இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசியம் - தேர்தல்

சாதாரண நாட்களில் தனிநபர் கொலைகளைப் பிரிவினைவாதத்தோடு இணைத்து, அமைப்பின் குற்றங்களாக முன்வைப்பதை வலதுசாரி தேசியவாதம் ஒரு உத்தியாகச் செய்கிறது. அதில் முன்னோடியாக இருப்பது வலதுசாரிகளின் கனவு நாடான அமெரிக்காதான். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் -2016 இல் கோடை விடுமுறையின்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்தேன்.மே முதல் வாரத்தில் போய், ஜூலை 21 இல் நாடு திரும்பினேன். அந்த மூன்று மாத காலத்தில் வலதுசாரி தேசிய வாதத்தின் உளவியல் செயல்படும் விதத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தேர்தல் 2019 - IV

 18-04-19/ இது வித்தியாசமான வாக்களிப்பு இந்தியா/ தமிழகம் மக்களாட்சித் திருவிழாவில் பங்கேற்கப் பழகிவிட்டது என்று சொல்கிறது இந்தப் பக்குவம். வாழ்க மக்களாட்சி முறை.

கவிதை வாசிப்புக்கணங்கள்

எழுதவிரும்பும் ஒருவர் முதலில் தொடங்குவது கவிதையாக இருக்கிறது. ஒன்றைப் பார்த்தவுடன் - ஒன்றில் பங்கேற்றவுடன் -ஒன்றால் பாதிக்கப்பட்டவுடன் அதைக் குறித்துச் சொல்வதற்கேற்ற இலக்கியவடிவம் கவிதை. அக்கவிதை வடிவத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறவர்கள் உணர்வை எழுதுவதிலிருந்து மெல்லமெல்ல நகர்ந்து அறிவையும் கருத்தியலையும் சிந்திப்பு முறைமைகளையும் கவிதையாக்கும் முயற்சிக்கு நகர்கிறார்கள். அப்படி நகரும்போது அந்தக் கவிஞர்கள் அந்த மொழியில் இயங்கும் காலத்தின் கவியாக அடையாளப் படுகிறார்கள். நவீனத்துவத்தை உள்வாங்கிய பாரதியின் தொடக்கக் காலக் கவிதைக்கும் பிந்தியக் காலக் கவிதைகளுக்குமான வேறுபாட்டைக் கவனிப்பவர்களுக்கு இது புரியும். 

அரசியல் சார்பும் வர்க்க நலனும்

படம்
தமிழ்நாட்டின் சன் தொலைக்காட்சிக் குழுமமும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக் குழுமமும் இப்போதைய தேர்தலில் காட்டும் நடுநிலைப் போக்கு பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. அந்த அதிருப்தியாளர்கள் பெரும்பாலும் தி.மு.க. ஆதரவு வாக்காளர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்களை அரசியல் அறிவுகொண்ட பார்வையாளர்களாக நினைத்துக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. அதனால் தான் அவர்களால் ஏற்க முடியாமல் இருக்கிறது.

உலகமயம் : திராவிட அரசியலும் தேசிய அரசியலும்

படம்
உலகமயமும் இந்தியாவும்  உலகமயம் இந்தியாவில் ஒத்துக் கொள்ளப்பட்ட பொருளியல் உறவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 30 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதற்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதார உறவுகள் கலப்புப் பொருளாதாரம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. அரசு தன்னைப் பெருந்தொழில்களில் முதலீடு செய்யும் முதலாளியாக நினைத்துகொண்டு முதலீடு செய்தது. அவை பெரும்பாலும் கனரகத் தொழில்களாக இருந்தன. சிறு மற்றும் குறுந்தொழில்களில் தனியார் துறைக்கு அனுமதிகளை வழங்கியது. அனுமதிகள் வழங்குவதில் கட்டுப்பாடுகளும் தேக்கநிலையும் இருந்தன.ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு ஒரே அனுமதி என்பதைத் தாண்டிப் பல்வேறு கட்டங்களில் அனுமதிக்காக அரசு நிர்வாகத்திடம் தனியார் செல்லவேண்டியதிருந்தது. 

தேர்தல் -2019 -III

படம்
தமிழ் அடையாளங்களென நமது உறுப்பினர்கள்  மக்களாட்சி என்னும் அரசமைப்பு அடிப்படையில் புறநிலை யதார்த்தத்திற்கேற்பத் தன்னிலையை மாற்றிக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் பொது மனிதனாக ஆவது என்ற உயரிய சிந்தனையை முன்வைக்கும் ஒரு கோட்பாடு. நான், எனது, என்ற அகம் சார்ந்த தன்னிலை உருவாக்கக் கூறுகளை ஒரு மனிதனிடமிருந்தால் அதைக் குறைத்துப் பொதுநிலைப்பட்ட மனிதனாக ஆக்கும் நோக்கம் கொண்டது. அதன் மூலம் அம்மனித ஆன்மாவை விடுதலை அடையச் செய்யும் பாதையே மக்களாட்சியின் பாதை.

அதிகாரங்களின் முரணியக்கம்

பழைய பஞ்சாங்கங்கள் பயன்பாட்டில் இருக்கும் கலைச்சொற்களுக்கு எதிர்நிலைப்பாட்டைக் குறிக்கும் கலைச் சொல்லாக்கம் எளிமையானது. இருக்கும் கலைச்சொல்லின் முன்னால் - எதிர்/ Anti - என்பதைச் சேர்த்துப் பயன்படுத்திவிடலாம். ஆனால் அப்படியே பயன்படுத்தாமல் சிலவகையான வேறுபாடுகளோடு பயன்படுத்தும்போது எப்படிப் பயன்படுத்துவது என்பதில் சிக்கலும் குழப்பமும் ஏற்படுவதுண்டு. சிலவேளைகளில் - நவ(Neo)- என்ற முன்னொட்டும் சில வேளைகளில், - புது( New)- என்ற முன்னொட்டும் சேர்க்கப்படுகிறது

தடயம்:தமிழ் மாற்றுச் சினிமாவில் ஒரு மைல்கல்.

படம்
நிறைவேறாத காதல் - தமயந்தியின் தடயம் சினிமாவின் விவாதப் பொருள் என்பதைப் படம் பார்ப்பதற்கு முன்பே அறிவேன். தடயத்தை எழுத்தில் வாசித்திருக்கிறேன். அப்போது இப்படி எழுதியிருக்கிறேன்

தேர்தல் 2019 -II

05-04-19/எதிரிகளாகவும் சீர்திருத்தம் வேண்டுபவர்களாகவும் இன்றைய இந்தியாவில் தேசிய கட்சிகள் என்னும் அடையாளம் தாங்கிய அணிகளாக மூன்றைக் காட்டலாம். மைய அரசின் அதிகாரத்திலிருக்கும் பாரதிய ஜனதாகட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்ட அணி இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் செல்வாக்குடன் இருக்கிறது. அதற்கடுத்த நிலையில் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைமையில் இயங்கும் அணி இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் சமமாக இல்லையென்றாலும் பெரும்பாலான மாநிலங்களில் அரசியல் சொல்லாடல்களை உருவாக்கும் இடத்தில் இடதுசாரிகளாக அறியப்படும் இந்தியக் கம்யூனிஸ்டும் அதிலிருந்து உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் நட்புமுரணோடு ஒரே அணியாக இருக்கின்றன. இந்தப்பின்னணியில் இந்தப் பொதுத்தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்கால நெருக்கடிகள் இரட்டை எதிர்வை - இருமுனைப் போட்டியை உருவாக்கியிருக்கிறது

பாண்டிச்சி: முதல் எழுத்து என்னும் நிலையோடு...

படம்
தமிழ் இலக்கிய மரபில் கவிதைதான் பெண்களின் வெளிப்பாட்டு வடிவமாக இருந்துவருகிறது. கவிதையில் கதைசொல்லும் நெடுங்கவிதை களைக் கூட முயற்சி செய்யவில்லை. நெடும்பாடல்களையும் குறுங் காவியங்களையும் ஆண்களே முயற்சி செய்திருக்கிறார்கள். நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிலும் கூடப் புனைகதைகள் எழுதும் பெண்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது.