இடுகைகள்

காசி மாரியப்பன் என்னும் கருத்தியல் கடத்தி

படம்
நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள், அவரால் உருவாக்கப்பட்டவர்கள் எனப் பல தரப்பினருக்கும் ஒருவர் தந்துள்ள அன்பு, மரியாதை, உறவுநிலை, வழிகாட்டுதல் எனப் பல தளத்தைச் சொல்லும் கட்டுரைகள் அடங்கிய ‘காசி ஐயா’ தொகுப்பை வாசிக்க வாசிக்க எனக்கு முதலில் தோன்றியது ஆசிரியத் தொழிலில் மதிப்புமிக்க பக்கங்களை வாசிக்கிறோம் என்ற மனநிலை. நண்பர் காசி.மாரியப்பன் அளவுக்கு மாணாக்கர்களின் மரியாதையும் அன்பையும் பெற்ற ஆசிரியராக நான் இருந்ததில்லை என்ற எண்ணம் அடுத்துத் தோன்றியது. 

திருமங்கலம் தொகுதி வாக்களிப்பும் சேடபட்டி இரா.முத்தையாவும்.

படம்
திருமங்கலம் தொகுதி : வாக்களிப்பு 2026 சட்டமன்றத் தேர்தலின்போது இந்தியாவில் இல்லை. அதனால் எனது தொகுதியான திருமங்கலத்தில் வாக்களிக்கவில்லை. இருந்திருந்தால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள மு.மணிமாறனுக்கே வாக்களித்திருப்பேன். இதை தேர்தல் நாளன்றே பதிவாக எழுதியிருந்தேன். அதற்குக் காரணம் தி.மு.க.வை ஆதரிப்பவன் என்பதைத் தாண்டி மு.மணிமாறனை ஆதரிக்கக் கூடுதல் காரணம் உண்டு. மு.மணிமாறனின் தந்தை சேடபட்டி முத்தையாவோடு எனக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. (அவர் மரணத்தின் போது எழுதிய நினைவுக்குறிப்பு பின்னூட்டத்தில் உள்ளது) அவரோடு விரிவான அரசியல் உரையாடல்கள் செய்துள்ளேன். மாணவப்பருவத்திலிருந்து அரசியல் கற்றுத் திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகளோடு நம்பிக்கை கொண்டிருந்தவர். எனது கிராமம் இருந்த சேடபட்டித் தொகுதியின் நீண்டகால உறுப்பினராக இருந்தவர். எனது வாழ்க்கையில் சில திருப்பங்களை ஏற்படுத்தியவர் அவர். அவருக்காக இரட்டை இலையில் மூன்று தடவை வாக்களித்துள்ளேன்.

காண்டாமிருகமென்னும் அபத்த நாடக நிகழ்வெளி

படம்
சில பனுவல்கள் வாசிக்கும் போது புரியாமல் போய்விடும். ஆனால் அதன் அர்த்தம் விளங்கும்படியான நிகழ்வொன்றை நாம் சந்தித்து விட்டால் அந்தப் படைப்பு புரியத்தொடங்கி விடும். அரசியல் அதிகாரம் குறித்த விமரிசனத்திற்கு அபத்த நாடக வகையைத் திறமையாகப் பயன்படுத்திய அயனெஸ்கோவின் காண்டாமிருகம் (RHINOCEROS) அப்படிப் பட்ட நாடகம் என்பது எனது சொந்த அனுபவம். முதல் வாசிப்பில் கடைசி வரை காண்டாமிருகம் வரவே இல்லையே எனக் கேட்டுப் பதில் தெரியாமல் மூடி வைத்து விட்டு மறந்திருந்தேன். ஆனால் அந்தப் பிரதி வெவ்வேறு நிகழ்வுகள் நடக்கும் போது ஒவ்வொரு விதமாக அர்த்தம் தரும் பிரதியாக இருந்திருக்கிறது.  ஒரு நிகழ்வு நடந்த போது கிடைத்த அர்த்தத்தைச் சொல்வதற்கு முன்னால், முதல் தடவை அதன் அர்த்தத்தைப் புரிய வைத்த நிகழ்வைப் பார்க்கலாம். அப்போது நான் பாண்டிச்சேரியில் நாடகப்பள்ளியில் பணியாற்றினேன். முக்கியமான நாடகப் பிரதிகளைப் படிப்பதைக் கடமையாகவும் விருப்பமாகவும் செய்து கொண்டிருந்த நேரம். அயனெஸ்கோவின் காண்டாமிருகம் நாடகத்தை வாசித்து ஒரு வாரம் இருக்கும். நாங்கள் வசித்த புறநகரின் நலச்சங்கம் ஏற்பாடு செய்த ஒருநாள் சுற்றுலாவில் நானும் என...

தமிழகக்கல்வித்துறை: முன்னிற்கும் சவால்கள்

படம்
தமிழக வெற்றிக்கழகத்தின் அரசு, ஒன்றிய அரசின் நோக்கங்களோடு எந்தெந்த நிலையில் ஒத்துப்போகும், எந்தெந்த நிலையில் தனது தனித்துவத்தைப் பேணும் என்பதற்குச் சாட்சியாக இருக்கப்போவது தமிழ்நாட்டு அரசின் கல்வித்துறை. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள த.வெ.க. அரசின் பள்ளிக்கல்வித்துறையும் , உயர்கல்வித்துறையும் பெரும் சவால்களை எதிர்கொள்ள இருக்கின்றன.

மோகனரங்கனின் கவிதையாக்கமும் கருத்துலகமும்

படம்
பனுவலாக்கமும் வாசிப்பும் இலக்கியப்பனுவலாக்கம் இப்படித்தான் நடக்கிறது என உறுதியாகச் சொல்ல முடியாது. அதே நேரம் கதைப் பின்னல் கொண்ட புனைகதை, நாடகம் போன்றனவற்றை முன் திட்டமிடலின்றி எழுதிவிடுவதும் நடப்பதில்லை. எழுத்தாளர்களின் முன் திட்டமிடல்கள் இவ்விருவகை இலக்கியப் பனுவலாக்கத்திலும் ஒருவித முறைமையை உருவாக்கவே செய்கின்றன. ஆனால் பா அல்லது கவிதைக்கு முன் திட்டமிடல்கள் தேவைப்படுவதில்லை. திட்டமிடாமல் எழுதப்பட்ட கவிதைகளைப் பின்னர் ஒழுங்குபடுத்தும்போது ஒருவகைத் திட்டமிடல்களும் முறைமைகளும் உருவாவது நடக்கலாம்.