உயிர்மைச் சிறுகதைகள்.
இணைய இதழாயினும் அச்சிதழாயினும் முதல் வாசிப்புக்கான விருப்பம் அவற்றில் வரக்கூடிய சிறுகதைகளே. அதன் பின்னரே கவிதை, கட்டுரை என நகர்வேன். மாதந்தோறும் நான்கைந்து கதைகளை வெளியிடும் உயிர்மையில் ஒவ்வொரு மாதமும் ஒன்றிரண்டு கதைகள் முக்கியமான கதையாக – புத்தம் புதுக்கதையாக இருக்கும் என்பதால் கடந்த ஆறுமாதமாக வாசிக்காத கதைகளையும் வாசிக்கவேண்டும். ஆனால் இரண்டு நாட்களாக வாசித்த கதைகள் இந்த மாதத்தில் வந்துள்ள கதைகளை. 2026, ஜூன் இதழில் 5 சிறுகதைகளை அச்சிட்டுள்ளது.