இடுகைகள்

பூனைகள் -யானைகள் -நாய்கள்: சிறுகதை உருவாக்கம்

  இம்மாத அந்திமழையில் "பூனை மனிதர்கள்" என்றொரு சிறுகதை அச்சிடப்பட்டுள்ளது. அதனை எழுதியவர் ஹேமா ஜெய். இந்தப் பெயர் கொண்ட எழுத்தாளரின் எந்தப் பனுவலையும் இதற்கு முன் வாசித்ததில்லை. அவர் எழுதி நான் வாசிக்கும் முதல் கதை இதுதான். மனிதர்களின் வளர்ப்பு மிருகங்களில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் கடும்போட்டி உண்டு. நண்பர்கள் தெரிந்தவர்கள் எனப் பலரது வீடுகளுக்குப் போகும்போது நாய்கள் வளர்ப்பது பற்றிய பேச்சுகள் இருப்பவர்கள், பூனைகள் வளர்ப்பது பற்றிப் பேசுவதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். இதன் மறுதலையாகப் பூனைகள் வளர்ப்பவர்கள், நாய்களின் மீதான பிரியத்தைக் காட்டுவதையும் பார்த்ததில்லை. நாய்ப்பிரியர்களும் பூனைப்பிரியர்களும் எதிரெதிராய் நிற்பவர்களாகவே தோன்றுகிறது. ஆனால் கதைகளுக்குள் இப்படியான எதிரெதிர் நிலைபாடுகளை எழுதிக்காட்டிய பனுவல்கள் வாசிக்கக் கிடைக்கவில்லை. பூனை வளர்ப்பவர்களின் பிரியங்களும், நாய் வளர்ப்பவர்களின் நேசமனநிலைகளிலும் தனித்தனியாகவே தான் வாசிக்கக் கிடைக்கின்றன. நேரனுபவத்திலும் புனைகதைகளுக்குள்ளும் பூனையின் மீது காதல் கொண்டவர்கள் அதிகமும் பெண்களாக இருப்பதையும் நாய்களின் நேசர்கள

செய்நேர்த்தியும் இன்மையும்

படம்
ஒரு சினிமாவின் செய்நேர்த்திக்கும் வெற்றிக்கும் தொடர்பு இல்லையென்றுதான் தோன்றுகிறது. அண்மையில் நான் பார்த்த இரண்டு படங்களுமே இணையச்செயலிகளில் தான் பார்த்தேன். திரையரங்குகளில் அதிகம் வெளியாகவில்லை. மதுரை போன்ற நகரங்களிலேயே ஒன்று அல்லது திரையில் -சில காட்சிகள் மட்டுமே ஓட்டப்பட்டன. இவற்றைப் பார்வையாளர்கள் பார்க்காமல் ஒதுக்க என்ன காரணம் இருக்கும் என்பதற்குப் பின்னால் பிரபல நடிகர்கள், விளம்பரங்கள், சமூக ஊடகங்களில் பேசு பொருளாதல் எனப் பல காரணங்கள் இருக்கின்றன.

மு.நடேஷ் நினைவுகள்

படம்
நடேஷ் எனது நண்பர் அல்ல. ஆனால் எனக்கு விருப்பமான அரங்கியல் துறையோடு ஓவியராகவும் ஒளியமைப்புத்துறையில் இருந்தவர் என்ற வகையில் நீண்டகால் அறிமுகம் உண்டு. நான் இருபதுகளின் நிறைவுக்காலத்தில் தீவிரமாக நாடகத்துறையில் இயங்கிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தபோது அவரது நுழைவு இருந்தது. அப்போது அவருக்கு வயது இருபத்தைந்துகூட ஆகியிருக்காது. அத்துறை சார்ந்த கருத்துநிலையில் அவரோடு முரண்பட்டும் உடன்பட்டும் பயணம் செய்திருக்கிறேன்.

வட்டார தேசியமும் வாரிசு அரசியலும்.

படம்
அதிகாரப் பரவலாக்கம் பற்றி ஜனநாயக ஆர்வலர்களும் அறிவுஜீவிகளும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். மையப்படுத்தப்படும் அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் போக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் வெளிப்பாடு. மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பில் சில மாநில மக்களின் நலன்களும் , மாநில அரசுகளின் உரிமைகளும் கண்டு கொள்ளப்படவில்லை; அதிகாரம் பரவலாக்கப் பட வேண்டும்; மேலிருந்து கீழ் நோக்கி அப்பரவல் நகரவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டதுண்டு. ஒற்றைக் கட்சியின் ஆட்சி மைய அரசில் இருந்த போது இத்தகைய குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.

ஜெயந்தி: மாமனிதர்களின் அடையாளங்கள்

படம்
ஜெயந்தி என்பது வேறொன்றும் இல்லை. பிறந்த நாள் தான். பிறந்த நாளை, பிறந்த நாள் என்று கொண்டாடுவதற்குப் பதிலாக ஜெயந்தி என்று கொண்டாடுவது வெறும் பெயரளவு மாற்றம் அல்ல. ஜெயந்தி என்ற சமஸ்கிருதச் சொல்லால் பிறந்த நாள் அழைக்கப்படும்போது சமஸ்கிருதமயமாக்கப் பட்டதாக மாறி மேல்நிலையாக்கமும் பெறுகிறது. அதனால் சமஸ்கிருதக் கருத்தியலும் சேர்ந்து கொள்கிறது . பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெறும் மனிதர்களுக்கானது. ஜெயந்தி மனிதர்களுக்கானதல்ல; மகான்களுக்கானது என்பது அதன் உள்கிடை.

புதிய உயர்கல்வித் துறை அமைச்சர்

படம்
உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராகி இருக்கிறார். அவரோடு புதிய அமைச்சர்களாக 4 பேர் பதவி ஏற்றுள்ளனர். இந்த அமைச்சரவை மாற்றத்தில் உயர்கல்வித்துறைக்குப் புதிய அமைச்சர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். புதிய அமைச்சர்கள் நால்வரில் கோவி.செழியனும் இரா.இராஜேந்திரனும் மட்டுமே புதிய அமைச்சர் என்ற நிலைக்குரியவர்கள். செந்தில் பாலாஜியும் ஆவடி நாசரும் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். இடையில் நீக்கப்பட்டு திரும்பவும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மூன்று குறிப்புகள்.

படம்
இலங்கை ஜனாதிபதி தேர்தல்-  பத்து நாட்களுக்கு முன்(12/09/24)  தேர்தல் தேதி /21/09/724 ஈழப்போராட்டத்தின் வழியாகவே இலங்கையைக் கவனித்த பலருக்கும் இதுதான் நிலைமை என்று நினைக்கிறேன். நானும் இலங்கைத் தமிழ்ப் புனைவு எழுத்துகளை வாசித்த அளவுக்கு இலங்கை அரசியலின் உள்ளோட்டங்களை அறிந்துகொள்ளுதலில் ஆர்வம் காட்டியதில்லை. காட்டிய ஆர்வம் கூடப் பூகோள அரசியலில் சின்னஞ்சிறிய நாடொன்றை வல்லாதிக்கம் செய்ய விரும்பும் நாடுகள் எப்படிப் பார்க்கின்றன என்ற கோணத்தில் தான் புரிந்துகொண்டிருக்கிறேன். அந்தப் புரிதலில், பக்கத்தில் இருக்கும் பெரிய நாடான இந்தியாவும், தூரத்திலிருந்தே இலங்கையின் அதிகார சக்திகளை இயக்கும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும் செய்யும் குழப்பங்களையும் உதவிகளையும் கவனித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் எனது இலங்கைப் பயணங்களின்போது நேரடியாகவும் பார்த்து அங்குள்ள நண்பர்களோடு விவாதித்து அறிந்து கொண்டுள்ளேன். இதன் பின்னணியில் இப்போது இலங்கையில் நடக்கப்போகும் தேர்தல் குறித்து எழுதப்படும் பதிவுகளையும் சில பத்திரிகைகளின் கட்டுரைகளையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பான்மை இனவாதம், பௌத்த அடிப்படைவாதம் என