இடுகைகள்

நினைவுகளை எழுதுதலும் அழித்தலும் - தலித் இதழின் மூன்று சிறுகதைகள்

 ஆகஸ்டு,2026 தலித் இதழில் மூன்று சிறுகதைகள் அச்சாகியுள்ளன.               1. கரடிகுளம் ஜெயப்பாரதிப்ரியாவின் 'பால்ய சோகம்',         2. பிரதிபா ஜெயச்சந்திரனின் 'தாத்தா குறிப்புச்சிட்டைகளின் குழல் டப்பா', 3. க.மூர்த்தியின் 'பாறையில் முளைத்துவரும் அப்பாவின் தெத்துப்பல்' . நினைவுகளை எழுதுதல் கடந்த காலத்தின் நினைவுகளுக்குள் பயணிப்பது பெரும்பாலான புனைகதைகளின் பொதுக்கூறு என்றாலும் தொடக்கக்காலத் தலித் புனை கதைகள் கடந்த காலத்தை எழுதுவதையே தலித் இலக்கியத்தின் அழகியலாக முன்வைத்தன. தமிழில் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றில் எழுதப்பெற்ற தலித் தன்வரலாறுகளின் பெருக்கத்தை நினைவுபடுத்திக் கொண்டால் இந்தக் கூற்றின் உண்மை புரியவரலாம்.   இம்மாதத் தலித் இதழில் வந்துள்ள மூன்று கதைகளும் கடந்த காலத்திற்குள் பயணிக்கும் சொல்முறைமையையே கொண்டுள்ளன. மூன்று கதைகளில் பால்யசோகம் கதை தலித் இதழில் அச்சாகத்தக்க சிறுகதையாக இல்லை. " விருப்பமான முறையில் தனது தலைமுடியை வெட்டிக்கொள்ள நினைக்கும் சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றாத தந்தையின்...

ரவிக்குமார் கவிதைகள்

படம்
மரணம் என்பதும் தற்கொலை என்பதும் கொலை என்பதும் கருத்து ரீதியானவை அல்ல; செயல் ரீதியானவை. புறவயமான நடப்பைக் குறித்துப் பயன்படும் இச்சொற்கள் ஒருமையாக ஒலிக்கும்போது உருவாக்கும் உணர்வுகளும், ஒருமையிலிருந்து பன்மைக்கு மாறும்போது உருவாக்கும் உணர்வுகளும் ஒன்றுபோலானவை அல்ல. அதேபோல தன்மை, முன்னிலை என்ற இடங்களுக்குரியனவாக நின்று ஒலிக்கும்போது உண்டாக்கும் உணர்வுகளுக்கும் படர்க்கையாக நின்று ஒலிக்கும்போது உருவாக்கும் உணர்வுகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன.

கோவையோடு ஞானியும்

படம்
கோவை புத்தகக் கண்காட்சி(2023)க்குப் போயிருந்தேன். காட்சி அரங்குகளில் சந்தித்தவர்களில் - மேடையில் இருந்தவர்களில் என எங்கும் அவரின் பெயர் திரும்பத்திரும்ப உச்சரிக்கப்பட்டது. கண்காட்சியில் மட்டும் என்றுகூடச் சொல்லமுடியாது. கோவையில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளில் நான் சந்திந்த பலரும் அவரது பெயரைச் சொல்வதும் அவரது தாக்கம் அவர்களுக்குள் எப்படி இருந்தது என விவரிப்பதுமாகவே இருந்தார்கள். ஞானி கோவையின் இலக்கியமுகமாக இருந்தார் என்பதைத் திரும்பத்திரும்ப உணரமுடிந்தது.

ஒற்றைத்தன்மையும் கல்வித்துறையும்

படம்
துணைவேந்தர்கள் நியமனம் எப்போதும் அரசியல் சார்புடன் தான் நடக்கின்றது. அரசியல் என்பதில் இரண்டு நிலைகள் உண்டு. முதலாவது கருத்தியல் அரசியல்; இரண்டாவது நடைமுறை அரசியல்.  ஆசிரியனாகப் பல பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் 40 ஆண்டுகள் கல்விப்புலங்களில் உலாவிய எனக்கு இந்த இரண்டு நிலைப்பட்ட அரசியல் மீதும் ஏற்புடைய கருத்துகளும் உள்ளன; மறுக்கும் கருத்துகளும் உள்ளன. மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு நகர்த்தப்பட்டதைக்கூட இரண்டுவிதமாகவே புரிந்துகொண்டுள்ளேன்.

லிங்கம்: அதிகாரத்தின் பாதைகள்

படம்
"தளபதி, அரசனாக நினைத்துவிட்டால்... ?" - இது சேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் அனுமானம் (Premise ). அந்த அனுமானத்தின் மேல் பின்னப்பட்ட காட்சிகளையும் அங்கங்களையும் சரியாகச் செதுக்கி உருவாக்கிய மேக்பெத் நாடகம் தொடர்ந்து மேடையேற்றப்படும் நாடகம். சேக்ஸ்பியர் எழுதிய ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டும் தழுவலாக்கம் செய்யப்பட்டும் நிகழ்த்தப்படுகின்றன.