நினைவழியா நாட்கள்
கரூர் என்னும் அந்த நகரம் சந்தித்த துயரச் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இறந்தவர்களுக்கு 16 ஆம் நாளுக்குள்ளும் செய்யப்படும் கருமாதியும் முப்பதாம் நாள் சடங்குகளும் அந்தந்தக் குடும்பங்களின் நினைவுக்குரிய நாட்கள். ஆனால் ஓராண்டுக்குப் பின்னர் அரசியல் அமைப்புகளும் சமூக அமைப்புகளும் அந்த நாளின் நினைவை அந்த நகரத்திற்குரியதாக மாற்றிவிடும் ஆபத்துண்டு.
ஏனென்றால் தமிழ்நாட்டின் சில நகரங்களுக்குச் சில நாட்கள் நினைவழியா நாட்களாக மாறிவிட்டன. அந்நாட்கள் நினைக்கப்பட வேண்டியனதான். ஆனால் அந்நாட்கள் நிகழ்காலத்தின் மீது அச்சத்தைப் பரவவிடும் தினங்களாக மாறிவிடுவதைத் தடுத்தாக வேண்டும். நினைவழியா நாட்களுக்காக நாம் காத்திருப்பதைக் கைவிடவேண்டும். அதற்கான முயற்சி எடுக்கவேண்டிய அரசு அமைப்புகளும் ஆளுங்கட்சிகளும் நினைவுகளைத் தூண்டும் வினைகளைச் செய்யக்கூடாது.
நல்லனவற்றுக்காகவும் அல்லனவற்றுக்காகவும் சில நாட்களை நினைவில் நிறுத்திவைக்கிறோம். பெரும்பாலும் நினைவுநாட்கள் மரணங்களோடு தொடர்புடையனவாக இருக்கின்றன. பிறந்த நாட்களோ கொண்டாட்டங்களோடு தொடர்புடையனவாக இருக்கின்றன. தனிநபர்களின் பிறந்த நாளும் நினைவுநாளும் தனியொரு குடும்பத்திற்குரியனவாக இருப்பது வரை சிக்கல் இல்லை. அந்தத்தனிநபர்கள் சமூக, சமய, அரசியல் தலைவர்களாக இருக்கும்போது அந்த நாட்கல் பொதுவெளிக்குரியதாக மாறிவிடுகின்றன. அப்படி மாற்றும்போது துயரமோ, கொண்டாட்டமோ அந்த நாட்கள் மனிதர்களின் உணர்ச்சிகளைத் திரட்டி வெளிப்படுத்தும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம்.
கொண்டாடப்படும் நினைவு நாட்கள் அந்தந்த நகரங்களுக்கு அச்சமூட்டும் நாட்களாக இருக்கின்றன. கடந்த கால் நூற்றாண்டுக்காலத்தில் நான் வாழ்ந்த மூன்று நகரங்களிலும் -நெல்லை, கோவை, மதுரை - இதனை உணர்ந்துள்ளேன். இப்போதும் அந்த நகரங்கள் அந்நினைவுகளின் பதற்றத்தால் தவிக்கவே செய்கின்றன.
1999 ஜீலை 23 இல் நடந்த மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊர்வலமும், தடுக்கப்பட்ட முறையும் அதனால் ஏற்பட்ட 17 பேரின் மரணங்களும் திருநெல்வேலிக்கு ஒரு நினைவு நாளைக் கொண்டு வந்து சேர்த்தது. அரசு ஏற்படுத்திய விசாரணை ஆணைய அறிக்கைக்குப் பின் அந்த நாளில் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தாமிரபரணிக் கரையில் நடக்கும் அஞ்சலிக் கூட்டங்களுக்கான ஊர்வலங்கள் நெல்லையையும் பாளையங் கோட்டையையும் பிரித்துக்காட்டும். நெல்லையின் கிழக்குப்பகுதியான பாளையங்கோட்டையிலிருந்து மேற்கே இருக்கும் பல்கலைக்கழக வளாகத்திற்குச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாக மாறியது. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வீட்டுப்பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களும் வணிக நிறுவனத்து ஆட்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆரம்ப ஆண்டுகளின் வேகமும் பதற்றமும் குறைந்திருக்கிறது என்றாலும் நின்றுபோகவில்லை. நினைவஞ்சலிகள் தொடரும் வரை பதற்றமும் தொடரவே செய்யும்.
கோவையில் 1997 நவம்பர் 29 இல் உருவாக்கப்பட்ட இந்து -முஸ்லீம் கலவரத்தின் வாசனையைக் கடந்த ஆண்டும் அதற்கு முந்திய ஆண்டும் கோவையில் இருந்தபோது நுகர்ந்திருக்கிறேன். அந்த நாட்களில் உக்கடம் போன்ற பகுதிகளில் இருக்கும் அமைதியின்மையால் போக்குவரத்து மாற்றங்களும் காவல்துறையினரின் குவிப்பும் உருவாக்கும் பதற்றம் குறைந்தபாடில்லை. முதல் ஆண்டு சந்தித்த வாகனத்தடைகளால் அடுத்த ஆண்டு போகும் எண்ணமே உண்டாகவில்லை.
அக்டோபர். 30 - இன்று மதுரை, கோரிப்பாளையம் வரை சென்று வர வேண்டிய வேலை இருந்தது. ஆனால் நேற்று தரப்பட்ட போக்குவரத்து மாற்றங்களும் எச்சரிக்கைகளும் சேர்ந்து அந்தத்திட்டத்தைக் கைவிடத் தூண்டிவிட்டன. என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து மதுரை -திருநகர் பள்ளிக்குச் செல்லும் பள்ளி வாகனம் இன்று ஓட்டப்படவில்லை. பள்ளி மாணவர்கள் வீட்டில் தங்கும்போது அதன் காரணங்களைத் தேடுகிறார்கள்.
அவர்களுக்கு அக்டோபர் 30. தேவர் ஜெயந்தி விவரிக்கப்படுகிறது. ஒரு பிறந்த நாள் ஏன் அச்சமூட்டும் நாளாக இருக்கிறது என்ற காரணத்தை அவர்களுக்கு விளக்க முடியாது. அந்த நாளின் நினைவை மதுரை நகர் மட்டுமல்ல; மதுரையைச் சுற்றியும் அதற்குத் தெற்கே திருநெல்வேலி வரையிலும் இருக்கக்கூடிய பல கிராமங்களிலும் எழுப்பப்படும் ஓசைகளும் பாடல்களும் அலையலையாய் எழும்பி அச்சமூட்டுகின்றன.
அழிக்கப்பட வேண்டிய நினைவுகள்
கொண்டாடப்படும் நினைவு நாட்கள் அந்தந்த நகரங்களுக்கு அச்சமூட்டும் நாட்களாக இருக்கின்றன. கடந்த கால் நூற்றாண்டுக்காலத்தில் நான் வாழ்ந்த மூன்று நகரங்களிலும் -நெல்லை, கோவை, மதுரை - இதனை உணர்ந்துள்ளேன். இப்போதும் அந்த நகரங்கள் அந்நினைவுகளின் பதற்றத்தால் தவிக்கவே செய்கின்றன.
1999 ஜீலை 23 இல் நடந்த மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊர்வலமும், தடுக்கப்பட்ட முறையும் அதனால் ஏற்பட்ட 17 பேரின் மரணங்களும் திருநெல்வேலிக்கு ஒரு நினைவு நாளைக் கொண்டு வந்து சேர்த்தது. அரசு ஏற்படுத்திய விசாரணை ஆணைய அறிக்கைக்குப் பின் அந்த நாளில் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தாமிரபரணிக் கரையில் நடக்கும் அஞ்சலிக் கூட்டங்களுக்கான ஊர்வலங்கள் நெல்லையையும் பாளையங் கோட்டையையும் பிரித்துக்காட்டும். நெல்லையின் கிழக்குப்பகுதியான பாளையங்கோட்டையிலிருந்து மேற்கே இருக்கும் பல்கலைக்கழக வளாகத்திற்குச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாக மாறியது. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வீட்டுப்பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களும் வணிக நிறுவனத்து ஆட்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆரம்ப ஆண்டுகளின் வேகமும் பதற்றமும் குறைந்திருக்கிறது என்றாலும் நின்றுபோகவில்லை. நினைவஞ்சலிகள் தொடரும் வரை பதற்றமும் தொடரவே செய்யும்.
கோவையில் 1997 நவம்பர் 29 இல் உருவாக்கப்பட்ட இந்து -முஸ்லீம் கலவரத்தின் வாசனையைக் கடந்த ஆண்டும் அதற்கு முந்திய ஆண்டும் கோவையில் இருந்தபோது நுகர்ந்திருக்கிறேன். அந்த நாட்களில் உக்கடம் போன்ற பகுதிகளில் இருக்கும் அமைதியின்மையால் போக்குவரத்து மாற்றங்களும் காவல்துறையினரின் குவிப்பும் உருவாக்கும் பதற்றம் குறைந்தபாடில்லை. முதல் ஆண்டு சந்தித்த வாகனத்தடைகளால் அடுத்த ஆண்டு போகும் எண்ணமே உண்டாகவில்லை.
அக்டோபர். 30 - இன்று மதுரை, கோரிப்பாளையம் வரை சென்று வர வேண்டிய வேலை இருந்தது. ஆனால் நேற்று தரப்பட்ட போக்குவரத்து மாற்றங்களும் எச்சரிக்கைகளும் சேர்ந்து அந்தத்திட்டத்தைக் கைவிடத் தூண்டிவிட்டன. என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து மதுரை -திருநகர் பள்ளிக்குச் செல்லும் பள்ளி வாகனம் இன்று ஓட்டப்படவில்லை. பள்ளி மாணவர்கள் வீட்டில் தங்கும்போது அதன் காரணங்களைத் தேடுகிறார்கள்.
அவர்களுக்கு அக்டோபர் 30. தேவர் ஜெயந்தி விவரிக்கப்படுகிறது. ஒரு பிறந்த நாள் ஏன் அச்சமூட்டும் நாளாக இருக்கிறது என்ற காரணத்தை அவர்களுக்கு விளக்க முடியாது. அந்த நாளின் நினைவை மதுரை நகர் மட்டுமல்ல; மதுரையைச் சுற்றியும் அதற்குத் தெற்கே திருநெல்வேலி வரையிலும் இருக்கக்கூடிய பல கிராமங்களிலும் எழுப்பப்படும் ஓசைகளும் பாடல்களும் அலையலையாய் எழும்பி அச்சமூட்டுகின்றன.
அக்டோபர் 6 கரூருக்கு அடுத்த ஆண்டு அப்படியொரு நினைவு நாளாக மாறும் வாய்ப்பிருக்கிருக்கிறது. 41 பேரின் மரணங்களுக்கான நிகழ்வை நமது தொலைக்காட்சிகள் நேரடி நிகழ்வாக ஒளிபரப்பு செய்தன. அந்த இரவு தூக்கம் தொலைந்த இரவான எனப்பதிவு செய்தேன். நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். கூட்டங்கள் பற்றியும் கூட்டங்களில் பங்கேற்பது பற்றியும் விழிப்புணர்வுப் பாடங்கள் தேவைப்படுகின்றன. வெகுமக்கள் அரசியலில் திரளும் கூட்டத்தின் இயல்பு பற்றி கற்பிக்கும் திரைப்படங்கள் எடுக்கப்படவேண்டும். காட்சிப்படுத்தப் படவேண்டும். தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும்.
*****
.jpeg)

கருத்துகள்