இடுகைகள்

  கொதிகலன் : கனவுலக நடப்பியலின் சாத்தியங்கள்     ஜீனத் எழுதிக் கோணங்கியின் கல்குதிரை இதழில் (39/2024) வந்துள்ள கொதிகலன் சிறுகதையை அச்சில் வாசிக்கவில்லை. அண்மையில் அவரது முகநூல் பதிவேற்றத்தின் வழியாக அறிந்த பின்னரே வாசித்தேன். வாசித்து முடித்தவுடன்  மணிக்கொடி கால (1933 -1950) எழுத்தாளர்களில்  கு.ப.ராஜகோபாலனின் பாத்திரத்தேர்வுகள் நினைவுக்கு வந்தன. கு.ப.ராஜகோபாலனின் பாத்திரத்தேர்வுகளின் தொடர்ச்சியை விரும்பி ஏற்றுத் தங்கள் கதைகளில் உருவாக்கி வாசிக்கத்தந்த தி.ஜானகிராமன், ராசேந்திரசோழன், சு.வேணுகோபால் போன்றவர்களின் பெண்மையப் பாத்திரக்கதைகள் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.   நினைவுகள் எல்லாம் ஒட்டுமொத்தமான புனைவுத் தன்மைகளுக்கான நினைவுகள் அல்ல.        கதைக்குள் விவாதிக்கப்படும் உரிப்பொருளுக்காக/அடிக்கருத்திற்காக மட்டுமே நினைவில் வந்தன.  விவாதப்பொருண்மை அடிப்படையில் ஜீனத்தின் கொதிகலன் அந்த வரிசையில் நிறுத்தப்பட வேண்டிய கதை என்றாலும் சொல்முறையாலும் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்களாலும் முற்றிலும் புதிதான சிறுக...