இடுகைகள்

நீதிமன்றமும் சட்டமன்றமும் - இரண்டு குறிப்புகள்

படம்
இரண்டு நாட்களாக முகநூலில் வலம் வரும் இவ்விரண்டின் மீது எனது கருத்தை எழுத நினைத்தேன். ஆனால் ஏனோ எழுதியெழுதி அழித்துவிட்டேன். இப்போது  சொல்லாமல் விட்டால் தூக்கம் வராது என்பதுபோலத் திரும்பத்திரும்ப நினைவில் வந்துகொண்டே இருக்கின்றன. இரண்டில் ஒன்று பேரறிவாளன் தொடர்பானது; இன்னொன்று கருத்துக்கணிப்புகளை முன்வைத்தல் தொடர்பானது. இவ்விரண்டின் தொடர்பில் நான் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பணிக்காலம்  சில புரிதல்களைத் தந்துள்ளது. அந்த் அடிப்படையிலேயே இதனைச் சொல்கின்றேன் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை பெற்றுத் திரும்பியவர் பேரறிவாளன். அவர் மீது கொலைக்குற்றம் தொடர்பில் வழங்கப்பட்ட மரணதண்டனையும், பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டதும் குறித்தெல்லாம் எனக்குக் கருத்துக்கள் இருந்தாலும் அதனை இப்போது விவாதிப்பதில் பொருள் எதுவும் இல்லை. நீதிமன்றம் வழங்கிய தண்டனைக் காலத்தை முடித்து வெளியே வந்துவிட்டார். சிறையில் இருந்தபோதும், சிறையிலிருந்து வெளியே வந்தபின்னும் தனது கல்வி ஆர்வத்தைத் தக்கவைத்துத் தொடர்ந்து கற்றுத் தேர்வு எழுதி வழக்குரைஞராகத் தன்னைத் ...

அரசியலற்ற அரசியல் பதிவுகள் -தேர்தலுக்குப் பின்

படம்
  இந்த முறையும் வாக்களிக்கவில்லை இந்திய/தமிழகத்தேர்தல் காலங்கள் சிலவற்றின் போது நான் அயல்நாட்டுப் பயணங்களில் இருந்துள்ளேன். தனிமனிதரின் அரசியல் செயல்பாட்டின் வெளிப்பாடு ‘வாக்களிப்பு’. அதைத்தவற விட்டிருக்கிறேன். அதைப்பற்றிப் பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. ஏனென்றால் எனது மாணவப்பருவத்தில் தேர்தல் பாதையை நிராகரித்த இயக்கங்களின் கருத்தியல் நிலைபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தவன் நான்.

தமிழகத்தேர்தலும் புலம்பெயர்ந்த தமிழர்களும்

படம்
தமிழகத்தேர்தல் காலங்கள் சிலவற்றின்போது நான் அயல்நாட்டுப் பயணங்களில் இருந்துள்ளேன். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைச் சந்தித்துப் பேசவும் செய்துள்ளேன். அந்தப் பேச்சில் தமிழ்நாட்டுத் தேர்தல்களும் விவாதப்பொருளாக இருந்துள்ளன. அண்மையில் கனடாவிற்குச் சென்றபோது தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தை விவாதிப்பதற்காகவே ஓர் அறைக்கூட்டம் (ஏப்ரல்/11/ஞாயிறு முற்பகல்) ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு மணி நேர உரையாடலும் விவாதமும் எனத் திட்டமிடப்பட்ட அந்தக் கூட்டத்தில் புலனம் ( Watts App) வழியாக வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பங்கேற்றனர்.

தொட்டால் சுடாத பெருநெருப்பு

படம்
கரையில் நிற்கும் போதுதான் கப்பல் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறது - இந்த வாக்கியம் மிகவும் உண்மையான வாக்கியம். ஆனால் கரையில் நிற்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை என்பது அதைவிட உண்மையான வாக்கியம்.

முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன்

படம்
அந்தக் கிராமங்களோடான நெருக்கமான உறவுகள்  முறிந்து விட்டன என்றாலும்  ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். சொந்த ஊரில் எனக்கென மிச்சமிருப்பது பத்துக்குப் பத்து அளவு நிலம். அதுதான் ஒரு காலத்தில் எங்கள் வீடாக இருந்தது. அதை மட்டும் விற்றுவிடாமல் இருக்கட்டும் என விட்டு வைத்திருக்கிறேன்.   மனைவிக்கு அவரது ஊரில் அதுவும் இல்லை. நிலங்கள், நகைகள், சொத்துபத்துகள் என வசதியான குடும்பம் என்றாலும் பெண்ணுக்குச் சொத்தில் பங்கு தரவிரும்பாத குடும்பம். அவரது பெற்றோர் இருக்கும்போதே சொத்துக்களைப் பிரித்துக்கொண்டார்கள். அப்போதே   உரிமையைக் கோரி  வழக்காடி ஐந்தில் ஒரு பங்கை வாங்கியிருக்கலாம். ஆனால் அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் அந்த ஊர்களுக்குப் போய்வருவதை நிறுத்தவில்லை. அங்கு போவதற்குத் திருமங்கலம் ஒரு வழி. மதுரையிலிருந்து நேரடியாகப் போவதென்றால் உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யலாம். அந்த அனுபவங்கள்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இந்த அனுபவம் கார்ப்பயணம் ஒன்றில் கிடைத்த அனுபவம்.