இடுகைகள்

அரசியலற்ற அரசியல் பதிவுகள் -தேர்தலுக்குப் பின்

படம்
  இந்த முறையும் வாக்களிக்கவில்லை இந்திய/தமிழகத்தேர்தல் காலங்கள் சிலவற்றின் போது நான் அயல்நாட்டுப் பயணங்களில் இருந்துள்ளேன். தனிமனிதரின் அரசியல் செயல்பாட்டின் வெளிப்பாடு ‘வாக்களிப்பு’. அதைத்தவற விட்டிருக்கிறேன். அதைப்பற்றிப் பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. ஏனென்றால் எனது மாணவப்பருவத்தில் தேர்தல் பாதையை நிராகரித்த இயக்கங்களின் கருத்தியல் நிலைபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தவன் நான்.

தமிழகத்தேர்தலும் புலம்பெயர்ந்த தமிழர்களும்

படம்
தமிழகத்தேர்தல் காலங்கள் சிலவற்றின்போது நான் அயல்நாட்டுப் பயணங்களில் இருந்துள்ளேன். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைச் சந்தித்துப் பேசவும் செய்துள்ளேன். அந்தப் பேச்சில் தமிழ்நாட்டுத் தேர்தல்களும் விவாதப்பொருளாக இருந்துள்ளன. அண்மையில் கனடாவிற்குச் சென்றபோது தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தை விவாதிப்பதற்காகவே ஓர் அறைக்கூட்டம் (ஏப்ரல்/11/ஞாயிறு முற்பகல்) ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு மணி நேர உரையாடலும் விவாதமும் எனத் திட்டமிடப்பட்ட அந்தக் கூட்டத்தில் புலனம் ( Watts App) வழியாக வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பங்கேற்றனர்.

தொட்டால் சுடாத பெருநெருப்பு

படம்
கரையில் நிற்கும் போதுதான் கப்பல் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறது - இந்த வாக்கியம் மிகவும் உண்மையான வாக்கியம். ஆனால் கரையில் நிற்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை என்பது அதைவிட உண்மையான வாக்கியம்.

முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன்

படம்
அந்தக் கிராமங்களோடான நெருக்கமான உறவுகள்  முறிந்து விட்டன என்றாலும்  ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். சொந்த ஊரில் எனக்கென மிச்சமிருப்பது பத்துக்குப் பத்து அளவு நிலம். அதுதான் ஒரு காலத்தில் எங்கள் வீடாக இருந்தது. அதை மட்டும் விற்றுவிடாமல் இருக்கட்டும் என விட்டு வைத்திருக்கிறேன்.   மனைவிக்கு அவரது ஊரில் அதுவும் இல்லை. நிலங்கள், நகைகள், சொத்துபத்துகள் என வசதியான குடும்பம் என்றாலும் பெண்ணுக்குச் சொத்தில் பங்கு தரவிரும்பாத குடும்பம். அவரது பெற்றோர் இருக்கும்போதே சொத்துக்களைப் பிரித்துக்கொண்டார்கள். அப்போதே   உரிமையைக் கோரி  வழக்காடி ஐந்தில் ஒரு பங்கை வாங்கியிருக்கலாம். ஆனால் அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் அந்த ஊர்களுக்குப் போய்வருவதை நிறுத்தவில்லை. அங்கு போவதற்குத் திருமங்கலம் ஒரு வழி. மதுரையிலிருந்து நேரடியாகப் போவதென்றால் உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யலாம். அந்த அனுபவங்கள்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இந்த அனுபவம் கார்ப்பயணம் ஒன்றில் கிடைத்த அனுபவம்.  

திரளின் மனநிலைகள்

படம்
 பாவனைகளும் தந்திரங்களும் நெரிசலில் 42 பேரின் குரூர மரணம் என்பது நடந்த உண்மை. காரணியாக இருந்த அரசியல் கட்சி த.வெ.கழகம். பாதிப்பைப் பற்றிப் பேசுவதை அந்தக் கட்சி தொடர்ந்து தவிர்க்கிறது. தவிர்ப்பதன் மூலம், விளக்கம் சொல்லும் இடத்தில் அரசை நிறுத்தித் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. பாதிப்பைப் பற்றிப் பேசத்தூண்டும் ஊடகச் சந்திப்புகள் நடக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். அரசும் தயக்கம் காட்டிக்கொண்டே தான் இருக்கிறது.