சென்னை நாளில்...
2026, ஆகஸ்டு, 22 இந்தச் சென்னை நாளில் இந்த விடுதியைப் பற்றிச் சொல்வது தவறில்லை. அண்மைக்காலங்களில் சென்னைக்கு வரும்போது இங்குதான் தங்கிக் கொள்கின்றேன். ஊரிலிருந்து கிளம்பும்போது ஒரு தகவல் சொல்லிவிட்டால் நமக்கென ஓர் அறையை ஏற்பாடு செய்துதரும் அளவுக்குப் பழக்கமாகி விட்டது. முன்பணம் செலுத்தினால் அறை என்பதெல்லாம் இல்லை. அலைபேசியில் சொன்னால் போதும். அதன் மேலாளர் ஒத்துக்கொள்வார். குபேர் இன் . என்ற பெயருடைய அந்த விடுதி நந்தனம் பகுதியிலேயே இரண்டு இடங்களில் இருக்கின்றன . சில இடங்களில் காலை உணவு இலவசம் என்ற வசதியுடன் கிடைக்கும். மற்ற நேரங்களில் சொல்லிவைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். புத்தகக் கண்காட்சி நந்தனம் விளையாட்டு அரங்கிற்கு மாறியபின் இந்த இடம் அறிமுகமானது. புத்தகக் கண்காட்சிக்காக வரும் நாட்களில் தங்குவதற்கென இந்த விடுதியை அறிமுகம் செய்தது தளவாய் சுந்தரம் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அவர் ஒருவிதத்தில் எனது மாணவர். திருநெல்வேலி மனோன்மணியத்தில் தொடர்பியல் துறை மாணவராக இருந்தபோது படைப்பிலக்கியம் என்ற விருப்பப்பாடத்தாளுக்காகத் தமிழியல் துறைக்கு வந்தவர்களில் அவரும் ஒருவர். அதுமுதல் நண்பர்களா...