இடுகைகள்

முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன்

படம்
அந்தக் கிராமங்களோடான நெருக்கமான உறவுகள்  முறிந்து விட்டன என்றாலும்  ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். சொந்த ஊரில் எனக்கென மிச்சமிருப்பது பத்துக்குப் பத்து அளவு நிலம். அதுதான் ஒரு காலத்தில் எங்கள் வீடாக இருந்தது. அதை மட்டும் விற்றுவிடாமல் இருக்கட்டும் என விட்டு வைத்திருக்கிறேன்.   மனைவிக்கு அவரது ஊரில் அதுவும் இல்லை. நிலங்கள், நகைகள், சொத்துபத்துகள் என வசதியான குடும்பம் என்றாலும் பெண்ணுக்குச் சொத்தில் பங்கு தரவிரும்பாத குடும்பம். அவரது பெற்றோர் இருக்கும்போதே சொத்துக்களைப் பிரித்துக்கொண்டார்கள். அப்போதே   உரிமையைக் கோரி  வழக்காடி ஐந்தில் ஒரு பங்கை வாங்கியிருக்கலாம். ஆனால் அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் அந்த ஊர்களுக்குப் போய்வருவதை நிறுத்தவில்லை. அங்கு போவதற்குத் திருமங்கலம் ஒரு வழி. மதுரையிலிருந்து நேரடியாகப் போவதென்றால் உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யலாம். அந்த அனுபவங்கள்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இந்த அனுபவம் கார்ப்பயணம் ஒன்றில் கிடைத்த அனுபவம்.  

திரளின் மனநிலைகள்

படம்
 பாவனைகளும் தந்திரங்களும் நெரிசலில் 42 பேரின் குரூர மரணம் என்பது நடந்த உண்மை. காரணியாக இருந்த அரசியல் கட்சி த.வெ.கழகம். பாதிப்பைப் பற்றிப் பேசுவதை அந்தக் கட்சி தொடர்ந்து தவிர்க்கிறது. தவிர்ப்பதன் மூலம், விளக்கம் சொல்லும் இடத்தில் அரசை நிறுத்தித் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. பாதிப்பைப் பற்றிப் பேசத்தூண்டும் ஊடகச் சந்திப்புகள் நடக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். அரசும் தயக்கம் காட்டிக்கொண்டே தான் இருக்கிறது.

கலைந்ததொரு கொடுங்கனவு

பத்மினி: “என்னோட குரலையே நாடகத்திலெ பயன்படுத்தி இருக்கிறதாகவும், அந்தப்போலீஸ்காரப்படுபாவிங்க செஞ்ச அக்கிரமத்தெ மேடையிலெ காட்டறதாகவும் கட்டாயம் வந்து பாக்கணும்னு” நீங்க லெட்டர் எழுதியிருந்தீங்க. பாண்டிக்கு பக்கத்திலெ இருவது கல் தூரந்தான் கடலூர்.. ஆனா அப்போ வரமுடியல.. ‘ கமிஷன்’ ‘வக்கீல்’னு அலைஞ்சிக்கிட்டு இருந்தேனா.. எம்பாடே பெரும்பாடா இருந்துச்சு.. அதுக்கும் மேல நாடகம் என்ன வேண்டிக்கிடக்கின்னு வரல. இப்போ (06-02-95) மதுரைக்குக்கூடத் தற்செயலாத்தான் வந்தேன். நாடகத்தெப் பார்த்தேன்.

அரவிந்தன்: நினைவுகள்

படம்
‘காலச்சுவடு கட்டுரைகள்’ என்ற முகநூல் பதிவை எழுதியபோது நள்ளிரவு ஆகியிருக்கவில்லை. அந்தப் பதிவில் அவரது பெயரையும் தொடுப்பாக (tag)ச் சேர்த்துவிட்டுப்படுத்தபோது மழை தூறிக்கொண்டிருந்தது. ஒருவேளை காலையில் குறுஞ்செய்தி அனுப்புவார் அல்லது அழைத்துப் பேசுவார் என்று நினைத்துக்கொண்டு படுத்துவிட்டேன். கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த சில நாட்களாகவே இப்படித்தான் இரவுத் தட்பவெப்பம் இருக்கின்றது. அதற்கு முன்பு பனிப்பொழிவாக இருந்தது. சாரலும் தூறலுமாக இருந்த மழை பேரிரைச்சலுடன் சாளரங்களைத் தட்டியபோது விழிப்பு வந்துவிட்டது.

கவனிக்கப்படுவதின் பின்னணிகள்

படம்
நிகழ்வுகளும் தகவல்களும்  வெளிப்பாடுகளும் சேர்ந்து வரலாற்றை உருவாக்குகின்றன.சொல்லப்படும் தகவல்களும் நடக்கின்ற நிகழ்வுகளும் உடன்பாடுநிலை வரலாற்றை உருவாக்கவா..? எதிர்மறை நிலை வரலாற்றை உருவாக்கவா.? என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டியது அதில் பங்கேற்பவர்களின் தன்னுணர்வு சார்ந்த ஒன்று. இன்னும் சொல்வதானால் பங்கேற்கிறவர்களின் நோக்கம் சார்ந்தவைகளும் கூட.