இடுகைகள்

திறமையாளர்களைக் கண்டறிதலும் திறப்புகளை உருவாக்குதலும்

படம்
நான் முதல்வன் திட்டம் 2022, மார்ச், ஒன்றாம் தேதி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ‘நான் முதல்வன்’ என்னும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அதனால் விளைந்துள்ள பலன்களைத் தமிழக இளையோர்கள் உணரவும் பயன்படுத்திக் கொள்ளவும் தொடங்கியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டம் வழியாகப்  பள்ளிக்கல்வியைச் சரியாகவும் திறனுடனும் முடித்துக் கல்லூரிக் கல்விக்குள்  நுழைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களாக இருக்கப் போகின்றது. 

மகேந்திரசிங் தோனிக்கு வயது 44.

படம்
இரவுமுழுவதும் நடக்கும் தெருக் கூத்திலும் ஸ்பெஷல் நாடகத்திலும் முக்கியமான கட்டங்களில் தூங்கிய பார்வையாளர்கள் எழுந்து உட்கார்ந்து விடுவார்கள். குறிப்பாக வாதம்- எதிர் வாதம் என்ற பகுதிகளில் நடிகர்களின் குரலும் வாதத்திறமையும் அந்த நேரத்தில் உருவாக்கிப் பேசும் வசனங்களும் இட்டுக்கட்டும் பாடல்களும் கையொலியை எழுப்பும். அது அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிக ஆளுமைக்குக் கிடைக்கும் பாராட்டு. அப்படித்தான் தோனியின் மட்டையடியை இந்தியத் திரள் காத்திருந்து ரசித்தது. நான் அப்படி ரசித்திருக்கிறேன். அப்படிக் காத்திருந்து ரசிக்க இன்னொரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும்.

விலகிச் செல்லும் அந்தரங்கம்

படம்
திருமணம் நடக்கும் அந்த மண்டபம்  புதிய ஒன்று அல்ல. ஆனால் அந்த மண்டபத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்துகொள்ள வருவது இதுதான் முதல் முறை. இப்போது மண்டபம் இருக்கும் இடத்தில் முன்பு ஒரு திரை அரங்கம் இருந்தது. அந்தத்திரை அரங்கிற்குப் பல முறை வந்திருக்கிறேன். நூறு நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படங்கள் சிலவற்றை அந்த திரை அரங்கில் பார்த்திருக்கிறேன். இப்போது எல்லா வசதிகளும் கொண்ட திருமண மண்டபமும் வணிக வளாகமும் என அந்த இடம் மாறி விட்டது.

பொதுப்புத்தியை விவாதிக்கும் கலையியல் : டூரிஸ்ட் பேமிலியும் அயோத்தியும்

படம்
டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பார்க்கத்தூண்டியவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் . மணிரத்னம் இயக்கிக் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்த தக்லைப் மீது வந்த எதிர்மறை விமர்சனங்கள் ஒதுக்கப்பட வேண்டியவை என்பதைச் சொல்வதற்காக டூரிஸ்ட் பேமிலி படத்திலும் தர்க்கங்கள் எதுவுமில்லை என்று தனது முகநூல் குறிப்பில் சொல்லியிருந்தார். அதனால் அந்தப் படத்தை உடனே ஹாட்ஸ்டார் இணையச்செயலில் பார்த்தேன். நானும் தக்லைப் படத்தின் மீது வந்த எதிர்மறையான குறிப்புகள் பொருட்படுத்தப்பட வேண்டியன அல்ல என்று எனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன். தக்லைப் -ஒரு புறநிலைக் குறிப்பு எனத் தலைப்பிட்டு எழுதிய அந்தக் குறிப்பில், ஒரு சினிமாவிற்கு எழுதப்பெற்ற பாடத்தை (Text) அதன் இயக்குநர் உருவாக்கித் தரும் எல்லைக்குள் நின்று மட்டுமே வாசிக்கவேண்டும் என்று சொல்லப் போவதில்லை. அந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் & முதன்மை நடிகர் ஆகியோரின் நோக்கங்களோடும் சேர்த்தே வாசிக்கலாம். அத்தோடு அந்த சினிமா தயாரிக்கப்படும் காலச்சூழலோடும் சேர்த்து அர்த்தப்படுத்தலாம். ஆனால் இந்த வாசிப்புக்கெல்லாம் முன் நிபந்தனையாக படத்தின் சொல்முறை, பாத்திர உருவாக்...

வருத்தங்களற்ற பெண் தன்னிலைகள்

படம்
அண்மைக்காலத்தில் அதிகமும் எழுத வந்துள்ள பெண்களின் பனுவல்களை மதிப்பீடு செய்பவர்கள் தொடர்ந்து இந்தப் பிழையைச் செய்கிறார்கள். ஆனால், திறனாய்வுப் பார்வை கொண்ட வாசிப்பு அந்தப் பிழைகளைச் செய்வதில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கவிதை அல்லது சிறுகதைத் தொகுப்பையோ, நாடகம் அல்லது நாவலையோ எழுதியவரின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இது பெண் எழுத்து என்று வகைபிரித்துப் பேசத்தொடங்குகிறார்கள். இதே நிலைதான் தலித்தெழுத்து, வர்க்கச் சார்புடைய அரசியல் எழுத்து, இனவரைவியல் அடையாளங்களைப் பேசும் எழுத்து என்று வகைபிரித்துச் சொல்வதிலும் இருக்கின்றது. வாசிக்கக் கிடைத்த இலக்கியப்பனுவலின் முன்னுரையும், பின்னட்டைக் குறிப்பும் தரும் தகவல்களையும் ஏற்றுக்கொண்டு அப்படியே பேசுவதைத் தவிர்க்க நினைப்பதே தீவிர வாசிப்பின் அடையாளம்; திறனாய்வை நோக்கிச் செல்லும் வாசிப்பின் பாதை.

தொடரும் ஒத்திகைகள்

படம்
  அங்கம் : 1 காட்சி : 1 இடம் : நாடக ஒத்திகைக்கூடம் .      சுவர்களில் நடன முத்திரைகள் கொண்ட சுதை உருவங்கள் , புகைப்படங்கள் உள்ளன . நாட்டுப்புறக் கலைகளின் பாணியிலான சிற்பங்களும் திரைச்சீலைகளும் சுவர்களை ஒட்டி இருக்கின்றன . மையத்தில் சிறியதும் பெரியதுமான சதுர செவ்வக மேடைகள் கிடக்கின்றன . அவற்றில் இருவர் மூவராக அமர்ந்துள்ளனர் . அவர்களின் உடைகளில் விசேஷமாகக் குறிப்பிட எதுவும் இல்லை . மொத்தம் பதினைந்து பேர் அங்கு உள்ளனர் .

அந்த மூன்றும் இந்த மூன்றும்

  காலச்சுவடுவில் மூன்று பெண் கதைகள் 2025 ஜூன் மாதக் காலச்சுவடுவில் மூன்று சிறுகதைகள் - பெருந்தேவி, சுஜா செல்லப்பன், சுஜாதா செல்வராஜ்- எனப்பெண்கள் எழுதிய கதைகள். மூன்று கதைகளிலும் பெண்களே மையப்பாத்திரங்கள். இம்மூன்று எழுத்தாளர்களின் எழுத்துகளை முன்பே வாசித்துள்ளேன். அவர்களுக்கென்று எழுதும் பாணி அல்லது கதைகளுக்கான வெளிகள் எனத் தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டவர்கள். அந்த அடையாளங்கள் இவற்றிலும் தொடர்கின்றன. கிராமிய வாழ்க்கையில் துயரங்களை ஏற்றுக் கடக்கும் இன்னொரு பெண்ணை - கணவனின் மரணத்திற்குப் பின்னர் விருப்பமில்லாமலேயே - சுற்றியிருப்பவர்களுக்காக வெள்ளைச்சேலையை ஏற்றுக் கொள்ளும் பெண்ணொருத்தியை - காளியப்பனின் மனைவி ராமாயியை எழுதிக் காட்டியுள்ளார் சுஜாதா செல்வராஜ். இந்தியப் பெண்களின் குடும்ப வாழ்க்கையின் அவலங்களுக்கு வடிகாலாக இருக்கும் தெய்வங்களின் மீதான நம்பிக்கைகளும் அவற்றுக்குச் செய்யும் சடங்குகளும் கூடப் பொய்த்துப்போகும் நிலையில் கையறு நிலையில் - செய்வதறியாது திகைத்து நிற்கும் பெண்ணொருத்தியை - செல்வி என்ற பெண்ணைத் தனது 'மயானக்கொள்ளை' கதையில் எழுதிக் காட்டியுள்ளார் பெருந்தேவி. இந்தக்...