நம்பிக்கைகள் சிதையத் தொடங்கும் கணங்கள்
[6 ஆண்டுகளுக்கு முன் -2009- உயிர்மைக்கு எழுதிய கடிதம்/ கட்டுரை அதன் ஆசிரியரால் பிரசுரம் செய்யப்பட வில்லை. தாமதமாக அனுப்பப்பட்டது காரணம் . அதில் பேசப்பட்ட விசயங்கள் இன்றும் நினைக்கப்படக் கூடியனவாக உள்ளன.] மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளின் மீதும் செயல்பாடுகள் மீதும் உண்மையான நம்பிக்கை கொண்ட தமிழ்ச் செல்வனின் எதிர்வினையோடு முழுமையான உடன்பாடு இல்லையென்றாலும் எனது நம்பிக்கையை அவர் சிதைக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் சிவப்புச் சாயங்கலந்த வார்த்தைகள்தான் இந்தியாவைச் சமதர்ம பூமியாக மாற்றும் என்பது அவரது நம்பிக்கை. இந்த நம்பிக்கையையும்கூட விட்டுவிடலாம் என்று புத்ததேவும் அவரது முன்னோடி ஜோதிபாசுவும் சொல்லி விட்டார்கள். இலட்சியமும் நடப்பு நிலையும் சந்தித்துக் கொள்வது சாத்தியமில்லை என்கிறபோது யதார்த்தத்தை ஒத்துக் கொள்வதற்குப் புத்திசாலிகள் தயங்குவதில்லை. புத்ததேவும் ஜோதிபாசும் புத்திசாலிகள். தமிழ்ச்செல்வனால் அதிதீவிர வலதுசாரிகளுடன் கூட்டணி சார்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் அதிதீவிர இடதுசாரிகள் (இதுவும் வசைச்சொல் தான்) இந்தியாவைச் சமதர்ம பூமியாக மாற்றிக்காட்ட வைத்திருக்கும் நம்ப...