இடுகைகள்

தொடரும் உருட்டல்கள் (Trolls )

படம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கியதிலிருந்து நெருக்கமாகக் கவனித்து வருபவன் என்ற நிலையில் இதனைச் சொல்ல நினைக்கிறேன். அவரது அரசியல் கருத்துகளையும் நிலைபாடுகளையும் ஊடகங்களில் சொல்வதில் தயக்கம் காட்டாத தலைவர் தொல்.திருமாவளவன். ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பது அவர் நீண்ட காலமாகச் சொல்லும் முழக்கம்.

விலக்கப்படும் நந்திகள்

படம்
தேர்தல் வழியாகத் திரும்பவும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்தக் குறுகிய காலத்தில் அதன் செயல்பாடுகள் சில, தமிழகத்தின் பெரும்பான்மை மக்களால் ஏற்புடையனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. தனது தேர்தல் வாக்குறுதிகளாகத் தந்த இலவசங்கள், கரோனாப் பெருந்தொற்றைச் சமாளித்தல் போன்றனவற்றிற்காகக் கிடைக்கும் பாராட்டுகளும் ஏற்புகளும் பொதுப்புத்தி சார்ந்தவை. அவற்றைத் தாண்டித் திராவிட இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த முன்னெடுப்புகளும் கவனிக்கப்படுகின்றன; பாராட்டப்படுகின்றன என்பதே இப்போதைய விவாத மையம்.

பெயரில் என்னதான் இல்லை?

படம்
“ரோஜா, ரோஜாவாக இருக்கிறது ” இந்த தொடர் சேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தில் இருக்கும் வாக்கியம். ஆனால் அதைத் தனது கவிதையின் தலைப்பாக மாற்றிக் கவிதை ஒன்றை எழுதியவன் கவி ஜெற்ரூட் ஸ்டெயின் என்று படித்த ஞாபகம். “என்ன பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜா தான்;ஏனென்றால் ரோஜா ரோஜாவாகவே இருக்கிறது ” என்று முடியும் அந்தக் கவிதை எப்போது ரோஜாப்பூக்களைப் பார்த்தாலும் நினைவுக்கு வந்து விடும்.

பொது உளவியலின் அரசு

படம்
  தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளைத் தகர்த்த ஒன்றாகத் தோற்றம் கொண்டிருக்கின்றது. அந்த முடிவுகளின் அடிப்படையில்   உருவான அரசை பொது உளவியலின் அரசு என வரையறை செய்யலாம். 

மனுஷ்யபுத்திரன்: அவசரப்பட்டு எடுத்த முடிவு

படம்
சென்னை மாவட்ட நூலகக்குழுவின் தலைவராக இருந்த கவி. மனுஷ்யபுத்திரன் அந்தப் பதவியிலிருந்து விலகிக் கொண்டதாக அறிவித் துவிட்டுச் சில நாட்களுக்கு முன்பு வெளியேறியிருக்கின்றார். இந்த வெளியேற்றம் அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பது எனது கருத்து. அவரை நியமனம் செய்த அரசின் பதவிக்காலம் இன்னும் முடியவில்லை. அடுத்த அரசு இன்னும் உருவாகவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து செயல்படுவது தார்மீக அடிப்படையில் தவறானது அல்ல. பல்கலைக்கழக அளவில் இதுபோன்ற நியமனப் பதவிகளில் இருந்து பணியாற்றிய அனுபவத்தில் இதனைச் சொல்கிறேன்.