தமிழகத்தேர்தலும் புலம்பெயர்ந்த தமிழர்களும்
தமிழகத்தேர்தல் காலங்கள் சிலவற்றின்போது நான் அயல்நாட்டுப் பயணங்களில் இருந்துள்ளேன். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைச் சந்தித்துப் பேசவும் செய்துள்ளேன். அந்தப் பேச்சில் தமிழ்நாட்டுத் தேர்தல்களும் விவாதப்பொருளாக இருந்துள்ளன. அண்மையில் கனடாவிற்குச் சென்றபோது தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தை விவாதிப்பதற்காகவே ஓர் அறைக்கூட்டம் (ஏப்ரல்/11/ஞாயிறு முற்பகல்) ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு மணி நேர உரையாடலும் விவாதமும் எனத் திட்டமிடப்பட்ட அந்தக் கூட்டத்தில் புலனம் ( Watts App) வழியாக வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பங்கேற்றனர்.