நினைவுகளை எழுதுதலும் அழித்தலும் - தலித் இதழின் மூன்று சிறுகதைகள்
ஆகஸ்டு,2026 தலித் இதழில் மூன்று சிறுகதைகள் அச்சாகியுள்ளன. 1. கரடிகுளம் ஜெயப்பாரதிப்ரியாவின் 'பால்ய சோகம்', 2. பிரதிபா ஜெயச்சந்திரனின் 'தாத்தா குறிப்புச்சிட்டைகளின் குழல் டப்பா', 3. க.மூர்த்தியின் 'பாறையில் முளைத்துவரும் அப்பாவின் தெத்துப்பல்' . நினைவுகளை எழுதுதல் கடந்த காலத்தின் நினைவுகளுக்குள் பயணிப்பது பெரும்பாலான புனைகதைகளின் பொதுக்கூறு என்றாலும் தொடக்கக்காலத் தலித் புனை கதைகள் கடந்த காலத்தை எழுதுவதையே தலித் இலக்கியத்தின் அழகியலாக முன்வைத்தன. தமிழில் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றில் எழுதப்பெற்ற தலித் தன்வரலாறுகளின் பெருக்கத்தை நினைவுபடுத்திக் கொண்டால் இந்தக் கூற்றின் உண்மை புரியவரலாம். இம்மாதத் தலித் இதழில் வந்துள்ள மூன்று கதைகளும் கடந்த காலத்திற்குள் பயணிக்கும் சொல்முறைமையையே கொண்டுள்ளன. மூன்று கதைகளில் பால்யசோகம் கதை தலித் இதழில் அச்சாகத்தக்க சிறுகதையாக இல்லை. " விருப்பமான முறையில் தனது தலைமுடியை வெட்டிக்கொள்ள நினைக்கும் சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றாத தந்தையின்...