கோவையோடு ஞானியும்
கோவை புத்தகக் கண்காட்சி(2023)க்குப் போயிருந்தேன். காட்சி அரங்குகளில் சந்தித்தவர்களில் - மேடையில் இருந்தவர்களில் என எங்கும் அவரின் பெயர் திரும்பத்திரும்ப உச்சரிக்கப்பட்டது. கண்காட்சியில் மட்டும் என்றுகூடச் சொல்லமுடியாது. கோவையில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளில் நான் சந்திந்த பலரும் அவரது பெயரைச் சொல்வதும் அவரது தாக்கம் அவர்களுக்குள் எப்படி இருந்தது என விவரிப்பதுமாகவே இருந்தார்கள். ஞானி கோவையின் இலக்கியமுகமாக இருந்தார் என்பதைத் திரும்பத்திரும்ப உணரமுடிந்தது.