இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டர்ட்டி பிக்சர்ஸ் :ஆண்நோக்குப் பார்வையின் இன்னொரு வடிவம்

படம்
சில்க் ஸ்மிதா, தமிழ்ச் சினிமாவில் பிம்பமாக அலைந்து கொண்டிருந்தபோது அவளது உடல் ஒரு திறந்த புத்தகம் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. சில்க்கின் தற்கொலை அவளது வாழ்க்கையை திறந்த புத்தகமாக மாற்றி விட்டது. திறந்த புத்தகங்களை யார் யார் எப்படி வாசிக்கிறார்கள் என்பது அவரவர் வாசிப்பு முறை சார்ந்தது மட்டுமல்ல; மன அமைப்பு சார்ந்ததும் கூட. தமிழ்ச் சினிமாவைப் பார்த்தும் ரசித்தும் விமரிசித்தும் விளக்கியும் வளர்ந்து கொண்டிருக்கும் நான் ஆகக் கூடிய முறை பார்த்த ஒரு சினிமாப் பாடல் காட்சி எதுவெனக் கேட்டால் சிலுக் நடித்த பாடல் காட்சி என்றே சொல்வேன்

தொலைந்து போகுமோ வெள்ளைக் கிறிஸ்துமஸ்.

படம்
டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டொரு நாள் பூஜ்யத்திற்கும் கீழே வெப்பநிலை போன போது துறைத்தலைவர் டேனுதா ஸ்டாய்ஸ்டிக் சொன்ன எச்சரிக்கைக் குறிப்புகள் நினைவுக்கு வந்தன. ஒவ்வொரு நாளும் அறைக்குள் வந்து தான் அவரது கையுறையைக் கழற்றுவார். . வெளியில் நடக்கும்போது கையுறைகளைக் கழற்ற வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே மேலும் சில குறிப்புகளைச் சொன்னார். உறையைக் கழற்றி மாட்டிக் கொள்வதற்குள் கைகள் விறைத்து விடும் வாய்ப்புண்டு என்று சொன்னவருக்கு இந்தியாவின் தட்பவெப்பம் பற்றியும் தெரியும். டெல்லிக்கும் திருநெல்வேலிக்கும் இடைவெளி தூரத்தில் மட்டுமல்ல தட்பவெப்பத்திலும் உண்டு என ஒருமுறை சொன்னார். டிசம்பர் மாதம் டெல்லியிலும் மேமாதம் குமரியிலும் இருந்திருக்கிறார். இந்தியாவின் வேறுபாட்டை அறிந்து கொள்ள அது ஒன்றே போதும் எனச் சொன்னதின் அர்த்தங்கள் புரிந்து பலமாகச் சிரித்தோம். 

சிங்கத்திடமிருந்து தலைவரை யாராவது காப்பாற்றுங்கள்

படம்
தமிழ்நாட்டில் பேராசிரியராக இருந்து தமிழைக் கற்றுத் தந்தேன். ஆனால் வார்சாவில் வருகைதரு பேராசிரியராக வந்து தமிழைச் சொல்லிக் கொடுக்கிறேன். ஆம்,”கற்றுத் தருதல்” ”சொல்லித் தருதல்” என்ற இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கவனமாகவே சொல்கிறேன். வார்சாவில் எனது வேலை போலந்து மாணவ, மாணவிகளுக்குத் தமிழ் பேசக் கற்றுக் கொடுப்பதுதான். மாணவ, மாணவிகள் என்று சொல்வதற்குப் பதிலாக மாணவிகள் என்றே குறிப்பிடலாம். ஒன்பது பேரில் ஒருவர் மட்டுமே மாணவர்; எட்டுப்பேர் மாணவிகள்.  

இவனே இல்லையென்றால் யார்தான் மாகவி?

படம்
கவி பாரதி எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பலவிதப் பதிப்புகளில் கிடைக்கின்றன. கவிதைகள் அனைத்தும் இணையம் வழியாக வாசிக்கக் கிடைப்பதும், அவனது கவிதை சார்ந்த கருத்துக்கள் நேரடி மொழிபெயர்ப்பாகவும், சாராம்சம் சார்ந்த சுருக்கமாகவும் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. அதன் காரணமாக அவனது படைப்புகளும், படைப்பு வழியே முன் வைக்கப்பட்ட கருத்துக்களும் உலகம் தழுவிய இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமாயுள்ளன. விரிவான விமரிசனங்களும் வெளி வந்துள்ளன. ஆனால் அவனது கவிதைகளில் அவனைப் பற்றியும், அவனது கவிதைகளின் இலக்குகள் பற்றியும் எழுதி வைத்துள்ள குறிப்புகள் விரிவான விவாதங்களுக்கு உட்படுத்தப் படவில்லை. இன்னும் சொல்வதானால் கவி பாரதி என்னும் தனிமனிதத் தன்னிலையை அடையாளப்படுத்தும் அப்பிரதிகள் பொருட்படுத்தத் தக்க பிரதிகளாகக் கூடக் கருதப்படவில்லை. அதற்கு மாறாக அவன் மகாகவி அல்ல என்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.   கலைக்கோட்பாடு: ஓரு படைப்பாளி அல்லது ஓர் இலக்கிய இயக்கம் பின்பற்றும் படைப் பியக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே கலைக்கோட்பாடு அல்லது இலக்கியக் கோட்பாடு என்ற சொல் உள்ளது. படைப்பியக்கம் என்பது படைப்பு சார்ந்த ந

நூறில் ஒன்று: அரசியல் பேசத் தொடங்கிய ஊடகங்கள்

உயிர்மையின் 100 வது இதழுக்காக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அனுப்பிய பதில். அச்சில் எப்படி வந்திருக்கிறது என்பதை நான் பார்க்கவில்லை. என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி: தமிழ்   ஊடகங்கள்   அரசியல் மயமானதன்   விளைவுகள்   என்ன?

கடந்த காலத்திற்குள் பதுங்கி இருக்கிறது இந்தியவியல்

படம்
பல்கலைக்கழக நுழைவு வாயில் போலந்து வந்த மூன்றாவது நாளில் நான் பணியாற்றும் இந்தியவியல் துறையின் தலைவர் பேரா . டேனுடா ஸ்டாசிக் கொடுத்த அழைப்பிதழ் தமிழ்நாட்டு நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தது. பாண்டிச் சேரி பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பொறுப்பேற்று நண்பர் குணசேகரன் தலைமையில் ஏற்பாடு செய்த அரங்கியலாளர் சந்திப்பு தொடங்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடத்திய தலித் எழுத்தாளர் சொற்பொழிவு வரிசை, செவ்வியல் கவிதைகளோடு நவீன கவிகளை உறவாட வைத்த பத்துநாள் பயிலரங்கு வரை ஒவ்வொன்றும் வந்து போய்க் கொண்டே இருந்தன.

பேராசிரியரே! எல்லாம் சரியாகி விட்டதா?”

படம்
அது போன்ற விருந்தோன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இந்தியாவில் கிடைத்ததில்லை. ‘தாராளமாகக் குடிக்கலாம்’ என அனுமதிக்கும் பாண்டிச்சேரியில் ஏழரை ஆண்டுகள் இருந்தும் இந்த அனுபவத்திற்காக வார்சா வர வேண்டியதாகி விட்டது. இதுபோலப் பல அனுபவங்களை வார்சா தர இருக்கிறது என்பதை ஒரு மாத காலத்திற்குள் புரிந்து கொண்டு விட்டேன்.

உள்ளூர் விளையாட்டுகள் அழிந்து கிரிக்கெட் உருவானது.

படம்
இந்தியாவில் நடக்கும் மாற்றங்களின் பின்னணியில் ’சமஸ்கிருதமயமாதல்’ என்னும் மனநிலை செயல்படுவதாக எம். என். ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுவார். இந்திய சாதியக் கட்டமைப்பு அடுக்கின் உச்சத்தில் இருப்பதாக நம்பப்பட்ட பிராமணர்களின் பண்பாட்டு நடவடிக்கைகளைச் சொந்தமாக்குவதன் மூலம் தங்களையும் பிராமணர்களாகக் கருதிக் கொள்ளும் மனநிலை வெளிப்பாடு என்பது அவரது கருத்து.

தமிழ்ச்சினிமா அரசியலான கதை

படம்
”கோயில் வேண்டாம் என்று சொல்லவில்லை; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது என்று தான் சொல்கிறேன்” எனப் பராசக்தியில் குணசேகரனை (சிவாஜி) ஆவேச வசனம் பேச வைத்தததின் மூலம், தமிழக அரசியலோடு நேரடித் தொடர்பு கொண்டது தமிழ்ச் சினிமா. அந்தவகையில் முதற்காரணம் மு.கருணாநிதிதான். அன்று முதல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படும் வெற்றிகரமான ஆயுதமாகத் தமிழ்ச் சினிமா தமிழக அரசியலின் இணையாகவே கருதப்படுகிறது.

கல்வியில் கொள்கையின்மை

நிகழ்கால வாழ்க்கைமுறை ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல். தன்னை வெளிக்காட்ட -தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன.

உயர்கல்வி சந்திக்கும் சிக்கல்கள்

உயர்கல்வியில் காலத்தின் தேவைக்கேற்பச் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்வதற்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் அமைப்புகள் இருக்கின்றன. பல்கலைக்கழக மானியக்குழு, மாநில உயர்கல்வி மன்றம், அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி மன்றம் போன்ற பெயர்களில் இயங்கும் இந்த அமைப்புகளே அவ்வப்போது பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வழிகாட்டு நெறிகளையும் விதிகளையும் உருவாக்கித் தருகின்றன. பல்கலைக்கழகங்கள் அவற்றை உள்வாங்கிக் கொண்டு அவை இயங்கும் வட்டாரத்திற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவது, தேர்வுகளை நடத்துவது, பட்டங்களை வழங்குவது எனப் பணிகளைச் செய்கின்றன. இப்பணிகளைச் செய்ய ஒவ்வொரு அமைப்பிலும் நியமன உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுமாக கல்விநிலைக்குழு, ஆட்சிப்பேரவை, ஆட்சி மன்றக்குழு எனச் சிற்றதிகாரம், பேரதிகாரம் நிரம்பிய அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றின் தலைவராக இருப்பவர்களே துணைவேந்தர்கள்.

கலைப்பாடங்களின் அழிவு

ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்றுத்தந்த பாடங்கள் மூன்று பெரும் பிரிவுகளாகவே இருந்தன, இன்றளவும் கூடப் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அறிவியல் புலம், சமூக அறிவியல் புலம், மொழிப்புலம் என மூன்று புலங்கள் தான் இருக்கின்றன.ஆனால் இம்மூன்று புலங்களும் பல்வேறு துறைகளைக் கண்டறிந்து வளர்ச்சி பெற்ற நிலையைத் தொண்ணூறுகள் வரை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் காண முடியும்,

தமிழ் வாழ்க்கை ஏன் தமிழ்ப் படத்தில் இல்லை

படம்
தமிழில் பெயர் வைத்தாலேயே தமிழ்ச் சினிமாவாக ஆகி விடும் என்று கருதிய தமிழக அரசின் நம்பிக்கையை மூட நம்பிக்கையாக ஆக்கியது தமிழ்த் திரையுலகம். ரோபோ என்ற பெயருக்குப் பதிலாக எந்திரன் என்றொரு பெயரைச் சூட்டி வரி விலக்குப் பெற்று கல்லாக் கட்டும் வல்லமை அவர்களிடம் உண்டு. சினிமா என்றாலே லாபம் ஈட்டும் தொழில் மட்டுமே என நினைக்கும் சினிமாத் தயாரிப்பாளர்களிடமிருந்து தமிழ் வாழ்வும், தமிழ் மண்ணும், தமிழ்ச் சமூகமும் தமிழ் மனமும் பதிவாகும் என எதிர்பார்ப்பது அதிகப்படியான ஆசை தான்.

பெரிய முள்ளை பதினோரு தடவை சுற்றிக் கொள்ளுங்கள்

படம்
‘ டாடா மோட்டார்ஸ் ’ சந்திரசேகர் காரில் என்னை அழைத்துப் போகவில்லை என்றால் இறகுப் பந்து ( ஷட்டில் ) விளையாடப் போயிருக்க மாட்டேன் .   வார்சாவுக்குப் போனதிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் போய்க் கொண்டிருக்கிறேன் . வீட்டிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த விளையாட்டு மைதானத்திற்கு நடந்து போக முடியாது . பஸ்ஸில் போவதென்றாலும் ஒரே பஸ்ஸில் போய்த் திரும்ப முடியாது .

குளியலறையில் குளிக்கக் கூடாது.

படம்
வார்சாவிற்குக் கிளம்புவதற்கு முன்பு செய்து முடிக்க வேண்டும் எனப் போட்ட பட்டியலில் பாபநாசம் கீழணைக் குளியலும் ஒன்று. திருநெல்வேலிக்குப் போன பிறகு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை பாபநாசம் கீழணையில் குளித்து வருகிறேன். ஏதாவது வாய்ப்புக் கிடைத்தால் பாபநாசம் போய் விடவே எப்போதும் விரும்புவேன். திருநெல்வேலிக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் விரும்புவது குற்றாலம் தான். ஆனால் குற்றாலம் எனக்கு அலுத்துப் போய்விட்டது. அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து குளித்து வெளியேறுவதில் ஏற்படும் எந்தப் பிரச்சினையும் பாபநாசத்தில் இல்லை. கீழணைக்குளியலைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் பாத்ரூமில் குளிக்கக் கூடாது என்ற தடையைச் சந்தித்ததைச் சொல்ல வேண்டும். வார்சாவிற்குப் போனவுடன் நாங்கள் சந்தித்த குளியல் அறைச் சம்பவம் சுவாரசியமானது. திருநெல்வேலியில் ஆத்திலும் அருவியிலும் குளிக்கும் வாய்ப்புகள் இருந்தாலும் தினசரிக் குளியல் என்னவோ வாளித்தண்ணீரை அள்ளி ஊற்றிக் குளிப்பதுதான். அதற்கு வார்சாவில் விடுதலை கிடைத்தது. கழிப்பறையோடு கூடிய குளியலறையில் ’பாத் டப்’ இருந்தது. வெந்நீரையும் தண்ணீரையும் நிரப்பிக் கொஞ்ச நேரம் மூச்சடக்கி

இந்தியவியல் துறைகளின் தேவை.

படம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையிலிருந்து போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் புலத்தில் தமிழ்ப் வந்திருக்கிறேன். இந்தியவியல் புலத்தில் போலந்து மாணவ மாணவி களுக்கு காலப்பழமையும் பாரம்பரிய வளமும் கொண்ட இந்தியாவின் செவ்வியல் மொழிகளான  சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றோடு இந்தி, பஞ்சாபி, வங்காளம் ஆகிய சார்பு மொழிகளையும் கற்பிக்கப் போலந்து பேராசிரியர்களும், இந்தியாவிலிருந்து வருகை தந்து குறிப்பிட்ட காலம் தங்கியிருந்து இம்மொழிகளின் நிகழ்கால இருப்பைக் கற்றுத்தரும் வருகை தரு பேராசிரியர்களும் இருக்கிறார்கள்.

வலதுசாரியாக மாறியாக வேண்டும்

படம்
பல்கலைக்கழகம் வரை அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்த மாணவிகள் வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். வீட்டிலிருந்து கிளம்பிப்  பல்கலைக் கழகத்திற்கு வந்து சேரும் பாதையைப் புரிந்து கொண்டு விட்டேன் என்ற உறுதி எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. பாதை பிடிபட்டு விட்டது என்று நான் சொல்லவும் இல்லை; ஆனால் அந்த முடிவை அவர்களே எடுத்து விட்டார்கள். ஏதாவது பிரச்னை என்றால் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இரண்டு தொலைபேசி எண்களைக் கொடுத்து விட்டு வாபஸான போது கொஞ்சம் கலக்கமாகத் தான் இருந்தது.

பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து

படம்
இந்தியாவில் இயங்கிவரும் நாடகப்பள்ளிகள் மேற்கத்திய அரங்க நுட்பங்களைப் பயிற்றுவிப்பதோடு, இந்திய அரங்கவியலையும் பயிற்றுவிக்கின்றன. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் 'முறைப்படுத்தப்பட்ட நடிப்புக் கோட்பாட்டை' கற்பிப்பது போலவே, பாரம்பரிய அரங்கில் நிகழ்த்துபவரின் உடல் மொழியையும் குரல் வளத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் கர்நாடகத்திலுள்ள நாடகப்பள்ளிகள் யட்சகானத்தையும், கேரளத்தில் கதகளியையும் கூடியாடத்தையும் பயிற்றுவிக்கின்றன. பாரம்பரிய அரங்கிற்கான பயிற்சி, ஒரு நடிகனை குறிப்பிட்ட வகை நடிப்புக்கு மட்டுமே உரியவனாக மாற்றிவிடும் அபாயம் கொண்டவை, என்ற போதிலும், அதிலிருந்து விடுபட்டு நடிப்பின் பல பரிமாணங்களுக்கும் சென்றவர்களும் உண்டு. பாண்டிச்சேரி பல்கலக்கழக நாடகப்பள்ளியும் தனது மாணவர்களுக்குப் பாரம்பரிய அரங்கை முறையான நபர்களைக்கொண்டு பயிற்சி தருவதில் பின்வாங்கியதில்லை.  சில பல வாய்ப்புக்களின் மூலம் தமிழ்நாட்டில் பாரம்பரிய அரங்காக முன்னிருத்தப்பட்ட தெருக்கூத்து, இரண்டுமுறை மாணவர்களால் பயிலப்பட்டது. 1990ல் கலைமாமணி புரிசை கண்ணப்பத் தம்பிரான் ஒருமாதம

ராஜ் கௌதமனின் தன் வரலாற்று நாவல்கள்

படம்
                                        கதை அல்லாத பிற குறிப்புகள் எப்போதும் தன்னை அந்நியனாக உணரும் சிலுவையின் அங்கதம் சமகாலத் தமிழ்ச் சமூகத்தையும் தன்னையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இலக்கிய உத்திகளின் துணையின்றி, தன் ‘வாழ்க்கைப் பார்வையையே’ மையமாகக் கொண்டு இயங்கும் புதிய புனைகதை முயற்சி இது. இப்படியான சிறு அறிமுகத்தைப் பின் அட்டையில் கொண்டிருக்கிறது ராஜ் கௌதமனின் இரண்டாவது நாவல் காலச்சுமை,

வாழ்ந்து கெடும் குடும்பங்களின் கதை: பாவண்ணனின் ஒரு மனிதரும் சிலவருஷங்களும்

  ரங்கசாமி நாயக்கர் காலை எட்டுமணிக்கு நாயக்கர் கடை திறப்பார். கடை திறப்பு ஒரு தினுசுதான். விசிறிக்காம்பு நீளத்துக்கு பெரிய சாவியை மடியில் வைத்திருப்பார். கடைக்கு நூறு அடி தூரத்தில் நாயக்கர் வருகிறார் என்றால் கடைவாசலில் வேலைக்காரப் பையன்கள் வந்திருப்பார்கள். பாவண்ணன் சொல்லும் கதை

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு:பெண்ணெழுத்தின் முதல் அடையாளம்

படம்
தமிழில் புனைகதை இலக்கியம் தொடங்கிய காலந்தொட்டே இந்த வேறுபாடு உண்டு. இலக்கியத்தின் நோக்கம் சார்ந்த இந்த வேறுபாடு தமிழுக்கு மட்டும் உரியதல்ல. உலக இலக்கியம் எல்லாவற்றிலும் இருக்கும் ஒன்று தான். அதிலும் உழைப்பு , ஓய்வு என அன்றாட வாழ்க்கையைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து வாழப் பழகிக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தின் தோற்றத்தோடு தொடர்புடைய புனைகதை எழுத்தின் வரவிற்குப் பின் இந்த வேறுபாடுகள் இருப்பது ஆச்சரியம் எதுவுமில்லை. தீவிர எழுத்துக்காரர்கள் ( Serious literature ) வணிக எழுத்துக்காரர்கள் ( Commercial ) என்பதாக அணி பிரிந்து போட்ட சண்டைகளே ஒரு காலகட்டத்தில் தமிழின் திறனாய்வாகக் கருதப்பட்டது.

வார்சாவிற்கு வந்து விட்டேன்.

படம்
என்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக அறிமுகப் படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதில்லை என்றாலும் அதுதான் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக ஆக்கியிருக்கிறது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைப்பள்ளி தொடங்கப் பட்டபோது(1989) அதன் முதல் விரிவுரையாளராக தேர்வு செய்யப்பட்ட நான், 1997 இல்  திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை தொடங்கப்பட்ட போது அத்துறைக்காகத் தேர்வு செய்யப்பட்ட முதல் ஆசிரியர்.  வழக்கமான பல்கலைக்கழக ஆசிரியப் பணியோடு தமிழில் வரும் தீவிர இதழ்களில் சமகால இலக்கியம், கலை, பண்பாட்டு நிகழ்வுகள் மற்றுமல்லாது அரசியல் நிகழ்வுகளையும் விமரிசனம் செய்பவனாக- வெகுமக்கள் மனநிலை சார்ந்து கருத்துக்களை முன் வைத்து விவாதிப்பவனாக அறியப்பட்டுள்ளேன். மாணவப் பருவம் தொடங்கி இலக்கியப் பத்திரிகைகளோடு தொடர்பு கொண்டு எழுதி வருகிறேன். பட்டப்படிப்புக் காலத்தில் அசோகமித்திரன் பொறுப்பில் வந்த கணையாழியில் கவிதைகள் எழுதியிருக்கிறேன். அதே காலகட்டத்தில் ஆனந்த விகடன் பொன்விழாவை ஒட்டி மாணவர் பக்கம் வெளியிட்ட போது அதிலும் கவிதைகள் எழுதினேன். கவிதை

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

படம்
ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவது என்பது எல்லாத் துறையிலும் நடக்கின்ற ஒன்றுதான்.இலக்கியத் துறையில் செயல்படும் ஒருவன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு, "நிகழ்கால இலக்கியப்பரப்பில் எனது இடம் என்ன ?" என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டு விடை தேட வேண்டும். திருப்தியளிக்கும் பதில் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் வாசகர்களுக்கு அல்லது இலக்கிய வரலாற்றுக்குப் புதுவகையான படைப்பு கிடைக்க வேண்டும். தூர்வை என்ற நாவல் மற்றும் மூன்று சிறுகதைத் தொகுதிகள் வழியாகத் தமிழ்ப் புனைகதைப் பரப்பில் ஓரிடத்தை உறுதி செய்து கொண்ட சோ.தர்மன், கிடைத்துள்ள இடத்தில் திருப்தி அடை யாமல் மேலும் கேட்டுக்கொண்டதின் விளைவு அவரது இரண்டாவது நாவல் கூகையாக உருவாகியுள்ளது.

தமிழ் ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் விடுதலையும்

படம்
தமிழக எல்லைக்குள் வாழ நேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தி தன்னையொரு தமிழ் உயிரியாகக் கருதிக்கொண்டாலும்சரி அல்லது இந்திய மனிதனாகக் கருதினாலும் சரி கடந்த பதினைந்து ஆண்டுகளில்-1990 முதலான பதினைந்து ஆண்டுகளில்- இரண்டு முக்கியமான நிகழ்வுளுக்காகத் தன் கவனத்தைத் திருப்பியிருக்க  வேண்டும். முதலாவது நிகழ்வு ஊடகப் பெருக்கம் என்னும் சர்வதேச நிகழ்வு.

தமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள்

படம்
பண்பாடு என்பதை இரட்டை எதிர்வுகளின் மோதலாகக் கணித்துப் பேசும் ஆய்வாளர்கள் தங்களின் சார்புக் கேற்ப தரவுகளைச் சேகரித்து வாதிட்டு நிறுவ முயலும் காலத்தை இன்னும் நாம் கடந்து விடவில்லை . நிகழ்காலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் எதிர்வாக இருப்பது மைய நீரோட்டப் பண்பாடு x விளிம்புநிலைப் பண்பாடு என்று எதிர்வு எனச் சொல்லலாம்.

சங்கப் பெண்கவிகளின் கவிதையியல்-புறம்

கவிதையியல் என்னும் கலைக்கோட்பாடு: ஓரு படைப்பாளி அல்லது ஓர் இலக்கிய இயக்கம் பின்பற்றும் படைப்பியக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே கலைக் கோட்பாடு என்னும் பொதுவரையறை அர்த்தம் பெற்றுள்ளது. பொதுவரையறையின் அர்த்தம் கவிதையியல் என்னும் அதன் கூறுக்கும் பொருந்தும். நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழில் கவிதையியல் என்பதற்கும் இலக்கியக் கோட்பாடு என்பதற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை. ஐரோப்பியர்களின் வருகைக்கும் பின்னால் சில மாற்றங்கள் உள்ளன என்றாலும் கவிதையியலும் இலக்கியக் கோட்பாடும் நேரெதிரானவை அல்ல. இலக்கியக் கோட்பாடு முதன்மையாகக் கருதுவது படைப்பியக்கத்தை; படைப்பியக்கம் முதன்மையாக முன் வைப்பது படைப்பு சார்ந்த நுட்பங்களை. படைப்புப் பொருள்,படைப்புமுறை, படைப்பு நோக்கம் என படைப்பு நுட்பங்கள் விரியக் கூடியன. படைப்பு சார்ந்த இவையெல்லாம் படைப்பில் வெளிப்படுகின்றன என்று காட்டுவது மட்டுமல்லாமல், அதன் நுகர்வோராகிய வாசகர்களிடம் சென்று சேர்வதில் தான் படைப்பியக்கம் முழுமை அடைவதாக அண்மைக்காலத் திறனாய்வுகள் பேசுகின்றன.

தமிழகத்தில் தலித் இலக்கியம்

படம்
தலித் - ஒரு பதமாக  நுழைந்து நிகழ்வாக மாறிவிட்ட அந்த வார்த்தைக்கு வயது பத்து. இருபதாம் நூற்றாண்டின்  இறுதிப் பத்தாண்டுகள்.  நுழைந்த ஓரிரு ஆண்டுகளிலேயே தமிழ்ச் சிந்தனை மற்றும் செயல்பாட்டுத் தளங்களை ஆக்ரமித்துக்கொண்ட சொல்லை - இதைப்போல் வேறு சொல்லை - தமிழ் மொழி இதற்கு முன் சந்தித்திருக்க வாயப்பில்லை.

சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நினைவோட்டங்களின் விலகல் பயணம்

படம்
பெண்களை மையப்படுத்தியதாகவே தமிழில் புனைகதை வடிவம் தொடங்கியது. தமிழில் பட்டியலிடப் பட்டுள்ள முதல் ஐந்து நாவல்களில் மூன்று நாவல்கள் பெண்களின் பெயரால்- கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம், முத்து மீனாட்சி -அமைந்த நாவல்கள். தொடங்கி முடிக்கப்படாத பாரதியின் நாவல் முயற்சியான சந்திரிகையின் கதையும் ஒரு பெண்ணை மையப்படுத்திய புனைகதையே. இந்தியாவிற்குள் நுழைந்துள்ள நவீன வாழ்க்கைமுறை பாரம்பரியமான இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போக்கில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தாக்குதல் தொடுக்கிறது எனச் சொல்வதின் வழியாகவே நவீனத் தமிழ் இலக்கியம் தன்னை உருவாக்கி நிலை நிறுத்திக் கொண்டது.

இமையத்தின் செடல்:எதிர்பார்ப்புகளற்ற கீழைத் தேய வாழ்வின் மீதான விசாரணை

படம்
எழுத்தாளர்களில் ஒரு சிலர் தாங்கள் இயங்கும் இலக்கிய வகைமைகளில் ‘மைல்கல்’  அல்லது ‘திருப்புமுனைப்’ படைப்பு என்று சொல்லத்தக்க படைப்புகளை எழுதுவதன் மூலம் கவனிக்கத்தக்க படைப்பாளிகள் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்கின்றனர். அதுவும் ஒரு படைப்பாளியின் முதல் படைப்பே அப்படிப்பட்ட ஒன்றாக அமைந்து விடும் பொழுது படைப்பாளியின் மீது குவியும் கவனம் ஆழமானது. முதல் நாவல் கோவேறு கழுதைகள், இமையத்திற்கு அப்படியொரு கவனக்குவிப்பைப் பெற்றுத் தந்தது.

முருகபூபதியின் சூர்ப்பணங்கு: சோதனைப் பேய் பிடித்தா(ட்)டும் மனிதர்கள்

படம்
முருகபூபதியின் மிருக விதூஷகம் நாடக நிகழ்த்தப்பட்டுச் சரியாக ஓராண்டு முடிந்துவிட்டது. 2010, ஜுனில் கோவில்பட்டி, மதுரை, திருவண்ணாமலை, சென்னை என ஒரே மூச்சில் அடுத்தடுத்த நாட்களில் மேடையேற்றினார். சென்னையில் எலியட் கடற்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் நடனக் கலைஞர் சந்திரலேகாவின் பயிற்சி அரங்கத்தளத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது அடுத்த நாடகம்; சூர்ப்பணங்கு. அதே வரிசையில் அதே நகரங்களில் அதே மேடைத்தளங்களில். 2011 ,ஜூலையில் 7,8,9,10 தேதிகளில். மிருகவிதூஷகம் டெல்லியில் தேசிய நாடகப்பள்ளியின் நாடகவிழாவில் பங்கேற்றது போல சூர்ப்பணங்கும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டது.

நீயா நானாவில் அன்னா ஹசாரேயும் நானும்

படம்
விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாவில் தொழில் நுட்பக் கல்வி X சமூக அறிவியல் கல்வி என்ற தலைப்பிலான விவாதத்தின் விருந்தினராக அழைக்கப்பட்ட நான் அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவைப் பற்றிய விவாதத்திலும் கலந்து கொள்ள நேர்ந்ததைத் தற்செயல் நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும்.

திக்குத்தெரியாத காட்டில்…

இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் நுழைய உள்ளவர்களில் ஏறத்தாழப் பாதிப்பேர் தமிழ் வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒற்றைச் சாளர முறையின் வழியாகச் சேர உள்ள மொத்த மாணாக்கர்களில் 43.5 % பேர் தமிழ்வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 26.34 சதவீதம் தான்.  

குதிரை முட்டை:பார்வையாளர்களின் தரவேற்றுமையை அழிக்கும் நாடகம்

மேற்கத்திய நிகழ்த்துக்கலைகளின் தயாரிப்பு மற்றும் நிகழ்த்து முறைகளுக்கும், இந்திய நிகழ்த்துக் கலைகளின் தயாரிப்பு மற்றும் நிகழ்த்து முறைகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதைப் பலர் எழுதியுள்ளனர்; பேசியுள்ளனர்; விளக்கியும் காட்டியுள்ளனர். அத்தகைய வேறுபாடுகள் பார்க்கும் முறையிலும் பார்வையாளர்களாக இருந்து ரசிக்கும் முறையிலும் கூட இருக்கின்றன என்றே தோன்றுகின்றது. நிகழ்த்துக்கலைகளின் இந்தியப் பார்வையாளர்கள் புதியன பார்த்து திகைப்பவர்களோ, அதன் வழிக் கிடைக்கும் அனுபவம் அல்லது சிந்தனை சார்ந்து குழப்பிக் கொள்பவர்களோ அல்ல.

சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை : முன்னிலைச் சொல்முறையின் சாத்தியங்களும் பலவீனங்களும்

படம்
இலக்கியப்பிரதிகள் செய்யுளைக் கைவிட்டு உரைநடைக்கு மாறியதின் வழியாகவே இக்கால இலக்கியங்கள் தோன்றின. அவற்றுள் நிகழ் காலத்தின் வாசிப்புத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவது புனைகதை வடிவமே. புனைகதையின் அழகியல் கூறுகளுள் முதன்மையானது சொல்முறை உத்தி. சொல்முறையின் வழியாகவே புனைகதையாசிரியன் புனைவுவெளியையும், புனைவுக்காலத்தையும் புனையப்பட்ட மனிதர்களையும் உருவாக்குகிறான்.அவற்றின் முக்கூட்டு ஓர்மையில் கதை இலக்கியம் உருவாகிறது என்றாலும் சொல்முறையே படைப்பாளியின் நோக்கத்தையும் பார்வைக் கோணத்தையும் உருவாக்கும்.

தமிழும் வாழ்க! தமிழ் வளர்க்கும் நிறுவனங்களும் வாழ்க!!

தமிழுக்கென்று தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் கடைசியாக வந்து சேர இருந்தது உலகச் செம்மொழித் தொல்காப்பியத் தமிழ்ச் சங்கம். கோவையில் செம்மொழி மாநாட்டை நடத்தி முடித்த கையோடு, மதுரையில் அந்நிறுவனத்திற்கென நிலத்தையும் அளித்திருந்தது முந்திய திராவிட முன்னேற்றக் கழக அரசு.

எழுத்தாளர்களின் இரட்டைக்குதிரைப் பயணம்: பாலாவின் அவன் இவனுக்குப் பின்

படம்
அவன் இவன்–பாலாவின் இயக்கத்தில் வந்துள்ள இந்தப் படம் அவரது முந்திய படங்கள் சந்தித்த விமரிசனங்களைப் போல அதிகமும் நேர்மறை விமரிசனங்களைச் சந்திக்காமல், பல தரப்பினரிடமிருந்தும் எதிர்மறை விமரிசனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதன் வழியாக அந்தப் படம் வெற்றிப்படமாகவும் ஆகலாம்; விரைவில் தியேட்டர்களை விட்டு வெளியேறவும் செய்யலாம்.

கலாநிதி. கா. சிவத்தம்பி என்னும் பேராசான்

படம்
கல்விப் புலம் வழியாகத் தமிழ் இலக்கியம் படிக்க வரும் ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாத பெயராகத் தன்னை நிறுவிய ஆளுமை கலாநிதி கா.சிவத்தம்பி. அவரது இடதுசாரி அரசியல் சார்பு பிடிக்காத ஒரு தமிழ் மாணவனும் இலக்கியவாதியும் கூட அவரது நூல்களை வாசிக்கத்தொடங்கினால் மறுதலிக்க முடியாத புலமையை ஒப்புக் கொள்ளவே செய்வார்கள். அவரது தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற முதல் நூலின் வழியாகவே அவரை நான் அறிந்தேன்.

சுந்தரராமசாமியின் கவிதைகளுக்குள் உள்ளிருப்போரும் கேட்போரும்

படம்
‘ மேற்கத்திய கவிதைகளில் மேற்கத்திய விமர்சகர்கள் கண்டு பிடித்த சிறப்புகளைத்தமிழ்க் கவிதையின் மீது யந்திரரீதியாகப் பிணைப்பது தமிழ்த் திறனாய்வு ஆகிவிடாது’ “ நம் இலக்கியச் செல்வங்கள் நமக்குத் தரும் அனுபவங்களின் சாரங்களிலிருந்து நம் இலக்கியக் கோட்பாடுகள் உருவாகி வரவேண்டும்” (ப.22,25/ ந.பி. கலை: மரபும் மனிதநேயமும்.) இந்தக் குறிப்புகள் என்னுள் நிலைகொள்வதற்கு முன்பாகவே வேறு ஒரு கேள்வி அலையடித்துக்கொண்டே இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்தக் கேள்வியை நான் எழுதும் இலக்கிய இதழ்கள் கட்டுரை எதிலும் எழுப்பவில்லை. கல்வியியல் புலம் சார்ந்த பேராசிரியர்கள் வாசிக்கக் கூடிய நூலொன்றிற்காக எழுதிய கட்டுரையில் எழுப்பியிருக்கிறேன்.

பாதல் சர்க்கார் : மாற்று அரங்கின் இந்திய அடையாளம்

படம்
2011, மே 13 தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போது இந்தியாவின் பெருநகரங்களில் வீசிக் கொண்டிருந்த அனல் காற்று திசைமாறிக் கொண்டிருப்பதாக வானிலை அறிக்கை சொல்லவில்லை. ஆனால் தொலைக் காட்சி ஊடகங்கள் அரசியல் சூறாவளிகளைக் கொண்டு வந்த இரண்டு பெண்களைப் பற்றி சூடாகப் பேசிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டில் வீசிய ஜெ.ஜெயலலிதா என்னும் அசுரக் காற்று ஐந்தாண்டுக்கொரு முறை வந்து போகும் பெருங்காற்று என்பதைத் தமிழ் ஊடகங்கள் அறிந்திருந்ததால் பெரிய ஆரவாரம் எதையும் செய்து விடவில்லை. ஆனால் தேசிய அலைவரிசைத் தொலைக்காட்சிகள் மேற்கு வங்கத்தில் வீசிய மம்தா பானர்ஜி என்னும் புதிய சூறாவளியின் வேக ம் பற்றியும் ஜெ . ஜெயலலிதா என்னும் பெண் சக்தி பற்றியும் பேசிய பேச்சுகள் ஊடகங்க ள் பெருமறதிக்குள் சட்டெனக் குதித்து விடுவதை உணர்த்தின .

அரசியல் குடும்பங்களின் இருண்ட காலம்

படம்
சுதந்திர இந்தியாவில் ஐந்தாண்டுக்கொரு முறை தேர்தல் என்பது நடைமுறைக்கு வந்தது தொடங்கித் தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியிடம் தோல்வியைச் சந்தித்தது. கூட்டணி வெற்றி பெற்றது என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகம் தனியாகவே ஆட்சியை அமைத்தது என்பது வரலாறு. அந்த வரலாறு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அழகர்சாமியின் குதிரை:வட்டார சினிமாவிலிருந்து இந்திய சினிமாவை நோக்கி:

படம்
புதுவகை சினிமாக்களைத் தமிழ்ப் பார்வையாளர்களுக்குத் தரும் முயற்சியில் திரைப்படப் படைப்பாளிகள் ஆர்வமோடு இருக்கிறார்கள் என்பதற்கு இன்னுமொரு அடையாளம் அழகர்சாமியின்  குதிரை என்று சொல்லி இந்தக்  கட்டுரையை ஆரம்பிக்க விரும்புகிறேன். தமிழின் பெருவாரியான சினிமா , திரும்பத் திரும்பச் சுற்றிச் சுழலும் ஒரு வகைச் சூத்திரக் கட்டமைப்பு சினிமா என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை... எல்லாக் காலங்களிலும் காதல் தான் தமிழ்ச் சினிமாவின் கச்சாப்பொருள். அதிலிருந்து யாராவது ஓரிருவர் எப்போதாவது அத்திபூத்தாற்போல

கி.ரா.வின் கோபல்ல கிராமம்: நான் அறிந்த மனிதர்களும் எனக்குத் தெரிந்த கதைகளும்

படம்
நான் அறிந்த மனிதர்களும்  எனக்குத் தெரிந்த கதைகளும் நீங்கள் வாசித்த நாவல்களில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது ? என்ற கேள்விக்கு எந்தவிதத் தயக்கமும்  இல்லாமல் ” கி.ராஜநாராயணனின்  கோபல்ல கிராமம் ”  என நான் சொன்ன போது எனக்கு வயது 21. நிகழ்கால அரசியல் , பொருளாதாரச் சமூகச் சிக்கல்களைப் பேசும் விதமாகப் பாத்திரங்களை உருவாக்கி , அவற்றின் உளவியல் ஆழங்களுக்குள் செல்வதன் மூலம் வாசகர்களையும் உடன் அழைத்துச் செல்லும் தன்மையிலான எழுத்தே சிறந்த எழுத்து எனவும் , நாவல் என்னும் விரிந்த பரப்பில் தான் அதற்கான சாத்தியங்கள் அதிகம் எனவும் எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களும் , நான் படித்திருந்த இலக்கியத் திறனாய்வு நூல்களும் சொல்லியிருந்தன.

தொலைநெறிக் கல்வி என்னும் மாய யதார்த்தம்

இந்தப் பயணம் 2010 டிசம்பரிலேயே போய் வந்திருக்க வேண்டிய பயணம். நிர்வாகக் காரணங்களாலும் சொந்தக் காரணங்களாலும் ஆறு மாதத்திற்குப் பின் இப்போதுதான் வாய்த்தது. மே 7 இல் விமானம் ஏறி, மே 11 இல் திரும்பி வந்து விட்டேன். அங்கே இருந்த நாட்கள் சரியாக நான்கு நாட்கள் தான். நான்கு நாட்களும் பணி சார்ந்த பயணம் தான்.

மதிப்புக் கூட்டப்படும் உள்ளூர்ச் சரக்குகள்

ஆங்கிலத்தில் ஓரியண்டல்(Oriental),ஆக்சிடெண்டல்(Occidental) என இரண்டு சொற்கள் உள்ளன. அவ்விரு சொற்களையும் எதிர்ச்சொற்களாகப் பயன்படுத்தும் போக்கு 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன். ஐரோப்பிய நாடுகளின் வணிகக் குழுமங்கள் வியாபாரத்திற்காக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி வந்த போது அவர்கள் சந்தித்த மனிதர்களின் இயங்குநிலையை விளக்கும் சொல்லாக ஓரியண்டல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சின்னத்திரைகளின் வண்ணக்கோலங்கள்

படம்
வாசிப்பதற்கு முன் ஒரு குறிப்பு இந்தக் கட்டுரை 2006 இல் எழுதப்பட்டது. ஆனால் இப்போதும் இக்கட்டுரை விவாதிக்கும் எதுவும் மாறிவிடவில்லை. நிகழ்ச்சிகளின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கின்றன. இப்போது தொலைக்காட்சிகளில் இடம் பெறும் நிகழ்ச்சிகளின் பெயர்களை அந்த இடத்தில் மாற்றிப் போட்டு நீங்கள் வாசித்துக் கொள்ளலாம். இனிக் கட்டுரைக்குப் போகலாம்...