இடுகைகள்

அவ்வப்போது மனுஷ்யபுத்திரன்

படம்
பெருங்கவிகள் ஏற்படுத்தும் நெருக்கடி ஒரு மொழியில் இயங்கும்/ இயங்கிய பெருங்கவிகளின் கவிதைகளைத் தொகுத்து வகைப்பாட்டிற்குள் வைத்துப் பேசுவது எந்தத் திறனாய்வாளருக்கும் எளிதானதல்ல. திறனாய்வாளர்களைத் திணறடிக்கும் மரபுத்தொடர்ச்சியின் தொடக்கம் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஔவையும் கபிலரும். செவ்வியல் கவிதைக்குப் பின்னர் அற இலக்கிய காலத்தில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைக் காட்ட முடியும். ராமாயணம் எழுதிய கம்பரின் பிறகவிதைப் பனுவல்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது அந்த வரிசையை அவர் நீட்டித்தார். பக்திக்கவிதைகளில் அப்படியொரு பெரும் ஆளுமையைக்காட்டுவது எளிதல்ல. ஓரளவு ஆண்டாளின் பாவைப்பாடல்களையும் நாச்சியார் திருமொழியையும் ஒரு சிறிய விலகல் என்று சுட்டலாம்.

திரள்மக்களைச் சந்தித்த இருபெரும் கலைஞர்கள்

படம்
பெருந்தடங்கள் பதித்த கலைஞர் பேரா. கே. ஏ. குணசேகரனை எனது நீண்ட நாள் நண்பர் என்று சொல்வதைவிட இருவரும் ஒருசாலை மாணாக்கர்கள் எனவும் ஒரே கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள் எனவும் சொல்வதே சரியாக இருக்கும். 15 ஆண்டுக்காலம் மாணவர்களாகவும் ஆசிரியப்பணியிலும் ஒன்றாகப் பயணித்தவர்கள் நாங்கள் நானெல்லாம் ஒருவேலையைத் தொடங்க வேண்டுமென்றால் பத்துத் தடவையாவது யோசிப்பேன். ஒன்றுக்கு இரண்டாகத் திட்டங்களைப் போடுவேன். ஆரம்பித்துவிட்டுப் பின்வாங்குவேன். ஏற்றுக் கொண்டு முடித்துவிடலாம் எனக் கிளம்பிப் பயணத்தைத் தொடங்கித் தயக்கத்துடன் பாதியில் திரும்பிய பயண அனுபவங்களெல்லாம் உண்டு.இப்படியே போனால் சொதப்பிவிடுவோமே என்று மனம் சொல்லும்போதே முன்வைக்கக் கால்கள் தயங்கிவிடும். ஓரடி முன்னால் போய்விட்டுப் பின்னால் ஈரடி வைப்பதே வாடிக்கையாகிவிடும். என்னுடைய இயல்பு இது என்றால், இதற்கு நேரெதிரானவர் நண்பர் கே.ஏ.ஜி. இந்தமாதிரியான கெட்ட பழக்கங்களெல்லாம் அவரிடம் எட்டிப் பார்த்ததே இல்லை. இதை நான் அவரருகில் இருந்து பதினைந்து ஆண்டுகள் பார்த்திருக்கிறேன். பக்கத்திலிருந்த காலத்தில் மட்டுமல்லாமல், தூரமாகப் போன பின்பும் அதனைப் பார்த்து ரச...

பட்டறை -நினைவுகள்

படம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில்   நடந்த கவிதைப்பட்டறையைப் பற்றிய போகன் சங்கர் குறிப்பு மீது அபிலாஷ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கவிதை எழுதுவது குறித்த சிந்தனைகளைத் தூண்டியதில் இந்தப் பயிலரங்கம் சில அடிகளை முன்வைத்துள்ளது என்ற வகையில் மகிழ்ச்சி.. அவருடைய கட்டுரையைப் படிக்கும் முன்பு இந்தக் குறிப்பையும் வாசித்துக் கொள்ளுங்கள்.

சாதியின் இருப்பு: சந்திக்கும் நெருக்கடிகள்

படம்
 அடக்கமும் அதன் நிமித்தங்களும் இந்திய அறிவு என்பது சாதி்யை விவாதிப்பதில் தங்கியிருக்கிறது. எல்லாவகைச் சிந்தனைகளும் வெளிப்பாடுகளும் ‘சாதி’யைச் சொல்லாடல்களாக மாற்றுவதை அகத்திலும் புறத்திலும் மேற்கொள்கின்றன. கொண்டாட்டமாயினும் பெருந்துயரமாயினும் அதன் உள்ளோட்டத்திற்குள் சாதியும் அதன் இயங்குநிலைகளும் இருக்கின்றன. இல்லையென்று நினைப்பது பாவனைகள் மட்டுமே.

சிறை: காவல்துறை சினிமாவின் வகைமாதிரி.

படம்
இந்திய சினிமாக்களைத் தொகுத்துத் தரும் இணையச் செயலி ஒன்றின் வழியாகச் சிறை படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பார்ப்பதற்கு முன்பே அந்தப் படத்தைக் குறித்த தகவல்கள் பரவியிருந்த நிலையில் எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்கவில்லை. அதேநேரம் டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இந்தப் படத்திலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார் என்ற தகவல் ஒன்றை உறுதி செய்தது என்பதும் உண்மை.