இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய நாடகத்தை உருவாக்குதலின் ஒரு பரிமாணம்

படம்
மாதய்யா தி காப்ளர் நவம்பர் 17,18,19 தேதிகளில் சென்னை அரசுஅருங்காட்சியகத்திற்குள் இருக்கும் ம்யூசியம் அரங்கில் நிகழ்த்தப்பெறும் என்றதகவலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் ப்ரசன்னா ராமஸ்வாமி.அவரது இயக்கத்தில் மேடையேறிய பெரும்பாலான நாடகங்களைப் பார்த்தவன் என்றவகையில் இந்த நாடகத்தைப் பார்க்கவேண்டிய நாள்:18-11-2017  எனக்குறித்துக் கொண்டேன். நான் போன இரண்டாவது நாள் ம்யூசியம் அரங்கு பார்வையாளர்களால்நிரம்பியது. முந்திய நாளும் நிரம்பியது என்றே அறிந்தேன். மூன்றாவது நாளும்நிரம்பியிருக்கும். நான் போன அன்று நாடகத்தைக் கன்னடத்தில் எழுதிய நாடகஆசிரியர் எச். எஸ். சிவப்பிரகாஷும் நாடகம் பார்க்க வந்திருந்தார் என்பது கூடுதல்சிறப்பு. 

அறம்:அரசதிகாரத்தின் குற்றமனம்

படம்
அண்மையில் திரைக்கு வந்து வணிக வெற்றியடைந்துள்ள அறம் என்ற சினிமா கவனிக்கத்தக்க சினிமாவாக ஆகியிருக்கிறது. வணிகரீதியான வெற்றிக்காக மட்டுமல்லாமல் பொறுப்புள்ள சினிமாவின் அடையாளமாகவும் ஆகியிருக்கிறது. அச்சினிமா கவனம் பெற்றதால், அதன் இயக்குநர் கோபிநயினார் முதல் படத்திலேயே கவனம் பெற்ற - வெற்றிப்பட இயக்குநராக ஆகியிருக்கிறார்.

பணமதிப்பிழப்புக்காலக் குறிப்புகள்

படம்
9/11/2016 நெல்லை அதிவிரைவு ரயிலில் பயணம். தொலைக்காட்சி பார்க்கவில்லை. தேசத்தின் வேகமான மாற்றம் எனக்குத் தெரியாது. நேற்றும் முந்தியநாளும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உரையாற்றினேன். ரூ. 8722/- கொடுத்தார்கள். கைவசம் வைத்திருந்த நான்கு ரூ.500/- தாள்களோடு மொத்தம் 10722/_ இருந்தது நேற்று மாலை. 21 ஐந்நூறு ரூபாய்த் தாள்களும் இரண்டு நூறு ரூபாயும் சில்லரையும்.. ரூ.90/- இரவு உணவுக்குக்காலி. ஒரு 500 ரூபாளைத் தாளைக் கொடுத்து மாற்றியிருக்கலாம். மாற்றவில்லை. நள்ளிரவில் நடக்க இருந்த மாற்றத்தை உள்ளுணர்வு சொல்லவில்லை. ரயிலைவிட்டு இறங்கி ரயிலடியிலிருந்து ஆட்டோவில் செல்லமுடியாது. தரவேண்டிய பணம் 170/-  இப்போது இருப்பது 132/-தான். நடைதான் ஒரே வழி. பிறகு பேருந்து. பின்னொரு நடை. ஒரு மணிநேரம் கூடுதலாக ஆகும் வீடு போய்ச்சேர. தேசநலனுக்காகச் சகித்துக் கொள்ளவேண்டும். முதல் சகிப்பு. பாதிப்பில்லை.  கையெழுத்துப்போட்டுச் சம்பளம் வாங்குவதால் வரியும் கட்டியிருக்கிறேன்.  அதனால் பாதிப்பில்லை. சிக்கல்கள் உள்ளன. தொடர்ந்து சில நாட்களுக்குச் சிக்கல்கள் தான். அடுத்தடுத்தும் வரும். கடந்துதான் ஆகவேண்டும். சகிக்க வேண்டும். சகித்

தேடிப்படிக்கவேண்டிய நூல்கள்

படம்
கல்விப்புல வாசிப்பிற்கும் கல்விப்புலத்திற்கு வெளியே இருப்பவர்களின் வாசிப்புக்குமிடையே முதன்மையான வேறுபாடுகள் உண்டு. மொழி, இலக்கியத்துறைகளில் இருக்கும் வேறுபாட்டை என்னால் விரிவாகச் சொல்லமுடியும். ஆனால் இந்த வேறுபாடு எல்லாத்துறைகளிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை.வாசிக்கவேண்டிய நூல்களின் ஒரு பட்டியல் இங்கே

சித்திரிப்பின் பின்னணிகள் ஹரியின் படங்களை முன் வைத்து

சில வருடங்களுக்கு முன்பு ’காதல்கோட்டை’ என்ற படம் வெற்றி பெற்றதால் படத்தின் பெயரில் ’காதல்’ இடம்பெற வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகம் தவித்த தவிப்பு சொல்லி மாளாது. கடைசியில் ’காதல்’ என்றே ஒரு படத்தை எடுத்துவிட்டு ஓய்ந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் தயாரிப்பாளா்களும் இயக்குநா்களும் எப்பொழுதும் மந்தைத் தனத்தின் மீது பற்றுக் கொண்டவா்கள். இரண்டெழுத்துப் படம் வெற்றி பெற்றால் அடுத்து வரும் படங்களுக்கெல்லாம் இரண்டெழுத்தில் பெயா் வைப்பார்கள். ’சாமி’ யில் தொடங்கிய இந்தப் போக்கு ’மஜா’, ’ஆறு’, ’ஆதி’ என்று நீண்டுகொண்டிருக்கிறது. ஊரின் பெயரால் எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெற்றால் அடுத்து வரும் படங்கள் எல்லாம் ஊா்களின் பெயா்களில் வைக்கப்படும். ’மதுர’, ’திருப்பாச்சி’, ’சிவகாசி’ என்று அதுவும் நீண்டுகொண்டுதான் இருக்கிறது.

தமிழ் சினிமா: காட்டப்படுவதும் சொல்லப்படுவதும்

ஷங்கரின் “பாய்ஸ்“ திரைப்படம் திரைக்கு வந்த வேகத்தில் வேகமாகத் திரும்பிவிட்டது அவருடைய முந்தைய படங்களைப் போல வணிக வெற்றியைப் பெறவில்லை. அப்படித் தோற்றுப் போனதில் பின்னணியில் அப்படம் குறித்து எழுந்த எதிர்ப்புகளுக்கு எந்த அளவு பங்கு இருந்தது என்பது பற்றி யாரும் உறுதியாகக் கூறிவிட முடியாது. ஆனால் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன என்பது உண்மை.

வீடற்றவர்களின் கதைகள்

படம்
மனிதர்களின் அகவுலகம் என்பது எப்போதும் புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட உலகமாகவே இருக்கிறது . ஒருவரின் நேரடி அனுபவம் என்பதுகூட ஒருவிதத்தில் புனைவுதான் . நேரடி அனுபவம்போல எழுதப்பெற்ற புனைவுகள் நம்பத்தகுந்த புனைவுகளாக இருக்கின்றன என்று சொல்லலாமேயொழிய , அவையெல்லாம் உண்மை என்ற சொல் தரும் பொருளைத் தந்துவிடுவதில்லை . எல்லாவகை எழுத்துகளுமே , நம்மைத் தவிர்த்து இன்னொருவரைப் பார்க்கும்போதும் , அவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போதும் , நம்மிடத்தில் நிறுத்திப்பார்த்து அவராக நம்மை நினைத்துக்கொள்வதில் விரிகிறது புனைவு .

நேரடியாகப் பேச நினைக்கும் பெண்குரல்

படம்
கவிதையின் மொழிதல் ஒருவழிப்பாதையாக இருக்கும்போது உணர்ச்சி வெளிப்பாடாக மாறி விடும். கவிதைக்குள் உருவாக்கப்படும் சொல்லி ( Narrator) தன்னை - தனது தன்னிலையை- உருவாக்குவதற்காகக் குறைவான சொற்களைப் பயன்படுத்திவிட்டுக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களை (Receivers) -முறையீட்டைக் கவனிக்கவேண்டியவர்களைக் குறித்துப் பலவிதமான சொற்களை உண்டாக்குவது வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். உண்டாக்கப்பட்ட சொற்களின் வழியாக அவர்களுக்கும் சொல்லிக்குமிடையே இருக்கும் உறவுநிலைகளை - உடன்பாட்டு நிலையாகவும் எதிர்மறை நிலையாகவும் பேசுவதின் வழியாகக் கவிதையின் இயக்கத்தை அல்லது செயல்பாட்டை உருவாக்குவது என்பது கவிதையியலின் தொடக்கநிலைக் கூறு.

தற்காலிகத்தைக் கொண்டாடுதல்

படம்
இதுதான் கவிதையின் வடிவம்; நாடகத்தின் கட்டமைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும்; சிறுகதையின் தொடக்கமும் முடிவும் இப்படித்தான் இருக்கவேண்டுமென வலியுறுத்தும் நபர்களைப் பின்னுக்குத்தள்ளி எழுத்தும் பனுவல்களும் கடந்துபோய்க்கொண்டே இருக்கின்றன. கலை இலக்கியங்களில் மட்டுமல்ல; எல்லாவகையான செயல்பாடுகளிலும் இயங்குநிலையிலும் வடிவச்சீர்மையை வலியுறுத்தும் போக்கு முடிந்துவிட்டது. நெகிழ்ச்சியும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவதாகவும், மாறாமலேயே தோன்றுவதாகவும் இருக்கும் வடிவங்களே கொண்டாடப்படும் வடிவங்களாக நம்முன்னே அலைகின்றன.

எழுதப்படுவது நிகழ்காலம் அல்ல; கடந்த காலம்

படம்
கடந்த காலத்தை எழுதிக்காட்டுதல் என்பதைக் கடந்த காலத்திற்குள் மறுபயணம் செய்வது என அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். நிகழ்த்தும் காலத்தில் வாழும் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களை நோக்கிப் பேசும் நாடகக்கலைக்கு மட்டுமே உரியதாக நான் நினைக்கவில்லை. உலக மொழிகள் எல்லாவற்றிலும் பொது வடிவங்களாகத் திகழும் கதை, நாடகம், கவிதை, என்ற மூன்றோடும் தொடர்புடையதாகவே நினைக்கிறேன். இந்தப் பேச்சை அரங்கக் கலையை முன்வைத்து இலக்கியக்கலையைப் பற்றிய பேச்சாகவே நினைக்கிறேன். நிகழ்த்துகிறேன்

நான் வாழும் நகரம்:

பழைமையையும், மாற்றங்களையும் திருநெல்வேலியாகவும் பாளையங்கோட்டையாகவும் பிரித்துக்கோடு போடுவது தாமிரபரணி. ஒருவிதத்தில் வற்றாத நதி. எப்போதும் நீர் நகர்ந்து கொண்டேயிருக்கும்.

கீழடி: வரலாறும் போராட்டமும்

படம்
கீழடித் தொல்லியல் ஆய்வில் தொய்வு ஏற்படுத்தப்படுகிறது என்ற ஐயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஐயத்தை உறுதியாக நம்பியொரு போராட்டத்தை முன்னெடுக்கிறது இடதுசாரிக் கட்சியின் பண்பாட்டு அமைப்பான த.மு.எ.க.சங்கம். போராட்டத்தின் வழிமுறையாக “ பிடிமண் எடுப்பு” என்ற மரபுசார் சடங்கொன்றைக் கைக்கொண்டிருக்கிறது. கைக்கொண்ட சடங்கின் அடிப்படைத்தன்மையும், அதில் இணையக்கூடிய வெகுமக்களின் மனநிலையும் எத்தகையன என்பதை இப்போது சரியாகக் கணிக்கமுடியாது.

நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள்

 2017, ஜூன் , 19 அன்று பெங்களூருவில் நான் பார்த்த கன்னட நாடகம் “ வர்த்தமானதெ சரிதே ”. அந்நாடகத்திற்கு நான் அழைக்கப்பெற்ற சிறப்புப்பார்வையாளன் . நான் மட்டுமல்ல ; கர்நாடகாவிலிருந்து இருவர் , தெலங்கானாவிலிருந்து , டெல்லியிலிருந்து தலா ஒருவர் என இன்னும் ஐந்து சிறப்பு அழைப்பாளர்கள் இருந்தனர் ; பொதுப்பார்வையாளர்களும் இருந்தனர் . அனைவரையும் இழுத்துவைத்துப் பார்த்து ரசிக்கச் செய்த நாடக நிகழ்வு அது .

தொடரும் கதைவெளி மனிதர்கள்

படம்
இப்படியான சிறுகதைத் தொகுதியை ஒரே மூச்சில் வாசித்துவிட முடியாது. ஒருவர் எழுதிய 14 கதைகளென்றால் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டே போகலாம். இரண்டு அல்லது மூன்றுநாளில் முடிந்துபோகும். அகநாழிகை பதிப்பக வெளியீடாக, ‘பொன்.வாசுதேவன்’ தேர்வுசெய்து தொகுத்துள்ள “விளிம்புக்கு அப்பால்” சிறுகதைத் தொகுதியில் 14 பேரின் 14 கதைகள் இருக்கின்றன.

அகத்திலிருந்து புறம்நோக்கிய நகர்வு

படம்
ஔவையும் கபிலனும் செவ்வியல் கவிதைகள் எழுதியவர்களுள் முக்கியமானவர்கள். அவர்கள் தொடங்கிவைத்த தமிழ்க்கவிதை மரபை இன்றும் தொடர்வது யாரெனத்தேடியது மனம். செவ்வியல் மரபாக நாம் நினைத்துக்கொள்ளும் - கட்டமைத்துக்கொள்ளும் - தொடக்கத்தின் முதன்மை ஆளுமைகளாக யாரையெல்லாம் சொல்லலாம் என்ற தேடலைச் செய்தது மனம். முதல் பெயராக வந்தவள் கவி ஔவை.

கமலென்னும் கட்டியங்காரன்

படம்
  முன்குறிப்புகளோடு ஒவ்வொரு பாத்திரத்தையும் காட்டி, அவர்களின் முன்னடையாளங்களோடு தொடர்புடைய ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமெனக் கலக்கியெடுத்து உருவாக்கப்பட்ட ஆரம்பம் புதுநிகழ்ச்சிக்கான ஆரம்பம் என்ற அளவில்தான் ஈர்த்தது. அந்தத் தொடக்கம், அடுத்தடுத்த வாரங்களில் நடந்த சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியாக நல்திற நாடகத்தின் முடிச்சாக(Conflict) மாறியது. அம்முடிச்சுக்குப்பின்னால் பிரிந்துநின்ற அணிச்சேர்க்கை ஒருகுடும்பத்திற்குள் பிரிந்துந ிற்கும் பங்காளிகள் அல்லது உறவுகள் என்பதைத்தாண்டியது.

உதைவாங்கிக் கிளம்பிய வண்டி:

படம்
தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்குத் தரப்பட வேண்டிய கல்வி குறித்த பெருநிகழ்வு (ஜூலை 20-22) நடந்து முடிந்திருக்கிறது. அந்நிகழ்வில் பங்கேற்ற கல்வியாளர்களும் வல்லுநர்களும் பங்கேற்பாளர்களும் பலவிதமாக இருந்தார்கள். பலவிதமாகப் பேசினார்கள். பலவிதமான முன்மொழிவுகள் நிகழ்ந்தன. பெரும்பாலும் தமிழ்ப் பாடத்திட்டங்களை மாற்றம் செய்வதற்காக ஏற்பாடுசெய்யப்பட்ட அமர்வுகளில் இரண்டு நாட்களிலும் அமர்ந்திருந்தேன்; கேட்டுக்கொண்டிருந்தேன்; பலருடன் உரையாடினேன். அந்த அமர்வுகள் அண்ணா நினைவுநூற்றாண்டு நூலக அரங்குகளில் நடந்தன.

என்னவாக ஆகப்போகிறாய் பெண்ணே

‘நீ என்னவாக ஆகப் போகிறாய்.? ’  இந்தக் கேள்வி மனிதர்கள் ஒவ்வொருவரும் சந்திக்க நேர்ந்த கேள்விதான். பள்ளிப் பருவம் தொடங்கி, பல தடவை இந்தக் கேள்வியைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் மாணாக்கர்களுக்குக் கிடைக்கின்றன. வகுப்புக்கு வரும் ஆசிரியர்கள் மட்டும் அல்லாது, அவர்களது பள்ளிக்கும், கல்லூரிக்கும் வரும் விருந்தினர்கள், பேச்சாளர்கள், தலைவர்கள் என ஒவ்வொருவரும் இத்தகைய கேள்விகளை ஒவ்வொரு மாணாக்க ரிடத்திலும் எழுப்பத்தான் செய்கிறார்கள். அவர்களின் வருகையும் பேச்சும் நேரடியாக இந்த வினாவை எழுப்பாமல் போயிருக்கலாம். அவர்களின் வருகையின் சாரம் உணர்த்தும் உண்மை அது தான்.

மயிலாடிய கானகங்கள்

கடந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் இப்படி வெயில் அடிக்கவில்லை. ஆகஸ்டு கடைசி வாரத்திலேயே வெயில் குறைந்து ஆடிக் காற்று பரபரவென வீசியது. இந்த ஆண்டு ஆடிக் காற்றின் வேகம் ஒரு சில நாட்கள் தான் இருந்தது. திரும்பவும் வெயில் பங்குனி உத்திரத்தின் போது அடிப்பது போல அடித்தது.

கி.ரா.வின் புதிய வரவு: பெருங்கதை

படம்
முன்பெல்லாம் நண்பர்களின் எழுத்துகள் கையெழுத்தில் வாசிக்கக்கிடைக்கும் . நீலவண்ண எழுத்துகள் , கறுப்பு வண்ண எழுத்துகள் அதிகம் என்றாலும் பச்சை , சிவப்பு , ஊதா வண்ணங்களிலெல்லாம் எழுதும் பேனாக்கள் வந்தபோது அவற்றில் எழுதிப் பார்க்கும் எழுத்தாளர்கள் உண்டு . எழுத்தாளர்களின் கையெழுத்திலேயே வாசிக்கக் கிடைக்கும் பிரதிகள் இப்போது குறைந்துவிட்டன . அப்படிக்கிடைத்தாலும் டைப் செய்யப்பட்டு கணினி வழியாகவே வந்துசேர்கின்றன . அப்படிப் படித்த எழுத்துகளையும் பிறகு அச்சில் வாசிக்கும் ஆசை விலகுவதில்லை .

இலக்கிய ஆய்வுகளும் பிறதுறை அறிவும்: சில குறிப்புகள்

தமிழ் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகளாகக் கல்வி நிறுவனங்களுக்குள் மாறிவிட்டன. புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, தமிழியல் துறையாக அமைக்கப்பட வேண்டும் என வல்லுநர்குழுக்கள்பரிந்துரைக்கின்றன. பல்கலைக்கழகத்திற்கு வெளியே செயல்படும் தமிழ் சார்ந்த உயராய்வு நிறுவனங்களும் தமிழியல் ஆய்வு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன. கல்வித்துறை சாராத விமரிசனங்களும் ‘ரசனை அனுபவத்திலிருந்து நுகர்வு திணிப்பு’பற்றிப் பேசுவனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. கல்விப்புல ஆய்வுகளும், சாராத ஆய்வுகளும் ஏற்படுத்திக்கொண்டுள்ள இம்மாற்றங்கள் வெறும் எண்ணளவு மாற்றங்கள் (Quantitative changes) மட்டும் அல்ல; பண்பு மாற்றங்களும் (Qualitative changes) கூட. தமிழில் நடந்துள்ள இந்த மாற்றம் இந்திய மொழிகள் பலவற்றிற்கும் பொருந்தக்கூடியது.

தொல்காப்பியத் திணைக்கோட்பாடும் அகநெடும்பாடல்களும்

முன்னுரை:தொல்காப்பியப் பொருளதிகாரத்தை மையப்படுத்திச் சிந்திக்கும்போது அதன் முதன்மை நோக்கம்   பாவியல் அல்லது கவிதையியல் என்பதற்கான வரையறைகளை உருவாக்குவது எனக் கருதத்தோன்றுகிறது . அக்கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகின்றது . கருத்தரங்கின் பொதுப்பொருள் தொல்காப்பிய மரபும் செவ்வியல் ( சங்க இலக்கியங்களும் ) என்பதனை மனங்கொண்டு , தொல்காப்பியர் கூறும் திணைப்பொருள் மரபை நவீன இலக்கியக் கோட்பாடான நிலவியல் பண்பாட்டியலோடு தொடர்புபடுத்தி அமைகிறது இக்கட்டுரை . தொல்காப்பியம் மூன்று பொருட்களைக் கவிதையின் உள்ளடக்கமாகக் கூறியுள்ளது இக்கட்டுரை கருப்பொருளின் இடம் பற்றிய நிலையை விவாதிக்கிறது . கட்டுரை உருவாக்கிக் கொண்ட கருத்தியல் நிலைபாட்டைப் பொருத்திப் பார்க்கும் தரவுகளாகத் தமிழ்ச் செவ்வியல் கவிதைகளில் அகநெடும்பாடல்கள் இக்கட்டுரைக்கான முதன்மைத் தரவுகளாக அமைகின்றன .

நவீன நாடகங்கள்: மேடையேற்றப் பிரச்சினைகள்

படம்
உள்ளடக்கம் தான்ஆதாரமானது. பெரும் தடைகளை எதிர்த்து அங்கீகாரம் பெற்று விட்டனவும்,பெறப் போராடிக் கொண்டிருப்பனவும் மட்டுமே நவீன என்பதில் அடங்கும்; பழைமைக்கு நவீனத்தில் இடமே இல்லை என்ற வரையறையில் கூட நவீன உள்ளடக்கம் பற்றி மட்டுமே கூறியிருப்பதாக நினைக்கிறேன். அப்படியானால் ‘நவீன வடிவம், நவீன மேடையேற்ற ரூபம் என்பவை என்ன..?              நீங்கள் நினைப்பது சரிதான். அந்த வரையறை உள்ளடக்கம் பற்றியதுதான். ஓரளவு மற்றவைகளுக்கும்   பொருந்தக்கூடியதே.

அரங்கியல் அறிவோம்: நாடகத்தின் வடிவம்

நாடகத்தின் வடிவம் பற்றிப் பேசப்போனால் அதன் அடிப்படையான குணாம்சம் என்ன என்ற கேள்வி எழும். நாடகத்தின் அடிப்படையான குணாம்சம் முரண்( conflict) தானே.             முரண்தான் அடிப்படையான குணாம்சம். வெவ்வேறு தளங்களில் - வெளிப்படையாகவோ, வெளித்தெரியாமலோ- முரண் அமைகின்றபொழுது நாடகம் வடிவம் கொள்கிறது.

வெள்ளெருக்குப் பூத்த நிலம்

படம்
இறப்பும் பிறப்பும் நம்கையில் இல்லை. பிறப்பைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்ய அறிவியல் முயன்று வெற்றியும் பெற்றுவருகிறது. குழந்தை பிறக்கவேண்டிய நேரத்தைக் கூடத் திட்டமிட்டுத்தருகிறது நவீன மருத்துவம். ஆனால் இறப்பு ? மரணங்களைத் திட்டமிடவோ , தள்ளிப்போடவோ முயன்ற முயற்சி களுக்கெல்லாம் கிடைப்பன தோல்விதான்.

தமிழ்ச்சிந்தனை மரபைத்தேடும் பயணத்தில்

படம்
பிரிட்டானிய இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் பலவும் பின்காலனிய இந்தியாவில் விவாதப்பொருளாக மாறியுள்ளன. இந்தியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியோடு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் என்ற குற்றச்சாட்டையும் சந்தித்துவருகின்றன.

மா.அரங்கநாதனை நினைத்துக்கொண்ட போது

படம்
பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் (1989 -97) அடிக்கடி சென்னை போவதுண்டு. போகும்போது திரும்பத் திரும்பப் போன இடம் மா.அரங்கநாதனின் ‘முன்றில்’ புத்தகக் கடை. நாடகம் பார்ப்பது, இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது என்பதோடு முன்றிலுக்குப் போய் வருவதும் முதன்மையான வேலையாக இருந்தது. சென்னை போவதற்கு முன்பே முன்றிலின் வாசகனாக இருந்த நான் மா. அரங்கநாதனை நேரில் பார்த்தது தி.ரங்கநாதன் தெருவிலிருந்த முன்றில் அலுவலகத்தில்தான். முன்றில் போய் அரட்டை அடிப்பது போலவே ரங்கநாதன் தெருவில் நடப்பதும் சுவாரசியமானது. சித்திரைத் திருவிழாவில் எதிர் சேவையில் நடக்கும் மனநிலையைத் தரும் நடை.

ஆய்வுத்தலைப்பைத் தேடியொரு பயணம்- சில குறிப்புகள்.

முன்னுரை: பல்கலைக்கழகப்பட்டங்களுக்கான கற்கையாக ஆவதற்கு முன்பே இயல், இசை, நாடகம் என மூன்றாக அறியப்பட்டது. ஐரோப்பியக் கற்கைமுறை அறிமுகமாகிப் பல்கலைக்கழகக் கற்கைமுறைகள் வளர்ந்த நிலையில் முத்தமிழ் என்ற தமிழ்ப்பரப்பு கலைப்புலத்தையும் அறிவியல் புலத்தையும் தனதாக்கத் தொடங்கி ஐந்தமிழ் என அறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ் ஆய்வு, தமிழியல் ஆய்வாக மாறியது. பல்கலைக்கழகக் கற்கைகளில் பட்டப்படிப்பு, மேல்பட்டப்படிப்பு தாண்டி ஆய்வுப்பட்டங்களுக்கும் தமிழ் உரியதானது. வகுப்பறைப்படிப்பாக இல்லாமல் முனைவர் பட்டத்திற்கும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கும் ஆய்வுப் பொருண்மைகளும் ஆய்வுத் தலைப்புகளும் தேவைப்பட்டன. இத்தேவைகளின் பெருக்கம் தமிழாய்வு என்னும் மரத்தின் இருபெரும் கிளைகளாக இருந்த மொழி, இலக்கியம் என்ற இரண்டையும் எப்படி விரிவாக்குவது என்ற கேள்விக்குள் நகர்த்தின. இந்நகர்தலின் பின்னணியிலும் மேற்கத்தியக் கற்கைமுறைகளும் சிந்தனைப்பள்ளிகளுமே செயல்பட்டன. மொழியைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் அவை தந்த புதிய கருத்தியல்கள், சார்புபாடங்களையும், துணைப்பாடங்களையும் உருவாக்கித் தந்தன. புதிதுபுதிதாகக் கண்டறியப்ப

பொதுப்போக்கிலிருந்து விலகுதல்

படம்
முனைவர் பட்டத்தை ஒருவர் எப்படி நினைக்கிறார் என்பதிலிருந்தே அவர் செய்யப்போகும் ஆய்வும் அமையும் . ஆய்வுப்பட்டத்தை இன்று பலரும் வேலைவாய்ப்புக்கான அடிப்படைத்தகுதியாகக் கருதுகின்றனர் . அந்த அங்கீகாரம் கையிலிருந்தால் , அதை வைத்து எப்படியாவது ஒரு கல்லூரியிலோ , பல்கலைக்கழகத்திலோ வேலை வாங்கிவிடலாம் என்பது அவர்களது கணிப்பு . அந்தக் கணிப்பு பிழையானதன்று . அப்படிச் செய்பவர்கள் பெரும்பாலும் போலச்செய்தல் முறையில் ஆய்வேடுகளைத் தருகிறார்கள் . மதிப்பீட்டாளர்கள் குறைந்த அளவுத் தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்கும் மனநிலையில் ஆய்வேட்டை மதிப்பிட்டு முனைவர் பட்டம் வழங்கப் பரிந்துரை செய்கின்றனர் .