இடுகைகள்

இலக்கிய இதழ்கள் :விடுதலைக்கு முன்னும்பின்னுமான சிற்றிதழ்ப் போக்குகள்

படம்
அம்ருதா, அரும்பு, உயிர்மை, பேசும் புதிய சக்தி, காக்கைச் சிறகினிலே, புதிய கோடாங்கி, உங்கள் நூலகம், புத்தகம் பேசுது முதலான மாத இதழ்கள் எனது முகவரிக்கு ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் வந்துவிடுகின்றன. இவற்றில் தொடர்ந்து எழுதுகிறேன் அல்லது எப்போதாவது எழுதுவேன் என்பதற்காக அதன் ஆசிரியர்கள் அனுப்பி வைக்கிறார்கள். காலச்சுவடு, தீராநதி இரண்டிலும் எழுதினால் அந்த மாதம் மட்டும் அனுப்புவார்கள். மற்ற மாதங்களில் கடைக்குப் போய் வாங்கிக்கொள்ள வேண்டும்.

வாசிப்புக்குறிப்புகள்

படம்
இரண்டு வாசிப்புக்குறிப்புகளும் அச்சாக இருக்கும் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறுவதற்காக எழுதப்பெற்ற குறிப்புகள். அந்நூல்கள் வரும்போது அவற்றை வாசிக்க இக்குறிப்புகள் உதவலாம். இல்லையென்றாலும் இவ்விருவரின் சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கும்போது இக்குறிப்புகள் உள்வாங்கி நீங்கள் வாசிக்கலாம்.

மக்கள் நலக்கூட்டணி என்ற கானல் நீர்

எப்போதும் தேர்தல்களைத் தொடங்கிவைக்கும் வேலையை ஊடகங்கள் தான் செய்கின்றன. 24x7 செய்தி அலைவரிசைகளுக்கு நீண்ட நாள் தீனியாக இருக்கக்கூடியவை விபத்துகளோ, கலவரங்களோ, சாதனைகளோ, கொண்டாட்டங்களோ அல்ல. அவையெல்லாம் ஒரு நாள் பசிக்கான தீனிதான். தேர்தல் களியாட்டங்கள் நீண்ட நாளைக்கான உணவுச் சேகரிப்பு. எடுத்து எடுத்துப் பரிமாறலாம். முதல் தந்ததையே அடுத்தநாள் புதிதுபோலப் பரிமாறலாம். முதன்மை உணவை மாற்றாமல், கூட்டு, பொரியல் மாற்றம், ஊறுகாய், அப்பளம் மாற்றம், சாம்பார், சட்னி மாற்றம் என மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்கலாம். சொம்பில் நீரை வைத்து இலை போடுவதில் தொடங்கி உப்பு, ஊறுகாய், அவியல், பொரியல், கூட்டு, அப்பளம், பாயசம் எனப் பரிமாறியபின் சோற்றைப் பரிமாறும் விருந்துச் சாப்பாடுபோல. கடந்த ஐந்து மாதங்களாகப் பரிமாறிக் கொண்டிருக்கும் செய்தி அலைவரிசைகளுக்குத் தொடர்ந்து தீனிபோட முடியாமல் தவிப்பவை அரசியல் கட்சிகள். கூட்டணிக்குக் கணக்குகள், கட்சிமாற்றங்கள், ரகசிய சந்திப்புகள், வெளிப்படையான சவால்கள், புதுப்புது கட்சிகளை உருவாக்குதல் என ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் விருந்துகளும் பரிமாற்றங்களும் நடக்கின்றன. கூட்டணி உர...

கனவுலக நடப்பியலின் சாத்தியங்கள் : ஜீனத்தின் கொதிகலன் சிறுகதையை முன்வைத்து

படம்
காமத்தை எழுதுதலின் போக்குகள் ஜீனத் எழுதிக் கோணங்கியின் கல்குதிரை இதழில் (39/2024) வந்துள்ள கொதிகலன் சிறுகதையை அச்சில் வாசிக்கவில்லை. அண்மையில் அவரது முகநூல் பதிவேற்றத்தின் வழியாக அறிந்த பின்னரே வாசித்தேன். வாசித்து முடித்தவுடன் மணிக்கொடி கால (1933 -1950) எழுத்தாளர்களில் கு.ப.ராஜகோபாலனின் பெண் பாத்திரத்தேர்வுகள் நினைவுக்கு வந்தன. காமம் சார்ந்த உடலியல் தேவைகளின் போதாமையால் தவிக்கும் பெண் பாத்திரங்களைத் தெரிவு செய்த தொடக்கக்காலச் சிறுகதை எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன். அந்தப் போக்கைப் பின்னரும் பலர் தொடர்ந்தனர்.

தமிழ்ச் சினிமாவும் தமிழக வரலாறும்

படம்
ஒரு கதை ======= மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் மகாத்மா காந்தியைப் பாடமாகப் படித்ததற்கு முன்பே எனக்குக் காந்தியாரைத் தெரியும். இத்தனைக்கும் நான், இந்திய விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவன். எனக்குத் தெரிந்த காந்தியார், தச்சபட்டியென்னும் எனது கிராமத்தோடு ஐந்து கிராமங்களை அடக்கிய பஞ்சாயத்தின் தலைவர். அவரது உண்மையான பெயரை, எனது மூத்த அண்ணனின் திருமணப்பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். அதிலும்கூட காந்தியார் என்ற ‘............’, அவர்களது தலைமையில் என்று அச்சிடப்பட்டிருந்தது. அச்சிடப்பட்ட அந்த உண்மைப்பெயரும் அன்றோடு மறந்துவிட்டது. அதற்கு முன்பும் பின்பும் எனது நினைவில் இருக்கும் பெயர் காந்தியார் தான்.