெரிந்து அவற்றை வெளியிடுவதை நிறுத்திவிட்டன. அப்படி நிறுத்தாத பத்திரிகைகளின் விமரிசனங்களை வாசித்துவிட்டுத் திரையரங்கிற்குப் போவதா? அல்லது போகாமல் தவிர்ப்பதா? என்று முடிவெடுத்த காலமெல்லாம் இப்போது இல்லையென்று தெரிந்தபோதிலும் பழக்கத்தை நிறுத்த முடியாத மனநிலையில் சினிமா விமரிசனங்களை வெளியிடுகின்றன.