இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பின்காலனிய மனநிலையும் பெரியாரின் பெண்கள் குறித்த சிந்தனைகளும்

படம்
  இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருககிறார்கள் என்றாலும், இன்றைய இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுபத்தைந்து வயதைத் தாண்டிய சிலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் நினைவில் இருக்கலாம். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறானதாக இருக்கிறது. ஐரோப்பிய மனநிலையை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ தனக்குள் உள்வாங்கியதாகவே இந்தியத் தன்னிலை அல்லது தமிழ்த் தன்னிலை என்பது உருவாகி இருக்கிறது. இது நிகழ்கால இருப்பு

தமிழர்களின் வாரக்கடைசிகள்

படம்
  உலகத் தமிழர்களின் பொழுது போக்குகளில் முதலிடத்தில் இருப்பவை தொலைக் காட்சிகள். அவற்றுள் வாரக் கடைசிக்கான நிகழ்ச்சிகளைக் கலவையாகத் தருவதின் மூலம் பார்வையாளத் திரளைத் தன்வசப்படுத்திய அலைவரிசை ஸ்டார் விஜய்.

திறந்தே கிடக்கும் பின்வாசல்கள்

படம்
சொந்த வீட்டுக் கனவு இல்லாத மனிதர்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் கனவுகளை நிறைவேற்றிப் பார்க்கும் வாய்ப்புள்ள நடுத்தரவர்க்க மனிதர்களுக்கு சொந்த வீட்டுக் கனவு நிறைவேறத்தக்க கனவு என்பதிலும் ஐயமில்லை. சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றும் போது முன்வாசல் வைத்துக் கட்டுவதோடு இன்னொரு வாசலையும் வைத்துக் கட்டுகிறார்கள்; அந்த வாசல் வீட்டின் முன்வாசலுக்கு நேரெதிராகப் பின்புறம் இருக்க வேண்டும் எனப் பார்த்துக் கொள்கிறார்கள். இதனை நம்பிக்கை சார்ந்தது என்று சொல்வதா?தேவை சார்ந்தது சொல்வதா? என்று விளக்குவதா எனத் தெரியவில்லை.

விலக்கப்படும் நந்திகள்

படம்
தேர்தல் வழியாகத் திரும்பவும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்தக் குறுகிய காலத்தில் அதன் செயல்பாடுகள் சில, தமிழகத்தின் பெரும்பான்மை மக்களால் ஏற்புடையனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. தனது தேர்தல் வாக்குறுதிகளாகத் தந்த இலவசங்கள், கரோனாப் பெருந்தொற்றைச் சமாளித்தல் போன்றனவற்றிற்காகக் கிடைக்கும் பாராட்டுகளும் ஏற்புகளும் பொதுப்புத்தி சார்ந்தவை. அவற்றைத் தாண்டித் திராவிட இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த முன்னெடுப்புகளும் கவனிக்கப்படுகின்றன; பாராட்டப்படுகின்றன என்பதே இப்போதைய விவாத மையம்.

ஒக்கூர் மாசாத்தியின் கவிதைகளில் நடத்தை உளவியல்

முன்னுரை: ஐரோப்பியர்கள் அனைத்துச் சொல்லாடல்களையும் அறிவியலின் பகுதியாக பேசத் தொடங்கிய காலகட்டம் 18 ஆம் நூற்றாண்டு. தொழிற்புரட்சிக்குப் பின்பு மதத்தின் இடத்தைப் பிடித்த அறிவுவாதம், தர்க்கம் என்னும் அளவையியல் வழியாக ஒவ்வொன்றையும் விளக்கிக் காட்டியது. மனிதனின் மனச் செயல்களை விளக்கமுடியாத ஒன்றாகவும், காரணகாரியங்களுக்கு உட்படாத ஒன்றாகவும் இருந்த போக்குக்கு மாறாக அதனைச் சமூக உளவியலின் ஒரு பகுதியாகப் பேசி விளக்கிக் காட்டியது.

பட்டினப்பாலையில் புழங்குபொருட் பண்பாடு

முன்னுரை ஒரு மனித உயிரி தனது வாழ்தலுக்காக அளிக்கப்பெற்றதாக நம்பும் காலத்தின் ஒரு பகுதியை தன்னை வந்தடையும் ஒரு பிரதியை வாசிப்பதற்காக ஒப்புக் கொடுத்து வாசிக்கும்போது வாசகராக ஆகிறார். பிரதி வாசிக்கப்படும் நோக்கத்திலிருந்து வாசிப்பவர்களின் அடையாளம் உருவாகிறது. நோக்கம் அற்ற வாசிப்பும் கூட வாசிப்பு தான்.

கையறு நிலையின் கணங்கள்

படம்
 இந்த ஆண்டு( 2021) இல் வெளிவந்த   கவிதைத் தொகுதிகள் இரண்டு அடுத்தடுத்து வாசிக்க க் கிடைத்தன. முதலில் வாசித்தது ரூபன் சிவராஜா வின் எழுதிக் கடக்கின்ற தூரம். இரண்டாவதாக வாசித்தது சுகன்யா ஞானசூரி யின் நாடிலி. எழுதியவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமலேயே கூட இந்தக் கவிதைத் தொகுதிகளின் தலைப்பை   வைத்துக் கொண்டு கவிதைகள் எழுப்பப் போகும் சாராம்சத்தைப் பேசிவிடலாம்.

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை : கிழக்கும் மேற்கும் சந்திக்கும் புள்ளி

படம்
ஐரோப்பாவில் நடந்த நடந்த அரசியல் மற்றும் தொழில் புரட்சிகளின் பின்னணியில் இருந்த சிந்தனைப் புரட்சிகளை உலகம் அறியும். தனிநபர்களின் சிந்தனை வெளிப்பாடுகளே சமூகத்தில் செயல் வடிவம் பெறுகின்றன. காலனிய காலத்து இந்தியாவில் தோன்றிய ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகளின் திரட்சியே இந்தியாவின் தேச விடுதலைப் போராட்டமாக மாறியது. தமிழ்நாட்டில் தோன்றிய தாய்மொழிப் பற்றின் வெளிப்பாடான தமிழிய இயக்கத்தின் தோற்றக்காரணிகளாக இருந்ததும் சில ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகளே. தமிழர்கள் தங்கள் தாய்மொழி மீது தீவிரமான பற்றையும் ஆன்மீகம் சார்ந்த தேசப்பற்றின் மீது ஈடுபாடும் பொருளியல் வாழ்க்கை சார்ந்து உலகப்பார்வையும் கொண்டவர்களாக இருப்பதின் பின்னணியில் சில குறிப்பிடத் தக்க ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகள் உள்ளன. அத்தகைய ஆளுமைகளில் முதன்மையானவர் எம் பல்கலைக்கழகத்தின் பெயராக இருக்கும் பேரா. சுந்தரம்பிள்ளை அவர்கள்.

தி.க.சண்முகத்தின் நாடகவாழ்க்கை

படம்
வரலாற்றை எழுதிவைக்கவும், வரலாற்றை எழுதுவதற்கான தரவுகளைத் தொகுத்து வைக்கவும் தவறிய சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்துவந்துள்ளது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நிலப்பரப்பான தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கான போதிய அடிப்படைச் சான்றுகளைத் தேடும் பணிகளே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டு வரலாற்றைத் தாண்டி கலை இலக்கிய வரலாறுகளை உருவாக்குவதற்கான தரவுகளைத் தேடுவதோடு ஓர்மையுடன் எழுதவேண்டும் என்ற அக்கறைகளும் குறைவாகவே உள்ளன. எழுத்துக்கலைகளான கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றின் வரலாற்றை உருவாக்குவதற்கு அந்தந்த வடிவங்களில் எழுதப்பெற்ற பனுவல்கள் நூலகங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்த வரலாற்றாய்வாளர்கள் முறையான இலக்கியவரலாறுகளை எழுதிவிடமுடியும்.

உலகின் தலைசிறந்த தேநீர்

படம்
தேநீர் குடிக்கத் தொடங்கிய காலத்திலேயே தேயிலைக் காடுகளைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது எங்களூரின் மலைக்காரர் குடும்பம். ஒரு பஞ்ச காலத்தில் பிழைப்புத் தேடி மூணாறு மலைத் தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குப் போனவரின் அடுத்த தலைமுறையினர் திரும்பவும் ஊரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். அப்போது நேரடித் தேயிலையை ஊருக்கு அறிமுகம் செய்தார்கள். அவர்கள் வீட்டுத் திருமணம் ஒன்றிற்கு மூணாறுக்கும் மேல் விரியும் தேயிலைக் காடுகளில் ஒருவாரம் தங்கியிருந்த நாட்கள் தேயிலைச் செடிகளைப் பார்க்கும் ஆர்வத்தை எப்போதும் தூண்டக்கூடியன. திருநெல்வேலியில் இருந்த காலத்தில் ஊத்துக்குச் செல்லும் அரசு பேருந்தில் ஏறி மாஞ்சோலைக்குச் சென்று திரும்பி விடலாம். அதைவிட்டால் செங்கோட்டை வழியாகக் கேரளத்திற்குள் நுழையும் பாதையில் தேயிலைக் காடுகளைப் பார்க்கலாம்.

போர்க்காலச் சுமைகள்

படம்
பிரான்சிலிருந்து பதிவேற்றப்படும் நடு இணைய இதழின் 40 வது இதழில்( பங்குனி 2021 ) கறுப்பு சுமதி எழுதிய அந்தக் கதையைப் படித்தவுடன் ஈழவாணி தொகுத்த காப்பு தொகுதியில் இடம்பெற்ற ஒரு கதை நினைவில் வந்தது. இலங்கைப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைகள் எனத் துணைத்தலைப்பிட்ட அந்தத் தொகை நூலில் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் தொடங்கி, ஜெயசுதா பாபியன் வரையிலான 41 தமிழ்ப் பெண் படைப்பாளிகளின் கதைகளும் ஐந்து சிங்களப் பெண் எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புக் கதைகளும் உண்டு.

தமிழ் ஆர்வலன் அல்ல.

படம்
 இந்த விவாதம் ஒரு முகநூல் பின்னூட்ட விவாதம் தான். ஆனால் அதனைப் பலரும் விரும்பியிருந்தார்கள். இதனைச் சமூக ஆர்வலர், சினிமா ஆர்வலர், கலை ஆர்வலர் என ஒருவருக்கான அடையாளமாகச் சொல்லும்போதும் கவனிக்கவேண்டிய எச்சரிக்கை என்றே நினைக்கிறேன். இனி விவாதத்திற்குள் செல்லலாம தமிழில் வழிபாடு (அர்ச்சனையோ, பூஜையோ அல்ல) ***** தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை நீங்கள் வரவேற்கிறீர்களா? ஒரு தமிழ் ஆர்வலராக உங்கள் பதில் என்ன? - தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றின் செய்தி சேகரிப்பாளர் தொலைபேசியில் கேட்டார்.

சங்கப் பெண்கவிகளின் கவிதையியல்

  கவிதையியல் என்னும் கலைக்கோட்பாடு : ஓரு படைப்பாளி அல்லது ஓர் இலக்கிய இயக்கம் பின்பற்றும் படைப்பியக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே கலைக் கோட்பாடு என்னும் பொதுவரையறை அர்த்தம் பெற்றுள்ளது . பொதுவரையறையின் அர்த்தம் கவிதையியல் என்னும் அதன் கூறுக்கும் பொருந்தும் . நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழில் கவிதையியல் என்பதற்கும்   இலக்கியக் கோட்பாடு என்பதற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை . ஐரோப்பியர்களின் வருகைக்கும் பின்னால் சில மாற்றங்கள் உள்ளன என்றாலும் கவிதையியலும் இலக்கியக் கோட்பாடும் நேரெதிரானவை அல்ல . இலக்கியக் கோட்பாடு முதன்மையாகக் கருதுவது படைப்பியக்கத்தை ; படைப்பியக்கம் முதன்மையாக முன் வைப்பது படைப்பு சார்ந்த நுட்பங்களை . படைப்புப் பொருள் , படைப்புமுறை , படைப்பு நோக்கம் என படைப்பு நுட்பங்கள் விரியக் கூடியன . படைப்பு சார்ந்த இவையெல்லாம் படைப்பில் வெளிப்படுகின்றன என்று காட்டுவது மட்டுமல்லாமல் , அதன் நுகர்வோராகிய வாசகர்களிடம்   சென்று சேர்வதில் தான் படைப்பியக்கம் முழுமை அடைவதாக அண்மைக்காலத் திறனாய்வுகள் பேசுகின்றன .

எழுதத்தூண்டும் கதைகள் –1

படம்
வாசித்து முடித்தவுடன், இதுபோன்றதொரு பனுவலை இதே வகைப்பாட்டில் வாசித்திருக்கிறோம் என்று தோன்றினால் அதைக் குறித்துக்கூட வைத்துக்கொள்ளத் தோன்றுவதில்லை. அதற்குப் பதிலாக அந்தப் பனுவலின் ஏதோவொரு புனைவாக்கக் கூறு புதியதாகத் தோன்றும்போது, அது என்ன? என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கான விடையைத் தேடித் திரும்பவும் பனுவலுக்குள் பயணம் செய்யும்போது, பனுவலுக்குள்ளிருக்கும் அந்தப் புத்தாக்கக் கூறும், அதன் வழியாகக் கிடைக்கும் அனுபவங்கள் அந்தப் பனுவலை விவாதிக்க வேண்டிய பனுவலாக மாற்றிவிடுகின்றன. அனுபவங்கள் என்பன விவரிக்கப்பட்ட நிகழ்வுகளோடு, புற வாழ்க்கையின் காட்சிகளும், தொடர்புகளும் ஒத்துப்போகும் தன்மையாக இருக்கலாம். முரண்படும் நிலைகளாகவும் இருக்கலாம். இவ்விரண்டிற்கும் அப்பால், பனுவலில் பயன்படுத்தும் மொழியும், மொழியைக்கொண்டு உருவாக்கப்படும் சொல்முறைகளாகக்கூட இருக்கலாம். இந்த மூன்று கதைகளில் வாசித்தவுடன் எழுதத்தூண்டிய கதை இளங்கோவன் முத்தையாவின்  முன்னை இட்ட தீ. ஹேமாவின் இறுதியாத்திரையும் தீபுஹரியின் தேன்கூடும் உடனடியாக எழுதத் தூண்டியன அல்ல.