இடுகைகள்

ரவிக்குமார் கவிதைகள்

படம்
மரணம் என்பதும் தற்கொலை என்பதும் கொலை என்பதும் கருத்து ரீதியானவை அல்ல; செயல் ரீதியானவை. புறவயமான நடப்பைக் குறித்துப் பயன்படும் இச்சொற்கள் ஒருமையாக ஒலிக்கும்போது உருவாக்கும் உணர்வுகளும், ஒருமையிலிருந்து பன்மைக்கு மாறும்போது உருவாக்கும் உணர்வுகளும் ஒன்றுபோலானவை அல்ல. அதேபோல தன்மை, முன்னிலை என்ற இடங்களுக்குரியனவாக நின்று ஒலிக்கும்போது உண்டாக்கும் உணர்வுகளுக்கும் படர்க்கையாக நின்று ஒலிக்கும்போது உருவாக்கும் உணர்வுகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன.

கோவையோடு ஞானியும்

படம்
கோவை புத்தகக் கண்காட்சி(2023)க்குப் போயிருந்தேன். காட்சி அரங்குகளில் சந்தித்தவர்களில் - மேடையில் இருந்தவர்களில் என எங்கும் அவரின் பெயர் திரும்பத்திரும்ப உச்சரிக்கப்பட்டது. கண்காட்சியில் மட்டும் என்றுகூடச் சொல்லமுடியாது. கோவையில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளில் நான் சந்திந்த பலரும் அவரது பெயரைச் சொல்வதும் அவரது தாக்கம் அவர்களுக்குள் எப்படி இருந்தது என விவரிப்பதுமாகவே இருந்தார்கள். ஞானி கோவையின் இலக்கியமுகமாக இருந்தார் என்பதைத் திரும்பத்திரும்ப உணரமுடிந்தது.

ஒற்றைத்தன்மையும் கல்வித்துறையும்

படம்
துணைவேந்தர்கள் நியமனம் எப்போதும் அரசியல் சார்புடன் தான் நடக்கின்றது. அரசியல் என்பதில் இரண்டு நிலைகள் உண்டு. முதலாவது கருத்தியல் அரசியல்; இரண்டாவது நடைமுறை அரசியல்.  ஆசிரியனாகப் பல பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் 40 ஆண்டுகள் கல்விப்புலங்களில் உலாவிய எனக்கு இந்த இரண்டு நிலைப்பட்ட அரசியல் மீதும் ஏற்புடைய கருத்துகளும் உள்ளன; மறுக்கும் கருத்துகளும் உள்ளன. மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு நகர்த்தப்பட்டதைக்கூட இரண்டுவிதமாகவே புரிந்துகொண்டுள்ளேன்.

லிங்கம்: அதிகாரத்தின் பாதைகள்

படம்
"தளபதி, அரசனாக நினைத்துவிட்டால்... ?" - இது சேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் அனுமானம் (Premise ). அந்த அனுமானத்தின் மேல் பின்னப்பட்ட காட்சிகளையும் அங்கங்களையும் சரியாகச் செதுக்கி உருவாக்கிய மேக்பெத் நாடகம் தொடர்ந்து மேடையேற்றப்படும் நாடகம். சேக்ஸ்பியர் எழுதிய ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டும் தழுவலாக்கம் செய்யப்பட்டும் நிகழ்த்தப்படுகின்றன.

புலம்பெயர் இலக்கியமும் ஐக்கிய அமெரிக்கத் தமிழர்களும்

படம்
புலப்பெயர் இலக்கியம் -புரிதலுக்காக குறிப்பிட்ட ஒருமொழியைப் பேச்சுமொழியாகக் கொண்ட மனிதர்கள் புலம்பெயர்ந்து, வெவ்வேறு நிலவியல் பின்னணியில் வாழ நேர்வதில் மகிழ்ச்சிகளும் உண்டு; துயரங்களும் உண்டு. 'இது என்நாடு' என்ற எண்ணம் உண்டாக்கும் மகிழ்ச்சிக்குள்ளேயேகூட, எனது ஊரில் சுற்றமும் பந்துக்களும் சூழ வாழ முடியவில்லையே என்ற எண்ணங்களும் உருவாவதைத் தவிர்க்க முடியாது. இவ்வகை எண்ணங்களும் மனவுணர்களும் உலக இலக்கியத்தில் தொடர்ந்து எழுதப்படும் உரிப்பொருட்களாக உள்ளன. தமிழின் செவ்வியல் கவிதையியலில் ‘பிரிவும் பிரிவின் நிமித்த்மும்’ காரணமாக எழுதப்பெற்றவை பாலைத் திணைப்பாடல்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு இடங்களுக்குப் பிரிய நேர்ந்த மனிதர்களுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தன.