இடுகைகள்

ஷிபு எஸ். கொட்டாரம்- எனது மாணவர்; எனது ஆசிரியர்

படம்
வாழும்போது புகழ்பட வாழ்தல்: ------------------------------------------ ஷிபு எஸ். கொட்டாரம் என்னும் அரங்கியலாளன் --------------------------------- புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியில் நான் ஓராண்டுக்கு முன்னால் இணைந்தேன்; அவன் ஓராண்டுக்குப் பின்னால் சேர்ந்தான். ஓராண்டு இடைவெளி மட்டுமல்ல. அவன் சேர்ந்தது மாணவனாக; நான் இணைந்தது விரிவுரையாளராக. ஆனால் அவன் வந்தது தொடங்கி எங்களை ஆசிரிய -மாணவ உறவில் வைத்துக்கொள்ளவில்லை. இருவரும் கற்பிப்பவர்களாகவும் கற்பவர்களாகவுமே சேர்ந்து பயணித்தோம். அண்மையில் (07-080-2026) இந்த உலகத்தில் அவனது காலம் முடிந்துவிட்டது. திருச்சூர் நாடகப்பள்ளியின் துறைத்தலைவராக இருந்தபோது அந்த மரணம் நிகழ்ந்துவிட்டது. தோன்றிற்புகழொடு தோன்றுக என்பதைவிடவும் வாழும்போது புகழ்பட வாழவேண்டும் என்பதற்கு அவன் உதாரணம். அவனது நாடகவியல் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாகக் கேரள அரசாங்கம் மரியாதை செய்து அனுப்பியிருக்கின்றது. புதுச்சேரி நாடகப்பள்ளியும் தனது முன்னோடி மாணவனுக்கு நல்லதொரு அஞ்சலியைச் செலுத்தியிருக்கின்றது. அத்துறையில் கற்றுத் தொடர்ந்து அரங்க...

சிட்டுக்குருவியின் அழகும் வல்லூறின் வலிமையும்: தேசியவாதமும் தேசிய இனங்களின் தன்னுரிமையும்

படம்
தேசியவாதம் என்பதையும் தேசிய இனவாதம் என்பதைக் கருத்தியல் அடிப்படையில் சொல்லாடல்களாகப் பேசிக்கொண்டிருக்கின்றோம். அதனையே அனைவருக்கும் எளிதாகப் புரியும் விதமாகப் பேசுவதென்றால் ‘ நாம் வாழும் நாடு பரப்பளவில் பெரியதொரு நாடாக இருக்க வேண்டுமா? அல்லது சின்னதான நாடாக இருக்க வேண்டுமா? எனக் கேட்டு விடை காணுவதாகச் சொல்லலாம். இவ்விரு எதிர்நிலையில் எது நல்லது?

பூமணியின் நினைவாக...

படம்
பூமணி! நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக்கொள்ளுங்கள்!! பூமணியின் அஞ்ஞாடி நாவல் 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதைப் பெறுகின்றது என்ற அறிவிப்பு வந்தது. அறிவிப்பைக் கேட்டதும் அனுப்பப்பட்ட வாழ்த்துக்கடிதத்தின் தலைப்பு இது. கட்டுரை வடிவிலான அந்தக் கடிதத்தைப் புலனத்தின் வழியே அனுப்பியதும் அவரே அழைத்துப் பேசினார். இருவரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டோம்.

நினைவுகளை எழுதுதலும் அழித்தலும் - தலித் இதழின் மூன்று சிறுகதைகள்

 ஆகஸ்டு,2026 தலித் இதழில் மூன்று சிறுகதைகள் அச்சாகியுள்ளன.               1. கரடிகுளம் ஜெயப்பாரதிப்ரியாவின் 'பால்ய சோகம்',         2. பிரதிபா ஜெயச்சந்திரனின் 'தாத்தா குறிப்புச்சிட்டைகளின் குழல் டப்பா', 3. க.மூர்த்தியின் 'பாறையில் முளைத்துவரும் அப்பாவின் தெத்துப்பல்' . நினைவுகளை எழுதுதல் கடந்த காலத்தின் நினைவுகளுக்குள் பயணிப்பது பெரும்பாலான புனைகதைகளின் பொதுக்கூறு என்றாலும் தொடக்கக்காலத் தலித் புனை கதைகள் கடந்த காலத்தை எழுதுவதையே தலித் இலக்கியத்தின் அழகியலாக முன்வைத்தன. தமிழில் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றில் எழுதப்பெற்ற தலித் தன்வரலாறுகளின் பெருக்கத்தை நினைவுபடுத்திக் கொண்டால் இந்தக் கூற்றின் உண்மை புரியவரலாம்.   இம்மாதத் தலித் இதழில் வந்துள்ள மூன்று கதைகளும் கடந்த காலத்திற்குள் பயணிக்கும் சொல்முறைமையையே கொண்டுள்ளன. மூன்று கதைகளில் பால்யசோகம் கதை தலித் இதழில் அச்சாகத்தக்க சிறுகதையாக இல்லை. " விருப்பமான முறையில் தனது தலைமுடியை வெட்டிக்கொள்ள நினைக்கும் சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றாத தந்தையின்...

ரவிக்குமார் கவிதைகள்

படம்
மரணம் என்பதும் தற்கொலை என்பதும் கொலை என்பதும் கருத்து ரீதியானவை அல்ல; செயல் ரீதியானவை. புறவயமான நடப்பைக் குறித்துப் பயன்படும் இச்சொற்கள் ஒருமையாக ஒலிக்கும்போது உருவாக்கும் உணர்வுகளும், ஒருமையிலிருந்து பன்மைக்கு மாறும்போது உருவாக்கும் உணர்வுகளும் ஒன்றுபோலானவை அல்ல. அதேபோல தன்மை, முன்னிலை என்ற இடங்களுக்குரியனவாக நின்று ஒலிக்கும்போது உண்டாக்கும் உணர்வுகளுக்கும் படர்க்கையாக நின்று ஒலிக்கும்போது உருவாக்கும் உணர்வுகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன.