இடுகைகள்

திசைகளின் வாசல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்விச்சந்தையும் தமிழ்க்கல்வியும்

படம்
காலத்திற்கேற்ற தமிழ் இலக்கியக்கல்வி பல்கலைக்கழகப் பணி ஓய்வுக்குப்பின் தொடர்ந்த கரோனா காலம் முடக்கிப்போட்டுவிட்டது. தொடர்ந்து கலை, இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபடத்திட்டமிட்டதை எல்லாம் மாற்றிப் போட்டுவிட்டது. இந்த நிலையில் தான் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் கொடுத்த இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு படைப்பாக்கக் கல்வியை மையப்படுத்தித் தமிழ்ப் பாடத்திட்டம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தேன். காலத்திற்கேற்பவும் மாணாக்கர்களின் வேலை வாய்ப்பை நோக்கமாகவும் கொண்டு தமிழ் இலக்கியக் கல்வியை மாற்றும் திட்டத்தை முன்வைத்துப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. பன்முகக்கலை அறிவியல் கல்லூரி (Liberal Arts and Science) என்ற பெயருக்கேற்ப அதன் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புள்ள பட்டப்படிப்புகளாக வடிவமைத்தது. இதனைச் செயல்வடிவம் கொண்டு வருவதில் ஏற்பட்ட தடங்கல்கள் ஆசிரியர்களிடமிருந்தே உருவானது என்பது தனிக்கதை. புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்காக இதனைத் தருகிறேன். ******* எண்பதுகளில் கல்வியைக் குறிக்கும்போது சந்தை அதனோடு இணையும் சொல்லாக இருந்ததில்லை. இப்போது எல்லாத் துறைகளோடு சந்தை இணைந்துவிட்டது. மருத்துவம், பொழு...

வினையும் எதிர்வினையும்

படம்
நடிகர் விஜயை எதிர்கொள்ளுதல் திராவிட முன்னேற்றக்கழகம் தனது எதிரிக்கட்சியாக அஇஅதிமுகவை முன்வைத்து அரசியல் நகர்வுகளைச் செய்வதே சரியானது. அப்படித்தான் அதன் பொறுப்பாளர்கள் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அதன் ஆதரவாளர்களும் கருத்தியல் முன்வைப்பாளர்களும் அப்படி நகர்வதில்லை. 

நினைவழியா நாட்கள்

படம்
கரூர் என்னும் அந்த நகரம் சந்தித்த துயரச் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இறந்தவர்களுக்கு 16 ஆம் நாளுக்குள்ளும் செய்யப்படும் கருமாதியும் முப்பதாம் நாள் சடங்குகளும் அந்தந்தக் குடும்பங்களின் நினைவுக்குரிய நாட்கள். ஆனால் ஓராண்டுக்குப் பின்னர் அரசியல் அமைப்புகளும் சமூக அமைப்புகளும் அந்த நாளின் நினைவை அந்த நகரத்திற்குரியதாக மாற்றிவிடும் ஆபத்துண்டு.

விலகிச் செல்லும் அந்தரங்கம்

படம்
திருமணம் நடக்கும் அந்த மண்டபம்  புதிய ஒன்று அல்ல. ஆனால் அந்த மண்டபத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்துகொள்ள வருவது இதுதான் முதல் முறை. இப்போது மண்டபம் இருக்கும் இடத்தில் முன்பு ஒரு திரை அரங்கம் இருந்தது. அந்தத்திரை அரங்கிற்குப் பல முறை வந்திருக்கிறேன். நூறு நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படங்கள் சிலவற்றை அந்த திரை அரங்கில் பார்த்திருக்கிறேன். இப்போது எல்லா வசதிகளும் கொண்ட திருமண மண்டபமும் வணிக வளாகமும் என அந்த இடம் மாறி விட்டது.

விடுப்புக்கொள்கை (VACATION POLICY ) மறுபரிசீலனைகள்

படம்
அவ்வப்போது அறிவிப்புகள் மழைக்காக  அவசர அறிவிப்பைச் செய்யும் உரிமையைக் கல்வி நிறுவனங்களின் - பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி அறிவிப்புச் செய்கிறார்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள். இந்த முடிவு வரவேற்கத்தக்க முடிவு. அவசரகாலத்திற்கென அளிக்கப்பட்ட விடுப்புகள் திரும்பவும் மாற்றுப்பணிகள் மூலம் நிரப்பப்பட வேண்டியன என்பதால் அந்தந்த நிறுவனத்தலைவர்களே விடுப்பு அறிவிப்பது தேவையான ஒன்று.

இந்தியாவும் கனடாவும் உரசிக்கொள்வது ஏன்?

படம்
காலிஸ்தான் போராளிகளை முன்வைத்துக் கனடாவோடு இந்திய உறவு சிக்கலாகி வருகிறது. இந்திய உளவுத்துறை ரா( RAW)வின் செயல்பாடுகள் மீது கனடாவுக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டதின் தொடர்ச்சியில் ஏற்பட்ட உரசல், ஒன்றிய அரசின் மீது நம்பிக்கை இன்மையாக மாறியிருக்கிறது. தூதர்களின் வெளியேற்றம் வரை நடந்துவிட்டன.

ஜெயந்தி: மாமனிதர்களின் அடையாளங்கள்

படம்
ஜெயந்தி என்பது வேறொன்றும் இல்லை. பிறந்த நாள் தான். பிறந்த நாளை, பிறந்த நாள் என்று கொண்டாடுவதற்குப் பதிலாக ஜெயந்தி என்று கொண்டாடுவது வெறும் பெயரளவு மாற்றம் அல்ல. ஜெயந்தி என்ற சமஸ்கிருதச் சொல்லால் பிறந்த நாள் அழைக்கப்படும்போது சமஸ்கிருதமயமாக்கப் பட்டதாக மாறி மேல்நிலையாக்கமும் பெறுகிறது. அதனால் சமஸ்கிருதக் கருத்தியலும் சேர்ந்து கொள்கிறது . பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெறும் மனிதர்களுக்கானது. ஜெயந்தி மனிதர்களுக்கானதல்ல; மகான்களுக்கானது என்பது அதன் உள்கிடை.

குடியும் குடி அடிமைத்தனமும்

மதுப்பழக்கம் தமிழ் வாழ்வின் பகுதியாக மாறிப் பல ஆண்டுகள் ஓடி விட்டன. பல குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைக் குலைத்துப் போட்டிருக்கிறது. என்னுடைய உறவினர்கள் மரணங்களின் பகுதியாகவே குடிப்பழக்கமும் குடி அடிமைத்தனமும் இருந்துள்ளன. ஆனாலும் மரணத்தை முன்வைத்துக் குடியெதிர்ப்புப் பரப்புரை செய்வதை நான் விரும்புவவில்லை. அந்தரங்க வெளி எது? பொதுவெளி எது? என்ற குழப்பம் பொதுப்புத்தியில் இருப்பது தவிர்க்கமுடியாதது. இவ்விரண்டும் உருவாகும் புள்ளிகளும் கோடுகளும் பற்றிய புரிதல் இருக்குமென நம்பும் எழுத்தாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்கூட இந்தச் சிக்கல் இருக்கிறது.

காலத்தை வெல்லுதல்

”என்னை மனிதர்களில் ஒருவராக நினைக்கவில்லை; இந்த உலகத்திற்கு எதையோ செய்வதற்காகப் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவன் என்பதாக உணர்கிறேன். நான் எல்லாரையும்போல உயிரியல் பிறப்பாக வந்தவனில்லை என்று தோன்றுகிறது” என்றெல்லாம் சொல்வது காலத்தை வெல்லும் முயற்சிகளில் ஒன்றுதானோ? அதிகாரத்தை அடைவதற்கான அனைத்துப் பாதைகளையும் பரிசீலித்து, அவற்றின் வழியாக அதன் உச்சாணிக்கொம்பை அடைந்து அதிகாரத்தை ரசித்தும் ருசித்தும் பார்த்துவிட்ட ஒருவர் இப்படிச் சொல்லும்போது கேட்கும் பெரும்பான்மையோர் அதனை ஏற்க மறுத்து, இதுவும் அதிகாரத்தை நோக்கிய - அடைவதற்கான இன்னொரு முயற்சி எனச்சொல்கிறார்கள். ஆனால் அதிகாரத்தை விரும்பாதவர்களும் அதனை ருசித்துப்பார்த்து விலகியவர்களும்கூடத் தங்களின் பிறப்பு, இருப்பு, வாழ்க்கை முறை போன்றன எல்லோரையும் போன்றதல்ல எனக்காட்டும் முயற்சியைச் செய்திருக்கிறார்கள். செய்துகொண்டே இருக்கிறார்கள். துறவிகள், அமைப்புகளுக்குள் சிக்காதவர்கள், தன்னுயிரையும் உடலையும் பொதுநன்மைக்காகத் தரும் விருப்பம் கொண்ட தியாகிகள் எனக் கொண்டாடப்படுபவர்களைச் சாதாரணப் பிறப்புகளாக நினைக்காமல், மகான் எனவும், மகாத்மா, தலைவர் எனவும் கொண்ட...

ஊர்கள் - பயணங்கள் -நினைவுகள் -அனுபவங்கள்

படம்
எனது பள்ளிக்கூட நினைவுகள் எப்போதும் பயணங்களோடு சேர்ந்தே மனதிற்குள் அலையடிக்கக் கூடியன. பள்ளிக்கூடமே போகாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த நான் பள்ளிக்கூடம் போகத்தொடங்கியதற்கு மறுக்கப்பட்ட ஒரு பயணமே காரணமே. ராமேஸ்வரத்திற்கான பயணம் என்பது எனது குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் ஒன்று. மூன்று அல்லது நான்கு வருசங்களுக்கு ஒரு முறை இறந்து போன உறவினர்களின் அஸ்திகளோடு கிளம்பும் அந்தக் கூட்டம், அஸ்திகளை கரைத்து விட்டுப் பிறந்த குழந்தைகளுக்கு இரண்டாவது மொட்டையையும் அங்கே போட்டு விட்டு வருவது தான் ராமேஸ்வரம் பயணத்தின் முக்கிய நோக்கம். அஸ்திகளைக் கொண்டு போய் ராமேஸ்வரம் கடலில் கலக்க வேண்டும் என்பதை மாற்ற முடியாத சடங்காக வைத்திருந்தார்கள். அந்தப் பழக்கம் இப்போது குறைந்து விட்டது என்றாலும் முழுமையாக இல்லை என்று சொல்ல முடியாது. வைஷ்ணவ நம்பிக்கையின்படி ராமேஸ்வரம் கடல் தான் அஸ்திக் கலக்கலுக்கு உரிய இடம் என்பதில் எங்கள் உறவினர்களுக்கு அசையாத நம்பிக்கை உண்டு. நான்கு குடும்பத்தைச் சேர்ந்த இருபது பேருக்கு மேல் கிளம்பிய அந்தக் கும்பலில் என்னைச் சேர்த்துக் கொள்ள மறுத்துப் பேசிய தாத்தா ஒருவர் பேசிய பேச்சு என் நினைவுக்...

உணவும் பண்பாட்டு அடையாளங்களும்.

படம்
அதிகாலை நாலு மணிக்கு ரயிலேறி தமிழ் நாட்டின் தென்கோடியிலிருந்து வடகோடி ஊரான ஜோலார்ப் பேட்டை போய்ச் சேர்ந்த போது இரவு ஏழு மணி. மறுநாள் நடக்க இருக்கும் விழா/கருத்தரங்கம் திருப்பத்தூரில் இந்தியப் பழங்குடிப் பண்பாடும் திராவிடப் பண்பாடும்   [ தூய நெஞ்சக் கல்லூரியில் 2007, டிசம்பர் 18,19] என்றொரு கருத்தரங்கம்.   

எந்த உலகத்தில் வாழ்கின்றோம்

படம்
தினசரிப் பேச்சில் பழமொழிகளின் பயன்பாடு அர்த்ததோடு இருப்பதும் உண்டு. அர்த்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி மிகக்கூடுதலான அர்த்தத்தோடு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் பழமொழி என்றே இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் பழமொழியாக இது இருக்கிறது.

இடையீடுகள்

  நவீன நாடகங்களும் குடும்பங்களும் இம்மாதக் காலச்சுவடுவில் தலையங்கத்தைத் தொடர்ந்து ”பிம்பம்- அதிகாரம் -அத்துமீறல்” எனத் தலைப்பிட்டு அரவிந்தன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ’இதுதான் உங்கள் நுண்ணுணர்வா?’எனக்கேள்வியோடு கூடிய கட்டுரை ஒன்றைச் செந்தூரன் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ”அதிர்ச்சி- குழப்பம்- அவமானம்” என்ற தலைப்பில் மணல் மகுடி நாடகக்குழுவில் இணைந்து செயல்பட்டவர்களின் வாக்குமூலங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் நாடகப்பட்டறைகளை நடத்தியும் நாடகங்களை இயக்கியும் செயல்பட்டுவரும் பார்த்திபராஜா மீதொரு பாலியல் குற்றச்சாட்டுக் கூறும் பெயரிலிக் கடிதமும் உள்ளன. இவற்றில் விவரிக்கப்பட்டுள்ளவை இரண்டு மையங்களை விவாதப்படுத்தியுள்ளன. முதல் மையம், இப்பிரச்சினையை வெளிக்கொண்டு வரக்காரணமாக இருந்த எழுத்தாளர் கோணங்கியின் ஒரு பால் உறவு விருப்பம் தொடர்பானவை. தொகுக்கப்பட்டுள்ள வாக்குமூலங்கள் ஒவ்வொன்றும் அவரது செயல்பாடுகளும் அணுகுமுறைகளும் பாலியல் விருப்பம் சார்ந்ததாக - அவர்களுக்கு விருப்பமில்லாத நிலையில் அவர் தங்கள் உடலை அதற்காக அணுகினார் என்பதாகக் குற்றம் சாட்டுகின்றன. இவ்வகைக் க...

உக்ரைன்: போர்களும் போர்களின் நிமித்தங்களும்

எது முந்தியது....கோழியா, முட்டையா?  கதைதான். நடப்பது  உக்ரைன் - ரஷ்யப் போரா? ரஷ்யா - உக்ரைன் போரா? ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை முன்வைத்து மாற்றிச் சொல்லலாம்.

ஆதியிலே வார்த்தைகள் இருந்தன; அர்த்தங்கள் அவ்வப்போது உருவாகின்றன

படம்
இப்போது விவாதிக்கப்படும் ஹிஜாப்பின் ஊடாக நினைவுக்கு வந்தது அந்த நாள்.

சில நிகழ்வுகள்: சில குறிப்புகள்

படம்
 நாட்குறிப்புகள் போலவும் இல்லாமல் கட்டுரைகள் போலவும் இல்லாமல் அவ்வப்போது முகநூலில் எழுதப்படும் குறிப்புகளைப் பாதுகாத்து வைக்கவேண்டியுள்ளது.  பிந்திய தேவைக்காக.

கலைச்சொல்லாக்கம் - சில குறிப்புகள்

முன்குறிப்பு: இலக்கணத்தைக் கற்றவனாக இருந்தாலும் அதனைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவனாக இல்லை. இலக்கணத்தைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவர்கள் அதனை நிகழ்காலப் பயன்பாட்டோடு கற்பிக்கத் தவறினார்கள் என்பதும் உண்மை. பயன்பாட்டு மொழியியல் பற்றிப்பேசிய மொழியியல்காரர்கள் பயன்பாட்டு இலக்கணம் பற்றிப் பேசாமல் ஒதுங்கினார்கள் என்பது தமிழ்க்கல்விக்குள் நடந்த சோகம்

ஆக்கப்பெயர்கள்: சில குறிப்புகள்

சொற்களும் வகைகளும். ஒரு மொழியை வளப்படுத்துவதற்கு மொழிபெயர்ப்புகள் தேவை. இச்சொல்லுக்கே மொழிபெயர்ப்பு, மொழிமாற்றம், மொழி ஆக்கம் எனச் சில சொற்கள் வழக்கில் இருக்கின்றன. மொழிபெயர்ப்பை விவாதிக்க வேண்டுமானால் திரும்பவும் இலக்கணத்திற்குள் செல்ல வேண்டும். சொற்களின் வகைகள் பற்றி விவாதிக்கவேண்டும். மொழிமாற்றம் செய்ய என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு இலக்கணம் சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ளவேண்டும். அதுமட்டுமே போதாது என்ற நிலையில் கூடுதலாகச் சிந்திக்கலாம் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம், சொற்களை வகைப்படுத்தும் பகுதியில் தமிழில் உள்ள சொற்களை இயற்சொல், வடசொல், திசைச்சொல், திரிசொல் என நான்காகவும், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காகவும் வெவ்வேறு இடங்களில் பேசுகிறது. முதல் நான்கில் இயற்சொல்லையும் திரிசொல்லையும் மாற்ற வேண்டிய தேவையில்லை. அவை தமிழின் வேர்களைக் கொண்டவை. ஆனால் வடசொல்லும் திசைச்சொல்லும் தமிழ் வேர்கள் கொண்டவை அல்ல. அதனால் அதனை ஏற்காமல் தமிழ்ப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம். அந்தக் காலத்தில் தமிழுக்குள் வந்தவை வடசொற்கள் மட்டுமே. சம்ஸ்க்ருத வேர்கள் கொண்ட வடசொற்...

இந்தியச்சாலைகளில் இருவேறு வாகனங்கள்

படம்
”மிதிவண்டியைப் பயன்படுத்தும் கலாசாரத்தை முன்னெடுக்கப் பெரியதொரு விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்” என நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய வெங்கய்யா நாயுடு அவர்கள் பேசியதாக வானொலியின் காலைச் செய்தியில் முதல் செய்தியாக வாசிக்கப்படுகிறது.

நான் தீவிரவாதி; நீ பயங்கரவாதி

படம்
ஆட்சியில் இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களின் அரசை விமரிசிப்பவர்களைச் சுட்டும் சொல்லாகத் தீவிரவாதி என்பதைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதி என்ற சுட்டுச் சொல் வெறுக்கத்தக்க சொல்லாக ஆக்கப்படுவதின் மூலம் அச்சொல்லால் சுட்டப்படுபவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள் என்பதோடு இல்லாமல் ஆக்கப்பட வேண்டியவர்கள் என்பது உணர்த்தப் படுகிறது. ஆனால் தீவிரவாதம் என்பது வெறும் செயல் மட்டுமல்ல. அது ஒரு கருத்தியல். தான் நம்பும் ஒரு கருத்தின் மீது வாழ்க்கை முறை மீது - சமூக அமைப்பின் மீது கொண்ட ஈடுபாட்டின் அளவைக்குறிக்கும் ஓர் அளவைச்  சொல்.