இடுகைகள்

மதுரை நினைவுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சேவாலயத்தோடு சில நினைவுகள்

படம்
சீடு அமைப்பின் மார்கழிக்கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாகப் பிரபாகர் இயக்கிய ‘மனைவியர் பள்ளி’ நாடகம் (மோலியரின் மூலத்தைத் தழுவிய நாடகம்)  ஷெனாய் நகரில் இருக்கும் சேவாலய வளாகத்தில் நடக்கிறது என்பதைக் கூகுள் வரைபடத்தோடு அனுப்பி வைத்தனர் பிரபாகரும் கார்த்திக்கும்.  பழைய அண்ணா பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் நகரப்பேருந்தில் ஏறினால் ஷெனாய் நகரில் இறங்கிக் கொள்ளலாம். 

படம் தரும் நினைவுகள்-2

படம்
அமெரிக்கன் கல்லூரியின் முதன்மைக் கட்டட மாடியில் உள்ளமேடையில் எடுக்கப்பட்ட படம். 1989 - எனது இயக்கத்தில் மேடை ஏறிய முதல் நாடகமான ஞான.ராஜசேகரனின் ‘வயிறு’ நாடகத்தின் மேடையேற்றத்திற்குப் பின் பார்வையாளர்கள் எல்லாம் வெளியேறியபின் நடிகர்களும், நாடகத்தோடு பின்னணி வேலைசெய்தவர்களுமாக இருக்கிறோம்.

படங்கள் வழி மதுரை நினைவுகள்

படம்
மதுரை என்னுடைய நகரமென்று இப்போதும் சொல்கிறேன். அந்நகரில் இருந்த ஆண்டுகள் குறைவுதான். மாணவனாக விடுதிகளில் 6 ஆண்டுகள் தங்கியிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரியில் வாலஸ் விடுதியிலும் வாஸ்பன் விடுதியிலும் 4 ஆண்டுகள். பல்கலைக்கழக விடுதியில் இரண்டு ஆண்டுகள். தொடர்ந்து திருமணம் செய்துகொண்டு ஆய்வு செய்த ஆய்வாளர்களுக்கான குடியிருப்பில் 5 ஆண்டுகள். அதன்பிறகு கே கே நகரில் ஒரு ஒண்டுக் குடித்தனமாக ஓராண்டு. மொத்தம் 12 ஆண்டுகள். ஆனால் எனது கிராமத்திலிருந்து நான் வாழ்ந்த பல நகரங்களுக்கும் போக மதுரைதான் வழி. எனது கிராமம் இப்போதும் மதுரை மாவட்டத்திற்குள் தான் இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு கிளையான வாசிமலையான் கோவில் மலைக்குத் தெற்கே இருக்கும் தச்சபட்டி என்ற அந்தக் கிராமம் அப்போதும் 70 தலைக்கட்டுதான்; இப்போதும் அதே 70 தலைக்கட்டுதான். வளர்ச்சியே இல்லாத கிராமம். அங்கிருந்து மதுரைக்கு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு காரணங்களுக்குப் போய் வந்திருக்கிறேன். வாழ்ந்திருக்கிறேன். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு