இடுகைகள்

திசைகளின் வாசல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசுக்கல்லூரிகளில் தமிழ்க்கல்வி

படம்
தமிழ்நாட்டரசு இனி, அரசுக் கல்லூரிகளைத் தொடங்காது என்றொரு முடிவை 1990- களில் எடுத்தார் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா. அந்த முடிவைக் கொஞ்சம் மாற்றி, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதனதன் எல்லைக்குள் உறுப்புக் கல்லூரிகளைத் தொடங்கி நடத்தலாம் என்ற அறிவிப்பைச் செய்தார் பின்னர் வந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி. அதன்படி ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதன் கிராமப்புறங்களில் உறுப்புக் கல்லூரிகளைத் தொடங்கின. 

குழிப்பணியாரங்களும் கொத்துப் பரோட்டாவும்

படம்
அதிகாலை நாலு மணிக்கு ரயிலேறி தமிழ் நாட்டின் தென்கோடி யிலிருந்து வடகோடி ஊரான ஜோலார்ப் பேட்டை போய்ச் சேர்ந்த போது இரவு ஏழு மணி. மறுநாள் நடக்க இருக்கும் விழா திருப்பத்தூரில். ஜோலார்ப் பேட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்ல முக்கால் மணி நேரம் ஆகலாம் என்று அழைத்திருந்த கல்லூரி நிர்வாகம் தகவல் சொல்லியிருந்தது. கல்லூரி வாசலில் நான் நுழைந்த போது தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களைக் கொண்டு வர மாணவிகளும் மாணவர்களும் முயன்று கொண்டிருந்தனர். பழங்குடியினரின் கலை, பண்பாடு, வாழ்வு என்பதான அந்த விழாவில் பழங்குடியினரின் பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டுவர மலைப்பிரதேசத்து வேட்டைக் கருவிகளும் கலயங்களும் கிழங்கு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பண்பாட்டு அடையாளங்களைப் பற்றிய விவாதங்களில் இப்போதெல்லாம் உணவுப் பொருட்களும் முக்கிய இடம் பெற்று வருகின்றன. ஒருபுறம் உலகமயமாதலை ஆதரிக்கும் அதே நேரத்தில் சொந்த அடையாளத்தை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற தவிப்பும் இருக்கிறது. இந்தியா- கொரியா நாடுகளுக்கிடையேயான பண்பாட்டு உறவுகள் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டபோது தென் கொரியர்களின் தவிப்பை நேரிடையாக அறி

எந்த உலகத்தில் வாழ்கின்றோம்

படம்
தினசரிப் பேச்சில் பழமொழிகளின் பயன்பாடு அர்த்ததோடு இருப்பதும் உண்டு. அர்த்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி மிகக் கூடுதலான அர்த்தத்தோடு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் பழமொழி என்றே இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் பழமொழியாக இது இருக்கிறது.

இடையீடுகள்

  நவீன நாடகங்களும் குடும்பங்களும் இம்மாதக் காலச்சுவடுவில் தலையங்கத்தைத் தொடர்ந்து ”பிம்பம்- அதிகாரம் -அத்துமீறல்” எனத் தலைப்பிட்டு அரவிந்தன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ’இதுதான் உங்கள் நுண்ணுணர்வா?’எனக்கேள்வியோடு கூடிய கட்டுரை ஒன்றைச் செந்தூரன் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ”அதிர்ச்சி- குழப்பம்- அவமானம்” என்ற தலைப்பில் மணல் மகுடி நாடகக்குழுவில் இணைந்து செயல்பட்டவர்களின் வாக்குமூலங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் நாடகப்பட்டறைகளை நடத்தியும் நாடகங்களை இயக்கியும் செயல்பட்டுவரும் பார்த்திபராஜா மீதொரு பாலியல் குற்றச்சாட்டுக் கூறும் பெயரிலிக் கடிதமும் உள்ளன. இவற்றில் விவரிக்கப்பட்டுள்ளவை இரண்டு மையங்களை விவாதப்படுத்தியுள்ளன. முதல் மையம், இப்பிரச்சினையை வெளிக்கொண்டு வரக்காரணமாக இருந்த எழுத்தாளர் கோணங்கியின் ஒரு பால் உறவு விருப்பம் தொடர்பானவை. தொகுக்கப்பட்டுள்ள வாக்குமூலங்கள் ஒவ்வொன்றும் அவரது செயல்பாடுகளும் அணுகுமுறைகளும் பாலியல் விருப்பம் சார்ந்ததாக - அவர்களுக்கு விருப்பமில்லாத நிலையில் அவர் தங்கள் உடலை அதற்காக அணுகினார் என்பதாகக் குற்றம் சாட்டுகின்றன. இவ்வகைக் குற்ற

உக்ரைன்: போர்களும் போர்களின் நிமித்தங்களும்

எது முந்தியது....கோழியா, முட்டையா?  கதைதான். நடப்பது  உக்ரைன் - ரஷ்யப் போரா? ரஷ்யா - உக்ரைன் போரா? ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை முன்வைத்து மாற்றிச் சொல்லலாம்.

ஆதியிலே வார்த்தைகள் இருந்தன; அர்த்தங்கள் அவ்வப்போது உருவாகின்றன

படம்
இப்போது விவாதிக்கப்படும் ஹிஜாப்பின் ஊடாக நினைவுக்கு வந்தது அந்த நாள்.

சில நிகழ்வுகள்: சில குறிப்புகள்

படம்
 நாட்குறிப்புகள் போலவும் இல்லாமல் கட்டுரைகள் போலவும் இல்லாமல் அவ்வப்போது முகநூலில் எழுதப்படும் குறிப்புகளைப் பாதுகாத்து வைக்கவேண்டியுள்ளது.  பிந்திய தேவைக்காக.

ஜெயந்தி: மாமனிதர்களின் அடையாளங்கள்

படம்
ஜெயந்தி என்பது வேறொன்றும் இல்லை. பிறந்த நாள் தான். பிறந்த நாளை, பிறந்த நாள் என்று கொண்டாடுவதற்குப் பதிலாக ஜெயந்தி என்று கொண்டாடுவது வெறும் பெயரளவு மாற்றம் அல்ல. ஜெயந்தி என்ற சமஸ்கிருதச் சொல்லால் பிறந்த நாள் அழைக்கப்படும்போது சமஸ்கிருதமயமாக்கப் பட்டதாக மாறி மேல்நிலையாக்கமும் பெறுகிறது. அதனால் சமஸ்கிருதக் கருத்தியலும் சேர்ந்து கொள்கிறது . பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெறும் மனிதர்களுக்கானது. ஜெயந்தி மனிதர்களுக்கானதல்ல; மகான்களுக்கானது என்பது அதன் உள்கிடை. 

கலைச்சொல்லாக்கம் - சில குறிப்புகள்

முன்குறிப்பு: இலக்கணத்தைக் கற்றவனாக இருந்தாலும் அதனைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவனாக இல்லை. இலக்கணத்தைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவர்கள் அதனை நிகழ்காலப் பயன்பாட்டோடு கற்பிக்கத் தவறினார்கள் என்பதும் உண்மை. பயன்பாட்டு மொழியியல் பற்றிப்பேசிய மொழியியல்காரர்கள் பயன்பாட்டு இலக்கணம் பற்றிப் பேசாமல் ஒதுங்கினார்கள் என்பது தமிழ்க்கல்விக்குள் நடந்த சோகம்

ஆக்கப்பெயர்கள்: சில குறிப்புகள்

சொற்களும் வகைகளும். ஒரு மொழியை வளப்படுத்துவதற்கு மொழிபெயர்ப்புகள் தேவை. இச்சொல்லுக்கே மொழிபெயர்ப்பு, மொழிமாற்றம், மொழி ஆக்கம் எனச் சில சொற்கள் வழக்கில் இருக்கின்றன. மொழிபெயர்ப்பை விவாதிக்க வேண்டுமானால் திரும்பவும் இலக்கணத்திற்குள் செல்ல வேண்டும். சொற்களின் வகைகள் பற்றி விவாதிக்கவேண்டும். மொழிமாற்றம் செய்ய என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு இலக்கணம் சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ளவேண்டும். அதுமட்டுமே போதாது என்ற நிலையில் கூடுதலாகச் சிந்திக்கலாம் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம், சொற்களை வகைப்படுத்தும் பகுதியில் தமிழில் உள்ள சொற்களை இயற்சொல், வடசொல், திசைச்சொல், திரிசொல் என நான்காகவும், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காகவும் வெவ்வேறு இடங்களில் பேசுகிறது. முதல் நான்கில் இயற்சொல்லையும் திரிசொல்லையும் மாற்ற வேண்டிய தேவையில்லை. அவை தமிழின் வேர்களைக் கொண்டவை. ஆனால் வடசொல்லும் திசைச்சொல்லும் தமிழ் வேர்கள் கொண்டவை அல்ல. அதனால் அதனை ஏற்காமல் தமிழ்ப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம். அந்தக் காலத்தில் தமிழுக்குள் வந்தவை வடசொற்கள் மட்டுமே. சம்ஸ்க்ருத வேர்கள் கொண்ட வடசொற்

இந்தியச்சாலைகளில் இருவேறு வாகனங்கள்

படம்
”மிதிவண்டியைப் பயன்படுத்தும் கலாசாரத்தை முன்னெடுக்கப் பெரியதொரு விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்” என நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய வெங்கய்யா நாயுடு அவர்கள் பேசியதாக வானொலியின் காலைச் செய்தியில் முதல் செய்தியாக வாசிக்கப்படுகிறது.

நான் தீவிரவாதி; நீ பயங்கரவாதி

படம்
ஆட்சியில் இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களின் அரசை விமரிசிப்பவர்களைச் சுட்டும் சொல்லாகத் தீவிரவாதி என்பதைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதி என்ற சுட்டுச் சொல் வெறுக்கத்தக்க சொல்லாக ஆக்கப்படுவதின் மூலம் அச்சொல்லால் சுட்டப்படுபவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள் என்பதோடு இல்லாமல் ஆக்கப்பட வேண்டியவர்கள் என்பது உணர்த்தப் படுகிறது. ஆனால் தீவிரவாதம் என்பது வெறும் செயல் மட்டுமல்ல. அது ஒரு கருத்தியல். தான் நம்பும் ஒரு கருத்தின் மீது வாழ்க்கை முறை மீது - சமூக அமைப்பின் மீது கொண்ட ஈடுபாட்டின் அளவைக்குறிக்கும் ஓர் அளவைச்  சொல். 

ஊர்கள் - பயணங்கள் -நினைவுகள் -அனுபவங்கள்

படம்
ஒருவாரமாக வீட்டில் அடைந்து கிடக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு பாதையில் நடக்கும் காலை மாலை நடை வீட்டு மாடியின் செவ்வகத்திற்குள் வட்டமடிக்கின்றன. அரியகுளம் கண்மாயில் குளிக்கச் சென்ற வெள்ளைக் கொக்குகள் திரும்பிப் போகின்றன.. கூந்தங்குளத்திற்கும் வேய்ந்தான்குளத்திற்கும் நயினார்குளத்திற்கும் கோடைக்ளியலுக்கு வரும் ஆப்பிரிக்கக் கருங்கழுத்துக் கழுகுகளும் ருஷ்யாவின் செம்பழுப்பு நாரைகளும் மாலைச் சூரியனை நோக்கிப் பறக்கின்றன. மார்த்தாண்டம் வரை போய்வர நினைத்த அந்தச் சின்னப்பயணமும் தட்டிப் போய்விட்டது. 

காலம் இப்போ பெரண்டு போச்சு

படம்
போன வருடத்தை விட இந்த வருட வெயில் கூடுதல் - ஒவ்வொரு வருடக் கத்திரி வெயிலின் போதும் இந்த வாக்கியத்தை யாராவது சொல்லக் கேட்டிருப்போம்.. இந்த வருடம் அந்தப் பேச்சையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு, நேற்று பாதிக்கப்பட்டவர்கள் இவ்வளவு. இறந்தவர்கள் இவ்வளவு என்ற புள்ளிவிவரக் கணக்காக மாற்றி விட்டது கரோனோ.  கோடையும் போய் விட்டது. ஆடிக்காத்து பறபறவென்று அடித்து முடியப்போகுது. இளவேனிலில் வந்த கரோனா முதுவேனில் தாண்டி கார்காலத்தையும் கடந்துவிட்டது. அடுத்த கோடை வரை நீளும் என்றே சொல்கிறார்கள்.

நிகழ்வுகள் - நபர்கள்- நீதிகள்

மதுவும் மரணங்களும் மதுப்பழக்கம் தமிழ் வாழ்வின் பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது. நாற்பது நாள் இடைவெளிக்குப் பிறகு நீக்கப்பட்ட தடையின் வேகம், காட்டாற்று வெள்ளமாய்ப் பாய்ந்தது. குடியின் விளைவுகள் - தனிமனிதர்கள் மற்றும் சமூகநிலையில் ஏற்படும் விளைவுகள் பற்றி அறியாமல் நடப்பதல்ல குடிப்பழக்கம். அறிந்தே நடக்கும் ஒன்றை நிறுத்துவதற்குச் சட்டங்கள் எவ்வளவுதூரம் உதவும் என்பது கேள்விக்குறி. அதேபோல் பாவங்கள் எனச் சுட்டும் சமயநீதிகளும் வெற்றிபெற்றதாகப் புள்ளிவிவரங்கள் இல்லை. நீதிநூல்களும் சமயநம்பிக்கைகளும் பன்னெடுங்காலமாகப் பட்டியலிடப்பட்ட குற்றங்களை மனிதர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள். மீறலில் இருக்கும் கொண்டாட்ட மனநிலையோடு குற்றங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். இன்று திரும்பவும் மதுக்கூட விற்பனைகள் நிறுத்தப்படலாம். நீதிமன்றத்தின் இந்த இடையீடு மிகக் குறுகியகாலத் தடைதான். திரும்பவும் அணை திறக்கும்போது பெரும் சுழிப்புடன் ஓடும்

சமயங்கள் -நிகழ்வுகள் -பின்னணிகள்

படம்
உலக அளவில் திரள் மக்களைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பொதுப்புத்தி என்றொரு சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர். தனக்கெனத் தனி அடையாளம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும் வாழும் இடம், சீதோஷ்ணம், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்து பொதுக்குணங்கள் உருவாகி விடுவதைத் தவிர்க்க முடியாது என்பதுவும் அவர்கள் வாதம். இப்பொதுப் புத்தி வெளிப்படையாகப் புலப்படாதவை என்றாலும் அதுவே ரசனை, முடிவெடுத்தல், தெரிவு செய்தல், பின்பற்றுதல் போன்ற அகவாழ்க்கை முடிவுகளையும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக நடைமுறை போன்ற புறவாழ்க்கை அமைவுகளையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்பதாகவும் ஆய்வுமுடிவுகள் சொல்கின்றன. பொதுப்புத்தி உருவாக்கத்தில் சமய நம்பிக்கைகள் செயல்படும் அடிப்படைகளை வைத்து எழுதப்பெற்ற இச்சிறுகட்டுரைகளை வாசித்துப்பாருங்கள்

சிநேகா- லட்சியவாதத்தின் குறியீடு

சிநேகாவின் பெயருக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு ஒரு காலகட்டத்து லட்சியவாத அடையாளத்தின் வரலாறு. அடக்குமுறையை எதிர்த்த ஒரு பெண்ணின் வரலாறு. அவசர நிலையை இந்திராகாந்தி அறிமுகம் செய்தபோது பதின்ம வயதுகளைக் கடந்து இருபதுகளில் நுழையக் காத்திருந்தவர்களின் லட்சியக் கனவின் ஒரு தெறிப்பு அந்தப் பெயர்.எனது 17 வயதில் அந்தப் பெயர் எனக்கு அறிமுகம். இந்திராவின் அவசரநிலைக் கால அறிவிப்புக் (1975, ஜூன் 25 -1977மார்ச்,21) கெதிராகக் கவிதையெழுதி வாசிக்கத் திட்டமிட்டவர்கள் என்னைப் போன்ற பதின்ம வயதுக்காரர்கள். அதே நேரம் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டவர்களில் ஒருத்தி எனக் கைதாகிச் சிறைக்குப் போன பெண்ணின் பெயராக சிநேகலதா ரெட்டி என்ற பெயர் அறிமுகமானது. 

நூல்கள் - இதழ்கள் -மொழி

மாயைகள் : ஒன்று இன்னொன்றாய் நிலவெளிப்பயணம் விளையாட்டை எழுதும் மொழி விளையாட்டு நன்றி கல்யாண்ஜிக்கு பாராட்டுகள் ஜோதிக்கு மாயைகள் : ஒன்று இன்னொன்றாய்

எட்டுக்கால் பூச்சியும் இரண்டு கால் மனிதனும்.

அன்று புதன் கிழமை. அதனால் முந்திய நாளும் வேளை நாள் தான். ஒருவேளை இன்று திங்கட்கிழமையாக இருந்தால் எங்களை ஏற்றிச் செல்லும் வாகனத்திற்கு இரண்டு நாள் ஒய்வு இருந்திருக்கும். இந்த இரண்டு நாளில் எட்டுக்கால் பூச்சிக்கு இது சாத்தியம் தானா? என்ற கேள்விக்குள் என் மனம் இறங்கியிருக்காது. அதனால் எனது கவனம் அதன் மேல் படாமல் கூடப் போயிருக்கும்.

நமது கிராமங்களும் நமது நகரங்களும்

படம்
கடந்த ஒரு நுற்றாண்டுத் தமிழ்க் கலை, இலக்கியங்கள்- குறிப்பாக சினிமாக்கள், ‘நகரங்கள்‘ என்பதனைக் கிராமங்களின் எதிர்வுகளாகவே சித்திரித்து முடித்துள்ளன.