இடுகைகள்

இயல்விருது பெற்ற பாவண்ணனுக்கு வாழ்த்து.

படம்
இயற்பண்புவாத எழுத்துமுறை பொதுவாகச் சலிப்பை உருவாக்கும். அச்சலிப்பைத் தீர்க்கும் அருமருந்தாக அவ்வகை எழுத்துக்குள் நுழைக்கப்பட்ட வாழ்க்கை நெறியொன்று உண்டு. அதனைச் சரியாகச் செய்து தனது எழுத்துகளுக்கு உலக இலக்கியத்தில் ஓரிடம் பிடித்தவர் ஆண்டன் செகாவ். தனது காலகட்டத்து ருஷ்ய வாழ்க்கையின் எல்லா அடுக்குகளையும் புனைவுகளாக எழுதிக்காட்டினார். அந்த அடுக்குகளில் நடக்க வேண்டிய மாற்றங்களை முன்வைத்து நாடகங்களை எழுதினார். ஒவ்வொரு இலக்கிய வடிவத்திற்குமான அழகியலைக் கடைப்பிடித்தவர் அவர்.

1.கிழக்கென்பது திசையல்ல. மேற்கென்பதும்….

படம்
தினசரி நடக்கும் ஒன்று சூரியன் வருவதும்; மறைவதும். சூரியன் உதித்துவரும் திசை கிழக்கு. கிழக்கைப் பார்த்து நின்று கைகள் இரண்டையும் விரி. உன் முதுகுக்குப் பின்னால் இருக்கும் திசை மேற்கு உன் சோத்தாங்கை காட்டும் திசை தெற்கு . உன் பீச்சாங்கை காட்டும் திசை வடக்கு

சுந்தரராமசாமி

படம்
நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்லவில்லை. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து கவனிக்க வேண்டிய நோயாளிகளுக்கான பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தான் சொல்லியது. ஆனால் நான் என்னவோ அதனை மரண அறிவிப்பாகவே எடுத்துக் கொண்டு உரையாடல்களைத் தொடங்கியிருந்தேன்.

ஆக்கத்திறன் வெளிப்படும் கதை வடிவங்கள்

படம்
எழுதப்படும் உரிப்பொருள் (theme) அல்லது பொருண்மை ஒன்றுதான். அதை முன்வைக்க நினைக்கும் எழுத்தாளரின் பார்வைக்கோணமும், புனைவைப் பற்றிய புரிதலும் வேறுவேறு பனுவல்களாக மாறுகின்றன. உரிப்பொருள் ஒன்றாக இருந்தாலும் வெளிப்படுத்த நினைக்கும் நோக்கமே கதையின் வடிவத்தைத் தீர்மானிக்கின்றன. அண்மையில் சரவணன் சந்திரனின் ஜிலேபி (யாவரும்.காம் /ஏப்ரல், 2023) சு.வேணுகோபாலின் மோகப்புயல் (வல்லினம், மே,2023) கதையையும் அடுத்தடுத்து வாசித்தேன். இரண்டு சிறுகதைகளின் உரிப்பொருளும் காமம் என்ற பொருண்மைக்குள் அடங்கக்கூடிய ஒன்றுதான். உணர்வு சார்ந்து எழுத்தாளர்கள் காமத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கதைகளின் தலைப்பும், அத்தலைப்பு கதைக்குள் உருவாக்கும் உணர்வும் ஓரளவு வெளிப்படுத்துகின்றன.

ஐபிஎல் -இரண்டு பதிவுகள்

படம்
கோ டிக்கால் பூதம் மார்ச் 31 இல் தொடங்கி மே 28 இல் முடியவுள்ள ஐபிஎல் 2023 போட்டிகளின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. பெரும்பணத்தைப் பெறப்போகும் கடைசி அணி என்னும் தகுதிக்குரிய அணிகளாக நான்கு அணிகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. உருவாக்கப்பட்ட ஆண்டிலேயே கோப்பையை வென்ற குஜராத் அணி இந்த ஆண்டும் அதைத்தக்க வைக்கும் விதமாகப் புள்ளிப்பட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் புதிதாக உருவாக்கப்பட்ட இன்னொரு அணியான லக்னோ அணியும் நான்கு அணிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில். இரண்டாவது, நான்காவது இடங்களில் நீண்டகால அணிகளான சென்னையும் மும்பையும். புதிதாக உருவாக்கப்பட்ட அணிகள் ஒன்றிய அரசின் ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஆளும் வலுவான மாநிலங்கள் என்பது தற்செயல் என நம்ப வேண்டும்.

பனிக்கால வாடையல்ல; அக்கினிக்கால வெக்கை

படம்
முன்னுரையாக ஒரு தன்னிலை விளக்கம் கூட்டத்தில் ஒருவனாக இருப்பது தவறில்லை. கூட்டத்தோடு கூட்டமாக இருக்க நினைப்பதும் கூடத் தவறெனச் சொல்லமுடியாது.    இணைந்து கொள்ள முடியாத கூட்டங்களை வேடிக்கை பார்க்க ஆசைப்படலாம். இப்படித்தான் நான் இருந்துள்ளேன். உள்ளூர்த் திருவிழாக்கள் மட்டுமல்ல; உலகத் திருவிழாக்களையும் பார்த்திருக்கிறேன். மதுரையின் சித்திரைத் திருவிழாவில் பல ஆண்டுகள் பங்கேற்றுத் திரிந்தவன். திருவிழாக்களில் மட்டுமல்ல; தேர்தல்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பரிப்புகள், அடக்குமுறைகள், புறக்கணிப்புகள், பலியிடல்கள், கொண்டாட்டங்கள் எனப்பலவிதமான கூட்டங்களைப் பார்த்திருக்கிறேன்; பங்கேற்றிருக்கிறேன்.

மேக்பெத்- ஒரு -பார்வையாள அனுபவம்

படம்
நேற்று நான் இருக்கும் கோவை குமரகுரு கல்வி வளாகத்தில் வில்லியம் சேக்ஸ்பியரின் மேக்பெத் நடந்தது. 50 மாணவர்கள் நடிகர்களாகவும் பின்னரங்கப்பணியாளர்களாகவும் பங்கேற்றனர். இயக்கம் முனைவர் மணீஸ்குமார். புதுவை நாடகப்பள்ளியிலும், தேசியநாடகப் பள்ளியிலும் பயின்றவர். அவருக்கு உதவியாக ஒளி அமைப்புக்கும் இசைக் கோர்வைகளுக்கும் புதுச்சேரி முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். குமரகுரு கல்லூரிகளின் நாடகமன்றத் தயாரிப்பு. என்ன நாடகத்தை எடுத்துக்கொள்ளலாம்; யாரை இயக்குநராக அழைக்கலாம் என்ற ஆலோசனையோடு என்னுடைய வேலை முடிந்தது. பின்னர் அவர்களின் வேலைகளில் யாரும் தலையிடுவதில்லை. முழுவதும் நாடகமன்றப் பொறுப்பாளர்களும் வருகைதரும் இயக்குநரும் மட்டுமே பொறுப்பேற்று மேடையேற்றுகிறார்கள் ********** நேற்று நிகழ்வுக்கு முன்னால் நடந்த முழு ஒத்திகையைப் பார்த்தேன். பிறகு நிகழ்வைப் பார்த்தேன். மேக்பெத் நாடகத்தை ஆங்கிலத்திலும் போல்ஸ்கியிலும் பார்த்துள்ளேன். இந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், தமிழ், இந்தி நான்கு மொழிகளில் பார்த்திருக்கிறேன். ஐரோப்பியர்கள் அப்படியே சேக்ஸ்பியரை மேடையேற்றுகிறார்கள். ஆனால் இந்திய மொழிகளில் மேடையேற்றம் செ