இடுகைகள்

காண்டாமிருகமென்னும் அபத்த நாடக நிகழ்வெளி

படம்
சில பனுவல்கள் வாசிக்கும் போது புரியாமல் போய்விடும். ஆனால் அதன் அர்த்தம் விளங்கும்படியான நிகழ்வொன்றை நாம் சந்தித்து விட்டால் அந்தப் படைப்பு புரியத்தொடங்கி விடும். அரசியல் அதிகாரம் குறித்த விமரிசனத்திற்கு அபத்த நாடக வகையைத் திறமையாகப் பயன்படுத்திய அயனெஸ்கோவின் காண்டாமிருகம் (RHINOCEROS) அப்படிப் பட்ட நாடகம் என்பது எனது சொந்த அனுபவம். முதல் வாசிப்பில் கடைசி வரை காண்டாமிருகம் வரவே இல்லையே எனக் கேட்டுப் பதில் தெரியாமல் மூடி வைத்து விட்டு மறந்திருந்தேன். ஆனால் அந்தப் பிரதி வெவ்வேறு நிகழ்வுகள் நடக்கும் போது ஒவ்வொரு விதமாக அர்த்தம் தரும் பிரதியாக இருந்திருக்கிறது.  ஒரு நிகழ்வு நடந்த போது கிடைத்த அர்த்தத்தைச் சொல்வதற்கு முன்னால், முதல் தடவை அதன் அர்த்தத்தைப் புரிய வைத்த நிகழ்வைப் பார்க்கலாம். அப்போது நான் பாண்டிச்சேரியில் நாடகப்பள்ளியில் பணியாற்றினேன். முக்கியமான நாடகப் பிரதிகளைப் படிப்பதைக் கடமையாகவும் விருப்பமாகவும் செய்து கொண்டிருந்த நேரம். அயனெஸ்கோவின் காண்டாமிருகம் நாடகத்தை வாசித்து ஒரு வாரம் இருக்கும். நாங்கள் வசித்த புறநகரின் நலச்சங்கம் ஏற்பாடு செய்த ஒருநாள் சுற்றுலாவில் நானும் என...

தமிழகக்கல்வித்துறை: முன்னிற்கும் சவால்கள்

படம்
தமிழக வெற்றிக்கழகத்தின் அரசு, ஒன்றிய அரசின் நோக்கங்களோடு எந்தெந்த நிலையில் ஒத்துப்போகும், எந்தெந்த நிலையில் தனது தனித்துவத்தைப் பேணும் என்பதற்குச் சாட்சியாக இருக்கப்போவது தமிழ்நாட்டு அரசின் கல்வித்துறை. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள த.வெ.க. அரசின் பள்ளிக்கல்வித்துறையும் , உயர்கல்வித்துறையும் பெரும் சவால்களை எதிர்கொள்ள இருக்கின்றன.

மோகனரங்கனின் கவிதையாக்கமும் கருத்துலகமும்

படம்
பனுவலாக்கமும் வாசிப்பும் இலக்கியப்பனுவலாக்கம் இப்படித்தான் நடக்கிறது என உறுதியாகச் சொல்ல முடியாது. அதே நேரம் கதைப் பின்னல் கொண்ட புனைகதை, நாடகம் போன்றனவற்றை முன் திட்டமிடலின்றி எழுதிவிடுவதும் நடப்பதில்லை. எழுத்தாளர்களின் முன் திட்டமிடல்கள் இவ்விருவகை இலக்கியப் பனுவலாக்கத்திலும் ஒருவித முறைமையை உருவாக்கவே செய்கின்றன. ஆனால் பா அல்லது கவிதைக்கு முன் திட்டமிடல்கள் தேவைப்படுவதில்லை. திட்டமிடாமல் எழுதப்பட்ட கவிதைகளைப் பின்னர் ஒழுங்குபடுத்தும்போது ஒருவகைத் திட்டமிடல்களும் முறைமைகளும் உருவாவது நடக்கலாம்.

குடி நுழைவும் இருப்பும்

படம்
மே,15, 2026 இன்று மாலை அமெரிக்காவின் டல்லாஸ் நகரிலிருந்து விமானம் ஏறியிருக்க வேண்டும். சென்னையிலிருந்து தோஹா வழியாக வந்த கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் விமானம் டல்லாஸ் நகரில் இறக்கிவிட்ட தேதி நவம்பர், 17, 2025. இன்றோடு அனுமதிக்கப்பட்ட 180 நாட்கள் முடிந்துவிட்டன. நான் பெற்றுவந்த குடிநுழைவு அனுமதியின் பெயர் B -2. மகிழ்ச்சியாகத் தங்கியிருந்தல், விடுமுறையைக் கழித்தல் முதலான காரணங்களோடு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த அனுமதியில் ஒருவர் தொடர்ந்து 180 நாட்கள் அமெரிக்காவிற்குள் இருக்கலாம். முழுமையான நாட்களும் இருந்துவிட்டேன். ஆனாலும் இங்கிருந்து கிளம்பவில்லை.

தொடரும் உருட்டல்கள் (Trolls )

படம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கியதிலிருந்து நெருக்கமாகக் கவனித்து வருபவன் என்ற நிலையில் இதனைச் சொல்ல நினைக்கிறேன். அவரது அரசியல் கருத்துகளையும் நிலைபாடுகளையும் ஊடகங்களில் சொல்வதில் தயக்கம் காட்டாத தலைவர் தொல்.திருமாவளவன். ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பது அவர் நீண்ட காலமாகச் சொல்லும் முழக்கம்.