இடுகைகள்

லிங்கம்: அதிகாரத்தின் பாதைகள்

படம்
"தளபதி, அரசனாக நினைத்துவிட்டால்... ?" - இது சேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் அனுமானம் (Premise ). அந்த அனுமானத்தின் மேல் பின்னப்பட்ட காட்சிகளையும் அங்கங்களையும் சரியாகச் செதுக்கி உருவாக்கிய மேக்பெத் நாடகம் தொடர்ந்து மேடையேற்றப்படும் நாடகம். சேக்ஸ்பியர் எழுதிய ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டும் தழுவலாக்கம் செய்யப்பட்டும் நிகழ்த்தப்படுகின்றன.

புலம்பெயர் இலக்கியமும் ஐக்கிய அமெரிக்கத் தமிழர்களும்

படம்
புலப்பெயர் இலக்கியம் -புரிதலுக்காக குறிப்பிட்ட ஒருமொழியைப் பேச்சுமொழியாகக் கொண்ட மனிதர்கள் புலம்பெயர்ந்து, வெவ்வேறு நிலவியல் பின்னணியில் வாழ நேர்வதில் மகிழ்ச்சிகளும் உண்டு; துயரங்களும் உண்டு. 'இது என்நாடு' என்ற எண்ணம் உண்டாக்கும் மகிழ்ச்சிக்குள்ளேயேகூட, எனது ஊரில் சுற்றமும் பந்துக்களும் சூழ வாழ முடியவில்லையே என்ற எண்ணங்களும் உருவாவதைத் தவிர்க்க முடியாது. இவ்வகை எண்ணங்களும் மனவுணர்களும் உலக இலக்கியத்தில் தொடர்ந்து எழுதப்படும் உரிப்பொருட்களாக உள்ளன. தமிழின் செவ்வியல் கவிதையியலில் ‘பிரிவும் பிரிவின் நிமித்த்மும்’ காரணமாக எழுதப்பெற்றவை பாலைத் திணைப்பாடல்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு இடங்களுக்குப் பிரிய நேர்ந்த மனிதர்களுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தன.

பேராசிரியர் அ. ராமசாமியின் பெண்ணிய வாசிப்புகள்

படம்
"அறிவு ஒவ்வொருவருக்கும் வேறுவேறாய் இருக்கிறது. வேறுவேறு அளவுகள் தானே வந்ததில்லை. இருப்பாலும் சூழலாலும் உருவாவது. இருப்பு என்பதும் உருவாக்கம் என்பதும் நிகழ்கால இருப்பு மட்டுமல்ல. கடந்த கால வாய்ப்புகளும் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்ததும் பற்றியதுதான்."

உயிர்மைச் சிறுகதைகள்.

இணைய இதழாயினும் அச்சிதழாயினும் முதல் வாசிப்புக்கான விருப்பம் அவற்றில் வரக்கூடிய சிறுகதைகளே. அதன் பின்னரே கவிதை, கட்டுரை என நகர்வேன். மாதந்தோறும் நான்கைந்து கதைகளை வெளியிடும் உயிர்மையில் ஒவ்வொரு மாதமும் ஒன்றிரண்டு கதைகள் முக்கியமான கதையாக – புத்தம் புதுக்கதையாக இருக்கும் என்பதால் கடந்த ஆறுமாதமாக வாசிக்காத கதைகளையும் வாசிக்கவேண்டும். ஆனால் இரண்டு நாட்களாக வாசித்த கதைகள் இந்த மாதத்தில் வந்துள்ள கதைகளை. 2026, ஜூன் இதழில் 5 சிறுகதைகளை அச்சிட்டுள்ளது.

காசி மாரியப்பன் என்னும் கருத்தியல் கடத்தி

படம்
நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள், அவரால் உருவாக்கப்பட்டவர்கள் எனப் பல தரப்பினருக்கும் ஒருவர் தந்துள்ள அன்பு, மரியாதை, உறவுநிலை, வழிகாட்டுதல் எனப் பல தளத்தைச் சொல்லும் கட்டுரைகள் அடங்கிய ‘காசி ஐயா’ தொகுப்பை வாசிக்க வாசிக்க எனக்கு முதலில் தோன்றியது ஆசிரியத் தொழிலில் மதிப்புமிக்க பக்கங்களை வாசிக்கிறோம் என்ற மனநிலை. நண்பர் காசி.மாரியப்பன் அளவுக்கு மாணாக்கர்களின் மரியாதையும் அன்பையும் பெற்ற ஆசிரியராக நான் இருந்ததில்லை என்ற எண்ணம் அடுத்துத் தோன்றியது.