இடுகைகள்

ஊழல் ஒழிப்பு என்னும் சொல்லாடல்

படம்
த.வெ.க. அரசு, ஊழல் ஒழிப்பு என்பது தொடர்ந்து விவாதமாக்க முனைகின்றது. அதற்காகவே தனது அரசு இயங்கப்போகின்றது என்பதாகவும் முதல்வர் விஜய் பேசுகின்றார். புதிய அரசை ஆதரிக்கும் ஊடகவியலாளர்களும், ஊடக விவாதங்களில் பேசும் நடுநிலையாளர்களும் அதனை ஏற்றுப் பேசுகின்றனர். இப்படிப் பேசுவது பொதுமக்களிடமும் பரவியிருக்கின்றது. இந்தப் பரவலின் பின்னணியில் இருக்கும் சிலவற்றைச் சுட்டிக்காட்ட நினைக்கின்றேன்.

சென்னை நாளில்...

2026, ஆகஸ்டு, 22 இந்தச் சென்னை நாளில் இந்த விடுதியைப் பற்றிச் சொல்வது தவறில்லை. அண்மைக்காலங்களில் சென்னைக்கு வரும்போது இங்குதான் தங்கிக் கொள்கின்றேன். ஊரிலிருந்து கிளம்பும்போது ஒரு தகவல் சொல்லிவிட்டால் நமக்கென ஓர் அறையை ஏற்பாடு செய்துதரும் அளவுக்குப் பழக்கமாகி விட்டது. முன்பணம் செலுத்தினால் அறை என்பதெல்லாம் இல்லை. அலைபேசியில் சொன்னால் போதும். அதன் மேலாளர் ஒத்துக்கொள்வார். குபேர் இன் . என்ற பெயருடைய அந்த விடுதி நந்தனம் பகுதியிலேயே இரண்டு இடங்களில் இருக்கின்றன . சில இடங்களில் காலை உணவு இலவசம் என்ற வசதியுடன் கிடைக்கும். மற்ற நேரங்களில் சொல்லிவைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.  புத்தகக் கண்காட்சி நந்தனம் விளையாட்டு அரங்கிற்கு மாறியபின் இந்த இடம் அறிமுகமானது. புத்தகக் கண்காட்சிக்காக வரும் நாட்களில் தங்குவதற்கென இந்த விடுதியை அறிமுகம் செய்தது தளவாய் சுந்தரம் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அவர் ஒருவிதத்தில் எனது மாணவர். திருநெல்வேலி மனோன்மணியத்தில் தொடர்பியல் துறை மாணவராக இருந்தபோது படைப்பிலக்கியம் என்ற விருப்பப்பாடத்தாளுக்காகத் தமிழியல் துறைக்கு வந்தவர்களில் அவரும் ஒருவர். அதுமுதல் நண்பர்களா...

ஷிபு எஸ். கொட்டாரம்- எனது மாணவர்; எனது ஆசிரியர்

படம்
வாழும்போது புகழ்பட வாழ்தல்: ------------------------------------------ ஷிபு எஸ். கொட்டாரம் என்னும் அரங்கியலாளன் --------------------------------- புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியில் நான் ஓராண்டுக்கு முன்னால் இணைந்தேன்; அவன் ஓராண்டுக்குப் பின்னால் சேர்ந்தான். ஓராண்டு இடைவெளி மட்டுமல்ல. அவன் சேர்ந்தது மாணவனாக; நான் இணைந்தது விரிவுரையாளராக. ஆனால் அவன் வந்தது தொடங்கி எங்களை ஆசிரிய -மாணவ உறவில் வைத்துக்கொள்ளவில்லை. இருவரும் கற்பிப்பவர்களாகவும் கற்பவர்களாகவுமே சேர்ந்து பயணித்தோம். அண்மையில் (07-080-2026) இந்த உலகத்தில் அவனது காலம் முடிந்துவிட்டது. திருச்சூர் நாடகப்பள்ளியின் துறைத்தலைவராக இருந்தபோது அந்த மரணம் நிகழ்ந்துவிட்டது. தோன்றிற்புகழொடு தோன்றுக என்பதைவிடவும் வாழும்போது புகழ்பட வாழவேண்டும் என்பதற்கு அவன் உதாரணம். அவனது நாடகவியல் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாகக் கேரள அரசாங்கம் மரியாதை செய்து அனுப்பியிருக்கின்றது. புதுச்சேரி நாடகப்பள்ளியும் தனது முன்னோடி மாணவனுக்கு நல்லதொரு அஞ்சலியைச் செலுத்தியிருக்கின்றது. அத்துறையில் கற்றுத் தொடர்ந்து அரங்க...

சிட்டுக்குருவியின் அழகும் வல்லூறின் வலிமையும்: தேசியவாதமும் தேசிய இனங்களின் தன்னுரிமையும்

படம்
தேசியவாதம் என்பதையும் தேசிய இனவாதம் என்பதைக் கருத்தியல் அடிப்படையில் சொல்லாடல்களாகப் பேசிக்கொண்டிருக்கின்றோம். அதனையே அனைவருக்கும் எளிதாகப் புரியும் விதமாகப் பேசுவதென்றால் ‘ நாம் வாழும் நாடு பரப்பளவில் பெரியதொரு நாடாக இருக்க வேண்டுமா? அல்லது சின்னதான நாடாக இருக்க வேண்டுமா? எனக் கேட்டு விடை காணுவதாகச் சொல்லலாம். இவ்விரு எதிர்நிலையில் எது நல்லது?

பூமணியின் நினைவாக...

படம்
பூமணி! நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக்கொள்ளுங்கள்!! பூமணியின் அஞ்ஞாடி நாவல் 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதைப் பெறுகின்றது என்ற அறிவிப்பு வந்தது. அறிவிப்பைக் கேட்டதும் அனுப்பப்பட்ட வாழ்த்துக்கடிதத்தின் தலைப்பு இது. கட்டுரை வடிவிலான அந்தக் கடிதத்தைப் புலனத்தின் வழியே அனுப்பியதும் அவரே அழைத்துப் பேசினார். இருவரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டோம்.