மே,15, 2026 இன்று மாலை அமெரிக்காவின் டல்லாஸ் நகரிலிருந்து விமானம் ஏறியிருக்க வேண்டும். சென்னையிலிருந்து தோஹா வழியாக வந்த கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் விமானம் டல்லாஸ் நகரில் இறக்கிவிட்ட தேதி நவம்பர், 17, 2025. இன்றோடு அனுமதிக்கப்பட்ட 180 நாட்கள் முடிந்துவிட்டன. நான் பெற்றுவந்த குடிநுழைவு அனுமதியின் பெயர் B -2. மகிழ்ச்சியாகத் தங்கியிருந்தல், விடுமுறையைக் கழித்தல் முதலான காரணங்களோடு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த அனுமதியில் ஒருவர் தொடர்ந்து 180 நாட்கள் அமெரிக்காவிற்குள் இருக்கலாம். முழுமையான நாட்களும் இருந்துவிட்டேன். ஆனாலும் இங்கிருந்து கிளம்பவில்லை. பொதுவாக இதுபோன்ற அயல்நாட்டுப் பயணங்களில் வருவதற்கும் போவதற்கும் ஒரே விமானக்குழுமங்களின் விமானங்களையே தேர்வு செய்வது வழக்கம். இறங்கும் இடத்தில் ஏறிச் சொந்த ஊருக்குத் திரும்பும் வட்டச் சுற்றுப் பயணமாக அமையும்போதுதான் பயணச் சீட்டுக்கான பணமும் குறைவாக இருக்கும். 180 நாட்களுக்குப் பதிலாக 170 நாட்கள் இருந்துவிட்டு, மே மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிட நினைத்துப் பயணச்சீட்டு வாங்கியிருந்தோம். அந்த நாளில் ...
இடுகைகள்
விலக்கப்படும் நந்திகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தேர்தல் வழியாகத் திரும்பவும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்தக் குறுகிய காலத்தில் அதன் செயல்பாடுகள் சில, தமிழகத்தின் பெரும்பான்மை மக்களால் ஏற்புடையனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. தனது தேர்தல் வாக்குறுதிகளாகத் தந்த இலவசங்கள், கரோனாப் பெருந்தொற்றைச் சமாளித்தல் போன்றனவற்றிற்காகக் கிடைக்கும் பாராட்டுகளும் ஏற்புகளும் பொதுப்புத்தி சார்ந்தவை. அவற்றைத் தாண்டித் திராவிட இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த முன்னெடுப்புகளும் கவனிக்கப்படுகின்றன; பாராட்டப்படுகின்றன என்பதே இப்போதைய விவாத மையம்.
பெயரில் என்னதான் இல்லை?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
“ரோஜா, ரோஜாவாக இருக்கிறது ” இந்த தொடர் சேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தில் இருக்கும் வாக்கியம். ஆனால் அதைத் தனது கவிதையின் தலைப்பாக மாற்றிக் கவிதை ஒன்றை எழுதியவன் கவி ஜெற்ரூட் ஸ்டெயின் என்று படித்த ஞாபகம். “என்ன பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜா தான்;ஏனென்றால் ரோஜா ரோஜாவாகவே இருக்கிறது ” என்று முடியும் அந்தக் கவிதை எப்போது ரோஜாப்பூக்களைப் பார்த்தாலும் நினைவுக்கு வந்து விடும்.
மனுஷ்யபுத்திரன்: அவசரப்பட்டு எடுத்த முடிவு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சென்னை மாவட்ட நூலகக்குழுவின் தலைவராக இருந்த கவி. மனுஷ்யபுத்திரன் அந்தப் பதவியிலிருந்து விலகிக் கொண்டதாக அறிவித் துவிட்டுச் சில நாட்களுக்கு முன்பு வெளியேறியிருக்கின்றார். இந்த வெளியேற்றம் அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பது எனது கருத்து. அவரை நியமனம் செய்த அரசின் பதவிக்காலம் இன்னும் முடியவில்லை. அடுத்த அரசு இன்னும் உருவாகவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து செயல்படுவது தார்மீக அடிப்படையில் தவறானது அல்ல. பல்கலைக்கழக அளவில் இதுபோன்ற நியமனப் பதவிகளில் இருந்து பணியாற்றிய அனுபவத்தில் இதனைச் சொல்கிறேன்.