கலையியல் எதிரிகள்
கலையியல் அல்லது அழகியல் பற்றிப் பேசுவது பலருக்குப் புலமைத்துவப்பேச்சு என்றே நம்பப்படுகிறது. ஆனால் கலையியலின் விதிகளைப் பின்பற்றுவதும் செயல்படுத்துவதும் அறிந்த நிலையிலும் அறியாத நிலையிலும் செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. கலைஞர்கள் அல்லது படைப்பாளர்கள் அறிந்து செய்பவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது புலமைத்துவ மரபு. ஏனென்றால் கலையின் அல்லது படைப்பின் ரசிகர்கள் அறியாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்குச் சரியானதைத் தரவேண்டியது அறிந்து செயல்படும் கலைஞர்களின் வேலை என வலியுறுத்தும் இடத்தில் புலமைத்துவ மரபு இருக்கிறது.