மகேந்திரசிங் தோனிக்கு வயது 44.
.jpeg)
இரவுமுழுவதும் நடக்கும் தெருக் கூத்திலும் ஸ்பெஷல் நாடகத்திலும் முக்கியமான கட்டங்களில் தூங்கிய பார்வையாளர்கள் எழுந்து உட்கார்ந்து விடுவார்கள். குறிப்பாக வாதம்- எதிர் வாதம் என்ற பகுதிகளில் நடிகர்களின் குரலும் வாதத்திறமையும் அந்த நேரத்தில் உருவாக்கிப் பேசும் வசனங்களும் இட்டுக்கட்டும் பாடல்களும் கையொலியை எழுப்பும். அது அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிக ஆளுமைக்குக் கிடைக்கும் பாராட்டு. அப்படித்தான் தோனியின் மட்டையடியை இந்தியத் திரள் காத்திருந்து ரசித்தது. நான் அப்படி ரசித்திருக்கிறேன். அப்படிக் காத்திருந்து ரசிக்க இன்னொரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும்.