இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய நாடகத்தை உருவாக்குதலின் ஒரு பரிமாணம்

படம்
மாதய்யா தி காப்ளர் நவம்பர் 17,18,19 தேதிகளில் சென்னை அரசுஅருங்காட்சியகத்திற்குள் இருக்கும் ம்யூசியம் அரங்கில் நிகழ்த்தப்பெறும் என்றதகவலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் ப்ரசன்னா ராமஸ்வாமி.அவரது இயக்கத்தில் மேடையேறிய பெரும்பாலான நாடகங்களைப் பார்த்தவன் என்றவகையில் இந்த நாடகத்தைப் பார்க்கவேண்டிய நாள்:18-11-2017  எனக்குறித்துக் கொண்டேன். நான் போன இரண்டாவது நாள் ம்யூசியம் அரங்கு பார்வையாளர்களால்நிரம்பியது. முந்திய நாளும் நிரம்பியது என்றே அறிந்தேன். மூன்றாவது நாளும்நிரம்பியிருக்கும். நான் போன அன்று நாடகத்தைக் கன்னடத்தில் எழுதிய நாடகஆசிரியர் எச். எஸ். சிவப்பிரகாஷும் நாடகம் பார்க்க வந்திருந்தார் என்பது கூடுதல்சிறப்பு. 

அறம்:அரசதிகாரத்தின் குற்றமனம்

படம்
அண்மையில் திரைக்கு வந்து வணிக வெற்றியடைந்துள்ள அறம் என்ற சினிமா கவனிக்கத்தக்க சினிமாவாக ஆகியிருக்கிறது. வணிகரீதியான வெற்றிக்காக மட்டுமல்லாமல் பொறுப்புள்ள சினிமாவின் அடையாளமாகவும் ஆகியிருக்கிறது. அச்சினிமா கவனம் பெற்றதால், அதன் இயக்குநர் கோபிநயினார் முதல் படத்திலேயே கவனம் பெற்ற - வெற்றிப்பட இயக்குநராக ஆகியிருக்கிறார்.